சுத்த சன்மார்க்கத்தில் வள்ளலார் கண்டது சமய கடவுளா? தனி கடவுளா? பெரும்மதிப்பிற்குரிய சமய சான்றோர்கள் விழாவில் வள்ளலாரைப்பற்றி சொல்வது உண்மையா? — APJ அருள்
நம் அன்பர்களால் சில நாட்களுக்கு முன்பு ஒரு சுத்த சன்மார்க்க மாநாடு சிறப்பாக நடைப்பெற்றது.
அம்மாநாட்டிற்கு சைவ சமயப் பணியில் தங்களை முழுதும் ஈடுபடுத்திக்கொண்டு வருகின்ற பெரும் மதிப்பிற்குரிய மடாதிபதிகள் ஆதினங்கள் இவர்களை விழா நடத்துநர் அழைத்திருக்கிறார். அழைப்பின் பேரில் கலந்துகொண்டு, விழாவில் அருளாசி உரை வழங்கும் போது, ஒரு மடாதிபதி சுவாமிகள் கீழ்வருமாறு சொன்னார்கள்;
“…….. ஒரு காலத்துல சொல்லுவாங்க, இராமகிருஷ்ணருக்கு சிறப்பான முறையில் நல்ல ஒரு சீடராக விவேகானந்தர் அமைந்தார். அதன் காரணாமாக இராமகிருஷ்ணரின் கருத்துக்கள் உலகமெங்கும் சென்று சேர்ந்தன. அதே போல தான், இரண்டு நூற்றாண்டுகள் ஆகிவிட்டன.. ஆனாலும், .வள்ளலாரின் கருத்துக்களை .. அன்னம்பாலிப்பது மூலம் .. சமய வகுப்புகள் நடத்துவது மூலம் சீரிய தொண்டை ஆற்றிக்கொண்டு உள்ளீர்கள். பாராட்டுக்குரியது ..
மாணிக்க வாசகரிடமிருந்து “அரும்பெருட்ஜோதி”யையும், சேக்கிழாரிடமிருந்து “கருணை”யையும், வள்ளலார் எடுத்துக்கொண்டு “அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை” உருவாகியுள்ளார். அதுவே இங்கு மந்திரமாக திகழ்ந்துக் கொண்டிருக்கிறது.
வள்ளலார் திருஞானசம்பந்தரை ஞான குருவாக கொண்டார். முருகப் பெருமானிடம் அளவில்லாத ஈடுபாடுக் கொண்டிருந்தவர் தான் வள்ளற்பெருந்தகை…..
மேலும், சாந்தலிங்கப் பொருமான் கொலை மறுத்தல் பற்றி ஒரு நூலிலே தந்துள்ளார்கள். அதை வள்ளலார் அவர்கள் ஜீவகாருண்யம் என்ற அடிப்படையில் சேர்த்தார்கள். அதே மாதிரி, அவிரோத உந்தி யில் சாந்தலிங்க அடிகள் சொன்ன’ நமக்குள் ஒருமைப்பாடு இருக்க வேண்டும், என்றதை, ஆன்ம நேய ஒருமைப்பாடு என்று வள்ளலார் தந்திருக்கின்றார்கள்…..” ஜீவகாருண்யம், ஆன்மநேய ஒருமைபாட்டுரிமை இன்றைய சூழ்நிலைக்கு உலகிற்கு தேவை…என்றார்கள்.
நிற்க! …. ஆக,🤔
ஜீவகாருண்யம், ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை, சுத்த சன்மார்க்கத்தின் மகாமந்திரத்திற்கான அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை இவற்றையெல்லாம் வள்ளலார், முறையே…சாந்தலிங்க பெருமான், மாணிக்கவாசகர், சேக்கிழார் இவர்களிடமிருந்து பெற்றவையே, என்றார்.
இவற்றை நாம் (அதாவது சமய வகுப்புகள் எடுத்து) உலக மக்களிடம் எடுத்துச் சென்று சேர்க்க வேண்டும் என்று மாநாட்டை வாழ்த்தினார்??? அய்யா.
அன்பர்களே! மேற்படி அய்யா மடாதிபதி அவர்கள் சொன்னது தான் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் என்றால்,
Ø சுத்த சன்மார்க்க நெறி எப்படி தனி நெறியாகும்?
Ø எல்லா சமய மத மார்க்கங்களுக்கும் வள்ளலார் சொன்ன நெறி எப்படி உண்மை பொது நெறி ஆகும்?
அதனால் தான், படித்து படித்து சொன்னோம் வள்ளலார் சுத்த சன்மார்க்க மாநாடு எனப்பெயரிட்டு நடத்தும் போது, சமய மற்றும் மத சன்மார்க்க நெறியை பரப்பும் தொண்டுகளை செய்கின்ற பெரும்பதிப்பிற்குரிய மடாதிபதிகள், ஆதினங்கள், ஜீயர்கள் இவர்களை நாம் அழைத்தால், அவர்கள் வள்ளலாரை, அவரால் கைவிடப்பட்ட சமயத்திலேயே, ஆகமங்களிலேயே வள்ளலாரை மீண்டும் காட்டி உரை நிகழ்த்தி சென்று விடுவார்கள்.
