Deprecated: Hook custom_css_loaded is deprecated since version jetpack-13.5! Use WordPress Custom CSS instead. Jetpack no longer supports Custom CSS. Read the WordPress.org documentation to learn how to apply custom styles to your site: https://wordpress.org/documentation/article/styles-overview/#applying-custom-css in /var/www/wp-includes/functions.php on line 6078
நல்ல விசாரணை “ஒருமை” – வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்
July 27, 2024
tamil katturai APJ arul

நல்ல விசாரணை “ஒருமை”

நல்ல விசாரணை “ஒருமை”

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
கருணை சபை – சாலை அறக்கட்டளை, மதுரை -யின் சார்பாக நடக்கும் நல்ல விசாரணைக்கு வந்தியிருக்கும் உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.
உயர்திரு. சந்திரமோகன் அய்யா, அவர்கள், திரு. தர்மலிங்கம் அவர்கள், திருமதி சிவகாமி அம்மா அவர்கள், வழக்கறிஞர் திரு.தயவுசுப்புராஜ் அவர்கள், திரு. குறிஞ்சிபாடி சுப்பிரமணியம் அவர்கள், வடலூர் விஜயராகவன்அவர்கள்,திரு. சொக்கலிங்கம், திரு. கோவர்தனன், திரு. குமாரராஜா, திருமதி. ஜெயகுருவம்மாள், அரியலூர் திரு.செங்கான் திரு. முரளிதரன், திருமதி.ஜெயலெட்சுமி மற்றும் ராஜாபாûளயம் திரு. சகாதேவ ராஜா ஆகியோரை வணங்கி வரவேற்கின்றேன்.
கருணை சபை-சாலையின் முதல் ஆடியோ வெளியீடான “நல்ல விசாரணை” நம் அன்பர்களிடம் மிக்க பாரட்டுதலை பெற்றது. ஆம் அந்த விசாரணை மிக்க பயன் உள்ளதாகவே அமைந்தது. காரணம் அந்த விசாரணை முழுவதும் வள்ளலாரின் சத்திய வாக்கியங்களின்அடிப்படையிலேயே அமைந்தது. அதில் எந்தொரு தனிப்பட்ட விளக்கமும் அளிக்கப் படவில்லை.

சான்றோர்களே; பெரியோர்கúள மற்றும் அன்பர்களே இன்று நாம் செய்ய உள்ள விசாரணை யாதெனில்;
“கடவுள் நிலை” அறிவதற்கு உலகில் காணும் மார்க்கங்களில் உயர்வுடையது எது? என்ற விசாரணையே
“சுத்த ஞானி” வள்ளலார் சொல்கிறார்கள்;

“சமரச சுத்த சன்மார்க்கமே உயர்வுடையது”.
இம்மார்க்கம் உலகில் உள்ள எல்லா சமய, மத மார்க்கங்களுக்கும் “உண்மைப் பொது நெறியாக” விளங்கும் என்கிறார்கள். இங்ஙனம் கூறிய கூற்றில் உள்ளவையை நாம் பெற்றியிருக்கும் ‘தனது அறிவால்’ ஒருவாறு இன்று விசாரணை செய்வோம். எல்லாம் வல்ல ஆண்டவன் துணைபுரிதல் வேண்டும்.

இன்று நாம் பல வகைப்பட்ட சமய, மத, மார்க்கங்களளைல் பிளவு படுத்தப்பட்டு வேறுபாடுடன் வாழ்ந்து வருகிறோம். இன்று நடக்கும் பல அசம்பாவித சம்பவங்களுக்கு சமய, மத பிரிவுகúள காரணமாக உள்ளது என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஆனால் அவை அனைத்தும் கடவுள் குறித்தே வியம்புகின்றன. அச்சமய மத மார்க்கங்கûள தோற்றுவித்தவர்கள் தலைவர்களும், யோகிகளும், ஞானிகளுமே ஆவார்கள், அவர்கள் நல்லறிவு நல்லொழக்கம் கொண்டவர்ககள். அவரவர்கள் தங்கள் தங்கள் அறிவின்கண் அனுபவத்தின்கண் வெளிப்பட்டதின் மூலம் தோன்றியவையே இந்த பலவகைப்பட்ட சமய, மத, மார்க்கங்கள் ஆகும். ஆனால் இவையின் ஆசாரசங்கற்ப விகற்பங்களளைல் நம்மிடையே ‘பொது நோக்கத்தை’ நிலை நாட்ட முடியவில்லை இதனதன் பலவகைப்பட்ட சாதி, சமய கட்டுப்பாட்டு ஆசார நடவடிக்கையால் பிரிந்து வாழ்கின்றோம். மேலும் தங்களுடைய சமய, மத, மார்க்கங்கûள சாரதவர்கûள தீண்டத்தகாதவர்கள் என்றும் அல்லது பாவிகள் என்றும், அல்லது காபியர்கள்/விரோதிகள் என்றும் அழைக்கிறார்கள்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பும், ஏன் இன்றும், நம்மை மேற்படியான பல வகைப்பட்ட கடவுள் மார்க்கங்களளைல் ஒன்றுபடுத்த முடியவில்லை.காரணம் கடவுள் நிலை உண்மையாக காணவில்லை. பல்லாயிர கணக்கில் மனித உயிர்கûள இந்த சமய, மத வேறுபாட்டால் கொன்று குவித்து உள்úளளைம். கடவுள் பெயரால் கோடிக்கணக்கான அளவில் மற்ற உயிர்கûள பலி கொடுத்துள்úளளைம்.

