April 19, 2024
Uncategorized

மதசார்பின்மைக்கான முதல் குரல் கடவுள் நம்பிக்கை கொண்ட வள்ளலாரிடமிருந்தே வந்தது

நீதிபதி திரு அரிபரந்தாமன் தனது அரசியலமைப்புச் சட்டமும் மதசார்பின்மையும் புத்தகத்தில்….
“… மதசார்பின்மை என்பது மதத்திற்கு எதிரானதோ அல்லது கடவுள் மறுப்பு வாதமோ அல்ல என்பதை முதலில் நான் தெளிவாகக் குறிப்பிட விரும்புகிறேன்.
மதசார்பின்மைக்கான முதல் குரல் கடவுள் நம்பிக்கை கொண்ட வள்ளலாரிடமிருந்தே வந்தது:
தமிழ்நாட்டிலிருந்து எழுந்த மதச்சார்பின்மைக்கான குரல் கடவுள் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்த ஒருவரிடமிருந்தே வந்தது.
‘பெரியாரின்’ கடவுள் பற்றிய கருத்துக்கள் உங்கள் அனைவருக்குமே நன்றாகத் தெரிந்து தான் இருக்கும். அத்தகைய ஒருவர் தான் மதசார்பின்மை நெறியாளர் என்று அவரைப் போற்றியதோடு, அவர் எழுதிய புரட்சிகரமான பாடல்களை எல்லாம், தான் நடத்தி வந்த குடியரசு நாளிதழில் பலமுறை வெளியிட்டு வந்ததோடு ,அந்த பாடல்களை இலவசமாக மக்களிடையே விநியோகித்தும் வந்தார்.அவர்தான் “வள்ளலார்” என்று பரவலாக அறியப்பட்ட ராமலிங்க அடிகளார் ஆவார்.
‘மகாகவி பாரதியார்’
கூட அவரை ‘மகத்தான சமூக சீர்த்திருத்தவாதி’ என்று போற்றிப் புகழ்ந்துரைத்தார்.
ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை கொண்டியிருந்த வள்ளலார் அனைத்து மதங்களையும், சாதிகளையும், நால் வருணத்தையும், சடங்குகளையும், வேதங்களையும், புராணங்களையும் குப்பைகள் என்று வர்ணித்ததோடு அவற்றை நிலத்தில் ஆழப்புதைத்து உரமாகப் பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.
“இருட் சாதித் தத்துவ சாத்திரக் குப்பை
இருவாய் புன்செயில் எருவாக்கிப் போட்டு…”
அந்த நேரத்தில் தமிழகம் முழுவதும் இயங்கி கொண்டிருந்த மடங்கள், கோயில்கள், ஆகியவற்றிற்கு நேர் விரோதமாக ” சமரச சுத்த சன்மார்க்க சங்கம் என்ற அமைப்பை அவர் உருவாக்கியதோடு, துறவிகளின் காவி உடைக்கு பதிலாக வெள்ளை உடையை அணிந்து தன் உடலை மறைத்துக் கொண்டார்….நீதிபதி அரிபரந்தாமன்
*(apj)*

unmai

Channai,Tamilnadu,India