Deprecated: Hook custom_css_loaded is deprecated since version jetpack-13.5! Use WordPress Custom CSS instead. Jetpack no longer supports Custom CSS. Read the WordPress.org documentation to learn how to apply custom styles to your site: https://wordpress.org/documentation/article/styles-overview/#applying-custom-css in /var/www/wp-includes/functions.php on line 6078
“வள்ளலார்” வழக்கில்மேதகு உயர்நீதிமன்றம் உத்தரவு – வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்
July 27, 2024
tamil katturai APJ arul

“வள்ளலார்” வழக்கில்மேதகு உயர்நீதிமன்றம் உத்தரவு

“வள்ளலார்” வழக்கில்மேதகு உயர்நீதிமன்றம் உத்தரவு.மதுரை கருணை சபை சாலை நிறுவநர் திருமதி இராமலெட்சுமி இளங்கோ @ ஏபிஜெ அருள் அவர்கள் தொடர்ந்த ” வள்ளலார் தனி நெறி” வழக்கில் மேதகு உயர்நீதிமன்றம், மதுரை கிளை, மாண்புமிகு நீதியரசர்கள் திரு என்.கிருபாகரன், திரு எஸ்.எஸ்.சுந்தர் , அமர்வு, சிறப்பான உத்தரவு ஒன்றை 23/04/19 அன்று பிறப்பிப்பித்துள்ளது

.:::வழக்கு விபரம்:::

வள்ளலார் அவர்களால் 19ம் நூற்றாண்டில் சாதி,சமய, மத,மார்க்கங்களை கடந்து, ஒரு தனி நெறியை, புதிய மார்க்கம் ஒன்றை கண்டு வெளிப்படுத்தினார்கள். அவர் கண்ட “சுத்த சன்மார்க்கம்”  எல்லா சமயங்களும், எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறியாக விளங்குகிறது. இந்நிலையில் மேதகு மாநில மத்திய அரசுகள் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத்தை தனி நெறி புதிய மார்க்கம் என விளம்புகை செய்வதற்கு பரிசீலித்து பரிந்துரைக்க இணை ஆணையர்,ஆணையர், அரசு செயலாளர், (HR&CE) இவர்களுக்கு உத்திரவிட வேண்டும் என்பதே.
:::மேதகு உயர்நீதிமன்றம் தீர்ப்பு:::
” வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்” என்ற இரக்க உணர்வு உடையவர் வள்ளலார். ஆரம்பத்தில் சமயத்தில் இருந்தாலும், பின்பு அவராலே காணப்பட்ட  வேறுப்பட்ட நெறியில் சென்றார். அவர் உடல் ஒளியுடம்பாகியது என்பது நம்பிக்கையாக உள்ளது. இதன் நெறி அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் வடலூரில் “தைப்பூசம்” கொண்டாடப்படுகிறது. எனவே வழக்கின் விண்ணப்பதாரரின் கோரிக்கையை சட்டச்சரத்துக்கள் அடிப்படையில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தவிடப்படுகிறது. 
எனது வழக்கில்,  திரு எம். புருசோத்மன்,  திரு கண்ணன் வழக்கறிஞர்கள் வாதாடினார்கள்.(இந்த மகத்தான உத்தரவால், இனி சுத்த சன்மார்க்க காலம் ஏற்பட, நமது நிலைய நிர்வாக அதிகாரிகள், உரிய ஆணையை அரசுகள் பிறப்பிக்க, பரிந்துரைப்பார்கள் என்பதில் முழுநம்பிக்கை நமக்கு உள்ளது.)நன்றி.

அன்பர்களே!
 வள்ளலாரின்சுத்தசன்மார்க்க உண்மை தெரியாது பல வருடங்களாக அவர்தம் நிலையங்களில் அவரால் கைவிடப்படச் சொன்ன சடங்குகளால்வழிபாடுகள் அனுமதிக்கப்பட்டு வந்தது. அன்பர்களால் பல வழக்கிட்டு அவைகள் தடுக்கப்பட்டு, இன்று வள்ளலாரால் வகுக்கப்பட்ட விதிப்படி சத்திய ஞான சபையில் வழிபாடு நடைபெறுகிறது. இணை ஆணையர் உத்தரவுகள் பல இருந்தும், இன்னும் சில முரண்பாடுகள் இருக்கின்றன. பலரால் வள்ளலாரின் கொள்கை பலவாறு திரிக்கப்பட்டு வெளிப்படுத்தப் படுகிறது. இதற்கெல்லாம் ஒரே தீர்வு, வள்ளலாரின் நெறி, உண்மை பொது நெறி என்றும், சுத்த சன்மார்க்கம், வள்ளலார் 19 ம் நூற்றாண்டில் கண்ட புதிய பொது மார்க்கம் என்றும் சட்டபடி அங்கீகாரம் கிடைத்தால் தான், உலகத்தார்கள் உள்ளது உள்ளபடியாக தெரிந்திடவும், சாகா கல்வி குறித்த நல்ல விசாரணையும் உலகில் விரைந்து வெளிப்படும் என்பதில் ஐயமில்லை.அன்பர்கள் எல்லோரின் ஆதரவை இதற்கு கொடுத்து,சுத்த சன்மார்க்கம் என்ற புதிய உண்மை பொது நெறியை உலகத்தார்களிடம் விரைந்து வெளிப்படுத்துவோம்.சாதி சமயம் மதம் காணா வள்ளலார் வழியில்,நாம் அனைவரும் நன்முயற்சியில் கடவுள் அருளால் மரணம் பிணி மூப்பு பயம் துன்பம் முதலிய அவத்தைகள் நீக்கி மரணமில்லா பெருவாழ்வை பெறுவோம். இது சத்தியம்.

நன்றி: ஏபிஜெ அருள் அவர்கள்

unmai

Channai,Tamilnadu,India