March 29, 2024
tamil katturai APJ arul

” கொரோனா” நீ நல்லவரா? கெட்டவரா?

corona-post

” கொரோனா”
நீ நல்லவரா? கெட்டவரா?
— apj arul
# உன் வரவால் மனித இனம் பிரிக்கும் சில சமயமத மூடப் போதனைகள் அடங்கிற்று.
# ஆனா, உன்னால் பாதித்தவர், நல்லவரை தொட்டாலும் அந்த நல்லவரையும் தாக்குகிறாய்.
# ஆறறிவு எங்கள் தேகம் பெற்றிருந்தாலும், கை சுத்தம் இட சுத்தம் எங்களுக்கு கற்றுக் கொடுத்தாய்.
# மருத்துவர் ஆலோசனை படி, தனிமைப்படுத்தி, பொறுத்துக் கொண்டால் நீ விலகிடும் குணம் படைத்தவன்
# ஆனா, பாதித்தவர்களில் 2% பேரை கொன்றாலும் நீ கொலைக்காரன் தானே?
# பணக்காரப் பொருளாதாரத்தை சீரழித்து விட்டாய். ஏழைகளின் அன்றாடப் பிழைப்பையும் சேர்த்து அல்லவா கெடுத்து வருகிறாய்.
# எந்த மருந்துக்கும் கட்டுப்டாத ஆணவக்காரானாய் உள்ளாய்.
# இயற்கையை பாதுகாக்காத உலக மனித இனத்திற்கு பாடம் புகட்டி “உண்மை அறிதல்” க்கு வித்திட்டாய்.
# பயம் எற்படுத்தி, சிக்கனம், சுகாதாரம், நல்ல உணவு, ஒற்றுமை எங்களுக்கு தெரிய வைத்தாய்.
# ஆனா, ஆதரவு அற்றவர்களையும் நீ பாரபட்சமின்றி தாக்குகிறாய்.
# எங்களிடம் உள்ள
சாதி வெறிப் பார்வை,
உன்னிடம் இல்லை.

ஏ கோரானாவே நீ நல்லவரா? கெட்டவனா?

குறள் வழியில்;

” குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்”

ஆம்,

– எங்களை திருத்திக் கொள்ள போதியளவு அறிவு இயற்கை எல்லோருக்குமே கொடுத்துள்ளது.
– எங்களின் மூட நம்பிக்கை, சாதி மத வெறி, சுகாதார கேடு, இயற்கை சீரழித்தல் இவை எங்கள் ஞான அறிவால் புரிந்து இனி நல்ல வழியில் நடந்துக் கொள்ள முடியும்.
— இதை சாக்காக வைத்து உள்ளே நுழைந்தாய். இனி எங்களில் ஒருவரை கூட இழக்க விட மாட்டோம்.

– நீ உருவாக்கப் பட்டவனா? உருவானவனா? எப்படி இருந்தாலும் நீ கெட்டவன்.

நீ அடங்கு எனச் சொல்ல முடியாது.
எங்கள் இன மருத்துவர் அறிவால் விரைவில் நீ அடக்கப்படுபவாய்.
எங்கள் நன்முயற்சில் விரைவில் எங்கும் இல்லாமலே போவாய்.

உண்மைஅன்பு உண்மை அறிவு உண்மை இரக்கம் எங்களை இனி வழி நடத்தும். எல்லாம் வல்ல “இயற்கை திறம்” இனி துணைப் புரியும்.

நன்றி: ஏபிஜெ அருள்,
இது சத்தியம். இது சத்தியம்.

unmai

Channai,Tamilnadu,India