Deprecated: Hook custom_css_loaded is deprecated since version jetpack-13.5! Use WordPress Custom CSS instead. Jetpack no longer supports Custom CSS. Read the WordPress.org documentation to learn how to apply custom styles to your site: https://wordpress.org/documentation/article/styles-overview/#applying-custom-css in /var/www/wp-includes/functions.php on line 6078
**அக்டோபர் 5 வள்ளலார் பிறந்த நாள் ** வள்ளலாரைப் பற்றி தெரிந்துக் கொள்வோம் – வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்
July 27, 2024
tamil katturai APJ arul

**அக்டோபர் 5 வள்ளலார் பிறந்த நாள் ** வள்ளலாரைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்

Oct5-Vallalar-Birthday

**அக்டோபர் 5 வள்ளலார் பிறந்த நாள் ** வள்ளலாரைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
— ஏபிஜெ அருள்.
# வள்ளலார் கண்ட மார்க்கம்::” சுத்த சன்மார்க்கம் “
# அவரிடமிருந்த அதி தீவிர ஆசைகள்:
1. நம் நிலை என்ன? நம்மை அனுஷ்டிக்கும் அந்த தெய்வத்தின் நிலை என்ன?
2. அவத்தைகளை நீக்கிக் கொண்டு மரணமில்லா பெருவாழ்வில் வாழ்தல்.
3. அண்ட திறங்கள் உட்பட அனைத்தும் பற்றி தெரிந்துக் கொள்ள ஆசை.
# கடவுள் கொள்கை::
சத்திய அறிவால் அறியப்படும் கடவுள் ஒருவரே!
# வழிபாடு:
ஓர் உண்மை கடவுள் உண்டென்றும் உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிபாடு செய்தல்.
# சாதனம்:
கருணை மட்டுமே.
கருணை என்பது;
எல்லா உயிர்களிடத்து தயவும் ஆண்டவரிடத்து அன்புமே.
# கருணை விருத்திக்கு தடையாக உள்ள சாதி சமய கட்டுப்பாட்டு ஆசாரங்களை விட்டொழித்து மெய்ஞ்ஞான யோகம் செய்தல் ( உண்மை அறிவைக் கொண்டு பயிற்சியில் ஒருமையை வருவித்தல்)
# வேண்டுதல்:
ஆண்டவர் வந்து உண்மை தெரிவிக்க வேண்டும் என விண்ணப்பித்து இடைவிடாது வேண்டுதல்.
🙏 ஏபிஜெ அருள்.
அன்பர்களே!,
வள்ளலார் இந்த நல்ல விசாரத்தில் கண்ணீர் விட்டு தொழுதார்,
இறைவன் தயவு கொண்டு, தன் உண்மைச் சொரூபத்தை அவரின் உள்ளத்தில் உள்ளபடி காட்டி அருளினார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.
தான் கண்ட கடவுள், இதற்கு முன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாக சொல்லப்பட்டுள்ள கடவுளர்,கர்த்தர், தெய்வம், ஞானி யோகி இவர்களில் ஒருவரல்ல. அவர்கள் அனைவரும் தங்கள்தங்கள் அனுபவங்களில் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தனி தலைமை பெருதம்பதி.
உண்மை கடவுள் தனக்கு எல்லா உண்மைகளை உரைத்து, சாகா வரம் அருளினார். தனது தேகம் ஒரு தனி வடிவில் ஒளிஉடம்புகாக மாறியது என்கிறார் வள்ளலார். மேலும்,
இது தனக்கு பேரின்பமாக இருந்தது. சாகாமல் இருப்பதே இறையருள்.
நீங்கள் யாவரும் என்னைப் போல் பெறுவதற்கு யாதொரு தடையுமில்லை.
இது சத்தியம் இது சத்தியம் என்கிறார் வள்ளலார்.
தனி நெறி
புதிய வழி
பெரிய பலன்
இவை கொண்டதே வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம். இது 19 ம் நூற்றாண்டில் வள்ளலாரால் கண்ட வழி:
எல்லா சமயமத மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறியாக விளங்கும் சுத்த சன்மார்க்கம்” குறித்து தெரிந்துக் கொள்ள “ஆசைக்” கொள்வோம்.
அன்புடன் ஏபிஜெ அருள். 🙏கருணை சபை சாலை.
இந்த இனிய நாளில் வள்ளலாரின் கடவுள் பற்றிய புதிய பொது கொள்கையை எல்லோரும் தெரிந்துக் கொள்ள ஷேர் செய்யுங்கள். – apjarul

unmai

Channai,Tamilnadu,India