Deprecated: Hook custom_css_loaded is deprecated since version jetpack-13.5! Use WordPress Custom CSS instead. Jetpack no longer supports Custom CSS. Read the WordPress.org documentation to learn how to apply custom styles to your site: https://wordpress.org/documentation/article/styles-overview/#applying-custom-css in /var/www/wp-includes/functions.php on line 6078
ஆதி,அநாதியே உண்மை கடவுள் – வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்
July 27, 2024
tamil katturai APJ arul

ஆதி,அநாதியே உண்மை கடவுள்

ஆதி,அநாதியே உண்மை கடவுள். — ஏபிஜெ அருள்.

அன்பர்களே!
எவர் ஒருவர் சொல்வது எல்லோருக்கும் பொதுவாக இருக்குமோ , அது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படும். எந்த ஒன்றை அறிஞர்கள் எல்லோராலும் பொதுவாக வியம்பப் படுகிறதோ அது உண்மையாகும்.
நிற்க!
பல சாதிகள், பல மதங்கள், பல சமயங்கள் இன்று உலகில் வெளிப்பட்டு உள்ளது. ஒன்றின் லட்சியம், கொள்கை மற்றொன்றுடன் ஒத்து போவதில்லை. இந்த சமய மதங்களில் காட்டப்பட்ட பல கடவுள்களில் உண்மை கடவுள் இவரே என எவரும் சொல்லிவிட முடியாது.
அதே போல் சாதியாலும் நாம் வேறுபட்டு, பல பிரச்சனைகள் நடப்பதையும் நாம் மறுக்க முடியாது.
ஆக, மனிதர்கள் எல்லோராலும் மற்றும் அறிஞர்கள் அனைவராலும் பொதுவாக ஒத்துக்கொள்ளக் கூடிய நெறியாக எந்தொரு சாதி மத சமய நெறிகள் இங்கு இல்லை.
அன்பர்களே!
இது உண்மை தானே!
ஆனால்,
எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ( அல்லது எவராலும் மறுக்க முடியாத ) நெறியாகவும்,
அறிஞர்கள் அனைவரும் இதுவே பொது சபை என வியம்ப கூடியதாகவும்,
ஒன்று உள்ளது என்றால் அது கண்டிப்பாக பொதுவாகவும், உண்மையாகவும் இருக்கும். அப்படிதானே!
அன்பர்களே!
சாதியும்,
மதமும்,
சமயமும்,
இவைகள் தோன்றுவதற்கு முன்னதாக ஆதி (முதலாவதாகவும்),
அனாதி (எல்லையற்றதாகவும்),
ஆக இருக்கும் அருட்பெருஞ்ஜோதியே உண்மை கடவுள்.
இயற்கை உண்மையை அறிந்தோர் இந்த மெய் பொருளையே கடவுள் என்கிறார்கள்.

எங்கும் எதிலும் பரிபூரணமாக விளங்கும் இந்த உண்மை கடவுளையே எல்லா சமய மதத் தலைவர்,கடவுளர், தெய்வங்கள், யோகிகள் அனைவருமே எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்கிறார் வள்ளலார்.
அகவல் ::
வரிகள்115 – 116
சாதியும் மதமும் சமயமும் காணா
ஆதி அனாதியாம் அருட்பெருஞ் ஜோதி.
வரிகள் :: 141-142:
எப்பொருள் மெய்ப்பொருள் என்பர்மெய் கண்டோர்
அப்பொருளாகிய அருட்பெருஞ்ஜோதி.
வரிகள் :: 99 – 100
எச்சபை பொதுஎன இயம்பினர் அறிஞர்கள்
அச்சபை இடங்கொளும் அருட்பெருஞ்ஜோதி.
அன்பர்களே!
சுத்தசன்மார்க்கம் சாருவோம்,
உண்மை கடவுள் நிலை காண்போம்.

— அன்புடன் ஏபிஜெ அருள்.

unmai

Channai,Tamilnadu,India