March 29, 2024
tamil katturai APJ arul

“ஆன்மா” என்பது யாது? 

“ஆன்மா” என்பது யாது? 
— ஏபிஜெ அருள்
( வள்ளலார் சத்திய வார்த்தைகள் உள்ளது உள்ளபடி /அடிப்படையில் )
“ஆன்மா” பற்றி உபதேசக் குறிப்புகள் 50க்கும் மேலாக வள்ளலார் அருளியுள்ளார்கள்.
அவற்றில் சில குறிப்புகளை இக்கட்டுரைக்காக காண்போம். (விரிவாக ஏபிஜெ அருள் எழுதிய “ஆன்மா” என்ற புத்தகத்தில் காண்க)
# பிண்டத்தில் அகம் ஆன்மா.
# ஆன்மாக்கள் என்பது அணுக்கள்.
ஆன்மா சிற்றணு.
# ஆன்மாவின் இயற்கை குணம்
” தயை “.
# ஆன்மாவின் இயற்கை என்பதே
தர்மத்திற்குப் பொருள்.
# ஆன்மா இயற்கையோடு
இருந்தால் சிவமாகலாம்.
# அருள் வெளியாகிய “ஆன்மா”
இயற்கையால்
சிவானுபவத்தைப்
பெறுவது உண்மை.
இனி நல்ல விசாரம் செய்வோம். – ஏபிஜெ அருள்.
“ஆன்மா” என்றாலே நாம் தான். ஆம், நான் சிற்றணுவாகிய ஆன்ம வடிவினன். இந்த வடிவம் பிண்டத்தில் அகத்தில் உள்ளது.
ஆன்மாவுக்கு இடம்,பிரகாசம்,குணம்,
வண்ணம், மறைப்புகள் உண்டு.அவை;
இடம் : 
அருள் வெளி
பிரகாசம் : 
கோடி சூரியப் பிரகாசம் உடையது.
குணம்: 
தயை
வண்ணம் :
ஆன்மாவின் விளக்க ஸ்தானம் லலாடம் (நெற்றி) வண்ணம் கால் பங்கு பொன் முக்கால் பங்கு வெண்மை.
மறைப்பு:
மாயாசக்தியாகிய ஏழு திரைகள்.
அன்பர்களே,
ஆன்மா வியாபகமாகிய மனித தேகத்தில் கடவுள் காரியப்படுகிறார்.
அக் கடவுளை அறிவதற்கு ஆன்ம அறிவை கொண்டே அறிய வேண்டும் என்கிறார் வள்ளலார்.
உண்மை அறிதலே ஆன்ம அறிவு.
உண்மை அறிதல் என்பது அனுபவஞானம்.
அனுபவ ஞானம் என்பது எதையும் தானாக அறியும் ஆன்ம காட்சி.
‌ஆம், இந்த இடம் தான் சுத்த சன்மார்க்கம். நேரிடையாகவே ஆன்மாவில் இருந்து கடவுள் அருளால் அறிய வேண்டியவை அறிந்து அனுபவம் பெற்று பூரணசித்தி பெறுகின்ற வழியே சுத்த சன்மார்க்கம். ஆக, ஆண்டவரின் அருளை விரைந்து பெற ஆண்டவரை காண வேண்டும். ஆண்டவர் காரியப்பட்டுள்ள இடம் மனித தேகத்தில் ஆன்மாவே. ஆன்மா பிரகாசத்தின் உள் பிரகாசம் (உள்ளொளியே) கடவுள்.
‌ஆக, அருள் வெளியில் ஆன்மா காட்சியில் உள்ளொளியாக உள்ள பதியின் அருளை, அப்பதியின் அருளாலேயே பெறுகின்ற வழியே வள்ளலார் வழி.
‌இந்த வழியின் சாதனம் ஒன்றே ஒன்று. அது தயை என்னும் கருணை.
‌இந்த தயவின் விருத்திக்கு தடையாக சாதி சமய கட்டுப்பாடு ஆசாரங்கள் உள்ளது என்ற உண்மையை உணர்ந்து சொன்னார் வள்ளலார். இதுவே வள்ளலாரின் முடிவான முடிவாகிய சுத்த சன்மார்க்கம்.
‌ஆன்மாவை, ஆன்மப்பிரகாசத்தினுள் உள்ள “பிரகாசத்தை” (பதியை) மறைந்திருக்கும் திரைகளை நீக்குவதற்கு ஆண்டவரையிடத்திலேயே விண்ணப்பிக்க வேண்டும்.
எங்கும் பரிபூரணமாக நிறைந்திருக்கும் இறைவனை நம்முள் (ஆன்மாவினுள்) காணும் திருவருள் சம்மதத்தை நாம் ஒவ்வொருவரும் அடைதலே லட்சியம் கடமை.இதனால் நாம் பெறும் பயன் மரணமில்லா பெருவாழ்வு.
வணக்கம்.
அடுத்து, சாதனம், பயிற்சி குறித்து விசாரம் செய்வோம்.

நன்றி: ஏபிஜெ அருள்.

unmai

Channai,Tamilnadu,India