February 15, 2026
tamil katturai APJ arul

காவியா ? இது சரியா?

வள்ளுவருக்கு பெருமை “வெள்ளை” உடையே.

ஆதாரத்துடன் நல்ல விசாரம் செய்வோம். அன்புடன் ஏபிஜே அருள்.

அனைவருக்கும் இனிய
திருவள்ளுவராண்டு 2057 வாழ்த்துக்கள்.
காவியும் வெள்ளை ஆடையும் இந்த இரண்டும் இறை சிந்தனையாளர்கள் கட்டும் உடை தான்.
ஆனால் இவைக்கான தமிழ்மொழி வழி ஞானிகள் தரும் விளக்கம் என்ன எனத்
தெரிந்துக்கொள்வோம்.
காவி கட்டுவது யார்? எதற்கு?
தயவு இல்லாத கடின சித்தர்கள் ஆகையால் அவர்களிடத்து தத்துவ ஆபாசம் உள்ளது.
தத்துவத்தை செயித்து தயவை நடத்துவதற்கு யுத்தக்குறி அல்லது அடையாளமாகத் தரிப்பது
காவி.
வெள்ளை ஆடை எதை குறிக்கும்?
வெற்றியான பிறகு அடைவது தயவு. ஆதலால் வெற்றிக்கொடி வெள்ளை. தயவு வெள்ளை
என்பது; சுத்தம், சுத்தம் என்பது நிர்மலம், நிர்மலம் என்பது வெள்ளை வருணம். வெள்ளை என்பது
ஞானம், ஞானம் என்பது அருள், அருள் என்பது தயவு, தயவு என்பது காருண்யம்.
இதுவே, தமிழ்மொழி வழி சுத்த ஞானி வள்ளலார் தரும் விளக்கம். வள்ளலார் சமயத்தில் இருந்த
போது தன்னுடைய சாலையில் திருக்குறள் வகுப்பு எடுத்தார்கள். சாதி சமய மதம் ஆசாரம்
சாத்திரம் இவை பொய் என்று கண்டு ஓர் புதிய மார்க்கம் கண்டு அதில் இறைவனை கருணை
மட்டுமே கொண்டு வழிப்பட்டால், நித்திய வாழ்வு கிடைக்கும் என்றார்கள். எனக்குமுன்
திருவள்ளுவரே சாகா கல்வி குறித்து சொல்லியுள்ளார்கள் என்கிறார் வள்ளலார்.
அன்பர்களே! வள்ளுவரின் திருக்குறள் அன்று அரங்கேற்ற விடவில்லை. அதற்கு வேத
மதத்தினர்களும், சமய மதவாதிகளும் சொன்ன காரணம் என்னவென்று தெரியுமா? வள்ளுவர்
கொல்லாமையும், புலால் மறுத்தலுமே அறங்களில் முதன்மையானது என வள்ளுவர் சொன்னதே காரணம். அன்று தயவு இரக்கம் கருணை அன்பு அன்றைய ஆதிக்கம் செலுத்திய ஆன்மிகத்தில் முழுமையாக வெளிப்பட்டிருக்கவில்லை. ஆம், புராணக் கடவுளே மாமிசத்தை சாப்பிட்டார் என இருப்பதை காணலாம். மகா முனிவர் என்றழைக்கப்பட்டவர் மாமிசம் சாப்பிட்டு ஒரு அரக்கனை வதம் செய்த கதையுண்டு. அடியார்களுக்கு விருந்துகள் அசைவ சாப்பாடே போன்றதை ஆன்மீக கதைகளில் காணலாம்.
இந்நிலையில் தான் திருக்குறள் அரங்கேற்றப்படவில்லை. ஆனால் வள்ளுவரோ கருணையே
முதன்மை அறம் என்றார்கள். இந்நிலையில் அன்று வாழ்ந்த ஒளவையார் பாட்டியாரே மன்றத்தில் வாதாடி அதுவும் சில காம்பரமைஸ் பண்ணி தான் திருக்குறளை அரங்கேற்ற வைத்தார்கள்.
அதாவது, முதன்மை அறங்களாகிய கொல்லைமை, புலால் மறுத்தல் குறள்களை நூல் உள்ளே

வைத்ததும், கடவுள் மேல் வாழ்த்து பாடியும், இப்படி சரிச்செய்தப் பிறகே வள்ளுவரின் திருக்குறள் அரங்கேற்றப்பட்டது எனபதை நாம் ஒவ்வொருவரும் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
அய்யன் வள்ளுவரை போற்றுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் கொல்லாமை புலால்
மறுத்தலை இவற்றை மதிக்காமல், திருவள்ளுவரை போற்றுவது முடியாது. குருடர்கள் ஒரு
யானையைத் தொட்டு, யானையின் உருவத்தை தொட்டவரை கணக்கிட்டது போல் தான்,
இவர்களின் அறிவு குறள் பற்றி இருக்கும். முழு உண்மையை உணரமுடியாது. ஆனால் வள்ளுவர்
மற்றும் வள்ளலார் இவர்கள் எல்லா உயிர்களின் இன்பத்திற்கே இரக்கம் கொண்டவர்கள்
ஆவார்கள். பொது நோக்க நெறியை கண்டவர்கள். வள்ளுவரை போற்றுபவர்கள் இரக்கம்
குறித்தும் நல்ல விசாரத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். முதலில் இரக்க உணர்வை மதிக்க
கற்றுக்கொள்ள வேண்டும். இப்ப சொல்லுங்க, நமது தமிழ்மொழி வழி வந்து, உலக உயிர்களுக்கான பொதுவான பாதையையும், கருணை நெறியையும் தந்து அருளிய உலக பொது நாயகர்கள் சுத்த ஞானிகள் இவர்களின் உடை காவியா? வெள்ளையா?

காவி உடை யுத்த குறி, தத்துவங்களை செயித்து தயவை பெறுவதற்கு.
வெள்ளை உடை தயவானவர்கள் உடை,வெற்றியின் அடையாளம்.

ஆக, வள்ளுவரும், வள்ளலாரும் வெள்ளை உடை ஆடை உடுத்திய சுத்த ஞானிகள் ஆவார்கள்.
வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பவர்கள் குறளின் திறம் தெரியாதவர்கள், கருணையின்
உண்மை அறியாதவர்கள்.
உண்மையை முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டும். பின்பு அறிந்துக் கொள்ள வேண்டும்.
அதன்பின்பு அனுபவித்து அருள் பெற வேண்டும்.
இந்த உண்மையை தெரிந்துக்கொண்ட தமிழ்மொழி, தமிழ்நாடு அரசும் மக்களும், இந்த இரு
ஞானிகளுக்கு வெள்ளை உடைகளை வழங்கி வணங்குகிறார்கள்.
தவறு செய்வது மனித இயல்பு, திருத்திக்கொள்வது மனித அறிவு.
அன்பும் அறிவும் முறையே கடவுளின் வடிவமும் சொரூபமும் ஆகும்.
இது சத்தியம். இது சத்தியம்.
மிக்கப் பணிவுடனே,

ஏபிஜே அருள் @ இளங்கோ.

unmai

Channai,Tamilnadu,India