March 28, 2024
tamil katturai APJ arul

அப்படி இப்படி இல்லை. ஒரே வழி

அப்படி இப்படி இல்லை. ஒரே வழி
— ஏபிஜெ அருள்.

ஒன்று,
அடுத்தவர் பணத்தில் நல்ல காரியங்கள் செய்து, தன் வாழ்வையும் பார்த்துக் கொள்ளல்,

மற்றொன்று,
தன் பணம் செலவழிக்காமல் மற்றவர் பணம் நல்ல வழிக்கு செலவிட இலவசமாக ஆலோசனை சொல்வது;

அல்லது;
பாவம் விலகி புண்ணியம் தனக்கு வரும் என்ற அடிப்படையில் மட்டுமே பணம் செலவழித்து நல்ல காரியம் செய்வது.
நிற்க!
மேற்படி மூன்றில் குற்றம் மட்டும் நோக்கினால்,
மூன்று சரியில்லாதவர்கள் அடையாளம் காணலாம்.
ஆனால், மேற்படி மூன்றில் நல்லது மட்டும் நோக்கினால்,
மேற்படி மூன்றிலும் நல்ல காரியம் நடந்தது தெரியவரும்.
எனவே மேற்படி மூன்று நிலையிலும் மனிதன் தன்னை நல்லவர்களாக காட்டி கொள்ள முடியும்.
இங்ஙனம் உள்ளவர்கள் எல்லா மார்க்கங்களிலும் உள்ளார்கள்.

ஆனால்,
சுத்த சன்மார்க்கத்தில் “உண்மை அறிபவர்களாக” இருத்தல் வேண்டும் என்கிறார் வள்ளலார்.
அதாவது;
ஒவ்வொருவரும் உண்மை தெரிந்து கொள்ளும் முயற்சியுடையவராக இருத்தல் வேண்டும். இதுவே அக அனுபவம் ஆகும். இதற்கு ஆண்டவரின் அருள் மட்டுமே தேவை.
இந்த உண்மை அறிய விரும்பவர்களிடத்தில் இரக்கம்,அன்பு இவர்களின் இயல்பாகவே இருக்கும். நற்செயல்கள் அவர்களின் அன்றாட செயல்களில் இணைந்தே இருக்கும்.
நல்லதை நினைக்க, நற்காரியங்கள் செய்ய எவரையும் நாடி எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.

“புலைகொலை தவிர்த்தோர் உள்ளே புகுதல் வேண்டும்” என்ற கட்டளை வாசகத்தை வள்ளலார் சத்திய ஞான சபை முகப்பில் வைத்தார்கள். இந்த ஜீவகாருண்ய தகுதி உடையோர் உள்ளேவந்து சுத்த சன்மார்க்க நெறி (ஒழுக்கம்) தெரிந்து கொள்ள அழைக்கிறார் என சத்தியமாக உணருதல் வேண்டும் முதலில்.

நற்காரியங்களில் “மட்டுமே” நின்றால் பெற வேண்டிய “பெரிய” லாபம் கிடைக்காது.
நம்மை நாமே மேலேற்றி கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளலார்.
அதற்கு,
நாம் நம் நிலை என்ன? நம்மை அனுஷ்டிக்கும் இந்த கடவுளின் உண்மை நிலை என்ன? என்ற விசாரணையில் உள்ளழுந்தி சிந்தித்திக்க வேண்டும் என்கிறார் வள்ளலார்.
இது காரியப்பட கண்டிப்பாக நம்மிடையே இருக்க கூடாதது “ஆசாரங்கள்”. எதிலும் பற்றில்லாமல் இறைவனையே தொழுவதே தொழிலாக கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளலார். இந்த தொழிலை கடமையாக கொள்பவனிடத்தில் மட்டுமே “ஒருமை” வரும். ஒருமை வந்தால் தயவு வரும். தயவு வந்தால் ஏறாநிலை மேல் ஏறலாம் என்கிறார் வள்ளலார்.
சுருங்க கூற வேண்டுமானால்,
எல்லா உண்மையும் தெரிந்து கொள்ள “ஆசை “மட்டும் இருந்தால் போதும். இறைவனே நம்முள்ளே வெளிப்பட்டு எல்லா உண்மையும் அறிவிக்கிறார் என்ற உண்மையை தான், தான் கண்டதாக சொல்கிறார் வள்ளலார்.
….அ..ட இவ்வளவு எளிதான வழி தானா சுத்த சன்மார்க்க வழி என்று நினைக்க தோன்றும்.
ஆம். எளிதான சாதாரண வழி தான்.
ஆனால்,
கீழே வரும் சத்திய வாக்கியங்கள் நம் அறிவில் சரி எனப் பட வேண்டும்.
அவை;
1. உண்மை கடவுள் ஒருவரே!
2. அக்கடவுள் கண்டு சாகா வரம் பெறனும்.
3. கடவுளை காண இரக்கம் விட்டு பிடிக்கும் கருணை வழி மட்டுமே.
4. எல்லாரும் இவ்வழியில் வந்து பயன் அடைதல் வேண்டும் என்ற நேயம்.
மேலே உள்ள 1&2 உண்மை வெளிப்பட
மேலே உள்ள 3&4 ல்
நாம் இடைவிடாது பயிற்சி கொள்வதே “சுத்த சன்மார்க்கம்” எனப்படும்.
இது ஓர் புதிய வழி,தனிநெறி.

அன்புடன் ஏபிஜெ அருள்,
கருணை சபை([email protected])

www.atruegod.org

unmai

Channai,Tamilnadu,India