இந்நிலையில் நாம், வள்ளலார் கண்ட மார்க்கம் உயர்வுடையதா? எனப் பார்ப்போம். அங்ஙனம் உயர்வுடையதாக இருக்க வேண்டுமானால் கீழ்வருபவையை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்
இம்மார்க்கத்தில் வழிபாடு செய்யும் கடவுள் யார்? இக்கடவுûள எல்லாரும் ஒத்துக் கொள்ளக்கூடியதாக உள்ளதா?
வழிபாடு முறை பொதுவாக உள்ளதா?
கடவுள் நிலையறிவது எப்படி? எல்லாருக்கும் சாத்தியமா?
இம்மார்க்கம் சாரதவர்கûள எங்ஙனம் இது வியம்புகிறது?
இம்மார்க்கத்தின் நெறி எல்லோருக்கும் பொது நெறியாக இருக்கிறதா?
இம்மார்க்கத்தினை கண்ட “வள்ளலார்” பெற்ற பயன் யாது?
அன்பர்கúள, இதை நாம் நல்லவிசாரணை செய்தல் வேண்டும். வள்ளலாரின் ஆவணங்கள் உரைநடைப்பகுதி, அகவல், மற்றும் சுத்த சன்மார்க்கப்பாடல்கள் ஆகியவை ஆதாரமாக கொண்டு, அதிலுள்ள சத்திய வாக்கியங்கûள வாசிப்பதின் மூலம் நாம் உண்மையறிவோம். உங்கள் ஙழ்ள். அடஒ. அதமக
நன்றி வணக்கம்
“ஒருமை “
தொடர் கட்டுரை பகுதி

