March 29, 2024
tamil katturai APJ arul

கடவுளை காண முடியுமா?

 

கடவுளை காண முடியுமா? — ஏபிஜெ அருள்.

கடவுள் நம்பிக்கை கொண்டவர்களிடம் தான் கேட்கிறேன். கடவுளை காண முடியுமா? வணங்கி வரும் கடவுளை நான் கண்டேன் என்று உண்மையாக சொல்ல முடியுமா? 
ஆம் அன்பர்களே!
இது நமக்கு (கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்) மிக முக்கிய கேள்வி ஆகும். ஒருவர் கடவுளை கண்டேன் என்றால் அவர் கடவுள் அருளை பெற்றார் என்பதும் உண்மை. இனி அவருக்கு ஏது அவத்தை. கடவுள் அருளால் அனைத்தும் பெற்றவராகி விடுகிறார். இன்பம் மட்டுமே.துன்பம் ஏது?
நிற்க!
கடவுள் இவரே என நம்பிக்கை கொண்டு நாம் தினமும் வணங்கி வருகிறோம். ஆனால் இறைவா உன் நிலை காண வேண்டும் என்று விரும்பியவர்கள் எத்தனை பேர்? இதற்கான வழியை நாம் தழுவி இருக்கும் சமய மார்க்கங்களில் சொல்லப்பட்டுள்ளதா? இவரே கடவுள் நம்பிக்கை வை. வணங்கு.பயப்படு. வேண்டுதலை வை. சடங்குகள் செய். நல்லது நடக்கும். நாளைக்கும் வா. இதையே செய். புண்ணியம். இறப்புக்கு பின் சொர்க்கம். 
இதுவே, நமக்கும் கடவுளுக்கும் தினமும் உள்ளது தொடர்பு. இது உண்மை தானே. இது நம்பிக்கை. மனத்தளவு திருப்தி. மன வேதனை போக்கி மன தைரியம் கொடுக்கிறது. கடவுளுக்கு பயந்து நல்லதை செய்ய வைக்கிறது. இதை தவிர….??? 
இங்கு நாம் வணங்கிய கடவுளின் நிலை என்ன?

நம் அறிவில் தெரிந்த உண்மை என்ன? 
நம் நிலை என்ன?

கடவுளின் உண்மை குறித்து செய்த நல்ல விசாரணை என்ன? 
இந்த நன்முயற்சிக்கு நாம் இருக்கும் சமயம் அனுமதிக்கிறதா? 
நம் வழிபடும் தலங்களில் இதற்கான இடம் அனுமதி? 
இல்லையே!
அன்பர்களே!
எங்கும் பரிபூரணமாக நிறைந்துள்ள கடவுளின் உண்மையை காண முயற்சிப்பது தானே அறிவாகும். தன்னை காண முயலும் பக்தனை தானே கடவுள் விரும்புவார்.
எங்கும் நிறைந்திருக்கும் மெய் பொருள், மிகப் பெரியவராகிய இறைவன், சொல்லால் சுட்டி காட்ட முடியாத, கண்களால் காண முடியாத அற்பதரே ஆண்டவர். இங்ஙனம் விளங்கும் கடவுளை காண முடியுமா ?
முடியும் என்கிறது வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம். அது,
கடவுளே தன்னை காட்டினால் அன்றி நாம் பார்க்கவே முடியாது.
“கடவுளே வந்து, நம் ஒவ்வொரு உள்ள உணர்வில் தன்னை, தன் உண்மையை விரித்து காட்டுவார்” என்கிறார் வள்ளலார்.
நிற்க! ஆனால்…
காண விரும்பும் கடவுள் இவரே என நாம் முன்பே தீர்மானிக்க முடியுமா?
அதனால்,
இதோ வள்ளலார் நம்மை கீழ் வருமாறு கருத்தில் கொள்ள சொல்கிறார்.
” ஓர் உண்மை கடவுள் உண்டென்றும் உண்மை அன்பால் கருத்தில் கொண்டு வழிபாடு செய்தல் வேண்டும்”என்கிறார்.
அடுத்து,
நாம் கடவுளை காண உண்மையாய் விரும்ப வேண்டும் என்கிறார்.
கடவுள் வேறு புறம் வேறல்ல. நமக்கு இந்த அண்ட திறங்களையும், என் நிலையும், மற்ற எல்லா உண்மைகளையும் தெரிவிக்க வேண்டும் என இறைவனிடத்தில் இடைவிடாது கண்ணீர் விட்டு வேண்ட சொல்கிறது சுத்த சன்மார்க்கம்.
இதற்கு ஒழுக்கம் நிரம்பியவர்களாக, எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் உடையவர்களாக, நல்ல விசாரம் தவிர வேறு எந்த ஒரு ஆசாரத்திலும் பற்று வையாதவர்களாக நாம் இருக்க வேண்டும் என்கிறார் வள்ளலார்.
என் மார்க்கம் அறிவு மார்க்கம்.
என் மார்க்கம் உண்மையறியும் மார்க்கம்.
உண்மை கடவுளை காணும் வழியே சுத்த சன்மார்க்கம்.
உண்மை கடவுளை கண்டு பேரின்ப வாழ்வில் வாழ்வதே சுத்த சன்மார்க்க கொள்கை. 
சார்வீர் இனி சுத்த சன்மார்க்கத்தை.


நன்றி ஏபிஜெ அருள்.

unmai

Channai,Tamilnadu,India