Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the colormag domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /var/www/wp-includes/functions.php on line 6121
சுத்த சன்மார்க்க பாடமும் -பயிற்சியும் – வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்
May 22, 2025
tamil katturai APJ arul

சுத்த சன்மார்க்க பாடமும் -பயிற்சியும்

அனைவருக்கும் வணக்கம்.நான் ஏபிஜெ அருள். பாடசாலையில் விசாரம் செய்யப் போவது மிக்க மகிழ்ச்சி தருகிறது. நமது விசாரம் வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறி அடிப்படையிலே மட்டுமே. வள்ளலாரின் துணை இருந்து அய்யா அறிவிக்க உண்மை கடவுளை உள்ளபடி அறிவோம்.

நன்றி.

அன்புடன் ஏபிஜெ அருள்.

பாடசாலையில் தெரிந்துக் கொள்ள வேண்டியவை நான்கு.

(1)1) 22-10-1873 அன்று வள்ளலார் சொன்னது:உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை. விசாரம் ::: இங்கு வள்ளலார் சொல்லிய உண்மை என்ன?

(2)30-01-1874 வள்ளலார் சொன்னது;” இதுகாறும் என்னொடு நீங்கள் பழகியும் சன்மார்க்க ஒழுக்கம் இன்னதென்று தெரிந்துக் கொள்ளவில்லை..”விசாரம் ; இங்கு வள்ளலார் சொல்லிய ஒழுக்கம் எது?

(3)கொடி ஏற்றி ஆற்றிய உரையில்ஐப்பசி 7; 22/10/1873;என்னை ஏறாநிலைமிசை யேற்றி விட்டது யாதெனில் தயவு. அந்த தேர்வுக்கு ஒருமை வரவேண்டும். தயவு வந்ததால் தான் பெரிய நிலைமேல் ஏறாலாம். இப்போது என்னுடைய அறிவு அண்டாண்டங்களுக்கு அப்பாலும் கடந்திருக்கிறது. அது அந்த ஒருமையினாலேதான் வந்தது.விசாரம் ::; இங்கு வள்ளலார் குறிப்பிடும் ” ஒருமை” என்பது என்ன?

(4)வள்ளலார் சொல்கிறார்கள்::”எனது சத்தியமான அதிதீவிர விருப்ப முயற்சியாக இது இருக்கின்றது.விசாரம்::வள்ளலாரின் அந்த தீவிர விருப்ப முயற்சியாக இருந்தது எது?இந்த விவசாரத்தை எடுத்துக் கொள்வோம்.தொடரும்… அன்புடன் ஏபிஜெ அருள்.

unmai

Channai,Tamilnadu,India