Deprecated: Hook custom_css_loaded is deprecated since version jetpack-13.5! Use WordPress Custom CSS instead. Jetpack no longer supports Custom CSS. Read the WordPress.org documentation to learn how to apply custom styles to your site: https://wordpress.org/documentation/article/styles-overview/#applying-custom-css in /var/www/wp-includes/functions.php on line 6078
October 5 வள்ளலார் பிறந்த நாள். சாகாநிலை சாத்தியமா? வள்ளலார் ஆண்டவரால் வருவிக்கவுற்றவரா? – வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்
July 27, 2024
tamil katturai APJ arul

October 5 வள்ளலார் பிறந்த நாள். சாகாநிலை சாத்தியமா? வள்ளலார் ஆண்டவரால் வருவிக்கவுற்றவரா?

October 5 வள்ளலார் பிறந்த நாள்.
சாகாநிலை சாத்தியமா?
வள்ளலார் ஆண்டவரால் வருவிக்கவுற்றவரா?

அன்பர் சரத் கேட்ட கேள்வி; “ஆண்டவரால் வருவிக்கவுற்றவர் வள்ளலார்”. 
அதனால் சாகாநிலை பெற்றார். ஆனால் நாம் பெற சாத்தியமில்லை. இதற்கு விளக்கம் தருக, என்றார்.??

அன்பர்களே,
வள்ளலார் வருவிக்க உற்றவரா? தெய்வமா? அல்லது நம்மை போல் மனிதரா?

விசாரம் செய்வோம் வள்ளலார் துணையுடன்..::: (ஏபிஜெ அருள்):

பலர் இங்ஙனமாகவே பார்க்கிறார்கள்
வள்ளலார் தெய்வம்.
ஆண்டவரால் வருவிக்க உற்றவர் அதனால் அவர் ஒரு அவதாரம். அல்லது, நம்மை போல் மனிதர்.இதில் எது உண்மை.?
நிற்க!

எங்கும் பரிபூரணமாக விளங்கும் ஒரே மெய் பொருள் ஒன்றே உள்ளது என்று கருத்தில் கொண்ட உண்மை அன்பர்களுக்கு இந்த விளக்கம் தேவையில்லை.

நம் வள்ளலார் பிறவிகளால் ஆன்ம பக்குவமும்,
பிறந்த குடும்பத்தால் சைவ சமயம் தழுவலும் கொண்டார். “ஒரு பதார்த்தத்தை அனுபவித்தாலல்லது அந்த பதார்த்தினுடைய சுவை தெரியாது, ருசி தெரியாத பதார்த்தத்தின் மேல் இச்சை போகாது.அது போல் தெய்வத்தை உள்ளதுபடி அனுபவித்தாலல்லது , தெய்வத்தினிடத்தில் பிரியம் வராது. ஐயோ நம் சகோதரர்கள் தெய்வத்தை தெரிந்து கொள்ளாததினாலே அல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள் என்று நான் உள்ளும் புறமும் பரிதாபப் பட்டுக் கொண்டே இருந்தேன்” என்கிறார் வள்ளலார்.

பின் அவர் ஆண்டவரால் வருவிக்கவுற்றவரா? என்றால் ஆம். ஆனால் நாம் நினைப்பது போல் அல்ல.

“.. ஆண்டவரால் வருவிக்கவுற்றனன்” என்று வள்ளலாரே தெரிவிக்கிறார். 

ஆனால் அதன் அர்த்தம் சரியாக புரிதல் வேண்டும்.
காண்போம் இங்கு. 

