Deprecated: Hook custom_css_loaded is deprecated since version jetpack-13.5! Use WordPress Custom CSS instead. Jetpack no longer supports Custom CSS. Read the WordPress.org documentation to learn how to apply custom styles to your site: https://wordpress.org/documentation/article/styles-overview/#applying-custom-css in /var/www/wp-includes/functions.php on line 6078
யார் சொல்றதுதான் இங்கு உண்மை?? (யானை கதை)– ஏபிஜெ. அருள். – வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்
July 27, 2024
tamil katturai APJ arul

யார் சொல்றதுதான் இங்கு உண்மை?? (யானை கதை)– ஏபிஜெ. அருள்.

elephant-1 elephant

ஓர் வேண்டுகோள்:
எனது பணி, கருணை சபையின் பணி, என் குடும்பம், என்னை சுற்றியுள்ள அன்பர்களின் குடும்பங்கள் அனைத்துமே, அனைவரிடத்திலுமே ஒரே குறிக்கோள் தான். அது யாதெனில்; வள்ளலாரின் நெறியானது எந்த ஒரு சமய,மத,மார்க்கத்தின் கீழும் இருப்பது அல்ல அவர்தம் நெறி ஒரு தனி நெறி, அவர் தம் மார்க்கத்தின் சாதனம் புதியது, அவர்தம் மார்க்க பயன் புதியது அது மட்டுமில்லைமிகப்பெரியது என்பதை தான் இந்த உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் குறிக்கோளே அன்றி வேறு ஒன்றுமில்லை. வள்ளலார் கண்டது உண்மை கடவுள், பொது வழி, பெரிய பயன் என்றுச் சொல்ல வேண்டுமானால் அது எந்தொரு சமய,மத,மார்க்கத்தின் கடவுளையோ, அதன் ஆச்சாரங்களையோ, அவை தரும் பலன் போலவோ இருக்க முடியாது. கூடாது.

அப்படித்தானே!!!

ஆம் என்றால், —-, —–, எப்படி நம் கடவுளாக கருதமுடியும்?
ஆம் என்றால், —-, —-, யை எப்படி நாம் அணிந்துக் கொள்ள முடியும்?
( –, —, யை நீங்களே நிரப்பிக் கொள்ளுங்கள். எதுக்கு பிறர் வம்பு..comments..)
ஆம் என்றால், சொர்க்கம், நரகம் குறித்து நமக்கு ஏது விசாரணை?

பல முறை சொல்லியாச்சு. எவரையும் தாழ்வாக பார்க்கவில்லை. பார்க்கவும் முடியாது. பிறர் குற்றம் விசாரியாதிருத்தல் வேண்டும் என்பது வள்ளலாரின் கட்டளை. வள்ளலாரின் நெறியே சிறந்தது. உயர்ந்தது என்று கூட சொல்ல முயற்சிக்கவில்லை. காரணம், அனுபவம் நான் ( நாங்கள்) பெறவில்லை என்பதே.
ஆனால் அதே நேரத்தில்……
வள்ளலாரின் முடிபான நெறியை மறைத்து, அவரால் கைவிடப்பட்ட சமய நெறியிலேயும், அச்சமய அடையாளத்துடனும் அவரைக் காட்டுவது மிக மிக தவறே ஆகும். இதை சுட்டிக்காட்ட பெரிய அறிவு தேவைப்படவில்லை.இந்த அடிப்படையிலேயே எங்களின் பணி கடந்த 11 வருடங்களாக நடைப்பெற்று வருகிறது. நெருங்கிய அன்பர்கள் சிலருக்கே என்ன என்ன பணிகளை மேற்க்கொண்டுள்ளோம், எத்தனையில் சிறப்பான ஆணைகள் பெற்றுள்ளோம் என்பதை அறிவர். இந்த விசயத்தை எங்களை உயர்த்திக்கொள்ள சொல்லவில்லை எங்கள் பணியில் சுய நலம், அறியாமை,பொய், குரோதம் இல்லை என்பதற்கே. இந்த விளக்கம் கூட இங்கு தரப்பட்டதற்க்கு காரணமே எங்களை பல்லாயிரம் பேர்கள் பாராட்டி வந்தாலும், சிலர் அதுவும் 4,5 பேர்கள் புரியாமல் இருப்பதை கருத்தில் ஆன்ம நேயத்துடன் எடுத்துக் கொண்டு, அவர்களையும் நம்மவர்களாக ஆக்கி கொள்ள வேண்டும் என்ற ஆசையே என்னிடத்தில் உண்மையாக உள்ளது. அவர்களும் எங்களின் அன்புக்குரியவரகளாக ஆகும் நாள் வெகு தூரமில்லை. வள்ளலார் எனக்கு துணை புரிவார்கள். உண்மை ஆண்டவரும் அருள் புரிவார். எல்லாம் செயல் கூடும் என் ஆணை அம்பலத்தே. நன்றி.– ஏபிஜெ. அருள்.)

ஆம். நல்ல விசாரணைக்கு வருவோம்.

