March 19, 2024
tamil katturai APJ arul

வள்ளலார் யார்? எப்படி இருப்பார்? என்னச் சொன்னார்?

[ஆதாரங்களுடன் முழுமையான கட்டுரை ]

Who is Vallalar? How he look like? and What he said?

வள்ளலார் – சுத்த சன்மார்க்கத்தில் விபூதி, சாத்திர ஆசாரங்கள், உலக மற்ற ஆசாரங்கள் கூடாது.


சுத்த சன்மார்க்கம் எல்லா சமய மத மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறி. அதேநேரத்தில் இம்மார்க்கத்திற்கு உரியவர்கள் – சாதி சமய மத மார்க்கங்களில் முற்றும் பற்றற கைவிட்டவர்களாக இருத்தல் வேண்டும் என கட்டளையிடுகிறார் திருவருட்பிரகாச வள்ளலார்.


வள்ளலார் யார்? எப்படி இருப்பார்? என்னச் சொன்னார்?

— APJ அருள்

 

 

வள்ளலார் யார்?

1823, புரட்டாசி மாதம் 21ம் நாள் (அக்டோபர் 5), கடலூர் மாவட்டம் மருதூர் கிராமத்தில், பெற்றோர் திரு இராமையா-திருமதி சின்னம்மையார், இவர்களுக்கு ஐந்தாவது மகனாக பிறந்தவர். இயற்பெயர் இராமலிங்கம்.

வள்ளலார் பிறந்த குடும்பத்தினர் தழுவியிருந்த சமயம் சைவ சமயம். வள்ளலார் சைவ சமயத்தில் பற்றுக்கொண்டு, பல சமய தலங்களுக்கு சென்று ஸ்தோத்திரப் பாடல்கள் பாடினார். சைவ சமய ஆசாரப்படி  திருநீறு அணிந்திருந்தார்கள்.  திருநீறு மகிமை பற்றி 10 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். ஏன், திருநீறு பூசாமல் இருப்பது எவ்வளவு தீயது, பூசாதவர்கள் கீழானவர்கள் என்று சாடியப் பாடல்களும் ஏராளம். மேலும், அக்காலத்தில், தன்னை காண வருபவர்களுக்கு, நோய்வாய் பட்டவர்களுக்கு, திருநீறு கொடுத்தார் வள்ளலார். சமய ஸ்தோத்திரப்பாடல்கள் மட்டுமில்லாமல், அண்டம், பிண்டம், இவையின் விளக்க தத்துவம் பற்றி, கரணங்கள், ஜீவன்,விந்து,நாதம்,பரம்,வெளி,அன்பு,கருணை, இயற்கை, இவை குறித்த பலநூறு  பாடல்களும் பாடியுள்ளார்.( ஆதாரம் 1, சமய காலத்தில் பாடிய ஸ்தோத்திர பாடல்கள் மற்றும் உபதேசம்)

👉நிற்க! 👈

உண்மை குறித்த  தேடுதலில், செய்த விசாரணையில், அவருக்கு ஓர் அதி தீவிர விருப்பம் ஒன்று ஏற்பட்டதாக சொல்கிறார். ( ஆதாரம் – 2 நான்காவது  விண்ணப்பம்); அதை சுருங்க கூறின்: ” மரணம் தவிர்த்துக் கொண்டு நித்திய வாழ்வை வாழ்வது “.

இதுவே என் லட்சியம் என்கிறார். இதை அடைவதே எனது விருப்ப முயற்சியாக உள்ளது என்கிறார். இது தவிர வேறு ஒன்றுமில்லை என்கிறார்.  (ஆதாரம் 3 கீழே).

