March 29, 2024
tamil katturai APJ arul

மகாத்மா காந்தியின் மறுபக்கம். (நம் பார்வையில் காந்தி மகான்)

மகாத்மா காந்தியின் மறுபக்கம்.
(நம் பார்வையில் காந்தி மகான்)
—. ஏபிஜெ அருள்.
ஆம், தேசம், சுதந்திரம்,எளிமை,போராட்டத்தில் அகிம்சை என்பதில் காந்தி மகான் அவர்களை காணும் உலகத்தார் அவரின் மறுபக்கமாக “சைவ உணவு” கொள்கையில் அவரை காட்டவில்லை.
அதற்கு முன்,
புலால் உண்ணாமைக்கும் இரக்கத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன ? எனப்பார்க்கும் போது,
புலால் உணவு மீது நாட்டம் உள்ளவர்கள் எப்படியோ, அது போல் புலால் உணவு மீது நாட்டம் இல்லாதவர்களும் இருக்கிறார்கள். இவர்களின் பழக்க வழக்க அடிப்படையிலேயே இவர்களின் வழி தோன்றல்கள் அமைவது இயல்பு. புலால் உணவு எங்கள் குலத்திற்கே கிடையாது என்பவர்களை இரக்கம் உள்ளவர்கள் என்பதை விட அவர்கள் புலால் சாப்பிடும் பழக்கம் இல்லாதவர்கள் எனலாம். காரணம், அவர்களின் மற்ற நடவடிக்கையில் இரக்கம் இல்லாமல் இருக்கும். உதாரணத்திற்கு அவர்கள் பட்டு புடவையை தான் விரும்பி அணிவார்கள். கேக் மிக விரும்புவார்கள்.விலங்கு தோலில் ஆன பொருள்களை விரும்பி வாங்குவார்கள். இந்த பழக்கம் சமய மத சந்நியாசிகளிடமும் காணலாம். “இரக்கம் கொள்க” எனும் சத்திய வார்த்தை அவர்களின் நெறியாக காட்டினாலும் அவர்கள் தியானம் செய்வது விலங்குகளின் தோல் மீதே.
தன் வேண்டுதலுக்கு பிற உயிரை நேர்தல் அல்லது தன் உயிர்க்கு பதில் பிற உயிரை காணிக்கை செய்து கொல்லுதல் இவையே இவர்கள் இரக்க கோட்பாடு. புலால் உண்ணாதவர்கள் புலால் உணவு கடையிலும் சைவ உணவு சாப்பிட சம்மதிப்பவர்களும் உண்டு.
ஆனால்
உயிர்இரக்கம் என்பது எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் பாவிப்பது ஆகும். இரக்கம் அன்பு கருணை தயவு இவை பற்றிய உண்மை விளக்கம் தமிழில் மட்டுமே தெளிவாக காண முடியும் அல்லது எவர் ஒருவர் இயற்கையின் பால் அனைத்து மற்றும் எல்லா உயிர்களின் பால் நல்ல விசாரணை செய்கிறார்களோ அவர்களிடத்தில் “உண்மை இரக்கம்” ஏற்படும். சமய மதங்கள் இரக்கத்தை போதித்தாலும் சமயமதத்தவர்கள் எல்லாரிடத்தில் உண்மை இரக்கம் இல்லை. 
உண்மை இரக்கத்தை பெற்ற ஒரே மார்க்கம் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் ஒன்றே. இம் மார்க்கத்தில் இரக்கம் தகுதியாக கட்டளையாக சாதனமாக உள்ளது.
உண்மை இரக்கம் தன் அனுபவத்தில் கண்டு நெறியாக கொண்டவரே நம் மகாத்மா காந்தி அவர்கள். முதலில் அவர் சொன்னது;
எனக்கு தேவையாக உள்ளது சாப்பிடுகிறேன். பின்பு;
இல்லை நான் புலால் உண்ணாமலிருப்பேன் என்றார்கள். இல்லை உன் தேகவலிமைக்கு சாப்பிடுதல் வேண்டும் என சிலர் அவருக்கு அறிவுரை செய்கிறார்கள்.
ஆனால் உணவு பற்றிய உண்மை என்ன? என அக விசாரணயில் செய்தவர் காந்தி அவர்கள். நான் உணவு விசயத்தில் பல பரிசோதனைகளை நடத்தினேன் என்கிறார். அவரின் சத்திய சோதனை புத்தகத்தில் சைவம் குறித்த ஆன்ம சோதனை குறிப்பிட்ட பக்கங்களை எடுத்து உள்ளது. ஆனால் இது போதியளவு வெளிப்படுத்தப்படவில்லை என்பது துரதிஷ்டமே.
இதோ அவரின் வாக்கியங்கள் சில:
1) தாழ்வான உயிரினங்களிலும் மனிதன் உயர்வானவன் என்றால்,தாழ்ந்த உயிரினங்களைக் தின்று மனிதன் உயிர்வாழ்வது என்பது அவ்வுயர்வின் நோக்கம் அல்ல.
2) மனிதன் உண்பது உயிர் வாழ்வதற்கே அன்றி சுக அனுபவத்திற்காக அல்ல என்பது என்னிடம் மாற்றத்தை ஏற்படுத்தியது.
3) ரூசியெல்லாம் எண்ணத்தில் தான் இருக்கிறதே அன்றி நாவில் இல்லை.
4) மாமிசம் என்பதில் முட்டையும் சேர்ந்ததே என்ற உண்மை கருத்தை கண்டவுடன் அதை சாப்பிடுவதை விட்டு விட்டேன்.
5) புலால் உணவு ரூசியைவிட, சைவ விரதம் அனுசரித்து வருகிறேன் என்ற உள்ளத்தின் ரூசி தெளிவாக அதிக இன்பத்தையும் சுகத்தையும் தருகிறது.
6) என்னுடைய அனுபவ முதிர்ச்சியோ நான் அதிகம் படித்து விட்டேன் என்ற அகம்பாவமோ எனக்கு போதித்திருக்கக் கூடிய வியாக்கியானம் உண்மையாகாது.
7) பிரதிக்கைஞகள் என்னதான் தெளிவானதாக இருந்தாலும் சரி, சுயநலவாதிகள் தங்களுடைய காரியத்திற்கு ஏற்ற வகையில் அதைப்புரட்டித் திரித்துக் கூறிவிடுகிறார்கள். இவர்கள் உலகத்தையும் கடவுளையும் கூட ஏமாற்றப் பார்க்கிறார்கள்.
8) எவன் ஒருவன் சத்தியத்தை நாடுகிறானோ அவன் ஒருவனே சரியான விதியை பின்பற்றுகிறான்.
9) சைவ உணவு என்ற கொள்கையே சிறந்தது. இது உயர்வான நோக்கம்.
மகாத்மா வின் பிறந்த நாளில் மகத்தான உண்மை ஒன்றை (சைவ உணவு) அறிந்திடுவோம். 

(அன்புடன் ஏபிஜெ அருள்,கருணை சபை. )
— at Uthangudi.

unmai

Channai,Tamilnadu,India