யார் சொல்றது தான் இங்கு உண்மை? (யானை கதை)

ஆண்டவர் நம்மை பல பிறவிகள் எடுக்க வைத்து உயர் அறிவை பெறுதற்குறிய இந்த மனித தேகத்தில் செலுத்தியுள்ளார்கள்.
நிற்க! இந்த மனித தேகத்தில் நமக்கு சிறிதறிவு மட்டுமே தோற்றி விடுத்துள்ளார் ஆண்டவர் என்பதை நாம் தெரித்துக்கொள்ள வேண்டும். இந்த சிறிதறிவை தான் நல்ல விசாரணையில், இந்த பிறவிலேயே சத்திய அறிவாக நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையேல் இந்த மனித தேகத்திலேயே பல லட்ச பிறவிகள் எடுத்த பின்பே சத்திய அறிவை பெற முடியுமென்பதே இயற்கை. நம் ஆன்மிக சான்றோர்கள் கூறும் உண்மை. இந்த பிறவிலேயே (எந்த தாழ்ந்த தரத்தில் இருந்தாலும்) சத்திய அறிவை பெறக்கூடிய வழியை கண்டுபிடித்தவரே நம் வள்ளலார். அந்த வழியின் பெயரே “சுத்த சன்மார்க்கம்” ஆகும். இந்த வழி போல் எந்த மார்க்கத்திலும் இல்லை.
சரி ஒரு யானை கதைக்கு வருவோம். ( ஒரு பெரிய மகான் சொன்னது தான். நம் வள்ளலாரும் ஒரு பாட்டில் சொல்லியுள்ளார்கள்.).
நான்கு குருடர்கள் ஒரு யானையை பிடித்திருந்தனர். அவர்கள் பிடித்திருந்த பகுதியை வைத்து பேசிக் கொள்கிறார்கள். காலை பிடித்திருந்த ஒருவன் “யானை தூண் போல் உள்ளது” என்றான். யானையின் காதை பிடித்திருந்த 2ம் நபர்; “ இல்லை இல்லை யானை சோலகு போல் உள்ளது” என்றான். வாலை பிடித்திருந்த 3ம் நபர்; “ இல்லை. யானை குச்சி போலுள்ளது” என்றான். துதிக்கையை பிடித்திருந்த 4 ம் நபர்; “இல்லவே இல்லை யானை உலக்கை போலுள்ளது” என்றான். இவர்கள் இடத்திற்கு வந்து இவர்கள் பேசியதை கேட்ட கண் பார்வை உடைய 5ம் நபர் அவர்களிடம்; நீங்கள் அனைவரும் சொல்லியது முழு உண்மையல்ல என்று கூறி யானையின் ”முழு வடிவத்தையும்” அதன் உண்மை நிலையையும் அவர்களுக்கு விளக்கினார்.
அன்பர்களே!
அந்த 4 பேர்கள் சொல்வதில் பொய் இல்லை. அதே நேரத்தில் 4 பேர்களும் முழு உண்மை உரைக்கவில்லை. காலை பிடித்தவர் யானை தூண் போல் உள்ளது என்பதில், அவர் என்ன பொய் சொல்லிவிட்டார்?. அவர் பிடித்தளவில், அவர்க்கு இருந்த அறிவில் அறிந்தளவில், நண்பர்களுக்கு நல்ல
எண்ணத்தில் தானே வியம்பினார்? ஆனால் அவர் முழு உண்மையவா உரைத்தார்? அவரை குறைச் சொல்ல முடியாது. அதே நேரத்தில் அவர் கூற்றை சத்திய அறிவில் ஒத்துக் கொள்ள முடியாது.
இது போல் தான் சமயங்களை, மார்க்கங்களை உருவாக்கிய நம் சான்றோர்கள், பெரியோர்கள், முன்னோர்கள் அவர்களுக்கு தெரிந்த வண்ணம்,அறிந்த வண்ணம் நமக்கு நல்லெண்ணத்தில் தான் தெரியப்படுத்தினார்கள். ஆனால் இன்று சுத்த சன்மார்க்க வழியில் உண்மைக் கடவுளின் நிலையானது, ”எங்கும் பரிபூரணராக ஒளி வடிவில்” உள்ளது என்று தெரிய வந்தப் பிறகு,எங்ஙனம் கடவுளை பல வடிவத்தில் காட்டப்பட்டுள்ளதில் நாம் லட்சியம் வைக்க முடியும்?
அன்பர்களே!
யானையிடத்தில் அவன் கண்ட கால் உள்ளது. ஆனால் கால் யானையாகாது
யானையே முழு உண்மை. அதன் கால் அதன் அம்சம்.
இந்த நோக்கிலே தான் வள்ளலார் சொல்லிய உண்மையை தெரிதல் வேண்டும். அவர் பாடிய பாடல்களையும் ஊற்று நோக்க வேண்டும்.
என் மார்க்கம் அறிவு மார்க்கம்.
என் மார்க்கத்தில் உண்மையறிதலே, என்கிறார் வள்ளலார்.
(ஆதாரம்:
வள்ளலார் அவர் கைப்பட எழுதி வெளியிட்ட அறிவிப்பு நாள் 21-04-1871.)

ஆறாம் திருமுறை –

அனுபவ மாலை –

எவ்வுலகில் எவ்வௌர்க்கும் அரும்பெருஞ்சோ தியரே
இறைவர்என்ப தறியாதே இம்மதவா திகள்தாம்
கவ்வைபெறு குருடர்கரி கண்டகதை போலே
கதைக்கின்றார் சாகாத கல்விநிலை அறியார்
நவ்விவிழி யாய்இவரோ சிலபுகன்றார் என்றாய்
ஞானநடம் கண்டேன்மெய்த் தேன்அமுதம் உண்டேன்
செவ்வைபெறு சமரசசன் மார்க்கசங்கந் தனிலே
சேர்ந்தேன்அத் தீமொழியும் தேமொழிஆ யினவே.


நன்றி.– ஏபிஜெ. அருள்.  

unmai

Channai,Tamilnadu,India