Deprecated: Hook custom_css_loaded is deprecated since version jetpack-13.5! Use WordPress Custom CSS instead. Jetpack no longer supports Custom CSS. Read the WordPress.org documentation to learn how to apply custom styles to your site: https://wordpress.org/documentation/article/styles-overview/#applying-custom-css in /var/www/wp-includes/functions.php on line 6078
இதுவே நியாயம், இதுவே உண்மை,இதுவே சுத்த சன்மார்க்கம் – ஏபிஜெ அருள் – வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்
July 27, 2024
tamil katturai APJ arul

இதுவே நியாயம், இதுவே உண்மை,இதுவே சுத்த சன்மார்க்கம் – ஏபிஜெ அருள்

இதுவே நியாயம்— ஏபிஜெ அருள்.

மார்க்கம் என்றால் வழி.
சன்மார்க்கம் என்றால் மெய்பொருளாகிய கடவுளை கண்டு அருளை பெறும் வழி
உலகில் எண்ணிலடங்க வழிகள் சொல்லப்பட்டு, பல சமய மத சன்மார்க்கங்கள் உள்ளது.
அதில் முக்கியம்; சைவம்,வைணவம்,கிறிஸ்து,
இஸ்ஸலாம்,சீக்கியம்,ஜைணம், பெளத்த மதம் உள்ளது. இந்நிலையில், தான் வைத்திருந்த சைவ சமயப் பற்றை கைவிட்டு விட்டு ஒரு புதிய தனி வழியில் முயற்சித்தாரவே வள்ளலார். அந்த வழிக்கு சுத்த சன்மார்க்கம் எனப் பெயர் வைத்து அழைத்தார்கள். சுத்த சன்மார்க்கம் என்றால் உலகில் காணும் சன்மார்க்கங்களை (அதாவது ஏற்கனவே வெளிப்பட்ட வழிகளை வழிபாடுகளை) மறுக்க வந்ததது என்கிறார் வள்ளலார். நான் கண்ட கடவுள் சமய சாத்திரப் புராணங்களில் சொல்லப்பட்ட கர்த்தர்,கடவுள் அல்ல என்கிறார்கள். கருணை விருத்திக்கு தடையாக உள்ளவை சாதி சமய ஆசாரங்களே! என்கிறார் வள்ளலார். எனவே முழு உண்மை உரைக்காத சாதி சமய மதங்களில் லட்சியம் வையாது, கடவுளின் அருளைப்பெற்று தரும் கருணை நம்மிடம் விருத்தியாகமல் தடை செய்யும் சாதி சமய ஆச்சாரங்களை விட்டு ஒழித்து உண்மை கடவுளை கருத்தில்கருதி உண்மை அன்பால் மட்டுமே வழிபாடு செய்தல் வேண்டும். இதுவே நான் கண்ட வழி (சுத்த சன்மார்க்கம்) என்கிறார்.
இதுவே சத்தியம் என்கிறார் வள்ளலார்.இந்த உண்மையை தான் ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமையில் நமக்கு தெரிவிக்கிறார் வள்ளலார். இந்த வழியில் சென்று உண்மை ஆண்டவரின் சொரூபத்தை கண்ட வள்ளலாருக்கு இறைவன் சாகா கல்வி போதித்தார்.இந்த இன்பம் என்னை போல் எல்லோரும் பெறவேண்டும் என வள்ளலார் இறைவனிடம் வேண்டினார். பெருவெளி அடைந்த வள்ளலாரிடம் இறைவன்; ” நீ வந்த வழியை குறித்து நீயே மக்களிடம் விளக்குவாய் ” என நாம் இருக்கும் அறியாமை இடத்திற்கே அனுப்பி வைக்கிறார் இறைவன்.இதுவே வருவிக்கவுற்றது ஆகும்.
இதுவே சுத்த சன்மார்க்கம்
இதுவே உண்மை.

இந்த உண்மையை தான் சொல்ல வேண்டும், சொல்லிய படி அறிய வேண்டும்,
அறிந்த படி இடைவிடாது முயற்சிக்க வேண்டும். 
முயற்சித்தவர்களுக்கு அகத்தில் அனுபவம் ஏற்பட்டு இறை ஒளி காணலாம் சாகா கல்வி கற்கலாம். இது சத்தியம் என்கிறார் திருவருட்பிரகாச வள்ளலார்.
இந்த நெறியை உலகம் அறிய கூட்டம் மாநாடு நாம் செய்யலாம். இதை அறிய எல்லோரும் வரலாம். (ஆனால் சமய மதத்தார்களை மேடை ஏற்றினால் மேலே சொன்ன வள்ளலாரின் தனி நெறியை எங்ஙனம் வெளிப்படுத்துவார்கள்??) இரக்கம்,ஜூவகாருண்யம், இவை நம் மார்க்கத்தின் அடிப்படை தகுதிகளாக உள்ளது. இரக்கம் ஜூவகாருண்யம் சமய மதங்களிலேயே வெளிப்பட்டுள்ளது. இதுவல்ல வள்ளலார் கண்ட உண்மை. 
கருணைக்கு தடையாக உள்ள சாதி சமய ஆச்சாரங்கள் விட்டு ஓழிக்க வேண்டும் தலைவனை(கடவுளையே) மட்டுமே கருத்தில் கருதி தொழவேண்டும். இதுவே சுத்த சன்மார்க்கம்.
இந்த ஆசை உண்டேல் வம்மீன் என்கிறார் (எல்லோரையும் அல்ல). ஆனால் எல்லோருக்கும் உண்மையறிய வழி திறந்தே உள்ளது. வழி திறந்தே உள்ளது என்பதற்காக சாதி பற்று உடையவர்கள் சமய மத ஆச்சாரங்களை செய்பவர்கள் பயணிக்க முடியாது.அதாவது வள்ளலார் வழியில் வழிபாடு செய்ய முடியாது. காரியப்படாது. 
எல்லா சமய மத நெறிகள் ஒவ்வொன்றும் எங்ஙனம் தனி நெறியாக விளங்குகிறதோ அது போல் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கமும் 19 ம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு புதிய தனி நெறியாகும்.
இதுவே நியாயம். 

நன்றி : ஏபிஜெ அருள், கருணை சபை,மதுரை.

unmai

Channai,Tamilnadu,India