March 28, 2024
tamil katturai APJ arul

படியுங்கள்,உண்மை தெரிய வரும்.இது சத்தியம்

படியுங்கள்,உண்மை தெரிய வரும்.இது சத்தியம். இன்று திருஅறை தரிசனம். இதே நாளில் வள்ளலார் என்ன சொன்னார்கள்?– ஏபிஜெ அருள்.
அதிசயம் நடந்த நாள்.
எவரும் பெற்றிராத பேறு.
என்ன அதிசயம்?
எத்தகைய பேறு?
என்றால்; 
திருவருட் பிரகாச வள்ளலார் சுத்த சன்மார்க்க நெறி வழியில் கடவுள் அருளை 12/04/1871 ல் பெற்றார்கள். 
இங்கு வள்ளலார் பெற்ற “கடவுள் அருள்” என்பது;
மற்ற சமயமத மார்க்கங்களில் கிடைக்கக் கூடிய/கிடைத்த பயன் போன்றது அல்ல. 
வள்ளலார் பெற்ற பேறு “ஒளி தேகம் – தனி வடிவம்” ஆகும்.
இது இறைவனால் “சாகா கல்வி” போதிக்கப்பட்டு, சாகாவரத்தில் கொடுக்கப்படும் வலமான வாழ்வாகிய “மரணமில்லா
பேரின்ப பெருவாழ்வு”என்கிறார் வள்ளலார்.
12/04/1871ல் சுத்த சன்மார்க்க வழியில், உண்மை கடவுளை, தனி வெளியில் கண்டு, கடவுள் அருளால் சாகா கல்வி அறிந்து, பேரின்பத்தை அனுபவித்ததினால் அவர் தேகம் ஒளியாகி தனி வடிவத்தில் மாறியது. 
“தனி வெளியில்” இந்த சாகாவரத்தை வள்ளலார் பெறுவதற்கு காரணமாக இருந்த “தகுதி” என்ன தெரியுமா?
உண்மை கடவுளிடம், அவர் வேண்டியதை நாம் தெரிந்துக் கொள்வதின் மூலம், வள்ளலார் பெற்றியிருந்த தகுதியை நாம் அறியலாம். 
இதோ வள்ளலார் இறைவனிடம் முறையிட்டது;
“எனக்கு கிடைத்த இந்த பேறு இவ்வுலகத்தார் பெறுதல் வேண்டும்” என வேண்டினார். 
இதுவே ஆன்ம நேய ஒருமை பாட்டுரிமை. 
இதுவே பொது நோக்கம். 
இதுவே சுத்தசன்மார்க்கத்தின் “ஞான ஆசாரம்” ஆகும்.
இறைவன் வள்ளலாரின் வேண்டுதலை ஏற்றார்.
கடவுள் வள்ளலாரிடம்;
” இப்பேறு பெறும் இந்த 
பொது வழியை,
நீயே இவ்வுலகத்தார்களிடம் விளக்கிச் சொல்ல செல்க! 
எனவே மீண்டும் நம் வெளிக்கே வள்ளலாரை அனுப்பி வைத்தார் ஆண்டவர். 
(இதைத் தான் உண்மை கடவுளால் “வருவிக்கவுற்றேன் என்கிறார் வள்ளலார் என்று அறிக).
வள்ளலார், தன் ஒளிதேகத்தை,
நம் பார்வையிலிருந்து மறைத்துக் கொண்டு 2 1/2 இரண்டரை வருடமாக நமக்கு சுத்த சன்மார்க்க உண்மையை, ஒழுக்கத்தை சொல்லிக்கொண்டு வந்தார்கள். இதை பேருபதேசத்திலும், 12/04/1871 கடித அறிவிப்பிலும் தெளிவாக சொல்லியுள்ளார்கள்.
மேலும்,
30/01/1874 லும், அதாவது திருஅறை காப்பிட்டுக் கொள்ளும் முந்தின இரவில் (12 மணிக்கு முன்பு )அறைக்குள் செல்லும் முன்பு நம்மிடம் முக்கியமாக ஒன்றை பதிவு செய்கிறார்கள். அதை இங்கு காண்போம். –அன்புடன் ஏபிஜெ அருள், கருணை சபை சாலை, மதுரை.