இதற்கு வழி துறை எங்கு உள்ளது என தேடும் போது, அது ஆண்டவராலே மட்டுமே முடியும் என தனக்கு  தெரிவிக்கப்பட்டதாக பதிவு செய்கிறார். இந்நிலையில் கடவுளை காண ஆசைக்கொண்டார், காரணம் ஆண்டவரால் மட்டுமே சாகாவரம் தரமுடியும் என்பதால். கடவுளைக் காண அவர் உண்மை நிலை காண வேண்டும். ஆனால் வெளிப்பட்டு உள்ள சமயங்களாகிய சைவம், வைணவம், வேதாந்தம், சித்தாந்தாமாகிய மதங்கள் மற்றும் வேதம், ஆகமம், புராண,இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் கடவுளின் உண்மை இன்னதென்று புறங்கவிய சொல்லவில்லை. உண்மையை மண்ணை போட்டு மறைத்து விட்டார்கள். ( ஆதாரம் -4, பாடல்கள், உபதேசம், கடிதங்கள், அறிவிப்புகள், கீழே)

:: வள்ளலாரின் கட்டளைகள் ::

(ஆதாரம் 5, பாடல்கள், உபதேசம், விண்ணப்பங்கள்.. கீழே)

 

உலக சமய,மத, மார்க்கங்கள், வேதம்,ஆகமம்,புராணம்,இதிகாசம் இவற்றில்  லட்சியம் வையாதீர்கள். காரணம்👇

1) இவை வழி பயிலுவோமானால் நமக்கு காலமில்லை.

2) அற்ப பிரயோஜனம் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும்.

3) இயற்கை உண்மை என்னும் ஆன்ம அனுபவத்தை பெற்றுக்கொள்ள முடியாது.

4) உண்மை இன்னதென்று புறங்கவிய சொல்லவில்லை.

5) பிண்ட லக்ஷணத்தை அண்டத்தில் காட்டி உள்ளனர்.

6) மனிதனுக்கு அமைந்துள்ளது போல் பெயர், இடம், வாகனம், ஆயுதம், வடிவம், ரூபம், ( கை,கால் முதலியன) கடவுளுக்கு கொடுத்து, உண்மையை மறைத்து விட்டனர்.

7) ஆக, இவற்றில் லட்சியம் வைத்தால்,

நாம் அடைய வேண்டிய லட்சியம், லாபம் போய் விடும்.

( ஆதாரம்- 6 பாடல்கள், உபதேசம் கீழே)

ஆக,

1) வள்ளலார், ஆரம்பத்தில் வைத்திருந்த சைவ சமய லட்சியத்தை முற்றிலும் கைவிட்டார். சைவ சமய லட்சியம் மட்டுமில்லை எல்லா சமய,மத,மார்க்கம், அதன் ஆசாரங்கள் மற்றும் உலக ஆசாரங்களிடத்தும் லட்சியம் கூடாது என கட்டளையிடுகிறார்.

2) அதே நேரத்தில் நாத்திகம் சொல்கிறவர்கள் நாக்கை முடை நாக்கு என்கிறார்.

3) ஏற்கனவே சமய மத பற்றுக் கொண்டு, பின் இந்த புதிய பொது பாதை மீது ஆசைக் கொண்டு வருபவர்களுக்கு, ஒரு விண்ணப்பம் ஆண்டவரிடத்திலேயே வைத்து அதாவது ” … சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகளாகிய சமய மத மார்க்கங்களின் ஆசார சங்கற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனதில் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும் என வேண்டுகிறார் (ஆதாரம் 7 – கீழே)

வள்ளலார் எப்படி இருப்பார்? என்னச் சொன்னார்?

சைவ சமயத்தில் பற்றுள்ள காலத்தில் திருநீறு அணிந்து இருப்பார்கள். அதன் பின்பு, அதாவது வள்ளலாருக்கு தனது விருப்பம் நிறைவேற்றிக்கொள்ள வழி ஏதும் சமய மதங்களில் இல்லாததினால் அதன் மீது இருந்த லட்சியத்தை விட்ட பின்பு விபூதி தரிப்பதை விட்டுவிட்டார்.

