April 16, 2024
tamil katturai APJ arul

ஓர் வேண்டுகோள் : நீங்கள் எந்த (சமய) பிரிவை சேர்ந்தவர் எனக்கேட்டால், “சுத்த சன்மார்க்கம்” எனச் சொல்லுங்கள்

தோழர்களே!,
ஓர் வேண்டுகோள் :
நீங்கள் எந்த (சமய) பிரிவை சேர்ந்தவர் எனக்கேட்டால், “சுத்த சன்மார்க்கம்” எனச் சொல்லுங்கள். 
சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன? என்றால் இதோ அதன் விபரங்கள்:- ஏபிஜெ அருள்.

# உலகில் ஒரு புதிய தனி மார்க்கம் கடந்த 19 ம் நூற்றாண்டில் தோன்றியது.

# இந்த புதிய மார்க்கத்தை தோற்றிவித்தவர் : “திருவருட்பிரகாச வள்ளலார்.”

# இம்மார்க்கத்தின் பெயர்:

“சுத்த சன்மார்க்கம்” – பூர்வத்தில் நின்ற சமயமத மார்க்கங்களை மறுக்கும் மார்க்கம்.

# இம்மார்க்கத்தின் கடவுள்:

இம்மார்க்கத்தில் வெளிப்படும் கடவுள் சமயமத புராணங்களில் சொல்லப்படும் கர்த்தர்,கடவுளர் இல்லை. இவர்கள் எல்லோராலும் எதிர்பார்த்து கொண்டியிருக்கும் உண்மை கடவுள். “சுத்த சிவம்” சிவம் பரமசிவம் இரண்டையும் மறுத்தது.

# மார்க்கத்தின் கொடி :

வெண்மை வர்ணம் மற்றும் மஞ்சள் வர்ணம்.

# மார்க்கத்தின் சங்கம்:

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், வடலூர்
மார்க்கத்தின் சபை:
சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை, வடலூர்
மார்க்கத்தின் சாலை:
சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமசாலை, வடலூர்

# மார்க்கத்தின் மகாமந்திரம்:

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.

# மார்க்கத்தின் மரபுகள்:

நான்கு.அவையாவன;
1.சாகாத கல்வியே கல்வி.
2.ஒன்றே சிவம் தான் என அறிந்த அறிவே தகும் அறிவு.
3.மலம் ஜந்தும் வென்ற வல்லபமே தனித்த பூரண வல்லபம்.
4. வேகாத காலாதி கண்டு எப்பொருளும் விளையவிளைவித்த தொழிலே மெய்த் தொழில் ஆகும்.

# மார்க்கத்தின் எக்காலத்தும் முக்கியத் தடைகள்:

சாதி சமயம் மத மார்க்கங்கள்.

# மார்க்கத்தின் சாதனம்:

கருணை ஒன்றே.

# மார்க்கத்தின் வழிபாடு:

ஓர் உண்மை கடவுள் உண்டென்றும் உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிபாடு செய்தல்.

# மார்க்கத்தாரின் தகுதிகள்:

சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களும், காமகுரோதம் முதலியவை நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக் கொள்பவரும், கொலை புலை தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள் தான் இம்மார்க்கத்திற்கு உரியவர்கள்.

# சுத்த சன்மார்க்கத்தின் லட்சியம்:

ஆன்மநேய ஒருமைப் பாட்டுரிமை.

# சுத்தசன்மார்க்கத்தார் கடமை:

உண்மை கடவுளை தொழுவதே.

# கடவுள் அருளை வள்ளலார் எங்ஙனம் பெற்றார்?

இரக்கம் விட்டு பிடித்தேன் என்கிறார்.

# சுத்த சன்மார்க்கத்தார்கள் தங்களிடமிருந்து ஒழித்துக் கொள்ள வேண்டியது:

சாதி சமய கட்டுப்பாட்டு ஆசாரங்கள்,அவற்றின் ஆசாரங்கள் மற்றும் உலகாசாரங்கள்.

# சுத்த சன்மார்க்கத்தின் ஆசாரம்:

பொது நோக்கம்.

# சுத்த சன்மார்க்கத்தில் பயிற்சி:

விசாரத்தில் இருப்பது.
உள்ளழுந்தி,சிந்தித்து,சிந்தித்தலை விசாரித்தல்.

# சுத்த சன்மார்க்கம் என்பது;

உண்மை அறிதல்.
அக அனுபவமே உண்மை.

# சுத்த சன்மார்க்கத்தின் முடிபு:

சாகாகல்வி

# சுத்த சன்மார்க்கத்தில் கடவுள் அருள் என்பது:

மரணமில்லா பெருவாழ்வு.

# சுத்த சன்மார்க்க உண்மை கடவுளை உலகிற்கு வெளிப்படுத்திய நாள்:
12-04-1871.

# சுத்த சன்மார்க்கத்தில் வள்ளலார் பெற்ற தேகம் எப்படி பட்டது?

தனி வடிவமாகிய ஒளி தேகம்.
# வள்ளலார் உரைத்த உண்மை:
தான் பெற்ற மரணமில்லா பெருவாழ்வை எல்லோராலும் பெறமுடியும். இதற்கு ஆசாரங்களை ஒழித்து உண்மை கடவுள் நிலை காண வேண்டும்.
(நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து கண்ணீரால் உடல் நனைந்து இறைநிலையை உள்ளத்தில் காணுதல்.)
# முழுமையாக அறிய திருஅகவல், விண்ணப்பங்கள், பேருபதேசம், சுத்த சன்மார்க்கப் பாடல்கள் மூலம் அறிக.

முற்றும்.

அன்பர்களே! நான் கண்ட சுத்த சன்மார்க்கம் எல்லா சமய மத மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறியாக விளங்கும் என்கிறார் வள்ளலார். 
இந்த இனிய நாளில் நமக்கு தெரிய வந்த இந்த புதிய தனி பொது நெறியை நம் சுற்றதார்களுக்கு தெரிவிப்பதே நம் லட்சியம் ஆகும். 
அன்புடன்:

ஏபிஜெ அருள், மதுரை,கருணை சபை.

அன்பர்களே! ஓர் வேண்டுகோள் :
நீங்கள் எந்த (சமய) பிரிவை சேர்ந்தவர் எனக்கேட்டால், “சுத்த சன்மார்க்கம்” எனச் சொல்லுங்கள். சட்ட ரீதியாக இதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.நல்ல செய்தி வருவது சத்தியம். வள்ளலாரின் உண்மை பொது நெறி சுத்த சன்மார்க்கம் வெளிப்படும் தருணம் இதுவே.

நன்றி:

apjarul.

unmai

Channai,Tamilnadu,India