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
ஆவணம் திரு.அகவல் வரிகள் 1 முதல் 168வரை மற்றும் உரைநடைப்பகுதி
அன்பர்களே.
வள்ளலார் கண்ட மார்க்கத்தில் சபையில் வழிபாடு செய்யப்படும் கடவுள் யார்? அச்சபை எல்லோருக்கும் பொதுவாக உள்ளதா? என தெரிதல் அவசியம் வேண்டும்.
அகவல் வரி எண் 50-51
“எச்சபை பொது என இயம்பினர் அறிஞர்கள் அச்சபை இடங்கொளும் அருட்பெருஞ்ஜோதி.”
மேலும், வள்ளலார் தனது சத்திய சிறு விண்ணப்பத்தில் தன்மார்க்கத்தில் ‘வழிபாடு கடவுள்’ குறித்து சொல்லியது யாதெனில்
“எல்லா அண்டங்கûளயும், எல்லா உலகங்கûளயும், எல்லா உயிர்கûளயும், எல்லாப் பொருள்கûளயும், மற்றையெல்லாவற்றையும், தோற்றுவித்தும், விளக்கஞ் செய்வித்தும், துரிசு நீக்குவித்தும், பக்குவம் வருவித்தும், பலன் தருவித்தும், எங்கும் பூரணராகி விளங்குகின்ற ஓர் உண்மைக் கடவுள் உண்டென்றும், அக்கடவுûள உண்மையன்பாற் கருத்திற் கருதி வழிபாடு செய்யின் அக்கடவுள் திருவருள் நமது கருத்தின் கண் வெளிப்பட்டு விளங்கு மென்றும்…. “
ஆக,
“ஓர் உண்மைக்கடவுள் உண்டென்றும், அக்கடவுளை 
உண்மை அன்பால்
கருத்தில் கருதி வழிபாடு செய்யின் …”
என்பதின் மூலம்
வள்ளலார் மார்க்கத்தின் சபை “பொது சபை” எனவும் வழிபாடு கடவுள் “பொது கடவுள்” எனவும் இயம்புவர் அறிஞர்கள் என்பதில் ஐய்யமில்லை.
வள்ளலார் நெறி ‘உண்மைப் பொது நெறி’ என்பதற்கு மற்றொரு அகவல் வரிகள் 71 மற்றும் 93
“எப்பொருள் மெய்ப்பொருள் என்பர் மெய்கண்டோர்
அப்பொருள் ஆகிய அருட்பெருஞ்ஜோதி “
“பொது அது, சிறப்பு அது, புதியது, பழையது என்று
அது அது வாய்த் திகழ் அருட்பெருஞ்ஜோதி “
கடவுள் வடிவம் என்ன? அதைப்பற்றி வள்ளலார் திருஅகவலில் சொல்லும் போது
“அது சுட்டுதற்கு அரிதாம்” என்றும் (திருஅகவல் வரிஎண் 37)
“மனம் முதலிய தத்துவங்களுக்கு எட்டாததும்” (வரி 41)
“ஓதி நின்று உணர்ந்து உணர்தற்கு அரிதாம்” (வரி 42)
“கற்பனை முழுவதும் கடந்தது” (வரி 5)
“எண் தரமுடியாது” (வரி 113)
என்கிறார்கள் மேலும் வள்ளலார், கடவுள் உண்மையை அக அனுபவத்திலே தெரியும் என்கிறார்கள்.
இந்நிலையில், நமது புற அறிவினால் எல்லோராலும் ஒத்துக் கொள்ளக்கூடிய பொது நெறியாக வள்ளலாரின் நெறி உள்ளது.
ஆனால் இன்று உலகில் காணும் சமய, மத, மார்க்கங்களில் கடவுளும் அதன் வடிவமும் கற்பனையால்
சுட்டிக்காட்டியும், எண்ணிட்டும் அல்லது அவரவர் அறிவின்கண் தோன்றியவையும் தெய்வமாக
கொள்ளப்பட்டுள்ளது. கடவுள் நிலையை கற்பனையால் பொய்யாக திணிக்கப்பட்டு உள்ளது. அக்கடவுளுக்கு
மந்திரங்களளைல் ஓதியும் மற்றும் மனிதர்களிடையே சாதி/ வகுப்புகள் வேறுபட்ட கோட்பாடுகள்,
வேறுப்பட்ட பல நடைமுறைகளும் உள்ளன, அவை அங்ஙனம் இருப்பதினால் தான் வள்ளலார் அகவல்
எண் 106-ல்
“சாதியும் மதமும் சமயமும் பொய் என
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி”
என்கிறார்கள் (பக்கம் 561ல் தன் சத்திய சிறு விண்ணப்பத்தில்) தன் மார்க்கத்திற்கு மேற்ச்சொன்ன
சமய, மத, மார்க்கங்களை எக்காலத்திற்கும் முக்கியத்தடைகளளைகும் என்கிறார்கள். மேலும் பக்கம்
411-ல் இவையில் முற்றும் பற்றற கைவிட்டவர்களே சுத்தசன்மார்க்கத்திற்கு உரியவர்கள் ஆவார்கள்
என்கிறார்கள் ஆனால் அதே நேரத்தில் ஓர் உண்மையை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும் தன்
மார்க்கத்திற்கு மேற்படி, சமய, மார்க்கங்கள் எக்காலத்தும் முக்கியத்தடையாக அறிவித்த வள்ளலார்,