ஆதாரம் – 8:

புதிய கொள்கையில் எந்த ஒரு ஆசாரமும் சடங்கும் இல்லை கூடாது என கட்டளையிடுகிறார். ஆக புதிய வழி” சுத்த சன்மார்க்கத்தில் “விட வேண்டிய ஆசாரங்கள் 13 ஆசாரங்கள் என பட்டியலிட்டு தந்துள்ளார் வள்ளலார். பக்கம்” உரைநடைப்பகுதி 418ல் உள்ளது

ஆதாரம் – 9:

1871 சித்திரை 1லிருந்து வள்ளலார் விபூதி தரிக்காமல் மேலும் மார்க்கத்தார்க்கு 12-04-1871 கடிதம்,

ஆதாரம் – 10:

விண்ணப்பங்கள் நான்கு எழுதி வெளியிடுகிறார். 22-10-1873 அன்று மார்க்கத்திற்கென கொடி ஒன்றை ஏற்றி மகாபேருபதேசம் செய்கிறார். அதில் தெளிவாகச் சொல்கிறார்; சைவம் வைணவம் சமயங்களில் லட்சியம் கூடாது. சமயத்தில் நான் வைத்த பற்று தான் என்னை இந்த நிலையில் தூக்கிவிட்டது என்றாலோ,  அது என்னைத் தூக்கிவிடவில்லை என உறுதியாக பதிவு செய்துள்ளார்.(ஆதாரம், பேருபதேசம், பாடல் எண் 3635. மேலும் பாடல்கள் 4176,3503 ஆகும்.)

அதனால், வள்ளலார் கடைசிக்காலம் 2 ½ வருடம் 1871 – 1874ல்  ஒரு புதிய மார்க்கம் கண்டு, அதற்கு சாதி சமய கட்டுப்பாடுகளை ஒழித்துக்கொண்டவர்களையே உரியவர் என்கிறார்.

ஆதாரம் – 11:

ஆக, வள்ளலார் கடவுள் அருளால் ஒளி தேகம் பெற்றவர். அவருக்கு உருவம் காட்டி வெளியிடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்பது முதல் உண்மை. அவர் நெறியை தெரிந்துக்கொண்டாலே அவரை தெய்வமாக கும்பிட மாட்டோம். உண்மை கடவுளை காட்டிய சுத்த ஞானி என்போம்.

திருக்கதவு  காப்பிடுவதற்கு  முன்பு அன்பர்களிடம் கடைசியாக மிகத் தெளிவாக வள்ளலார் சொன்னது மிக முக்கியமாக உள்ளது அதை நீங்களே படித்து பாருங்கள். 

ஆதாரம்-12:

உருவம் அவருக்கு (அடையாளமாக) கொடுத்து, அவர் நெறியைப் பரப்ப முன் வருபவர்கள் அவருக்கு எந்தொரு ஆசார அடையாளம் விபூதி உட்பட எதுவும் அவரின் கற்பனை உருவத்திற்கு கொடுக்க முடியாது, கூடாது. அடுத்து அவர் என்னச் சொன்னார்? அவர் சாதி சமய, மத மார்க்கங்களில் லட்சியம் வையாதீர்கள், இவை எனது சுத்தசன்மார்க்கத்திற்கு எக்காலத்தும் எவ்விடத்தும் முக்கியத்தடைகள் என அறிவிக்கிறார்.

ஆதாரம்-13:

சமய மதங்களை கடந்தது சாத்திரங்கள் கிடையாது , ஆசாரங்கள் கூடாது என்ற வள்ளலாரின் தனி நெறியை உறுதி செய்த உயர்நீதிமன்ற ஆணைகள்

WP Number: 22886 and 22887 of 2007 by Hon.K. Chandru, J. On 24.3.2010

Reported in 2010 (2) CTC 867

மற்றும் Writ Appeal number: 2262/2011 by Division Bench Hon. T. Raja, J. and Hon. T. V. Tamilselvi, J. on 30/06/2022