அதே போல் தீவிர கடவுள் மறுப்பாளர்கள் இவர்களை அழைத்தால், வள்ளலாரை வேதாகமத்தினர் எரித்து விட்டனர் என்பர்.
அன்பர்களே,
நாத்திகத்திலும் அதன் சான்றோர்கள் மனித சமூகத்தின் உயர்வே முக்கியம் என்கின்றார்கள்.
அதே போல்,
எல்லா சமய மத மார்க்கங்களும் கடவுள் பற்றியே வியம்புகின்றன. அவை நல்லதையே போதிக்கின்றன.
இவற்றையெல்லாம் நாம் மதிக்கிறோம். மதிக்க வேண்டும். இது வேறு.
ஒருவேளை எல்லோரையும் அழைக்க ஆசை என்றால்;
அனைத்து சமய மத மார்க்க நல்லிணக்க மாநாடு என்று பெயரிட்டு நடத்தினால், எல்லோரையும் அழைத்து மகிழலாம்.
ஆனால் சுத்த சன்மார்க்க மாநாடு என்று போட்டுவிட்டு மேற்படியானவர்களை அழைத்தால் குழப்பங்களும் கூச்சலும் தான் மிஞ்சும். நெறிக்கு வியர்த்துத்தம்.
இன்னொரு மதிப்பிற்குரிய சந்நியாசி அய்யா அவர்கள் அதே விழாவில் சொன்னார்கள்;
நான் இதுவரை 451 பேருக்கு சந்நியாச துறவு நிலை (தீட்சை?) வழங்கி உள்ளோம். அதில் உங்கள் சன்மார்க்கி ஒருவரே பெற்றுள்ளார்? 😡. வள்ளலார் சித்தாந்தம் படி நீங்கள் சந்நியாசம் துறவு நிலை பெற வேண்டும், என்று உபதேசித்து சென்று விட்டார்.
👉நமக்கு சந்நியாசம் உண்டா? 👉தீட்சை,உண்டா? 👉துறவுறம் பற்றி வள்ளலார் என்னச் சொல்லியுள்ளார்? 👉இதை பற்றி இவர்கள் சிந்தித்தார்களா?
மொத்தத்தில்; பத்தொன்பதாம் நூற்றாண்டில் வள்ளலார் கண்ட உண்மை பொது நெறி உள்ளது உள்ளபடியாக தீவிர சமய சான்றோர்களால் வெளிப்படாது என்கிறோம்.
அவர்களின் பற்று நெறியை தான் பேசுவார்கள்.
வள்ளலார் முடிபாகச் சொன்னது தான் நினைவுக்கு வருகிறது. 👇👇
உண்மை சொல்ல வந்தனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்துக் கொள்வாரில்லை. மேலும் சொல்கிறார் வள்ளலார்;
இதுகாறும் என்னோடு பழகியும் சுத்த சன்மார்க்க ஒழுக்கம் இன்னதொன்று தெரிந்துக்கொள்ளவில்லையே, என்கிறார்கள்.
👉வள்ளலார் சொல்ல வந்த அந்த உண்மை என்ன?
👉சுத்த சன்மார்க்கத்தின் ஒழுக்க நெறி என்னவென்று வள்ளலார் சொல்கிறார்கள்?
இவைகளைப் பற்றியே நமது வள்ளலார் சுத்த சன்மார்க்க மாநாடுகளில் பேசப்பட வேண்டும். கருத்தரங்கள் மூலமாக, சொற்பொழிவுகள் மூலமாக, பாடல்கள் மூலமாக, விண்ணப்பங்கள் வாசிப்புகள் மூலமாக🙏
மதிப்பிற்குரிய மடாதிபதிகள் சொன்னது போன்று தான் சுத்த சன்மார்க்கம் கொள்கை களை பெற்று உள்ளதா?
வள்ளலாரின் மகா மந்திரத்தின் தனிச் சிறப்பு என்ன?
சமய சன்மார்க்கக்கடவுளை தான் வள்ளலார் கண்டாரா?
வள்ளலாரின் தனி மற்றும் பொது நெறி என்ன?
அடுத்த விசாரத்தில் காண்போம். ஆதாரங்களுடன் உறுதியாக மற்றும் உண்மையாக அருள் துணையுடன்.
அன்புடன் ஏபிஜே அருள்.
எல்லாம் எல்லோரும் கடவுளின் அம்சங்களே!
உயிர் இறக்கம் கொண்டவர்கள் நம்ம அவர்களே!
🙏🙏