தான் கண்ட மார்க்கத்தின் நெறியானது மேற்படி எல்லா சமங்களுக்கும், மதங்களுக்கும் எல்லா மார்க்கங்களும் “உண்மைப் பொது நெறியாக” விளங்கும் என்கிறார்கள். இதன் மூலம் உலகத்தார் அனைவருக்குமே பொதுநெறியாக விளங்கக் கூடிய மார்க்கத்தினையே அவர்கள் கண்டு உள்ளளைர்கள்
கடவுளின் வடிவத்திற்கு வருவோம்
வள்ளலார் தனது பேருஉபதேசத்தில் ( 22.10.1873)ல் சொல்லியது பக்கம் 466-ல்
“தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங்கவியச் சொல்லாமல், மண்ணைப் போட்டு மறைத்துவிட்டார்கள். அணுமாத்திரமேனுந் தெரிவிக்காமல், பிண்ட லக்ஷணத்தை அண்டத்தில் காட்டினார்கள், யாதெனில்; கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதியென்றும் பெயரிட்டு, இடம், வாகனம், ஆயுதம், வடிவம், ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பதுபோல் அமைத்து, உண்மையாக இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள், ” தெய்வத்துக்குக் கை, கால் முதலியன இருக்குமா?” என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள். இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்கùளன்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது, அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள். ஆனால், ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன், அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை. அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை. அவைகளில் ஏகதேச கர்மசித்திகûளக் கற்பனைகளளைகச் சொல்லியிருக்கின்றார்கள். அதற்காக ஒவ்வொரு சித்திக்கும் பத்து வருடம் எட்டு வருடம் பிரயாசை எடுத்துக் கொண்டால், அற்ப சித்திகûள அடையலாம். அதற்காக அவற்றில் லக்ஷியம் வைத்தால் ஆண்டவரிடத்தில் வைத்துக்கொண்டியிருக்கின்ற லக்ஷியம் போய்விடும். ஆண்டவரிடத்தில் வைத்த லக்ஷியம் போய்விட்டால் நீங்கள் அடையப் போகின்ற பெரிய பிரயோஜனம் போய்விடும், அல்லது, அதில் முயற்சிசெய்து, அவ்வளவு காலம் உழைத்து, அந்த அற்பப் பிரயோஜனத்தைத் தெரிந்து கொண்டு, அதனால் ஒரு லாபத்தை ஏகதேசம் அடைந்தால், முக்கிய லாபம் போய்விடும். ஆகையால், அவகைளில் லக்ஷியம் வைக்காமல், ஆண்டவரிடத்திலேயே லக்ஷியம் வைக்க வேண்டியது.
கடவுளின் வடிவம் குறித்து தனது
அகவலில்
எண் 57
“பிறிவுற்று அறியாப் பெரும் பொருளளைய், என்
அறிவுக்கு அறிவு ஆம் அருட்பெருஞ்ஜோதி”
வரி எண் 138
“அருள் ஒளி என்தனி அறிவினில் விரித்தே
அருள் நெறி விளக்கு எனும் அருட்பெருஞ்ஜோதி”
ஆக,
கடவுளின் வடிவம்
“நம் அறிவுக்கு அறிவில்” தெளிவதாக உள்ளது.
அந்த அறிவு “தனி அறிவு” (சத்திய அறிவு) ஆகும். மேற்படி இந்த “தனி அறிவை” எப்படி பெறுவது? என விசாரணை செய்தல் வேண்டும.
வள்ளலார் மிகத் தெளிவாகவே பக்கம் 438 -ல் சொல்லிவிடடார்கள்.
திருவருள் நிலை படிப்பால் அறியக்கூடாது.
அக அனுபவமே உண்மை.
மேலும்
சுத்த சன்மார்க்கத்தில் கடவுள் நிலையறிவது
எப்படியெனில்,
“ஒழுக்கம் நிரம்பி, கருணையே வடிவாக நிற்கும் விசார சங்கல்பம் உண்டானால் நாம் தாழும் குணம் வரும். அத்தருணத்தில் திருவருள் சத்தி பதிந்து அறிவு விளங்கும்”.
அகவல் வரி 143ல்
“பிரிவு ஏது, இனி உனைப் பிடித்தனம் , உனக்கு நம்
அறிவே வடிவு எனும் அருட்பெருஞ்ஜோதி ”
ஆக “தனி அறிவை”
அறிவுக்கு அறிவாகிய தனி அறிவை “விசார சங்கல்பத்தில்” பெறுவதாக உள்ளது. இச் சங்கல்பம் உண்டாகும்வரை
“ஒழுக்கம்” நிரம்புதல் வேண்டும் என்பதே வள்ளலார் கண்ட மார்க்கத்தின் “உண்மை தனி நெறியாக” உள்ளது.
சத்திய அறிவால் அறியப்படுகின்ற அந்த ஒரே கடவுளின் உண்மை, வடிவம், நிலை ஒழுக்கம் நிரம்புவதின் மூலமே .