ஆரம்பத்தில் அவரிடமிருந்த அளவிலா கடவுள் பக்தி,
அவர் குடும்பம் சார்ந்த சைவ சமயத்தில் மிக்கப்பற்றுக் கொண்டவராக்கியது.
சைவ சமயம் மட்டுமில்லாமல் எல்லா சமயமத மார்க்கங்களின் நெறிகளைத் தெரிந்து, அதனதன் உண்மையையும் கண்டார்கள். ஆனால் அவரிடமிருந்த தேடலுக்கு இவை எவையும் விடை தரவில்லை. அதனால் தான் அவர் சைவ சமயத்தில் பற்று இருக்கும் காலத்தில் கூட ,அதன் ஆசாரங்கள் எதையும் அவர் பின்பற்றவில்லை. வெண்ணிற ஆடையை தான் உடுத்திருந்தார்கள்.
எந்தொரு மாலையுமோ அணிந்திருக்கவில்லை,
பூசைகள், சடங்குகள் எதையும் அவர் செய்யவில்லை. ஆனால்அவர் தேடுல்தொடர்ந்து கொண்டே இருந்தது. 
இந்த தேடல் எதை குறித்து?
இயற்கையின் உண்மை குறித்து மற்றும் மரணம் என்ற அவத்தை நீக்கி இன்பமாக வாழ வழியை குறித்து. 
அவரின் தேடலுக்கு சுதந்திரத்தை அவர் பற்றுக்கொண்டியிருந்த சமயக் கொள்கை இடம் தரவில்லை. 
தான் சுதந்திரமாக சிந்திக்க, தான் சார்ந்த சமயத்தை கைவிட்டு விட்டார்கள். வள்ளலாரின் தேடல் போல், பல ஞானிகள், தலைவர்கள் தேடினாலும் அவர்கள் தங்களின் சாதி சமய கட்டுப்பாட்டு ஆசாரங்களை மீற முடியவில்லை.அவைக்கு அவர்கள் கட்டுப்பட்டார்கள். வள்ளலாரை போல் யாரும் முன் வரவில்லை. சமயப்பற்றை வள்ளலார் விட்டு விட்டப்பிறகு வள்ளலாரின் விசாரணை சுதந்திரமாக தொடர்ந்தது. 
இடைவிடாத கடவுள் உண்மை நிலை குறித்த விசாரம், அதனால் அவரிடம் தானாக ஏற்பட்ட இரக்க(கண்ணீர்) வழிபாடு, இதன் பயன், சத்திய அறிவை அவர் பெற்றார்கள். எங்கும் நீக்கமற நிறைந்து விளங்கும் ஒன்றெனும் ஒன்றாகி அருட்பெருஞ்ஜோதி தரிசனத்தை தன் உள்ளே பெற்று உண்மை கடவுளின் நிலை கண்டார்கள். அருளால்,முழு உண்மை அவருக்கு வெளிப்பட்டது. இந்த முயற்சி வள்ளலாரின் உண்மை அறிவால் (ஆசையால்) ஏற்பட்டது.
கடவுள் அருளால் சாகா கல்வி கற்றார்.மரணமில்லா பெருவாழ்வு பெற்றார்கள். 
இவை அனைத்தும் அகத்தில் தனி வெளியில் நடந்து கொண்டிருக்கும் விசயம். அறியாமை,திரிபு இல்லா இடம்,நாம் உணர்வதற்கு அரிதான இடம் என்கிறார் வள்ளலார் (திரு அகவலில்).
நிற்க! (முக்கிய இடம்) 
உண்மை கடவுளை கண்ட வள்ளலார், ஆண்டவரிடம் ஒன்றை வேண்டினார்.
அஃது;
‘என்னைப்போல் எல்லோரும் பேரின்ப பெருவாழ்வு பெற அருள வேண்டும்’ என்று ஆண்டவரிடத்தில் வேண்டினார் வள்ளலார்.
வள்ளலாரின் வேண்டுதலில் பொது நோக்கமும், உயிர்களிடத்தில் அவர் கொண்ட ஆன்ம நேயமும் வெளிப்பட்டது. 
தன் கருணை போல் வள்ளலார் பெற்றிருப்பதை கடவுள் கண்டார். இதுவே பரிபூரண அருள். 
அதனால், தன் நிலையில் வள்ளலாரை வைத்து எல்லாமே அருளினார் கடவுள்.
உண்மை இன்பம் பெற்றாலும் தன் வேண்டுதலை தனி வெளியில் உள்ள இறைவனிடம் மீண்டும் வைத்தார்; என் போல் இவ்வுலகத்தார்கள் இன்பம் பெறுதல் வேண்டும் என்றார்.
அதற்கு கடவுள்; 
உனது ஆசை நிறைவேற்ற 
நீயே இருப்பாய்.
நீயே செல்வாய். 
இந்த வரத்தை, அதாவது, தான் வந்த வழியை உள்ளது உள்ளபடியாக உலகத்தார்களிடம் உரைக்கவும், ஆண்டவர் தெரிவித்த மரபுகள் நான்கையும், சாகாவரம் பற்றியும் நமக்கு தெரிவிக்க ஆண்டவரிடத்தில் அனுமதி பெற்று, தனி வெளியிலிருந்து மீண்டும் இங்கு அறியாமை திரிபு துன்பம் கற்பனை நிறைந்த நாம் உள்ள (அவரும் இருந்த) இந்த வெளிக்கு மீண்டும் வந்ததையே “”வருவிக்கவுற்றது”” ஆகும். 
2 1/2 வருடகாலம் அவர் சென்ற வழி (மார்க்கம்) குறித்து நம்மிடமிருந்து சொல்லிவந்தார்கள்.
ஆனால் நமக்கு ….?? 
ஆம், அன்று தெரிந்து கொள்வாரில்லை.
அதனால் 30/01/1874, அருளால், தான் பெற்றிருந்த சுத்த தேகத்தில் மீண்டும் தனி வெளியில் சித்திவளாக அறையினுள் தனி சுக வெளிக்கு வெளிப்பட்டார்கள்.
அன்பர்களே!
எவர் ஒருவர்; 
‘அய்யா நீங்கள் சொன்ன உண்மையை தெரிந்து கொண்டேன். உங்கள் துணையால் உண்மை அறிய ஆசையாக உள்ளேன் என உண்மை அன்புடன் சொல்வேர்களானால், வள்ளலார் அய்யா நேரில் இங்கேயே வெளிப்பட்டு நம் பயிற்சிக்கு உதவிடுவார். 

சாகா நிலை சாத்தியமா? என்பது அவரவர் அறிவு (உண்மை எது என்று) ஆசை (அவத்தை நீக்க) தேடுதல் (நன்முயற்சி) இவை பொறுத்து சாத்தியப்படும்.

என் மார்க்கம் இறப்பை ஒழிக்கும் மார்க்கம்-என் மார்க்கத்தில் சாகா கல்வி தவிர வேறு ஒன்றுமில்லை என்கிறார் வள்ளலார்.
இது சத்தியம். 
இதுவே உண்மை என்கிறது சுத்த சன்மார்க்கம்.
நம்புவோம். 

அக்டோபர் 5 வள்ளலார் பிறந்த நாள். நல்லநாளில் 
நல்ல விசாரணை தொடரட்டும். 
இதோ வள்ளலார் பாடல் ஒன்று;

பொய் விட்டு கற்றேன்
என்று ஊதூது சங்கே
புண்ணியன் ஆனேன்
என்று ஊதூது சங்கே
மெய் தொட்டு நின்றேன் என்று
என்று ஊதூது சங்கே
மேல் வெளி கண்டேன் என்றே
என்று ஊதூது சங்கே

—அன்புடன் ஏபிஜெ அருள்.கருணை சபை,மதுரை.

www.atruegod.org.

unmai

Channai,Tamilnadu,India