ஆதாரம்-14:

மேலும் உயர்நீதிமன்ற மற்றொரு ஆணையில் வள்ளலாரின் நெறி விளக்கப்பட்டுள்ளது  WP number: 2947 of 1981 date 03/05/1988 by Hon. Swamikannu, J.  (reporter MLJ 1989 page 154)

ஆதாரம்-15:

மேலும் விபூதி பூசி வெளியிட்ட வள்ளலாரின் தபால் தலையை எதிர்த்து போடப்பட்ட வழக்கு No.W.A.642/2007 இதில் மனுதாரருக்கு தங்கள் கருத்துரைகளை தபால் துறையிடம் தெரிவிக்க அனுமதி அளிக்கப்பட்டது

ஆதாரம்-16:

மேலும் முக்கியமாக உயர்நீதிமன்ற உத்தரவுகள் WP No.6629 of 2012 and WP no.16845 of 2012 அடிப்படையில் இணை ஆணையரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அசல் மனு எண் 17/2012 நாள் 10/09/2013 அதில் 11 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது , 9. உத்தரவில் “வழங்கப்படும் விபூதி பிரசாதம் கால போக்கில் சிறிது சிறிதாக நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஆதாரம்-17:

மேற்படி ஆணையர், இணை ஆணையர் ஆணைகள், உயர் நீதிமன்ற உத்தரவுகள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆணையரின் வாக்குமூலம் நாள் 30/08/2007 மற்றும் வள்ளலாரின் நேரடி ஆவணங்கள் இவை அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட பிரிவு 64(1) படி அசல் மனு உத்தரவு படி கடந்த 9 வருடங்களுக்கு மேலாக வடலூர் தெய்வ நிலையம் வெளியிடுகின்ற நூல்கள் அனைத்திலும் வள்ளலாரின் உருவம் சைவ சமயத்தின் அடையாளம் திருநீறு இல்லாமல் வெளியிடப்பட்டு வருகின்றது இது வரை

ஆதாரம்-18:

ஆக, வள்ளலாரின் முடிபான கொள்கை என்ன? எனக் காண்போம்:

👉முடிவு (Conclusion)🙏

1) வள்ளலார் ஆரம்பத்தில் தான் பிறந்த குடும்பம் சார்ந்திருந்த சைவ சமயத்தில் பற்றுக் கொண்டு, சமய ஸ்தோத்திரப் பாடல்கள் பாடினார். அச்சமய ஆசாரமாகிய விபூதி தரித்தல் மற்றும் கொடுத்தல் அவர் கொண்டிருந்தார் வள்ளலார்.

2) அதன் பின்பு அவரிடம் ஏற்பட்ட அதி தீவிர விருப்ப முயற்சிக்கு வழி துறை இல்லாததினாலும் மேலும் முழு உண்மை உரைக்காததால் பற்றியப் பற்றுகள் மற்றும் உலக ஆசாரங்களை கைவிட்டார்.

3) தன் லட்சியமாகிய மரணமில்லா பெருவாழ்விற்கு ஏது ஆண்டவரே. அதனால் அவர் நிலை காண்பதே கடமை என்கிறது சுத்தசன்மார்க்கம்.

4) கடவுளே வந்து உண்மை தெரிவிக்க வேண்டுமென கொள்கை கொண்டதே வள்ளலாரின் முடிவான கொள்கை.

5) உண்மை கடவுள் காட்சி அகத்தில் மட்டுமே உள்ளம் அறிவினில் கண்டு களிப்பதாக உள்ளது.

6) அக்காட்சி காணும் வரை நாம் நம் வழிபாட்டில் நம் நம்பிக்கையானது;

” ஓர் உண்மை கடவுள் உண்டென்றும் உண்மை அன்பால் கருதி வழிபாடு செய்ய சொல்கிறார்.

7) அக அனுபவமே உண்மை

8) சத்திய ஞானசபை என்னுள் கண்டனன்.