அறியமுடியும், நமது முதல் விசாரணை பகுதி 1-ல் மிகத் தெளிவாக நாம் கண்டோம்
ஆக,
வள்ளலார் நமக்கு காட்டிய “வழிபாடு கடவுளுக்கு” எந்தொரு வடிவமும் தரவில்லை. நம்மிடம் உள்ள உரிமை, எடுத்துக் காட்டு தகுதி அடிப்படையில் “ஓர் உண்மைக்கடவுள் உண்டென்றும்” அக்கடவுûள உண்மையன்பால் கருத்தில் கருதவே சொல்கிறார் வள்ளலார்.நமது உரிமை அடிப்படையில் கருதிய அக்கடவுளின் நிலை, வடிவம் அறிவுக்கு அறிவாகிய “தனி அறிவி”னிலேயே தெரிவதாக உள்ளது.
இதுவே வள்ளலார் நமக்கு காட்டிய கடவுள்
ஆனால்,
வள்ளலார் “தனி அறிவை” பெற்று, ஞான யோக அனுபவநிலையில் கண்ட ஆண்டவரே “தனிப்பெருங்கருணை கடவுள்” ஆகும்
அக்கடவுûளத் தான் 18 திருநெறிகுறிப்புகளுடன் சொல்லி உள்ளளைர்கள் “இயற்கை உண்மையரென்றும், இயற்கை அறிவினரென்றும், இயற்கை இன்பின ரென்றும், நிர்க்குணரென்றும், சிற்குணரென்றும் நித்தியரென்றும், சத்தியரென்றும், ஏக ரென்றும், அநேக ரென்றும், ஆதியரென்றும், அனாதிய ரென்றும், அமல ரென்றும், அருட்பெருஞ்ஜோதிய ரென்றும், அற்புத ரென்றும், நிரதிசய ரென்றும், எல்லாம் வல்லவ ரென்றும், குறிக்கப்படுவதல் முதலிய அளவு கடந்த திருக்குறிப்புத் திருவார்த்தைகளளைற் சுத்த சன்மார்க்க ஞானிகள் துதித்தும், நினைத்தும், உணர்ந்தும், புணர்ந்தும், அனுபவிக்க விளங்குகின்ற தனித் தலைமைப் பெரும் பதியாகிய பெருங் கருணைக் கடவுúள…..”
நம் வள்ளலார் துதித்தும், நினைத்தும், உணர்த்தும், புணர்ந்தும் அனுபவித்தார்கள்.
மேலும் வள்ளலாருக்கு
“சாகா கல்வியின்” உண்மைகள் மூன்றும்
தெரியவந்து மரணமில்லா பெருவாழ்வு பெற்றார்கள். சுத்தமாதி முத்தேகங்கûள பெற்றவரே வள்ளலார். அவர் ஓரு சுத்தஞானி ஆவார் ஆக, கடவுள் நிலை, வடிவம் அக அனுபவத்திலேயே ‘தனி அறிவு’ பெற்றப் பின்னரே தெரியமுடியும், என்பதை நாம் தெரிந்துக் கொள்வோம்.
அன்பர்கúள அடுத்து காண்பது
வள்ளலார் மார்க்கத்தில் ‘தனி நெறி’ எந்த இடத்தில் வெளிப்படுவதாக உள்ளது. இந்த விசாரணையே நாம் இன்று காண்பதாக உள்úளளைம். மிக முக்கிய பகுதி இது. வள்ளலார் சொல்கிறார்கள் “தன்னை ஏறாநிலை மிசை ஏற்றியது எதுவெனில் தயவு என்னும் கருணையே” என்கிறார்கள். அந்த தயவுக்கு ஒருமை வரவேண்டும் ஒருமையில் தான் தயவு வரும். பக்கம் 474ல் தயவு, கருணை, அருள் என்பவை ஒரு பொருûளயே குறிக்கும் என்கிறார்கள்.
கருணை என்பது ;
“எல்லா உயிர்களிடத்தும் தயவும்
ஆண்டவரிடத்தில், அன்புமே “
தயவு என்னும் கருணை = தயவு + அன்பு
இந்த “தயவு” “ஒருமையில்” தான் வரும் என்கிறார்கள்.
ஒருமை என்றால் என்ன?
அன்பர்கúள இந்த ஒருமையின் பொருளில் (இந்த இடமே) “வள்ளலாரின் தனிநெறி” வெளிப்படுகிறது. ‘உண்மைப் பொதுநெறியாக’ விளங்குகிறது.
சுத்தசன்மார்க்கம் இந்த “ஒருமையிலே”யே வெளிப்படுகிறது என்பது சத்தியம்.
“ஒருமை” என்பது என்ன?
இதுநாள் வரை இதற்கு கண்டு தெரிந்த வந்த பொருள் என்ன என்று தமிழ் அகராதியை பார்த்தால் தெரிய வருவது யாதெனில் ;
நூல் பிங்கலையில் ஒருமை என்பது ஒற்றுமை மற்றும் இறையுணர்வு எனவும்
கம்பராமயணத்தில் ஒருமை என்பது ஒற்றுமை மற்றும் இறையுணர்வு
குறளில் ஒருமை என்பது தனிமை மற்றும் ஆலோசனை முடிவு என்றும்
சிவப்புராணத்தில் ஒருமை என்பது ஒப்பற்றதன்மை எனவும்
தொல்காப்பியத்தில் ஒருமை என்பது ஏகவசனம் என்றும்
தேவாரத்தில் ஒருமை என்பது மனமொன்றுகை – யாகவும்
தணிக்கைப்பு, நந்தியுவில் ஒருமை என்பது மோக்ஷம் – எனவும்
கம்பரின்அயோத்தியாவில் ஒருமை என்பது மெய்ம்மை என்றும்
398ன் குறளில் ஒருமை என்பது ஒரு பிறப்பு ஆகவும் உள்ளது.

