Deprecated: Hook custom_css_loaded is deprecated since version jetpack-13.5! Use WordPress Custom CSS instead. Jetpack no longer supports Custom CSS. Read the WordPress.org documentation to learn how to apply custom styles to your site: https://wordpress.org/documentation/article/styles-overview/#applying-custom-css in /var/www/wp-includes/functions.php on line 6078
நாலும் தெரிந்த மாதிரி பேசுகிறாய்? – அந்த நான்கு உண்மைகள் எவை? ஏபிஜெ அருள். – வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்
July 27, 2024
tamil katturai APJ arul

நாலும் தெரிந்த மாதிரி பேசுகிறாய்? – அந்த நான்கு உண்மைகள் எவை? ஏபிஜெ அருள்.

நாலும் தெரிந்த மாதிரி பேசுகிறாய்? – அந்த நான்கு உண்மைகள் எவை? ஏபிஜெ அருள்.

அன்பர்களே!
நாம் நண்பர்களுடனோ அல்லது மற்றவர்களுடனோ பேசும் போது மாற்றுக் கருத்து ஏற்பட்டால் உடனே நம்மை பார்த்தோ அல்லது நாம் அவர்களை பார்த்தோ கேட்பது;
நாலும் தெரிந்த மாதிரி பேசுகிறாய்? நாலும் தெரிந்தவர் யார்?
தெரிந்தோ அல்லது தெரியாமலோ இப்படி சொல்கிறோம். ஆனால் உண்மையில் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டியதும் நான்கு தான்.

அஃது யாதெனில்;
1. சாகாத கல்வியே கல்வி
2. ஒன்றே சிவம்தான் என அறிந்த அறிவு.
3. மலம் 5 ம் வெல்லும் வல்லபம்.
4. வேகாத காலாதி கண்டு கொண்டு எப்பொருளும் விளையவிளைவித்த தொழில்.

இந்த நான்கு உண்மைகள் சுத்த சன்மார்க்கத்தின் மரபுகள்.
இதை ஆண்டவரே வள்ளலாருக்கு உரைத்தார்கள். இதோ அது குறித்த பாடல்: எண்; 1369.

சாகாத கல்வியே கல்விஒன் றேசிவம்
தான்என அறிந்தஅறிவே
தகும்அறிவு மலம்ஐந்தும் வென்றவல் லபமே
தனித்தபூ ரணவல்லபம்
வேகாத காலாதி கண்டுகொண் டெப்பொருளும்
விளையவிளை வித்ததொழிலே
மெய்த்தொழில தாகும்இந் நான்கையும் ஒருங்கே
வியந்தடைந் துலகம்எல்லாம்
மாகாத லுறஎலாம் வல்லசித் தாகிநிறை
வானவர மேஇன்பமாம்
மன்னும்இது நீபெற்ற சுத்தசன் மார்க்கத்தின்
மரபென் றுரைத்தகுருவே
தேகாதி மூன்றும்நான் தருமுன்அருள் செய்தெனைத்
தேற்றிஅருள் செய்தசிவமே
சிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளே
தெய்வநட ராஜபதியே.

இங்கு குறிப்பிட்டுள்ள 5 மலங்கள் எவை என்றால்;
1.ஆணவம்.
2.கன்மம்
3.மாயை
4.மாமாயை
5.திரோதாயி
இங்கு நூல்களின் உதவியால் இவை குறித்து இயன்றவரை பார்ப்போம்;
காரிருள்-செருக்கு (இதணால் கோபம்/குரோதம்) – (அஞ்ஞானம்) – இயற்கையானது.
கன்மம் என்பது;
வெவ்வியவினை செயல்/தொழில் – பயனை விரும்பிச் செய்யும் சாத்திரப்படியான சடங்கு- செயற்கையானது
மாயை என்பது
மயக்கம் – வஞ்சக மனம் ( & தந்திரம்,ஏமாற்றம்) – இயற்கையில் செயற்கையானது
மாமாயை என்பது;
சுத்தமாயை –பொய்த்தோற்றம்- பிரபஞ்ச பொருள்களின் பொய்த்தோற்றம்
திரோதாயி என்பது;
மறைக்கை (திரை)- உலக அனுபவங்களை கொடுத்து உண்மையை மறைத்தல்.
வேகாத கால் ஆதி (முதலிய) கண்டு….
சாகாதலை, போகபுனல் வேகாத கால் குறித்து காணுதல் வேண்டும்.
அன்பர்களே!
எவர் ஒருவர் தானென்னும் அபிமானம் இல்லாமல் கோபம், குரோதம் கொள்ளாமல், சாத்திரத்தின் அடிப்படையில் அமையப்பெற்ற சமயமத சடங்குகளில் லட்சியம் வையாமல், வஞ்சக மனமில்லாமல், உலகப்பொருள்களின் போலித்தோற்ற மறைப்பை நீக்கி கொண்டவர்கள், உலக அனுபவங்களை கொடுத்து உண்மையை மறைத்துக் கொண்டுள்ள திரைகளை நீக்கி கொண்டவர்கள் 5 மலங்களையும் வென்றவர் ஆவார்.
அடுத்து எவர் ஒருவரிடம் உண்மை இரக்கம் உண்மை அன்பு உண்மை அருள் அமையப் பெறுகிறதோ அவரிடம் சாகா கல்வியை தெரிவிக்கும் சாகாத்தலை, வேகாக்கால், போகாப்புனல் இம்மூன்றும் ஞான யோகக் காட்சியில் பதிந்து அனுபவம் பெறுவர்.
ஒழுக்கம் நிரப்பி, சாகாத கல்வியே கல்வி என்றும், சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் ஒருவரே என்றும் உண்மையை அறிய சொல்லும் சுத்தசன்மார்க்கத்தை தழுபவர் எவரோ அவரே
“” நாலும் தெரிந்தவர்கள்” ஆவார்கள்

நன்றியுடன் அன்புடன் உங்கள் ஏபிஜெ அருள்.

unmai

Channai,Tamilnadu,India