March 29, 2024
tamil katturai APJ arul

தமிழுக்கு வந்தனம்! வந்தனம்!

தமிழுக்கு வந்தனம்! வந்தனம்!
__ஏபிஜெ அருள்
“கீழடியில்”
மதம் சமயம் சார்ந்தவை கிடைக்கவில்லை. சமய வழிபாடு சம்மந்தமான எதுவும் இல்லை. ஆனால்,
“தமிழ் மண்” வாழ் மக்களின் சமுதாயம் எழுத்தறிவு, விளையாட்டு, வாணிபம் இவற்றில் சிறந்து விளங்கி உள்ளதற்கான பல ஆதாரங்கள் கிடைத்துள்ளது.
நிற்க! கவனிக்க!!
சமயத்தால் இன்று நாம் பெற்றுள்ள;
# பல்வேறு சாதிகள்
# புராண கற்பனை கடவுள்கள்
# கட்டுப்பாட்டு ஆசாரங்கள்

எதுவும் தமிழ் விளங்கிய புனித தலத்தில் இல்லை, இல்லை என்பதை சத்தியமாக தெரிந்துக் கொள்ளுங்கள்.
ஒழுக்கம், அன்பு, கருணை இவைக்கு சொந்தமே ஆதி மொழியாம் தமிழ் தோன்றிய இம்மண்.
இந்த உண்மையை தான் வள்ளலார் 19ம் நூற்றாண்டில் கண்டு ” சாதி சமயம் மதம் பொய்” கடவுளின் அருளை பெற்று தரும் கருணை விருத்திக்கு இந்த சாதி சமய கட்டுப்பாட்டு ஆசாரங்கள் தடையாக உள்ளது என்றார். ஆனால், நாம், ஞானி சொன்னதை தெரிந்துக் கொள்ள முன் வரவில்லை.
நீங்கள் கேட்க கூடும் தமிழ் காட்டும் கடவுள் கொள்கை என்ன?
# இயற்கை – உண்மை, விளக்கம் இவற்றைப் போற்றி வணங்குதல்
# நம்மை வழி நடத்திய நம் முன்னோர்களை நினைந்து வணங்குதல்
# ஒழுக்கம்,கருணை பொது நோக்கம் கொண்ட பண்பாடுகள்
# உண்மை கடவுள் குறித்த விசாரம் மற்றும் ஒழுக்கம்க, இவையே தமிழ் தந்த அறிவு.

திருக்குறள் திருமந்திரம் கண்டு தெளிக.
( திருமந்திரத்தில் “யானை முகத்தானை” போன்ற இடைச்செருகல் பாடல்கள் பலநூறு உள்ளதை கருத்தில் கொள்க)
நம்மை 2020 ஆண்டுகளாக ஆக்கிரமித்துள்ள சாதி சமய மதங்களை விட்டு விட்டு உண்மை கடவுளை நோக்கி நாம் செய்து வந்த நல்ல விசாரத்தை மீண்டும் தொடருவோம்.
ஒழுக்கம் அன்புக்கு “திருக்குறள்”
கடவுள் பக்திக்கு” திருமந்திரம்”.
கடவுள் உண்மை நிலை காண வள்ளலாரின்
“சுத்த சன்மார்க்கம்”

தமிழே ஆதி இறை மொழி!
தமிழ் மண்ணே புனித இடம்!
தமிழ் உண்மைக்கு வழிகாட்டி!
தமிழ் இனிது! தமிழ் பொது!
தமிழை நாம் கற்போம்- அத்
தமிழ் நம் மூச்சாகும் இது சத்தியம்.
தமிழனாய் வாழ்வோம்.
நன்றி: ஏபிஜெ அருள்.
தமிழுக்கு வந்தனம்! வந்தனம்!I
அன்பு அறிவு இன்பம் தரும்
ஆதி மொழி “தமிழ்”.
ஆண்டவனை எளிதில்
அறிய உதவும் மொழி “தமிழ்”

unmai

Channai,Tamilnadu,India