ஆக, உலகத்தார் இதுவரை ‘ஒருமைக்கு’ கொண்ட பொருள் மேற்படியாக தனிமை, முடிவு, ஒரேத் தன்மை, ஒப்பற்ற தன்மை ஏகவசனம், மனம் ஒன்றுகை, மோஷம், மெய்மை ஒரு பிறப்பு ஆக உள்ளது.
ஆனால் அன்பர்கúள வள்ளலார் தரும் விளக்கம் என்ன?
“ஒருமை”
பக்கம் 414-ல் சொல்கிறார்கள்; “ஒருமை என்பது யாதெனில்; “தனது அறிவு ஒழுக்கம் ஒத்த இடத்தில் தானே கூடும். மற்ற இடத்தில், “தன்னால் இதரர்களுக்கு இம்சை இல்லாது அவர்கள் செய்யினும் தான் சகித்து அடங்கி நிற்பது’ என்கிறார் வள்ளலார்.
இங்குள்ள சிறப்பான தனிப்பொருûள எடுத்துக் கொள்வோம்.
அது ‘ஒருமை’ என்பது
“தனது அறிவு, ஒழுக்கம் ஒத்த இடத்தில் தானே கூடும்”.
ஒருமை = தனது அறிவு + ஒழுக்கமும்
‘தனது அறிவு’ என்பது அவரவர் பெற்றியிருக்கும் அறிவே ஐய்க்ண்ஸ்ண்க்ன்ஹப் ஓய்ர்ஜ்ப்ங்க்ஞ்ங் இங்ஙனமாக பொதுநெறி கொண்டு எந்த மார்க்கமும் இதுநாள்வரை இவ்வுலகத்தில் தோன்றவில்லை.
நல்ல விசாரணைக்கு செல்வோம்.
ஆக ‘தனது அறிவு’, (அவரவர் பெற்றியிருக்கும் அறிவுடன்) என்பதுடன் ஒழுக்கம் சேர்ந்து, அவை இரண்டும் ஒத்த இடத்தில் (ஙங்ழ்ஞ்ங் டப்ஹஸ்ரீங்) ஒருமை தானாக கூடும். இந்த ஒருமையை பெற்றால் ‘கருணை’ வந்து விடும்.
கருணை வந்தால் ஏறாநிலைமிசை ஏறி மரணம், பிணி, மூப்பு, பயம் துன்பம் ஆகிய அவத்தைகûள நீக்கி பேரின்ப வாழ்வை பெற்று விடலாம்.
அடுத்து முடிவாக காண்பது
வள்ளலார் மார்க்கமே உயர்வுடையது. எங்ஙனம்?
அன்பர்கúள,
ஒன்று உயர்வாக கருதப்பட வேண்டுமானால்
அது எல்லோருக்கும் பொதுவாக இருக்க வேண்டும்
அது எல்லோராலும் ஒத்துக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும்
மார்க்கத்தினை ஏற்படுத்தியவர் தன் நிலைப்பற்றி சொல்லியதை கவனத்தில் கொள்ள வேண்டும்
அம்மார்க்கத்தினை சாராதவர்கûளயும் வேறுபாடு இன்றி பார்த்திருக்க வேண்டும்
மார்க்கத்தினை கண்டவர், வென்றியிருக்க வேண்டும் அவ்வழி மூலமே இந்த ஐந்தும் பெற்றியிருக்கும் எதுவோ அதுவே உயர்வுடையதாகும். நல்ல விசாரணை செய்வோம்.

