Deprecated: Hook custom_css_loaded is deprecated since version jetpack-13.5! Use WordPress Custom CSS instead. Jetpack no longer supports Custom CSS. Read the WordPress.org documentation to learn how to apply custom styles to your site: https://wordpress.org/documentation/article/styles-overview/#applying-custom-css in /var/www/wp-includes/functions.php on line 6078
வினை கர்மம் மாயை முதலியவை நம்மை பாதிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? – வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்
July 27, 2024
tamil katturai APJ arul

வினை கர்மம் மாயை முதலியவை நம்மை பாதிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

வினை கர்மம் மாயை முதலியவை நம்மை பாதிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

— ஏபிஜெ அருள்.

வள்ளலார் வழி கடவுள் வழிபாடு செய்பவர்களுக்கு வினை விதி கர்மம் மலங்கள் அனைத்தும் விலகி விடும் என்பது சத்தியம்.

காரணம் இங்கு கடவுள் நெறியானது வினை விதி கர்மம் மலங்கள் இவை எல்லாம் தவிர்த்து வாழ்வு  அளிக்கும் வகையில் உள்ளது.
சாகா கல்வி குறித்து விசாரணை நாம் செய்வதால் நமக்கு மயக்கம் என்னும் மாயை தானே விலகி நிற்கும்.
பொது நோக்கம், எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் உடையவர்களாக நாம் இருப்பதால் கன்மம் கெடும் என்கிறார் வள்ளலார்.

சுத்த சன்மார்க்கம் உண்மை அறியும் வழி. ஆதலால் நமக்கு மறைப்பு எனும் திரோதாயி மலம் வெல்லும் வல்லபம் உண்டு. 
கருணை நன்முயற்சியால் நாம் கடவுளின் உண்மை நிலை குறித்து விசாரித்து உண்மை கடவுள் அருள் பெறும் லட்சியம் கொண்டவர்கள் ஆதலால் நமக்கு வினை விதிகள் விட்டோடி தலை வணங்கும் என்கிறார் வள்ளலார்.
சுத்த சன்மார்க்க நெறி நம்மிடம் தூக்கம், துயரம்,அச்சம், இடர் இவை நம்மிடமிருந்து அருளால் போய்விடுவதால் நமக்கு ஏக்கம்,வினை,மாயை,இருள் இவை ஒழிந்து போகும் என்கிறார் வள்ளலார்.
ஆக, எந்தொரு ஆசாரமில்லாமல்,

ஓர் உண்மை கடவுள் உண்டென்றும் உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிபடச் செய்ய சொல்லும் சுத்த சன்மார்க்கம் சார்ந்தவர்களுக்கு வினை, கர்மம்,மலங்கள் இவை பற்றி ஐயமில்லை ஐயமில்லை.

அன்புடன் ஏபிஜெ அருள்.

unmai

Channai,Tamilnadu,India