April 20, 2024
tamil katturai APJ arul

வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்

vallalar-margam-web-link

வள்ளலாரையும், அவர்தம் மார்க்கம் “சுத்த சன்மார்க்கம்” ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்?

1)இம்மார்க்கம் புதியது.

2) தனி நெறி கொண்டது.

3) மற்ற சமயமத கடவுள் இல்லை. ஒருவராகிய தனி கடவுள்.

4) வள்ளலார் உண்மை கடவுள் அருளால் ” மரணத்தை ” தவிர்த்துவிட்டு ஒளி தேகம் பெற்றார்.

5) எல்லாருக்கான உண்மை பொது வழி.

அன்பர்களே!

இன்றைய சூழல்; இயற்கை சீற்றமோ, இயற்கையை நாம் புரியாததினாலோ, இயற்கை நமக்கு புரிய வைக்கிறதோ, தெரியவில்லை, இந்த “கொரோனா ” பரவி இன்று மனித இனத்தையே அழிக்க உள்ளதோ? என அஞ்சி உள்ளோம். மூடத்தை போதித்து வந்த சமயமத பிரச்சார போலிகளை, சாதி வெறிகளை இந்த கோரானா கைகட்டி வாய் பொத்தி நிற்க வைத்து விட்டது. இந்நிலையில் நம் குழப்பமான சூழ்நிலைக்கு பதில்? ….? நம் அறிவு ஒன்றே துணை. அதையும் தாண்டி உள்ள இயற்கை திறம் என்ன?, உண்மை கடவுள் யார்? என சிந்திக்க வைத்துள்ளது? ஆனால், எவர் ஒருவர் உண்மை (கடவுள்) நிலை அறிய, இயற்கை திறம் இவை, தன் அறிவு கொண்டு அறிய ஆசைப் படுபவர்களுக்கு மட்டுமே இந்த ” சுத்த சன்மார்க்கம் ” உள்ளது. வாருங்கள் (விருப்பம் உள்ளவர்கள் மட்டும்) நல்ல விசாரணையை வள்ளலார் வழியில் இன்றே செய்திடுவோம்.

நன்றி: ஏபிஜெ அருள்.

unmai

Channai,Tamilnadu,India