Deprecated: Hook custom_css_loaded is deprecated since version jetpack-13.5! Use WordPress Custom CSS instead. Jetpack no longer supports Custom CSS. Read the WordPress.org documentation to learn how to apply custom styles to your site: https://wordpress.org/documentation/article/styles-overview/#applying-custom-css in /var/www/wp-includes/functions.php on line 6078
2019 உண்மை வெளிப்படும் ஆண்டு. 2019 நன்முயற்சி தரும் ஆண்டு. 2019 உண்மை கடவுளின் அருள் பெறும் ஆண்டு – வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்
July 27, 2024
tamil katturai APJ arul

2019 உண்மை வெளிப்படும் ஆண்டு. 2019 நன்முயற்சி தரும் ஆண்டு. 2019 உண்மை கடவுளின் அருள் பெறும் ஆண்டு

2019 உண்மை வெளிப்படும் ஆண்டு. 
2019 நன்முயற்சி தரும் ஆண்டு.
2019 உண்மை கடவுளின் அருள் பெறும் ஆண்டு. –. ஏபிஜெ அருள்.
இங்கு,
உண்மை கடவுள் யார் என்றால்,
இதற்கு முன் சமய மத சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லப்பட்ட
எல்லா மூர்த்திகளும்,
எல்லாத் தேவர்களும்,
எல்லாக் கடவுளரும்,
எல்லாத் தலைவர்களும்,
எல்லா யோகிகளும்,
எல்லா ஞானிகளும்,
தங்கள் தங்கள் அநுபவங்களைக் குறித்து எழுந்து அருளுகின்ற தனித்தலைமைப் பெரும்பதி.
அன்பர்களே!
இந்த பதியே உண்மை கடவுள்.
இந்த பதியின் அருளைத் தான் வள்ளலார் பெற்றார்கள்.நாமும் பெறுவதற்கு யாதொரு தடையுமில்லை என்கிறார்கள்.
அன்பர்களே!
இன்று நாம் கடவுளாக வணங்கப் படுபவர்கள் யார் யார் என்று சிறிது யோசியுங்கள். (கண்டிப்பாக யோசிக்க வேண்டும் என வேண்டுகிறோம்).
மேலே குறிப்பிட்ட உண்மைப் பதியை கண்டு அருள் பெற தவம்,யோகம் எனப் பல வழிகளில் முயற்ச்சித்தவர்களையே (அதாவது யோகிகள்,ஞானிகள், அடியார்கள்) கடவுளாக்கி விட்டோம். அடுத்து
சமயங்களில், கடவுளாக நமக்கு காட்டப்பட்டவை எவை?
சமயங்களில் கடவுளாக காட்டப்பட்டியிருப்பது அனைத்துமே நமது “பிண்ட லட்சணங்களே” என அறிதல் வேண்டும். அதாவது தத்துவ சம்மாரங்கள் ஆகும்.
ஆம், இதுவே சத்தியம், உண்மை.
இந்த உண்மையை தெரிந்துக் கொள்ள நேரம் இல்லாமல் மிகப் பெரிய அறிவாளிகள்,முதலாளிகள், உழைப்பாளிகள், இவர்கள் முதல் சாதரணவர்கள் வரை உண்மை கடவுளை வணங்காது, கடவுளின் அருளால் ஒளிப்பெற்று விளங்கும் தத்துவங்களை வணங்குவதால், அத்தத்துவங்களின் அளவு வரை மட்டுமே உண்மையும் சக்தியும் இவர்கள் பெற முடியுமே அன்றி, பூரண சித்தியை பெற முடியாது என்கிறார் வள்ளலார்.
கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா?
கொஞ்சமாவது ஆசைப்பட வேண்டாமா?
கொஞ்சமாவது முயற்ச்சிக்க வேண்டாமா?
உண்மை கடவுளை தேடிய மகான்களை தொடர்ந்து நாம் செல்லாமல், அந்த மகான்களையே கடவுளாக வணங்குவது……?
உண்மை கடவுளின் அருள் ஒளியால் தோன்றிய இந்த பிரபஞ்சத்தில், நமது உடலில் உள்ள தோற்றங்களையே கடவுளாக பாவித்து வணங்குவது…..?
எந்தவிதத்தில் இது அறிவுடைமை ஆகும்? எனக்கேட்கிறார் வள்ளலார்.
அதனால் தான் தன் மார்க்கம் “சுத்த சன்மார்க்கம்” உண்மை அறியும் அறிவு மார்க்கம் என்கிறார்.
எனவே,
உண்மை கடவுள் யார்?
அக்கடவுளின் நிலை என்ன?
அருள் பெறும் வழி என்ன?
என ஆசைக் கொண்டோர்களை வாரீர்..வாரீர்… என அழைக்கிறார்
திருவருட் பிரகாச வள்ளலார்.
உண்மை கடவுளை நான் தெரிந்தேன். அறிந்தேன்.
அனுபவித்தேன்.
அருளால் அவத்தைகளை நீக்கி பேரின்ப பெருவாழ்வை பெற்றேன்.
இது சத்தியம். இது சத்தியம்.
நீங்கள் எல்லோரும் பெறுவதற்கு யாதொரு தடையுமில்லை. இது சத்தியம்.இது சத்தியம் என்கிறார் வள்ளலார்.
2019 உண்மை வெளிப்படும் ஆண்டு. 
2019 நன்முயற்சி தரும் ஆண்டு.
2019 உண்மை கடவுளின் அருள் தரும் ஆண்டாக அமைய எல்லாம் வல்ல உண்மை பதியே உங்களை பணிந்து வணங்குகிறேன்.
திருவருட் பிரகாச வள்ளலாரே!
சுத்த ஞானியே!
உங்கள் வழியில் நன்முயற்சியில் செல்லும் என்னை வழிநடத்தி விலகாது நின்று உண்மை அறிய துணை புரிய வேண்டுகிறேன். 
வந்தனம்.வந்தனம்.
நன்றி: ஏபிஜெ அருள்.

unmai

Channai,Tamilnadu,India