உலகில் காணும் சமய மத மார்க்கங்கûள பார்க்கும் பொழுது
அம்மார்க்கங்கûள சாராதவர்கûள மற்றும் அதில் காட்டப்படும் அக்கடவுள், கர்த்தர், ஞானி, தலைவர் ஆகியோரை நம்பாதவர்ûள
தீண்டத்தகாதவர்கள் என்றும்
பாவிகள் என்றும்
காப்யர்கள் என்றும்
சாத்தான்கள் , எதிரிகள், கூட்டம் என்றும் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் சுத்த சன்மார்க்கத்தில் சொல்லப்படுவது என்ன தெரியுமா? பக்குவம், அபக்குவம், பக்குவாபக்குவம்
அபக்குவர்களின் நடவடிக்கைகளுக்கு அவர்களின் அஞ்ஞானமும், அறியாமையுமே காரணம் என்கிறார் வள்ளலார்.
எவரையும் வேறுபட்டு, நினையாது இயற்கையின் உண்மையிலேயே காண்கிறார் வள்ளலார். பக்கம் 471-ல் ‘ஒழுக்கம் வராமல் எவ்வளவு தாழ்ந்த மனுஷ்யர்களளையிருந்தாலும் நமது ஒழுக்கத்திற்கு வரும்படி எவ்விதத் தந்திரமாவது செய்தல் வேண்டும்’ என்று வள்ளலார் சொல்லியிருப்பதின் மூலம் அவர் மார்க்கம் “பொது மார்க்கம்” என அறிதல் வேண்டும்.
இம்மார்க்கத்தின் லட்சியம்
“ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமையே”.
பக்கம் 550ல் தன் மார்க்கத்தின் நெறி எல்லா சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும்,எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொது நெறியாக விளங்கும் என்கிறார்கள்.
ஆக, வள்ளலார் மார்க்கத்தில்
கடவுள் யார்? என்பதிலும்
அக்கடவுளின் வடிவம் என்ன? என்பதிலும்
அக்கடவுளின் நிலையறியும் வழி எது? என்பதிலும்
அக்கடவுளின் அருள் யாருக்கு கிட்டும்? என்பதிலும்
பொதுநோக்கம் கொண்டுள்ளது.
இயற்கை உண்மை, இயற்கை விளக்கம், இயற்கை இன்பமாக வள்ளலார் கடவுள் உண்மையை காண்கிறார் வள்ளலார் எனவே சுத்த சன்மார்க்கமே உயர்வுடையது என்பதை நம் புற அறிவினாலும் மற்றும் அனுபவத்தினாலும் உறுதியாக கூறலாம்.
மீண்டும் ஒருமுறை சுத்தசன்மார்க்கமே உயர்வுடையது என உறுதிப்படுத்துவோம்.
வள்ளலாரின் சுத்த சன்னமார்க்கம்
உண்மைப் பொது நெறியில்…..
1. வழிபாடு கடவுள் (ஆதாரம் சத்திய சிறுவிண்ணப்பம் பக்கம் 559 )
‘எங்கும் பூரணராகி விளங்குகின்ற ஓர் உண்மைக்கடவுள் உண்டென்றும், அக்கடவுûள உண்மை அன்பால் கருத்தில் கருதி வாழிபாடு செய்தல்’…..
2. கடவுள் வடிவம் (ஆதாரம் அகவல் வரிகள்) “உண்மைக்கடவுளின் வடிவம்
அறிவுக்கு அறிவாம் தனி அறிவில் தெரிவதாக உள்ளது’. சத்திய அறிவை “ஒழுக்கம்” நிரப்புவதின் மூலம் பெறலாம். ஆதலால் கருணையை, இடைவிடாது நன்முயற்சியில் பழகல் வேண்டும்.
3. கடவுள் நிலையறிய
(பக்கம் 438 உபதேசக் குறிப்பு )
“ஒழுக்கம் நிரம்பி கருணையே வடிவாக நிற்கும் விசார சங்கல்பம் உண்டானால், நாம் தாழும் குணம் வரும் அத்தருணத்தில் திருவருள் சத்தி பதிந்து அறிவு விளங்கும்”.
4. இம்மார்க்கத்தை சார்ந்தவர் சாராதவர்கள் பயன்பெற்றவர்கள் எங்ஙனம் அழைக்கப்படுகிறது.
பக்குவிகள்
அபக்குவிகள்
பக்குவாபக்குவிகள் என்றே அழைக்கப்பட்டு ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமையை லட்சியமாக கொண்டுள்ளது.
5. வள்ளலாரின் நெறி வெளிப்படும் “ஒருமை” இடத்தில் பொது நோக்கம் உள்ளதா?
ஆதாரம் 414ம் பக்கம்
சுத்த சன்மார்க்க நெறி வெளிப்படும்
இடம் – உரிமை கருணை / ஒருமை / கருணை வருவதற்கு ஏதுவான உரிமை இருத்தல் வேண்டும். உரிமை = தகுதி உடையவர்கள் “கருணை” என்பது எல்லா உயிர்களிடத்திலும் தயவும், ஆண்டவரிடத்தில் அன்புமே) தயவு என்னும் கருணை “ஒருமையிலேயே” வரும். ஒருமை என்பது ‘தனது அறிவு ஒழுக்கம் ஒத்தயிடத்தில் தானே கூடும்’ இந்த தனது அறிவு, என்பது அவரவர் பெற்றியிருக்கும் அறிவே. இதன் மூலம் அறிவது யாதெனில் ;
இதுவரைக்கும் ஒழுக்கத்துக்கு வராமல் எவ்வளவு தாழ்ந்த மனுஷ்யர்களளையிருந்தாலும், அவர்களிடம் ஒழுக்கம் சேர்ந்து ஒத்து வருகின்றயிடத்தில் “கருணை” வரும் என்பதை சத்தியமாக அறிதல் வேண்டும். பக்கம் 418ல் சாதி, சமய கட்டுப்பாட்டு ஆசாரங்கûள ஒழித்து ‘பொதுநோக்கம்’ வரும் போது ஆண்டவர் அருள் கிட்டுவதாக உள்ளது என்பதே வள்ளலார் சொல்லிய உண்மையாகும்
முடிவாக சுத்த சன்மார்க்க ஒழுக்கங்கள் எவை எனக்காணும் பொழுது வள்ளலாரின் விண்ணப்பங்கள் மூலம் தெரிவது., “தூய்மையுடைமை, அன்புடைமை, வாய்மைக்கூறல், இன்சொற்கள்” முதலியவை ஆகும். பக்கம் 547-ல் மிகத்தெளிவாக குறிப்பிட்டு உள்ளளைர்கள். அவை நல்லறிவு, கடவுள், பக்தி, உயிரிரக்கம்,பொதுநோக்கம், திரிகரண அடக்கம் முதலிய நற்குண ஒழுக்ககளையும் உண்மையுரைத்தல், இன்சொல்லாடல், உயிர்க்குபகரித்தல் முதலிய நற்செயற்கை ஒழுக்ககளையும் பெற்று சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்களளைகியிருத்தல் வேண்டும்.
மேலும் வள்ளலார் திருக்கதவு திருகாப்பிட்டு கொள்ளும் முந்தின இரவில் சொல்லியதை ஒருமுறை வாசிக்கின்றேன்.
(பக்கம் 410 உரைநடைப்பகுதி )
“இதுகாறும் என்னொடு நீங்கள் பழகியும் சன்மார்க்க ஒழுக்கம் இன்னதென்று தெரிந்து கொள்ளவில்லை.
யாதெனில்;
இங்கிருக்கின்ற ஒன்றையும் பொருளளைக கொள்ளளைதீர்கள்
எல்லாப் பற்றுக்களுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டுத் தலைவனையே தொழுவீர்கள்”.
நல்ல விசாரணை முற்றும் வாசிப்புக்கு வாய்ப்பு அளித்த APJ. ARUL அம்மா அவர்களுக்கு நன்றி.

