April 19, 2024
Uncategorized

வள்ளலார் வருவிக்க உற்றவரா? தெய்வமா? அல்லது நம்மை போல் மனிதரா?

வள்ளலார் வருவிக்க உற்றவரா? தெய்வமா? அல்லது நம்மை போல் மனிதரா?.— apjarul.
அன்பரின் கேள்வி:-
அன்பர் சரத் கேட்ட கேள்வி; வள்ளலார் ஆண்டவரால் வருவிக்கவுற்றவர். அதனால் அவருக்கே சாகாநிலை சாத்தியம். இதற்கு
விளக்கம் தருக என்றார்.??
விசாரம் செய்வோம் வள்ளலார் துணையுடன்..::: (ஏபிஜெ):

பலர் இங்ஙனமாகவே கேட்கிறார்கள். வள்ளலார் தெய்வமா? ஆண்டவரால் வருவிக்க உற்றவரா? அல்லது நம்மை போல் மனிதரா?.
(எங்கும் பரிபூரணமாக விளங்கும் ஒரே மெய் பொருளே உள்ளது என்று கருத்தில் கொண்டவர்களுக்கு இந்த விளக்கம் தேவையில்லை). வள்ளலார்
பிறவிகளால் ஆன்ம பக்குவமும்,பிறந்த குடும்பத்தால் சைவ சமயம் தழுவலும் கொண்டவர் வள்ளலார். ஒரு பதார்த்தின் சுவை அறியாதவர், தன்னை தெய்வமாக பார்க்கிறார் என்கிறார் வள்ளலார். பின் அவர் ஆண்டவரால் வருவிக்கவுற்றவரா? என்றால் ஆம்.
தான் ஆண்டவரால் வருவிக்கவுற்றனன் என்று வள்ளலாரே தெரிவிக்கிறார். ஆனால் அதன் அர்த்தம் சரியாக புரிதல் வேண்டும்.
காண்போம் இங்கு.
ஆரம்பத்தில் அவரிடமிருந்த அளவிலா கடவுள் பக்தி அவர் குடும்பம் சார்ந்த சைவ சமயத்தில் மிக்கப்பற்றுக் கொண்டவராக்கியது.
சைவ சமயம் மட்டுமில்லாமல் எல்லா சமயமத மார்க்கங்களின் நெறிகளைத் தெரிந்து, அதனதன் உண்மையையும் கண்டார்கள். ஆனால் அவரிடமிருந்த தேடலுக்கு இவை எவையும் விடை தரவில்லை. அதனால் தான், அவர் சைவ சமயத்தில் பற்று இருக்கும் காலத்தில் கூட அதன் ஆசாரங்கள் எதையும் அவர் பின்பற்றவில்லை. வெண்ணிற ஆடையை தான் உடுத்திருந்தார்கள். எந்தொரு மாலையுமோ அணிந்திருக்கவில்லை,
பூசைகள் செய்யவில்லை.அவர் தேடல் தொடர்ந்தது. தேடல் எதை குறித்து?இயற்கையின் உண்மமை குறித்து மற்றும் மரணம் என்ற அவத்தை நீக்கி இன்பமாக வாழ வழியை தேடி தேடல். அவரின் தேடலுக்கு சுதந்திரம் அவர் பற்றுக்கொண்டியிருந்த சமயக் கொள்கை இடம் தரவில்லை. தான் சுதந்திரமாக தேடலை தொடர, தான் சார்ந்த சமயத்தை கைவிட்டு விட்டார்கள். வள்ளலாரின் தேடல் போல், பல ஞானிகள், தலைவர்கள் தேடினாலும் அவர்கள் தங்களின் சாதி சமய கட்டுப்பாட்டு ஆசாரங்களை மீற முடியவில்லை. கட்டுப்பட்டார்கள். வள்ளலாரை போல் யாரும்
முன் வரவில்லை. சமயப்பற்றை விட்டப்பிறகு வள்ளலாரின் விசாரணை சுதந்திரமாக தொடர்ந்தது. இடைவிடாத விசாரம் கண்ணீர் வழிபாடு, இதன் பயன், சத்திய அறிவை பெற்றார்கள். எங்கும் நீக்கமற நிறைந்து விளங்கும் ஓன்றெனும் ஓன்றாகி அருட்பெருஞ்ஜோதி தரிசனத்தை உள்ளே பெற்று உண்மை கடவுளின் நிலை கண்டார்கள். முழு உண்மை வெளிப்பட்டது. இந்த முயற்சி வள்ளலாரின் அறிவால் (ஆசையால்) ஏற்பட்ட ஒன்று. கடவுள் அருளால் சாகா கல்வி கற்றார்.மரணமில்லா பெருவாழ்வு பெற்றார்கள்.

உண்மை கடவுளை கண்ட வள்ளலார், ஆண்டவரிடம் ஒன்றை வேண்டினார். அஃது;
‘என்னைப்போல் எல்லோரும் பேரின்ப பெருவாழ்வு பெற வேண்டும்‘ .

வள்ளலாரின் வேண்டுதலில் பொது நோக்கமும் உயிர்களிடத்தில் அவர் கொண்ட உண்மை அன்பும் வெளிப்பட்டது. தன் கருணையை போல் வள்ளலார் பெற்றிருப்பதை கடவுள் கண்டார். இதுவே பரிபூரணம். அதனால், கடவுள் தன் நிலையில் அவரை வைத்து எல்லாமே அருளினார். உண்மை இன்பம் பெற்றாலும் தன் வேண்டுதலை தனி வெளியில் உள்ள இறைவனிடம் மீண்டும் வைத்தார்; என் போல் இவ்வுலகத்தார்கள் இன்பம் பெறுதல் வேண்டும் என்றார்.

உன் ஆசை நிறைவேற்ற நீயே இருப்பாய்.நீயே செல்வாய். இந்த வரத்தை அதாவது, தான் வந்த வழியை உள்ளது உள்ளபடியாக உலகத்தார்களிடம் உரைக்க, ஆண்டவரிடத்தில் அனுமதி பெற்று, தனி வெளியிலிருந்து மீண்டும் இங்கு நம்மிடம் வந்ததையே “”வருவிக்கவுற்றது”” ஆகும்.
2 1/2 வருடகாலம் அவர் சென்ற வழி (மார்க்கம்) குறித்து நம்மிடமிருந்து சொல்லிவந்தார்கள்.
ஆனால் நமக்கு ….??
ஆம், அன்று தெரிந்து கொள்வாரில்லை.
அதனால் 30/1/17 , அருளால் தான் பெற்றிருந்த சுத்த தேகத்தில் மீண்டும் தனி வெளியில் வெளிப்பட்டார்கள். அன்பர்களே!
எவர் ஒருவர்;
‘அய்யா நீங்கள் சொன்ன உண்மையை தெரிந்து கொண்டேன். உங்கள் துணையால் அறிய ஆசை எனச் சொல்வேர்களானால், வள்ளலார் அய்யா நேரில் வந்து நம் பயிற்சிக்கு உதவிடுவார்.
இது சத்தியம். இதுவே உண்மை . நம்புவோம். அக்டோபர் 5 வள்ளலார் பிறந்த நாள். நல்லநாளில்
நல்ல விசாரணை தொடரட்டும்.
ஊதூது சங்கே…

—அன்புடன் ஏபிஜெ அருள்.மதுரை.

unmai

Channai,Tamilnadu,India