Deprecated: Hook custom_css_loaded is deprecated since version jetpack-13.5! Use WordPress Custom CSS instead. Jetpack no longer supports Custom CSS. Read the WordPress.org documentation to learn how to apply custom styles to your site: https://wordpress.org/documentation/article/styles-overview/#applying-custom-css in /var/www/wp-includes/functions.php on line 6078
கடவுளின் உண்மை என்ன? – வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்
July 27, 2024
tamil katturai APJ arul

கடவுளின் உண்மை என்ன?

கடவுளின் உண்மை என்ன?

இந்த அத்தியாயம் மிக மிக முக்கியமான ஒன்று ஆகும். -APJ.ARUL.

மார்க்கம் என்றால் வழி.

சன்மார்க்கம் என்றால் சத்மார்க்கம்.
சத்தென்னும் பொருளின் உண்மையைத் தெரிவிக்கின்ற மார்க்கம்.

நிற்க!
உலகில் காணும் சமய மத மார்க்கங்களில் சொல்லப்பட்டுள்ள கர்த்தர், கடவுள், தெய்வங்கள் இவர்களின் நிலையை அறிகின்ற “வழி” என்னவாக உள்ளது?
அம்மார்க்கங்களில் கடவுள் நிலையை கண்டு அக் கடவுள் அருளைப் பெற்றவர்களாக உள்ளவர்கள் “யோகி” களே.
அந்த யோகிகள் எந்த வழியில் கடவுள் அருளைப் பெற்றார்கள்? என்பதே முக்கியமாக நாம் இங்கு சிந்திக்க வேண்டும்.
அந்த வழி, “தவமே”. தவத்திற்கான இடங்கள்; வனம், மலை, முழை அதற்கு தேவைப்படும் கால அளவு; நூறு, ஆயிரம் முதலிய வருஷகாலம். மேற்படி தவத்தில் யோகிகள் செய்தது;
# சில மந்திர வாசக பதவர்ணாதிகள் விந்து, நாத, ஓம், ஹரி, சச்சிதானந்தம், ஜோதியுள் ஜோதி, சிவாயநம, நமச் சிவாய உட்பட பல பரிபாஷைகள் மூலம்
# தத்துவங்களை உபாசித்தும், அர்ச்சித்தும்,
# தத்துவாதீதத்தைத் தியானித்தும் இடையில் ஜபித்தும்
# கரணலயமாகச் சமாதி செய்தும்
# தத்துவச் சேட்டைகளை அடக்க விரதமிருந்தும்
# சாதாரண யோகபாகத்தில் மூச்சடக்கியும் செய்தார்கள்.
நிற்க!
மேற்படியான வழிவகைகளே சமய, மத சன்மார்க்கங்களில் உள்ளன. அந்தந்த யோகிகள் தங்கள் அனுபவத்தில் தெரிந்துக் கொண்ட உண்மையளவில் (அவர்களால்) பல சமய, மத சன்மார்க்கங்களை அவர்கள் ஏற்படுத்தினார்கள்.
அச்சமய, மத மார்க்கங்களில் நம் நிலை என்ன?
மேற்படி யோகிகளால் வெளிப்படுத்தப்பட்ட கடவுள், கர்த்தர், ஆண்டவர், தெய்வங்களை வணங்குதலே நம் நிலையாக உள்ளதே அன்றி அக்கடவுளின் நிலையறியும் உரிமையோ தகுதியோ அங்கு நமக்கு இல்லை.
சில மார்க்கங்களில் யோகிகளையே தெய்வங்களாக, குமாரனாக, தூதுவராக ஏற்றுள்ளோம்.
நிற்க! தவநிலையை யோகிகள் போன்று மனுஷ்ய தரத்தில் நம்மால் செய்ய முடியாது. சாதாரண மனுஷத்தரத்தில் நாம் வாழ்கிறோம்.
அன்பர்களே!
இறைவன் உண்டு.
