April 24, 2024
tamil katturai APJ arul

” சிவம் ” என்பது எல்லாருக்குமான ஒரு பொது தமிழ் சொல்

sivam-common-word

” சிவம் ”
என்பது எல்லாருக்குமான ஒரு பொது தமிழ் சொல்.
எந்தொரு குறிப்பிட்ட சமய மத மார்க்கத்திற்கு மட்டும் பாத்தியப்பட்டச் சொல் கிடையாது. முடியாது.

” சிவம் “
என்பதற்கு தமிழ் அகராதி தரும் பொருள் காண்க:-

பொதுவில்:

“நன்மை”

Goodness,
Prosperity and
Auspiciousness.

ஆன்மீகத்தில்:
முத்தி – final deliverance
அறிவுரு
சுயம்பிரகாசம்
Pure Intelligence, Highest state – “GOD”.

மற்றவை;

1.யோகம் 27 ல் ஒன்று
2. குறுணி
3.தத்துவங்களில் ஒன்று.

ஆக,
“சிவம்”
என்பது மிகவும் சிறப்பாக, பொதுச் சொல்லாக, பயன்படுத்தக் கூடியச் சொல் ஆகும்.

காரணம்;

சாதி சமய மதம் பொய் பொய்யே என்ற வள்ளலார் தன் சுத்த சன்மார்க்கத்தில் இயற்கையின் உண்மை விளக்கம் இன்பம் இவையே இறைவனாக காட்டுகிறார்கள். அறிவின் வடிவம் ஆதிஅந்தமில்லா ஜோதியாகிய அருளே “ஆண்டவர்” என்கிறார்கள்.
ஆக,
அறிவு ஒளி,
இயற்கை,
அருள்,

– இவையே

ஆண்டவரின்;

– நிலை
– உண்மை
– அனுபவம்

என்கிறார் வள்ளலார்.

இந்த உண்மை பொது கடவுளை
” மெய்ச் சிவம் ”
” சுத்த சிவம் ”
” சிவபதி”
என பலவாறு அழைக்கிறார் வள்ளலார்.

ஆக,
நன்மை எதுவோ அதை சிவம் எனலாம்.

ஆன்மீக நம்பிக்கையில்,
உயர்ந்த அறிவு ஒளியாகிய சுயப்பிரகாச மேன்மை வஸ்துவை
” சிவம் ” என்கிறது தமிழ்.

மற்றொரு உண்மை
இங்கு உள்ளது.

தமிழ் மொழி,
யாரை கடவுள் என்று காட்டுகிறது என்றால்
“உயர்ந்தது”
” உயர்ந்த அறிவு ”
” முடிபானது ”
” சுயப்பிரகாச ஒளி சொரூபம் ”
என்ற பொருளையே கடவுளுக்கு தந்துள்ளது தமிழ்.

இந்த மொத்தத்தையும் இயற்கையில் கண்டார் வள்ளலார்.

அதனால் தான்,
வள்ளலார் தெளிவாக சொன்னார்கள்;

சிவானுபவத்தை எளிதில் நல்கும்
” தமிழ் ”

ஆக,
நாத்திகத்தார், ஆத்திகத்தார்,
மற்ற எல்லோருக்குமானது
” சிவம் “.

பொதுவில்,
நன்மை செய்பவர், அவருக்கு பெயர் ” சிவம்”

நம்பிக்கையில்,
சுயப்பிரகாசமாகிய அறிவுருவாகிய ஜோதி சொரூபம் அது கடவுள்.
இக்கடவுளின் பெயர் சிவம்.
நன்றி:
– ஏபிஜெ அருள்.
வாழ்க சிவம்!
வாழ்க தமிழ்!

unmai

Channai,Tamilnadu,India