வள்ளலாரின் சத்திய வாக்கியம் அப்படியே தரப்பட்டுள்ளது.

(சுத்த சன்மார்க்க ஒழுக்கம் என்பது; )
” …இங்கிருக்கின்ற ஒன்றையும் பொருளாகக் கொள்ளாதீர்கள்; எல்லாப் பற்றுக்களுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டுத் தலைவனையே தொழுவீர்கள் ,
என்ற திருவார்த்தை யதனால் தலைவனைத் தொழுவதே தொழிலாக வுடையது கடமை.”
(இங்கு வள்ளலார் விடச்சொல்லும் ஆசாரங்கள் எவை?)
அவர் நமக்கு ஏற்கனவே உபதேசித்து உள்ளார்கள்.
அவையாவன: 
(எதற்காக இந்த ஆசாரங்களை விட வேண்டும்?)
இதோ வள்ளலாரே சொல்கிறார்கள்;
“இந்த ஆசாரங்ககள் தயவை விருத்தி செய்வதற்குத் தடையாய் இருக்கின்றன” என்கிறார்.
(” தயவு” விருத்தி ஏன் பண்ண வேண்டும்?)
இதோ வள்ளலாரே சொல்கிறார்கள்;
“தயவு தான் என்னை ஏறா நிலை மேல் ஏற்றியது. தயவால் தான் பொது நோக்கம் பெற்றேன். பொது நோக்கமே சுத்த சன்மார்க்க ஞான ஆசாரம்” என்கிறார்கள்.
(பொது நோக்கம் ஏன் வருவித்துக் கொள்ள வேண்டும்?)
இதோ வள்ளலாரே சொல்கிறார்கள்;
“காருண்ணியம் விருத்தியாகி கடவுள் அருளைப் பெற்று அனந்த சித்தி வல்லபங்களைப் பெறமுடியுமே அன்றி வேறு வகையில் பெறுதல் கூடாது (முடியாது).” என்கிறார் வள்ளலார்.
இரண்டரை வருடத்திற்கும் மேல் ஒளி தேகத்தை மறைத்துக் கொண்டு நம்மோடு இருந்து, தனக்கு உண்மை கடவுள் நிலை காண உதவிய வழியை (சுத்த சன்மார்க்கத்தை) உபதேசித்து வந்த வள்ளலார். அதாவது,
( 12/4/1871 பிறகு)
உபதேசித்தும், விண்ணப்பங்கள் நான்கிலும்,திரு அகவலிலும் விளக்கி உள்ளார்கள். சத்திய ஞான சபை கட்டி அதன் மூலம் விளக்கியும் உள்ளார்கள்.
(ஆறாம் திருமுறை) பாடல்களில் அனுபவமான, சாகாவரத்தின் இன்பத்தை பதிவு செய்துள்ளார்கள். ஆனால் இந்த உண்மை அறியும் ஆவலோ, அறிவோ அன்று உலகத்தார்களிடம் இல்லை. காரணம் 1) சாதிசமயமத கட்டுப்பாட்டு ஆசாரங்கள் ஆதிக்கம்.
2) வள்ளலார் வெளிப்படுத்திய மார்க்கம் புதியது, தனி தன்மை கொண்டது.
தான் சென்ற புதிய,தனி வழியை மக்கள் பொது வழியாகவும் உண்மை வழியாகவும் தெரிந்துக் கொள்ள காலம் தேவைப்படும் விசயத்தை உணர்ந்தார் வள்ளலார். அன்று
அவரை சுற்றியிருந்தவர்கள் எவருமே தான் சொல்லிய உண்மையை தெரிந்து கொள்ளவில்லை என்று 22/10/1873லும், 30/01/1874லும், பல பாசுரப்பாடலிலும் பதிவு செய்து உள்ளார் வள்ளலார்.
22/10/1873 ல் சொன்னது;
”உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்துக் கொள்வாரில்லை”
மேலும் 30/01/1874ல் பதிவு செய்கிறார்கள்.
அதுவும் இதோ;
” இதுகாறும் என்னொடு நீங்கள் பழகியும் சன்மார்க்க ஒழுக்கம் இன்னதென்று தெரிந்து கொள்ளவில்லை.”
அன்பர்களே!
அன்று இருந்தவர்கள் அப்படி…
இன்று நாம்…. எப்படி?
அன்பர்களே!
நான் இன்று இப்படி…