இறைவன் மிகப்பெரியவன்
இறைவனே நம்மையும் உலகங்களையும் படைத்தான் என்ற உண்மைகள் யோகிகளால் வெளிப்படுத்தப்பட்டு அந்த இறைவனை வணங்குதல் வேண்டும் என்றுதான் நாம் பணிக்கப்பட்டுள்ளோம். யோகிகளின் அனுபவ கால அளவு கணக்கில் அடங்காது. அனுபவங்கள் பலவிதம், அவை உண்மையுடனும், திரித்தும், புனைந்தும் மற்றும் முழு கற்பனையாலும் மாற்றப்பட்டு நமக்கு பல புராணங்களாகவும் இதிகாசங்களாகவும் தரப்பட்டுள்ளது.
நிற்க!
# இங்கு நம் அறிவு எதை விரும்புகிறது? காட்டப்பட்டுள்ள இறைவனை, கடவுளை, தேவர்களை வணங்குவதிலா?
அல்லது
# நமக்கு மேல் அதிஷ்டிக்கின்ற கடவுளின் நிலை எப்படிப்பட்டது என்று அறியும் ஆவலிலா?
அன்பர்களே!
கடவுளின் உண்மை என்ன? உண்மைக் கடவுளை கண்டு அருள் பெறுவது எப்படி? என்று ஆசைப்படும் அறிவுக்கே இவ்விசாரணை மேலும் தொடரப்படுகிறது.
ஆக, சமய, மதங்களில் இறைவனின் நிலை காண உள்ள வழி (தவ வழி) எல்லாருக்கும் (எல்லா மனிதர்களுக்கும்) ஒத்து வராது. அதில் சொல்லப்பட்டுள்ள தியானம், விரதம், மூச்சுப்பயிற்சி, மந்திரங்கள் எல்லாம் எல்லோராலும் செய்யக்கூடியதாக இல்லை. இதனால் வள்ளலார் கடவுள்நிலை குறித்து விஷேச நன்முயற்ச்சியில் தொடர்ந்து இருந்தார்கள். வள்ளலாரின் இந்த இடைவிடாத நன் முயற்ச்சியின் பயனாக அவருக்கு ஆண்டவராலேயே அறிவிக்கப்பட்ட வழியே “சுத்த சன்மார்க்கம்” ஆகும்.
# இவ்வழி தனி வழி மட்டுமில்லை. உண்மை பொது வழியாகவும் உள்ளது.
# இவ்வழி மற்ற எல்லா வழிகளையும் மறுக்க வந்தது என்கிறார் வள்ளலார்.
# இவ்வழியில் எல்லா மனிதர்களாலும் பயணித்து இறையருளை பெறுவதாக உள்ளது.
மனுஷ்யதரத்தில் அமைந்துள்ள உயர்வான “சுத்த சன்மார்க்கம்” சுத்த சன்மார்க்கத்தில் “நல்ல விசாரணை” செய்ய வேண்டும். நல்ல விசாரணை என்பது உலக விசாரம் அல்ல. பரலோக விசாரத்தையே குறிக்கும் என்கிறார் வள்ளலார்.
ஆக, ஆறறிவு உள்ள தேகத்தைப் பெற்ற மனிதர்கள் அனைவருமே கடவுளின் உண்மை நிலையறிந்து அக்கடவுளின் அருளை பெறுதற்கான வழியை கொண்டதே சுத்த சன்மார்க்கம் ஆகும்.
அதாவது; உஷ்ணத்தை தவம் செய்து உண்டு பண்ணிக் கொள்ளுகிறதைப் பார்க்கிலும், தெய்வத்தை தோத்திரம் செய்கின்றதிலும் நினைக்கின்றதிலும் இதைவிடக் கோடிபங்கு பத்து கோடி பங்கு அதிகமாக உஷ்ணம் உண்டு பண்ணிக் கொள்ளலாம்.
எதற்கு உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ள வேண்டும்?
ஆன்மாவை தெரியவொட்டாமல் மூடி இருக்கின்ற திரையை விசார அதியுஷ்ணத்தாலல்லது, மற்ற உஷ்ணங்களால் நீக்க முடியாது.
ஆக,
மற்ற சமய, மத மார்க்கங்களுக்கும் சுத்த சன்மார்க்கத்திற்கும் உள்ள முக்கிய வேறுபாடுகள் யாதெனில்;