எனது அன்பு சகோதர சகோதரிகúள, இன்றைய சூழ்நிலையில்,
உலக தீவிரவாதம்,
உலக புவிவெப்பம்,
உலக வறுமை, ஆகிய அனைத்திற்கும் ஒரே தீர்வு, ஒரே வழி “வள்ளலாரின் உண்மைப் பொதுநெறியே” ,
சாதி, சமய, மத, இன, நிறம், வாழ்வு நிலை, தேசம் முதலியவை உட்பட “கட்டுப்பாட்டு ஆசாரங்கûள” விட்டொழித்து, சத்திய ஞான ஆசாரமாகிய பொதுநோக்கம் நாம் பெறுதல் வேண்டும்.
கடவுளின் உண்மையை பெட்டியில் போட்டு பூட்டிய அந்த பூட்டை உடைக்கும் நாள் வந்துவிட்டது. இன்று நாம் உடைத்தோம் உண்மையை தெரிந்து கொண்டோம்.

அன்பர்களே,
உங்கள் கால்பாதம் தொட்டு வணங்கி வேண்டிக் கொள்கின்றோம். வள்ளலாரை அவர்தம் “முடிவான தனிநெறியிலேயே” வெளிப்படுத்துங்கள். அவரால் லட்சியம் வையாது கைவிடப்பட்ட சமயத்தில் வைத்து வெளிப்படுத்தாதீர்கள்.

வள்ளலாரின் சுத்த சன்மார்க்க உண்மையை வெளிப்படுத்தும் சத்திய வாக்கியங்கள் எல்லோருக்கும் “உள்ளது உள்ளபடியே” வாசித்து காட்டுங்கள்.

சுத்தமாதி ஞானி வள்ளலாரே,
நீங்கள் சொல்லிய சுத்தசன்மார்க்க ஒழுக்கத்தினை இன்று, இந்த நேரத்தில், நாங்கள் தெரிந்து கொண்டோம்.
உலகில் காணும் சமய, மதங்களில் லட்சியம் வையாது, ஆசாரங்கûள விட்டு ஒழித்து பொதுநோக்கம் கொண்டு ஒழுக்கம் நிரப்பி எல்லாம் வல்ல அந்த ஒரே தலைவனாகிய இறைவனை சத்திய அறிவால் தெரிந்து பேரின்ப சித்திப் பெருவாழ்வை நீங்கள் பெற்றதுபோல் பெறுவோம்.
இது சத்தியம்
இது சத்தியம்
இது சத்தியம்
முற்றும்.

வணக்கத்துடன்
APJ. ARUL

unmai

Channai,Tamilnadu,India