திருவருட் பிரகாச வள்ளலாரே!
சுத்த ஞானியரே!
இன்று நான் 
அன்று நீங்கள் சொல்லிய

#சுத்த சன்மார்க்க உண்மையை தெரிந்துக் கொண்டேன்.
# ஆசாரங்களை விட்டொழித்தேன்.
# பொது நோக்கம் வருவித்துக் கொண்டேன்.
# இடைவிடாது கருணை நன்முயற்சியில் இருப்பேன்.
இது சத்தியம்
இது சத்தியம்
இது சத்தியம்.
சுத்தஞானியாரே!
தனி வடிவம் பெற்றவரே!
திருவருட் பிரகாச வள்ளலாரே!
# தயவை விரைந்து விருத்தியாக்கி, உண்மை கடவுள் அருள் பெற, என்னுள் நீங்கள் இருந்து, 
என் உள்ளத்திலே உண்மை ஆண்டவர் வெளிப்பட்டு,எனக்கு உண்மை (சாகா கல்வி) விளக்க, நீங்கள் உதவி புரிந்திட வேணுமாய் பணிவுடன் வேண்டுகிறேன். 
நீங்கள் சொன்ன உண்மையை நான் இன்று தெரிந்துக் கொண்டதை போல், இவ்வுலகத்தார்களும் தெரிந்துக் கொள்ள வேண்டுகிறேன்.
அன்புடன் பணிவுடன்;
ஏபிஜெ அருள்.

அன்பர்களே!
தகுதியாக்கி கொண்ட நமக்கு,
நம்முள் உண்மை கடவுள் வெளிப்பட்டு விளங்க, எல்லா வகையிலும் உதவிட வள்ளலார் தோன்றுவது சத்தியம்.

அன்பர்களே!
உண்மை தெரிந்து கொண்டவர்கள்,
உண்மை தெரிந்துக் கொண்டேன் என்று இங்கு சத்தியமாக 
(comments ல்) பதிவிடுங்கள்.

நம்முள் உண்மை வெளிப்பட எல்லா வகையிலும் உதவிட வள்ளலார் தோன்றுவது சத்தியம். இதை
மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த ஷேர் செய்யுங்கள்.

உண்மை தெரிந்துக் கொண்டவர்கள், வடக்கு திசையில் இருந்து, தென் திசை முகம் கொண்டு,
நம் அகத்திலே உள்ளழுந்தி,சிந்தித்து, 
சிந்தித்தலை விசாரித்து, சாகாக் கலையை பெறுகிறதற்கு, கண்ணீர் விட்டு, உண்மை கடவுள் நிலை காண நன்முறையில் இடைவிடாது இருப்போம். நம்முள் உள்ளொளி ஓங்கி பேரின்ப பெருவாழ்வை பெறுவோம்.

(ஆசையும்,நன்முயற்சியும் நம்மிடம் விரைந்து தோன்ற நான்கு விண்ணப்பங்களையும், பேருபதேசத்தையும் மீண்டும் மீண்டும் ஊன்றி வாசிக்க வேண்டும்.
“நினைந்து..நினைந்து..” எனத் தொடக்கமுடைய 28 பாசுரப் பாடல்களில் கண்டப்படி தெய்வபாவனையை சித்தி வளாக தீபத்தில் செய்யுங்கள் என்கிறார் வள்ளலார்.
(வடலூர் வரதாவர்கள் நம்மூர் சபை அல்லது நம் வீட்டு தீபத்தில் செய்யுங்கள் உண்மை தெரியும் வரை.) 
இவண்:-கருணைசபை, மதுரை.
வணக்கம். —- ஏபிஜெ அருள்
948768314/ 9487417834/ [email protected].

unmai

Channai,Tamilnadu,India