மற்ற சமய மத மார்க்கங்கள்
——————————————————-
# இறைவனின் நிலையை காணும் வழி மனுஷ்ய தரத்தில் இல்லை

# இறை உண்மையை தெரியவொட்டாமல் மூடி இருக்கின்ற திரைகளை விலக்கும் வழி “பொது” வழியாக இல்லை “யோகி”களின் தரத்திலே உள்ளது.

# திரைகளை நீக்குவதற்கு வேண்டிய அதியுஷ்ணத்திற்கு” யோகிகள் தவத்தை இங்கு மேற்க்கொள்கிறார்கள்.

# யோகிகள் வனம், மலை, முழை முதலியவற்றிற்குப் போய் நூறு, ஆயிரம் முதலிய வருஷ காலம் தவம் செய்ய வேண்டியுள்ளது.

# காட்டப்பட்ட கடவுளை வணங்குதலும் வழிபாட்டு மற்றும் கட்டுப்பாட்டு ஆசாரங்களும் இங்கு உள்ளது.

# ஏகதேச கர்ம சித்திகளை கற்ப னைகளாகச் சொல்லி இருக்கின்றார்கள். அவையில் லட்சியம் வைக்கப்படுகிறது.

# பல வருஷம் பிரயாசை எடுத்துக் கொண்டால் அற்ப சித்திகளை அடையலாம்.

# பிண்ட லட்சணத்தை அண்டத்தில் காட்டப்பட்டுள்ளது

# தெய்வத்திற்கு பெயரிட்டு இடம், வாகனம், ஆயுதம், வடிவம், ரூபம்முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பது போல் அமைத்து உண்மையாக இருப்பதாகச் சொல்லி இருக்கின்றார்கள்.

# வேதம், ஆகமம், புராணம் இதிகாசம் முதலிய கலைகள் உண்டு.
ழூ தெய்வத்தைப் பற்றி புறங்கவியச் சொல்லவில்லை. ஆதலால் இறை உண்மை காண நமக்கு காலமில்லை.

# “கருணை “ சாதனமாக சொல்லப் பட்டிருப்பினும், ஆசாரங்கள் இருப்பதால் அக்கருணை விருத்தியாகாமல் உள்ளது.

# இங்கு முக்தி, சமாதி, மரணம் உண்டு.

# காட்டப்பட்ட கடவுளை தொழுதலும் அக்கடவுளிடத்தில் வேண்டுதலுமே நாம் செய்கிறோம்.

# சமய, மத மார்க்கங்கள் ஒவவொன்றும் ஒன்றிற்கு ஒன்று வேறுபட்டு உள்ளது.

# பொறுமை, சாந்தம், அடக்கம், இந்திரிய நிக்கிரகம், ஜீவகாருண்யம் இவையனைத்தும் இதன் இயல்புகள் ஆகும்.

சுத்த சன்மார்க்கம்-
——————————————–

# சுத்த சன்மார்க்கத்தில் மனுஷ்ய தரத்தில் இறைவனின் நிலையை அறிவதாக உள்ளது.

# இறை உண்மை காணும் வழி உண்மை பொது வழியாக உள்ளது. எல்லா மனிதப் பிறவிகளுக்கும் உரியதாக உள்ளது.

# “நல்ல விசாரணை” மட்டுமே இங்கு வழியாக உள்ளது.

# மனத்தில் இக விசாரமின்றிப் பர விசாரிப்புடன் ஆன்ம நெகிழ்ச்சியோடு தெய்வத்தை சிந்தித்துக் கொண்டாவது அல்லது தோத்திரம் செய்து கொண்டாவது இருத்தல் போதுமானது.

# கடவுள் உண்மை தெரிய வேண்டுமென நன்முயற்சியுடன் இருக்க வேண்டும். எந்தொரு ஆசாரமும் கிடையாது. கூடாது.

# ஆண்டவரிடத்தில் மட்டுமே லட்சியம் வைக்கப்படுகிறது. ஒவ்வொருவரும் முயற்சியுடனே இருந்தால், அதற்கு தக்க லாபத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

# கோடி கோடிப் பங்கு அதிகமாக கொடுக்கும் படியான இடம் இந்த இடம்

# “அருள் ஒளியை காண்க” என உரைக்கப்படுகிறது.

# ஒவ்வொருவரின் அக அனுபவத்தில்தான் இறைவனின் உண்மை வெளிப்படுவதாகவே சொல்லப்பட்டுள்ளது. எங்கும் பரிபூரணமாக விளங்கும் ஒரே மெய் பொருளாக்காட்டப் பட்டுள்ளது.

# எந்தொரு கலையும் இங்கு இல்லை.

# நினைந்து, உணர்ந்து, நெகிழ்ந்து இருப்பின் இப்பிறவிலேயே இறைநிலைக் கண்டு அருள் பெறலாம்.

# கருணை விருத்திக்கு தடையாக உள்ள ஆசாரங்களை விட்டொழிக் குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

# சாகா கல்வியை தெரிவிப் பதன்றி வேறு ஒன்றுமில்லை.

# உண்மை கடவுளின் நிலைக் காண ஒவ்வொருவரும் நல்ல விசாரணை செய்ய வேண்டும்.

# மற்ற சமய, மத மார்க்கங்கள் யாவும் சுத்த சன்மார்கத்திற்கு அநநநியம் ஆனால் அந்நியம் அல்ல.
# சுத்த சன்மார்க்கம். சமய, மத மார்க்கங்களின் அனுபவங்களை கடந்தது. இங்கு அக அனுபவமே உண்மை.

 

unmai

Channai,Tamilnadu,India