Deprecated: Hook custom_css_loaded is deprecated since version jetpack-13.5! Use WordPress Custom CSS instead. Jetpack no longer supports Custom CSS. Read the WordPress.org documentation to learn how to apply custom styles to your site: https://wordpress.org/documentation/article/styles-overview/#applying-custom-css in /var/www/wp-includes/functions.php on line 6078
உலகின் மாபெரும் கடவுள் கொள்கை வள்ளலாரின் சுத்த சன்மார்க்கமே! – வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்
July 27, 2024
tamil katturai APJ arul

உலகின் மாபெரும் கடவுள் கொள்கை வள்ளலாரின் சுத்த சன்மார்க்கமே!

உலகின் மாபெரும் கடவுள் கொள்கை வள்ளலாரின் சுத்த சன்மார்க்கமே!# இந்த வருட தைப் பூசத்தில் நாம் செய்ய வேண்டியது.—- ஏபிஜெ அருள்.

மற்ற மார்க்கத்தைப் போல் கடவுளை புறமாக காட்டி, கோயிலையோ, சடங்கு சம்பிரதாயங்களையோ வள்ளலார் வடலூர் தன் நிலையங்களில் செய்யவில்லை. சுத்த சன்மார்க்கத்தில்கடவுளின் உண்மை “அக அனுபவமே”என்கிறார் வள்ளலார்.கடவுளின் நிலைக் காண நாம் ஒவ்வொருவரும் நன்முயற்சி செய்தல் வேண்டும் என்கிறார் வள்ளலார்.அந்த நன்முறையில்;

1) ஒழுக்கம் நிரப்புதல் வேண்டும்.

2) நல்ல விசாரம் செய்தல் வேண்டும்.

3) உண்மை அறிய உள்ளழுந்தி சிந்திக்க வேண்டும்.

4) இறைவனே வந்து உண்மை தெரிவிக்க வேண்டும் என்ற சங்கற்பத்தில் கண்ணீர் விட்டு பணிந்து வேண்டவேண்டும்.

5) எந்தவொரு ஆசாரத்தையும் கைக்கொள்ளாமல் கருணை ஒன்றை சாதனமாக கொள்ளவேண்டும்.

6) இந்த வழிபாடு உண்மையாயின் கடவுளின் உண்மை உள்ளத்தில் பதிந்து காணாத காட்சியை (இறைசொரூபம்) கண்டு அருள் பெறுவது சத்தியம்.

இங்ஙனமாக வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் உள்ளது.இந்த அக அனுபவ உண்மையை தான் சத்திய ஞான சபையில் விளக்கினார்.அதாவது,மனிதன் எவரும், எந்தொரு தாழ்ந்தத் தரத்தில் இருந்தாலும், அவர்கள் தன்னை முதலில் கொலை புலை தவிர்த்துக் கொண்டவராக ஆக்கிக் கொள்ள வேண்டும். அப்படி எவர் ஒருவர் கொலை புலை தவிர்த்தவர்களோ அவர்கள் மட்டுமே சத்திய ஞான சபைக்குள் நுழைதல் வேண்டும் என திட்டமாக அறிவிக்கிறார் வள்ளலார்.நுழைந்த பின் நமக்கு உறுதி தரும் மகாமந்திரத்தை மெல்லென துதி செய்தல் வேண்டும்.அதன் பின்பு நாம் கீழ்வருமாறு கருத்தில் கருதி உள்ளழுந்தி சிந்திக்க வேண்டும் என்கிறார் வள்ளலார்.” ஓர் உண்மை கடவுள் உண்டென்றும் உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிபடுகிறேன்” (எந்தவொரு ஆசாரம் இங்கு கூடாது).அதன்பிறகு,மார்க்க மரபு நான்கையும்நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து கண்ணீர் விட்டு பணிந்து வழிபாடு செய்தல் வேண்டும்.இந்த வழிபாடு உண்மையாயின்திரைகள் விலகும், எங்கும் பரிபூரணமாக நிறைந்து விளங்கும் ஆண்டவர் நமது அகத்தில் பதிந்து, பதியின் அருள் காட்சியை கண்டு அனுபவிக்கலாம்.இந்த உண்மையை தான் ஆண்டவரின் சம்மதத்தோடு சத்திய ஞான சபையை கட்டி நமக்கு விளக்கி காட்டுகிறார்.

ஆனால், வள்ளலார் அன்று சொன்னது;”உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்துக் கொள்வாரில்லை”

ஆக, அன்பர்களே!இந்த உண்மையை இன்று தெரிந்துக் கொண்ட நாம் வரும் தைப்பூச 21/01/2019 நன்னாளில் வடலூர் பெருவெளியில் வடக்கே வந்து தென்திசை நோக்கி நின்று, சத்திய ஞான சபையாகிய, நமது உடலில் அண்டமாகிய கண்டத்துக்கு மேல் புருவமத்தியில் உண்மை கடவுள் நிலைக் காண ஆசை கொள்ளவேண்டும். 

அன்பர்களே!மேலே சொன்ன மாதிரி வழிபாடு செய்வோம். ஆன்ம நேயத்தால் வள்ளலார் நமக்கு தெரியப்படுத்தி உள்ள வழியில் இடைவிடாது நன்முயற்சி செய்தால்,நமக்கு எல்லா வகையிலும் நமது திருவருட் பிரகாச வள்ளலார் துணை நிற்பது சத்தியம் சத்தியம் சத்தியம்.சத்திய ஞான சபை மற்ற சமயமத போன்ற கோயில் அல்ல.உண்மையை விளக்கி காட்டும் அறிவு இடம்.அந்த இடத்தில்;நாம், வடக்கு நின்று தென்திசை நோக்குதல்,  ஜீவகாருண்யம் என்ற தகுதியுடன்,கொள்கை என்ற ஒன்றேனும் ஒன்றே என்பது கருத்தில், ஆசாரங்கள் தவிர்த்து கண்ணீர் விட்டு நல்ல விசாரப் பயிற்சி, வள்ளலார் துணையுடன்,நமக்கு அக அனுபவம், ஆண்டவர் காட்சி, சாகாவரம்,இவைபெறுவோம் இது சத்தியம்.

அன்புடன் ஏபிஜெ அருள்

கருணை சபை சாலை மதுரை.

apjarul1@gmail.com      

 www.atruegod.org

unmai

Channai,Tamilnadu,India