9) சாகா கல்வியை தவிர வேறு ஒன்றுமில்லை.

10) சாதனம் கருணை மட்டுமே. வெளிப்பாடு ” கண்ணீர் – இரக்கம்”

மேலும் மிக முக்கியமாக வள்ளலார் உபதேசித்தது யாதெனில் சுத்த சன்மார்க்கம் என்பதற்கு பொருள் என்ன மற்றும் சுத்த சிவம் என்பதற்கு பொருள் என்ன என்று சொன்னதை கீழ் வரும் ஆதாரத்தில் காண்க 

ஆதாரம்-19:

மேலும் சமயத்தின் மந்திரங்கள் தியானங்கள் விரதம் யோகம் பயற்சி இவை பற்றி வள்ளலார் கூறும்போது அவை பலனின்மை (வியர்த்தம் ) என்கிறார்

ஆதாரம்-20:

இறுதியாக சமய மதங்களை குறித்து வள்ளலார் குறிப்பிடுகையில் “சுத்த சன்மார்கத்திற்கு மேட்குறித்த மார்க்கங்கள் அல்லாதவனவே அன்றி இல்லாதவனவல்ல பக்கம் 404. மேலும் மேட்குறித்த மார்க்கங்கள் சுத்த சன்மார்க்கத்திற்கு  அநந்நியம்(அந்நியமல்ல) இருப்பினும் அவற்றில் நமக்கு ஐக்கியம் என்பதே இல்லை (பக்கம் 409). உறுதியாக வள்ளலார் சுத்த சன்மார்க்க கொள்கை யாதெனில்  என்று தெளிவாக பக்கம் 409ல், 410ல் விளக்கியுள்ளார்கள் ஆதாரம் கீழே 

ஆதாரம்-21:

அனைத்தையும் கடந்து மிக முக்கியமாக சமய மதங்களை வள்ளலார் சாடிய பாடல்கள் மற்றும் சமய மதங்களின் ஆசார அடையாளங்களை விடவேண்டுமென்ற கட்டளை பாடல்களும், சாதி சமயம் மதம் பொய் பொய்யே என்ற பாடல்களும் தான் வைத்திருந்த சைவ சமய பற்றை விட்டொழித்தேன் என்ற பாடல்களும் ஆதாரமாக கீழே தறப்படுகிறது.

ஆதாரம்-22:

               

முடிவாக வள்ளலார் கார்த்திகை மாதம் 1823 அன்று வெளியிட்ட அறிக்கையில் தான் பாடிய கடைசி 28 பாசுர அடங்கிய பாடல்களை பாடும் படி கட்டளை இடுகிறார்கள் – ஆதாரம் – கட்டளை கடிதம்

ஆதாரம்-23:

ஆதாரம்-24:

28 Songs which were sung lastly by Holiness Vallalar on 1873 at Mettukuppam, Sitthivalagam, Vadalur, Cuddalure dt, Tamilnadu, India

 

வள்ளலாரின் உருவ மறுப்பு வழிபாடும் இறைவனை அகக்காட்சியில் காணும் அருவுருவ தரிசனமும் கருத்தில் கொள்ளவேண்டும் அவரால் வெளிப்படுத்தப்பட்ட அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும், வழிபாட்டு விதிகளும் கவனத்தில் கொள்ளவேண்டும். தனி மந்திரம் உறுதிசெய்யப்படவேண்டும் வள்ளலாரை வேதம், உபநிதசம், ஆகமம் புராணங்கள் மற்றும் சைவ, வேதாந்தம் மற்றும் சித்தாந்தத்தில் சுத்த சன்மார்க்கத்தை கொண்டுவருவதும் காட்டுவதும் முடியாது , கூடாது.  இந்திய அரசமைப்பு சட்டம் உறுப்பு 25இல் சமய பரப்பு உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

