Deprecated: Hook custom_css_loaded is deprecated since version jetpack-13.5! Use WordPress Custom CSS instead. Jetpack no longer supports Custom CSS. Read the WordPress.org documentation to learn how to apply custom styles to your site: https://wordpress.org/documentation/article/styles-overview/#applying-custom-css in /var/www/wp-includes/functions.php on line 6078
”விசாரம்” என்கின்றதற்கு பொருள் – வள்ளலார். ( ஏபிஜெ அருள்.) – வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்
July 27, 2024
tamil katturai APJ arul

”விசாரம்” என்கின்றதற்கு பொருள் – வள்ளலார். ( ஏபிஜெ அருள்.)

nallavisaranai

(22-10-1873 ல் மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் ஆற்றிய உபதேசத்தின் அடிப்படையில்)
விசாரம் என்கின்றதற்கு வள்ளலார் என்ன பொருள் சொல்லியுள்ளார்கள் என்பதை தெரிந்துக் கொள்வதற்கு முன்பு விசாரம் எதற்கு வேண்டும் எனக் காண்போம்.
நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிக் கொண்டிருக்கின்ற திரைகள் அனந்தம் (பல). மேற்படி திரைகளில், அழுத்தமாயிருக்கின்ற முதல் திரை ‘பச்சைத்திரை” ஆகும். நாம் முதலில் இந்த பச்சை திரையை நீங்கிக் கொள்ள வேண்டும்.அது நீங்கினால், மற்றத் திரைகள் அதிக விரைவில் நீங்கிப்போய்விடும் என்கிறார் வள்ளலார்.. மேற்படி பச்சைத் திரையை நீங்கிக் கொள்ள நாம் செய்ய வேண்டியது ‘”விசாரம்”.
விசாரம் என்கின்றதற்கு என்ன பொருள்?
வி-சாரம் என்பதில் வி-சாதாரண உலக விசாரத்தை மறுக்க வந்தது. அது மேலும் பரலோக விசாரத்தையே குறிக்கும் பொருட்டு வந்தது.
விசாரம் செய்யும் போது அதியுஸ்ணம் உண்டாகும். அந்த உஸ்ணத்தால் தான் திரையை நம்மால் நீக்கிக்கொள்ள முடியும்.
முன்பு காலங்களில் மேற்படி உஸ்ணம் ஏற்படுத்திக் கொள்ளக்கூடியவர்களாக இருந்தவர்கள் யோகிகள் மட்டுமே. யோகிகள் இதற்காக வனம்,மலை,முழை முதலியவற்றிற்குப் போய், நூறு, ஆயிரம் முதலிய வருசகாலம் தவம் செய்து உண்டு பண்ணிக் கொண்டார்கள்.
மனுச தரத்தில் இவ்விசாரம் இல்லை. அதாவது நாம் செய்யக்கூடியதான வழியில் இல்லை.
இதோ நம் தரத்தில் செய்யக்கூடிய (சுத்தசன்மார்க்க) வழியை கண்டு நமக்கு வெளிப்படுத்துகிறார் நம் வள்ளலார்.
அ::து யாதெனில்:
”விசாரமே”.
யோகியுனுடைய விசாரத்தை விட ஆண்டவரை தோத்திரம் செய்கின்றதிலும், தெய்வத்தை நினைக்கின்றதிலும் அதிக உஸ்ணம் உண்டாகும்.
எவ்வாறு எனில்:
ஒரு ஜாம நேரம், மனத்தில் இக விசாரமின்றிப் பர விசாரிப்புடன் ஆன்ம நெகிழ்ச்சியோடு தெய்வத்தைச் சிந்தித்து கொண்டாவது அல்லது தோத்திரம் செய்து கொண்டாவதிருந்தால், நாம் பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம்.
மேற்படி விசாரத்தில் இடைவிடாது இருக்க வேண்டியது.
இதில் நன்முயற்சியின் கண் பயிலுதல் வேண்டும்.
நம் நம்முடைய நிலை எப்படிப்பட்டது?
நமக்கு மேல் நம்மை அதிஸ்டிக்கின்ற தெய்வத்தினுடைய நிலை எப்படிப்பட்டது?
என்று விசாரிக்க வேண்டியது என்கிறார் நம் வள்ளலார்.
நிற்க!
இந்த விசாரம் செய்யும் முன்பு உலகில் காணும் சமயங்களிலும்,மதங்களிலும்,இதிகாச,புராணங்களிலும் லட்சியம் கூடாது என்கிறார் வள்ளலார். மேலும், சாதி,சமய கட்டுப்பாட்டு ஆசாரங்களில் நாம் பற்றாமல், அவையை விட்டு ஒழித்து, சத்திய ஞான ஆசாரமாகிய பொது நோக்கத்தை வருவித்துக் கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளலார்.
இதோ இவ்வழியில, வள்ளலார் கண்ட சுத்தசன்மார்க்க வழியில், இன்றே “விசாரம்’ செய்வோம்.

நன்றி அன்புடன் உங்கள்: ஏபிஜெ அருள்.

unmai

Channai,Tamilnadu,India