March 28, 2024
Uncategorized

வள்ளலாரின் சுத்தசன்மார்க்கத்திற்கு முன்பும் பின்பும்

வள்ளலாரின் சுத்தசன்மார்க்கத்திற்கு முன்பும் பின்பும். — ஏபிஜெ அருள்.

ஆம். உலகில் காணும் சமய மத மார்க்கங்கள் அனைத்திலுமே சொல்லப்பட்ட நெறியின் சரத்தை ஒருவாறு என்னவென்று பார்த்தால் ;
” மற்றவர்களுக்கு துன்பம் கொடுக்காமல் இருப்பது. மேலும் நமக்கு எவரேனும் துன்பம் கொடுத்தாலும் மன்னித்தோ அல்லது பொறுத்துக் கொள்வது”.
இதுவே இதுவரை வெளிப்பட்டுள்ளதில் நல்ல மேன்மையானது.
இதுவே சமய மதத்தின் படி ஒருமையாகும்.
இதை விட பெரிய விசயம் என்ன இருக்கு?
ஆனால் , இதை விட மேன்மையானதையே வள்ளலார் தன் மார்க்கத்தில் வெளிப்படுத்தி உள்ளார்கள்.அது;
“” உண்மையறிதல்”‘ என் மார்க்கம் உண்மையறியும் அறிவு மார்க்கம் என்கிறார் வள்ளலார்.
இது சரின்னு படுபவர்களையே, உண்மையறிய ஆசை படுபவர்களையே வாருங்கள் என அழைக்கிறார். உண்மையறிய பற்றிய பற்றை ஆசாரத்தை விட்டு கடவுளையே தொழுதல்.
இதுவே வள்ளலார் சொல்லும் ஒருமையாகும். படிக்க பக்கம் 414 உ.ந.ப.

அன்புடன் ஏபிஜெ அருள்.

unmai

Channai,Tamilnadu,India