March 29, 2024
tamil katturai APJ arul

எந்த நெறியை பிடிக்கக் கூடாது? எந்த நெறியை பிடிக்க வேண்டும்?

 

எந்த நெறியை பிடிக்கக் கூடாது?
எந்த நெறியை பிடிக்க வேண்டும்?
— ஏபிஜெ அருள்.
சுத்த சன்மார்க்க நெறியில் ஒரு தனித்தன்மையும், உண்மைக்குறிப்பையும், பொது உணர்வையும், 
நாம் ஊன்றி தெரிந்துக் கொண்டாலன்றி வள்ளலாரின் சன்மார்க்கக் கொள்கையை அறிந்துக் கொள்ள முடியாது.
இதோ வள்ளலாரின் முடிபான திருவருட்பாவை வாசித்து வள்ளலார் சொல்ல வந்த உண்மையை உணர்ந்து கொள்ளவோம். நன்றி.

ஆறாம் திருமுறை / தோழிக் குரிமை கிளத்தல்/

  பரமதனோ டுலகுயிர்கள் கற்பனையே எல்லாம் 
          பகர்சிவமே எனஉணர்ந்தோம் ஆதலினால் நாமே 
     பிரமம்எனப் பிறர்க்குரைத்துப் பொங்கிவழிந் தாங்கே 
          பேசுகின்ற பெரியவர்தம் பெரியமதம் பிடியேல் 
     உரமிகுபேர் உலகுயிர்கள் பரமிவைகா ரியத்தால் 
          உள்ளனவே காரணத்தால் உள்ளனஇல் லனவே 
     தரமிகுபேர் அருள்ஒளியால் சிவமயமே எல்லாம் 
          தாம்எனவே உணர்வதுசன் மார்க்கநெறி பிடியே. 

—— வள்ளலார்.

unmai

Channai,Tamilnadu,India