April 19, 2024
Blog

தமிழராய் எல்லோரும் ஆவோம் அதுவே உண்மை.

தமிழராய் எல்லோரும் ஆவோம் அதுவே உண்மை.— APJ ARUL

அவரவர்க்கு அவரவரின் மொழியே தாய் மொழி. இது இயற்கை.
ஆனால் சிறப்பான பொது மொழியே ” தந்தை மொழி” ஆகும்.
தமிழ் மொழியை “தந்தை மொழி” என அறிவித்தார் வள்ளலார்.
எங்ஙனம் சிறப்பு என திருவருட் பிரகாச வள்ளலார் சொல்வதை வாசியுங்கள்.
1) பயிலுவதற்கும்
2) அறி வதற்கும்
— மிகவும் இலேசுடையதாய்;
3) பாடுவதற்கும்,
4) துதித்தற்கும்
— மிகவும் இனிமையுடையதாய்,
5) சாகாக் கல்வியை இலேசில் அறிவிப்பதாய் உள்ள மொழி.
மேலும்;
ஒலி இலேசாயும்,
கூட்டென்னும் சந்தி அதிசுலபமாயும்,
எழுதவும் கவி செய்யவும் மிக நேர்மையாயும் உள்ள மொழி ” தமிழ் ” என்கிறார் வள்ளலார்.
மேலும்,
அசுர ஆரவாரம், சொல்லாடம்பரம் போன்ற அலங்காரமும் இன்றி,
எந்த மொழியின் சந்த சுகளையும் தன் பாஷையுள் அடக்கி ஆளுகையும் ஆண்டன்மையைப் பொருந்தியதுமான தனிமொழிக்கு உரித்தான “ழ்” ” ற்” ” ன்” என்னும் முடி, நடு ,அடி, நிலை இன்பம் கொண்ட
” இயற்கை உண்மைத் தனி தலைமைப் பெருமைச் சிறப்பியல் ஒலியாம் தமிழ் என்கிறார் வள்ளலார்.
இங்கு இந்த மண்ணில் வாழ்ந்த மனிதர்கள் தங்களது அறிவை, உண்மையை தன் போல் பிறரும் தெரிந்து மகிழ்ந்திட ஒலித்த ஒலியே, செய்த பதிவே ” உன்னத தமிழ் மொழி”. இம்மண்ணின் மைந்தர்களின் இரக்கக் கோட்பாடு, அண்ட பிண்ட விசயங்கள், அவர்களுக்கு தெரிய வர, தெரிய வர, அவற்றை அங்ஙனமே தமிழில் பதிய வைத்தான். அதைப் பெற்ற தமிழும் சிறப்பானது. உயர்ந்த நிலையில் நின்று ஓங்கும் மொழியானது. உயர் அறிவு பெற்ற தமிழ் இனம் வாழ்ந்த பகுதி கடல் வாங்கியது உண்மை, அது வரலாறு. மீதம் மற்றும் வெளிப்பட்ட பகுதியில் தொடர்ந்து நின்றது தமிழ். அதனாலே, தமிழ் இயற்கை மொழி மற்றும் இறை மொழியானது. உலகில்
ஒரு குடும்பம் என்றால் இறைவன்,அக்குடும்பத் தலைவன் தந்தை, சக்தியாய் தாய் மற்றும் குழந்தைகள், சம்பந்தங்கள், சித்தப்பா,பெரியப்பா,சித்தி, மாமா, அத்தை எனச் சொந்தங்கள் உண்டு. அது போல், ஆதி இயற்கை மொழி தமிழுக்கும் குடும்பம் ஆனது இயற்கையே. அக்குடும்பத்தில் தந்தையால் (தமிழால்) உருவான மொழிகள்:
மலையாளம், கன்னடம், தெலுங்கு, கோண்டி, கூயி, கூவி,குருக், மால்தோ, பிராகூப்…
இன்னும் தூரத்து சொந்தங்களும் உண்டு. இதை தான் திராவிட மொழிகள் எனப் பெயரிட்டனர். ஆனால் தலைவன்/தலைமை மொழி ” தமிழே “. தலைவன் தந்தை மீது சுற்றத்தார்கள் அனைவருக்கும் பாசம் உண்டு. உரிமையும் உண்டு. இது இயற்கை / இறை நெறி.
ஆணி வேர் நல்லா இருக்கும் வரை கிளைகள், இலைகள், இவைக்கு பாதிப்பு இல்லை.
தமிழ் இருக்கும் வரையே திராவிடம்.
திராவிட மொழிகள் ஆதி தமிழின் பழம்பெருமையை பறைசாற்றும் சான்றுகள், சாட்சிகள்.
# பிரபஞ்சத்தில் #
— உண்மை ஒன்றே!
— இயற்கை பொதுவே!
— கடவுள் ஒருவரே!
அது போல்,
மொழி ஒன்றே ஓங்கும், அது ” தமிழே”.
அது நன்மையே.
—- தமிழ் இனிதே கற்போம்.
—- தமிழ் உணர்ச்சி பெறுவோம்.
— தமிழராய் எல்லோரும் ஆவோம்
# அன்று தான்,
தமிழ் நல்கிய உண்மை வாக்கியம் மெய்யாகும்
அவை;
# யாதும் ஊரே,
யாவரும் கேளிர்!
– கணியன் பூங்கொன்றன்.
#
பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்..
— வள்ளுவர்.
#
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
— வள்ளலார்.
உடலுக்கு உயிர் போல்
அறிவுக்கு உயிர் மொழியே.
தாய்மார்கள் பலர் ஆயினும் தாய்மை ஒன்றே! தூய்மையே!!
உண்மை ஒன்றே!
அது தமிழே.
பழமை, புதுமை,
சிறப்பானது, பொதுவானது.
— அபெஜோ. அருள்.
வாழ்க தமிழ் 🙏

unmai

Channai,Tamilnadu,India