முடிவாக மேதகு உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பு Writ Apeal No.2262 & 2263 of  2011, நாள் 30/06/2022 இதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஆதாரம் – 25:

மேதகு உயர்நீதிமன்ற இரு நீதிபதி அமர்வு ஆணை:

மேற்படி உயர்நீதிமன்ற ஆணையின் முக்கிய பகுதிகள் மட்டும் (amended order)11

“…11…..Therefore,  he advocated the people to withdraw idol worship and follow Jyoti worship or follow Uruva Aruva Dharsanam.  The 6th Thirumurai, according to Vallalar, is that there is only one ultimate God, which is Arutperumjothi Andavar (அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்), and also prescribed the Rules of worship formulated on 18.07.1872 stating that Jothi Deepam must be shown in thin glass and the oil should be poured and thereafter Deepam to be lighted; that when Jhothi is shown, people should stand silently without making noise; that Arulperumjothi mantra should be chanted; that attention should not be had on Upanishads, Vedas, Agamas, Puramas; and that attention should not be shown on Saivaite Vedantham and Siddantham…

Article 25 of the Constitution of India guarantees protection of religious practise which forms an essential and integral part of religion and the said Article is extracted hereunder:~

  1. Freedom of conscience and free profession, practice and propagation of religion

(1) Subject to public order, morality and health and to the other provisions of this Part, all persons are equally entitled to freedom of conscience and the right freely to profess, practise and propagate religion.

(2) Nothing in this article shall affect the operation of any existing law or prevent the State from making any law—

(a) regulating or restricting any economic, financial, political or other secular activity which may be associated with religious practice;

(b) providing for social welfare and reform or the throwing open of Hindu religious institutions of a public character to all classes and sections of Hindus.

Explanation I. The wearing and carrying of kirpans shall be deemed to be included in the profession of the Sikh religion.

Explanation II. In sub~clause (b) of clause (2), the reference to Hindus shall be construed as including a reference to persons professing the Sikh, Jaina or Buddhist religion, and the reference to Hindu religious institutions shall be construed accordingly.

Article 25 says that all persons are equally entitled to freedom of conscience and the right freely to profess, practise and propagate religion. Therefore,  the unique and innovative method of worship to attain the final enlightenment, namely, ஒன்றே குலம் ஒருவனே தேவன்;  ~ one Clan, one God presented to the entire humanity by the great Saint Ramalinga Adigalar, preaching caste~less society and non~ritualistic worship, have to be preserved by the humanity for all times to come and the practise of any path has to be left to the choice of the devotees, by virtue of Article 25.  Hence, interfering with such faith by the appellant by changing the method of worship is highly regrettable.  Therefore, the findings of fact reached by the authorities, namely, Joint Commissioner and Commissioner of the Hindu Religious and Charitable Endowments Department on the method of worship preached by Lord Ramalinga Adigalar, have been rightly upheld by the learned single Judge and we also do not find any merit in the appeals to interfere with the same. Accordingly, the writ appeals are dismissed.  Consequently, M.P.Nos.1 of 2011 are also dismissed. No costs.

திருவருட்பிரகாச வள்ளலாரை அவர்தம் முடிபான சுத்த சன்மார்க்கத்தில் வெளிப்படுத்துவதே சரியாகும் என்று வழங்கிய மேதகு உயர்நீதிமன்ற தீர்ப்புகள், திரு ஆணையர், திரு இணை ஆணையர் இவர்களின் ஆணைகள் கருத்தில் கொண்டு வடலூர் வள்ளலார் நிலையத்தை மற்றும் வள்ளலாரை வெளிப்படுத்துவதே சட்டப்படி சரியாகும்.

அன்புடன் ,

APJ அருள் (எ) N.இளங்கோ

(எனது மற்றும் அனைத்து சுத்த சன்மார்க்கத்தார்கள் சார்பாகவும் உறுதியாக, பணிவாக சமர்ப்பிக்கப்படுகிறது)

unmai

Channai,Tamilnadu,India