Deprecated: Hook custom_css_loaded is deprecated since version jetpack-13.5! Use WordPress Custom CSS instead. Jetpack no longer supports Custom CSS. Read the WordPress.org documentation to learn how to apply custom styles to your site: https://wordpress.org/documentation/article/styles-overview/#applying-custom-css in /var/www/wp-includes/functions.php on line 6078
வாழ்வோம் வலமுடன் – வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்
July 27, 2024
Uncategorized

வாழ்வோம் வலமுடன்

வாழ்வோம் வலமுடன் – ஏபிஜெ அருள்.

ஆம், இதுவே சுத்த சன்மார்க்கம். சுத்த சன்மார்க்க உண்மையாகிய “அக அனுபவம்” பெறுவதற்கான முயற்சியை ஏற்படுத்தும் சத்திய வார்த்தையே “வாழ்வோம் வலமுடன்”.
திருவடி புகழ்ச்சியில் 10 வது பாடலை எனக்கு எனது நண்பர் சுப்பிரமணியம் பாடிக் காட்டினார்.
பணம் பதவி பகட்டு பெற்ற வளமான வாழ்வை பெறுவதல்ல நம் லட்சியம்.உண்மை கடவளின் நிலை கண்டு அக்கடவுளின் அருளால் இறவாத வாழ்வை பெறுதலே வலம் பெறும் வாழ்வாகும். அந்த முயற்சி செய்ய தூண்டும் பொருட்டு இனி சொல்வோம் “” வாழ்வோம் வலமுடன்””.

வளமுடன் வாழ்க என்ற உலகியற்கண் பொன்,பெண்,மண் இச்சை பற்றை ஏற்படுத்தாது, பொது உணர்வு ஏற்பட்டு கருணை நன்முயற்சி பெறவைக்கும் சத்திய வார்த்தையே ” வாழ்வோம் வலமுடன்”.

இனி நம்மவர்கள் இந்த சத்திய வார்த்தையை தொடர்ந்து சொல்வோம்.
வலமான வாழ்வாம்

“மரணமில்லா பெருவாழ்வில்”
வாழ, வள்ளலார் வழியில், இறையருளை வாழ்த்தி, வணங்குவோம்.

அன்புடன்:: ஏபிஜெ அருள்.9487417834 apjarul1@gmail.com

குறிப்பு :

“வலம்” என்ற சொல்லை தான் வள்ளலார் பயன்படுத்தி உள்ளார்கள். வலம் என்றால் வெற்றி,மேலிடம்,வன்மை அதாவது Victory,High place,Strength ஆகும். வள்ளலார் சொல்கிறார்கள்; இப்போது ஆண்டவர் என்னை “ஏறாத நிலைமேல்” ஏற்றியிருக்கின்றார் என்றார்கள். இறவாத வாழ்வே மேலிடம்.அதுவே சுத்த சன்மார்க்க வலிமை,வெற்றி ஆகும்.
பாடல் வரி: “.. வலம்பெறு மிறாத வாழ்வில்வைத் திடவே வாழ்த்துகின்றே முன்னர் வணங்கிநிற் கின்றோம்..”
ஆக,
இனி சொல்வோம்::
” வாழ்வோம் வலமுடன்”
நன்றி– ஏபிஜெ அருள்.

unmai

Channai,Tamilnadu,India