March 28, 2024
tamil katturai APJ arul

ஆன்மீகத்தில் குழப்பங்கள்.. ?அரசியலில் சச்சரவுகள்.. ?உலகில் தீவிரவாதங்கள்.. இவை அனைத்துக்கும் ஒரே தீர்வு இதுவே

ஆன்மீகத்தில் குழப்பங்கள்..
?அரசியலில் சச்சரவுகள்..
?உலகில் தீவிரவாதங்கள்..
இவை அனைத்துக்கும் ஒரே தீர்வு இதுவே.
— ஏபிஜெ அருள்.

ஆம் இவைக்கு ஒரே தீர்வு “வள்ளலாரின் சுத்த சன்மார்க்கமே”.

ஆம்.
ஆன்மீகத்தில் குழப்பங்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் எங்கள் சமயமே எங்கள் கடவுளே சரி என்பதும், இவரே கடவுள், இதுவே முடிவு என அவரவர் வரையறுத்து கொண்டிருப்பதுமே.
ஆனால் சுத்த சன்மார்க்கத்தில் இந்த குழப்பமே ஏற்படாது. ஏற்பட்டுள்ள குழப்பத்தையும் தீர்த்து வைக்கும். நீங்களே பாருங்களேன். 
இங்கு 
கடவுளின் உண்மை நிலை நம் உள்ளத்தில் காணுதலே நம் முயற்சியும் பயிற்சியும்.
அது வரை நாம்,
“ஓர் உண்மை கடவுள் உண்டென்றும் உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிபடச் செய்ய சொல்லுகிறது சுத்த சன்மார்க்கம்.”

அடுத்து அரசியலில் சச்சரவுகள்:

“ஒழுக்கம்” நிரப்பி கொள்ள வேண்டும் என்றும், இதுவே கடவுளின் அருளை பெற்றுத் தரும் என்கிறது சுத்த சன்மார்க்கம். ஒழுக்கம் உள்ளவர்களால் சச்சரவு ஏது?

அடுத்து
உலகில் தீவிரவாதங்கள்:

எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் பாவிப்பது தான் இங்கு சாதனமாக வைக்கப்பட்டு உள்ளது. ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையே இங்கு லட்சியம் ஆகும்.

ஆக,
உண்மை அறிவு
உண்மை அன்பு
உண்மை இரக்கம்
பெறுவதினால்

?ஆன்மீகத்தில் குழப்பங்கள்,
?அரசியலில் சச்சரவுகள்,
?உலகில் தீவிர வாதங்கள்

இவை ஓழிந்து 
பொது நோக்கம் தழைத்து ஓங்கும். 
நாம் இப்பொழுதே சுத்த சன்மார்க்கம் சாருவோம்.
நம்மை போல் எல்லாரும் இன்புற்று வாழ சுத்த சன்மார்க்கத்தை உலகத்தார் அறிய இன்றே பரப்பிடுவோம்.

நன்றி ஏபிஜெ அருள்.

unmai

Channai,Tamilnadu,India