Deprecated: Hook custom_css_loaded is deprecated since version jetpack-13.5! Use WordPress Custom CSS instead. Jetpack no longer supports Custom CSS. Read the WordPress.org documentation to learn how to apply custom styles to your site: https://wordpress.org/documentation/article/styles-overview/#applying-custom-css in /var/www/wp-includes/functions.php on line 6078
கடவுள் என் செய்யும்? – வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்
July 27, 2024
tamil katturai APJ arul

கடவுள் என் செய்யும்?

கடவுள் என் செய்யும்?
— ஏபிஜெ அருள்.
நாடுகளிடையே;
போர்கள் கூடாது.
செருக்கு கூடாது.
அதிகாரம் கூடாது.
மனிதர்களிடையே;
மயக்கம், சுயநலம், திகைப்பு கூடாது.
இவை செய்யும்
” தேவர்கள் அறிவு” நம்மிடையே ஒழிய வேண்டும்.
அடுத்து,
சிறை செல்லும் செய்கை கூடாது.
பயம் கூடாது.
திருட்டு,கொலை செய்யும் “நரகர் குணம்” நமக்கு கூடாது.

உயர்ந்த அறிவாகிய
“கருணை ” நம்மிடம் விருத்தியாக நன்முயற்சி செய்தல் வேண்டும்.
நாம் யார்? நமக்கு மேல் அனுஷ்டிக்கும் இயற்கையின் திறம் (உண்மை இறைவனின் நிலை) என்ன என நல்ல விசாரணை அறிவு வழியில் செய்யச் சொல்லும் “ஆறாவது அறிவை” பெருக்க வேண்டும்.
இந்த “ஆறாவது அறிவாகிய” உள்ளத் தெளிவு நம்மிடையே வராமல் தடுப்பவை, சாதி சமயமும் அதன் கட்டுப்பாட்டு ஆசாரங்கள் என்கிறார் வள்ளலார். பொது நோக்கம் ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை லட்சியமாக கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளலார். இந்த அறிவு மனித தேகம் உடையோர் பெறுகிறார்கள் என்கிறார்.
இதுவே அவர் கண்ட “சுத்த சன்மார்க்கம்”.
சமயம்,சாதி இவை தேவர் நரகர் குணம் குறித்தே உள்ளது.
சுயநலம், செருக்கு மயக்கம் இவையால் போர்கள், கொலைகள், இவை சரி என்றால் நம்மை கொல்லும் கொடிய நோய்கள், இயற்கை சீற்றங்கள் இருக்க தானே செய்யும்.

இங்கு
கடவுள் என் செய்யும்?

மனிதனாக இருப்போம்.
கருணை கொள்வோம். அன்பால் எல்லா உயிர்களிடமும் தயவும், அண்ட திறங்கள் (இறை உண்மை நிலை) காண ஆசைக் கொள்ளும் நன்முயற்சி கொள்வோம். உண்மை அறிவால் உண்மை அன்பால்
உண்மை கடவுளின் அருளால் பேரின்ப வாழ்வை நான் பெற்றேன். என்னைப் போல் நீங்கள் பெறுவதற்கு யாதொரு தடையுமில்லை. இது சத்தியம் என்கிறார் வள்ளலார்.
வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத்தில் சாதி,கற்பனை, கலைகள்,ஆசாரம்,சாத்திரம்,போர், பலி, இவையில்லை. பொது நோக்கம், அறிவு, கருணை, இன்பம் இவையே உள்ளது.
19 ம் நூற்றாண்ட்டில், சமயப் பற்றை கைவிட்டு விட்டு, மிகப் பெரிய நன்முயற்சி செய்து, இரக்கத்தால் தவம் கொண்டு, உண்மை கடவுளை கண்டு, அருளால் கண்ட உண்மை பொது வழியே ” சுத்த சன்மார்க்கம்”. இம்மார்க்கத்திற்கு எக்காலத்தும் முக்கிய தடையாக சமய,மத மார்க்கங்களை அறிவிக்கிறார்.
இம்மார்க்க வழியில் மட்டுமே “அவத்தைகளை” நீக்கிக் கொள்ள முடியும் மேலும் உண்மை கடவுளின் சொரூபம் கண்டு அருள் பெற முடியும் என்ற வள்ளலாரின் சத்திய வாக்கியத்தில் நம்பிக்கை கொண்டோர்
பார்க்க:

www.atruegod.org

https://youtu.be/pUMeJgQDREU

unmai

Channai,Tamilnadu,India