February 15, 2026
tamil katturai APJ arul

*அருள்விளக்கமாலை*

*அருள்விளக்கமாலை*
*பான்மறுத்து* விளையாடும் சிறுபருவத் திடையே
பகரும்உல கிச்சைஒன்றும் பதியாதென் உளத்தே
*மான்மறுத்து* விளங்குதிரு ஐந்தெழுத்தே பதிய
வைத்தபெரு வாழ்வேஎன் வாழ்வில்உறும் சுகமே
*மீன்மறுத்துச்* சுடர்மயமாய் விளங்கியதோர் விண்ணே
விண்அனந்தம் உள்ளடங்க விரிந்தபெரு வெளியே
*ஊன்மறுத்த* பெருந்தவருக் கொளிவடிவம் கொடுத்தே
ஓங்குநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
– ஒருவாறு விசாரம் 
 
#
ஆகா, நல்ல விசாரத்திற்கானப் பாடல் இது. வாருங்கள் ஒருவாறு விசாரம் செய்வோம்.
“பான் மறுத்து…”
அதாவது பால் குடி மறந்து விளங்கும் பருவத்தில் உலக இச்சையிலே பதியாது,
அடுத்து,
“மான்” மறுத்து என்பது திருமால் – வைணவக் கொள்கையை மறுத்த சைவ சமய ஐந்தெழுத்து பஞ்சாக்கர அக்ஷரத்தில் லட்சியம் கொண்டு;
அடுத்து,
” மீன் ” மறுத்து, தான் கொண்டிருந்த சிவன் (சைவ நெறி) கொள்கை மறுத்து
” விண் ஜோதி ” பெரு வெளிக் கொள்கை கொண்டு;
அடுத்து,
” ஊன் மறுத்த” அதாவது உடம்பால் பெறும் பசுஞானக் கொள்கையான ஆன்மாவிலேயே கலந்து கிடக்கும் நிலையை மறுத்து,
அது கடந்த ஓர் உயர்ந்த அறிவுடையோருக்கு கிடைக்கும் உடல் பெறும் தனிவடிவம் “ஒளி வடிவக்” கொள்கையை முடிபாக கொண்டேன்.
“நல்ல விசாரமே” சுத்த சன்மார்க்கத்தில் வழிபாடு.
 
— ஏபிஜெ அருள்.

unmai

Channai,Tamilnadu,India