April 25, 2024
tamil katturai APJ arul

உள்ளவாறு உரைப்போம் — ஏபிஜெ அருள்.

உள்ளவாறு உரைப்போம் — ஏபிஜெ அருள்.

கருணை இரக்கம் அன்பு ஒழுக்கம் இவைகள் அனைத்தும் எல்லா மகான்கள் கர்த்தார் தேவர்கள் ஞானிகளாலும் சிறப்பாக சொல்லப்பட்டு, அவர்களால் உருவாக்கப்பட்ட சமய மத மார்க்கங்களில் இயல்புகளாக வெளிப்பட்டுள்ளது. அவை சொல்லப்படும் விதம் அழுத்தம் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தில் சமய மதங்களில் வேறுபடுகின்றன. ஆக,
நல்லவிசயங்களை தான் நல்கின்றன சமய மத மார்க்கங்கள். இந்நிலையில் எதற்கு நமது சமயம் மத மார்க்கங்களை கை விட வேண்டும்?. 
நமது தாய் தந்தை இருக்கின்ற சமய மதத்தை தான் பின்பற்றி வருகிறோம் என்பதே 99% ஆகும். மிகச் சிலரே வாழ்வின் சூழ்நிலையில் மற்றும் ஏதோ எதிர்பார்ப்பில் சமய மதத்தை மாற்றிக் கொள்கிறார்கள். (மிக சிலராகிய நாத்திகவாதிகள் பற்றி இங்கு விசாரமில்லை.) ஆக,
நாம் நம்பிக்கை, பற்றுக் கொண்டியிருக்கும் சமய மதம் மார்க்கங்கள் , 
“பிறருக்கு துன்பம் தராமலும் அவர்கள் செய்யினும் சகித்து அடங்கி இருக்கும் அறிவாகிய கருணையை, அன்பை, இரக்கத்தை, மற்றும் ஒழுக்கத்தை நல்குகின்றன ” நாம் அதில் பயின்றுவருகிறோம்.
நிற்க! வள்ளலார் கண்ட உண்மை மேற்படியாக சமயமதங்களில் வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளை கடந்து மேன்மையான உயர்வான விசயமாகும். 
அது; நம் நிலை எப்படி பட்டது? நம்மை அனுஷ்டிக்கும் கடவுள் நிலை எப்படி பட்டது? என்று விசாரித்து உண்மையை அவரவர் உள்ளத்தில் உணருதலும் உண்மை கடவுளின் அருளால் மரணத்தை தவிர்க்கும் வழியே வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம்.
இரக்கம் அன்பு ஒழுக்கம் ஏற்கனவே பெற்று உரியவர்களாக உள்ளவர்கள் உண்மை அறிவுடன் உண்மை கடவுளையும் உண்மை இன்பத்தையும் பெறும் வழியாக உள்ளது. எனவே சுத்தசன்மார்க்கம் என்றால் உண்மையறிதலும் மரணத்தை தவிர்த்தலும்.
ஆக, மரணத்தை தவிர்த்துக் கொள்ள ஆசையும், அந்த ஆசையை நிறைவேற்ற அருள் வேண்டி உண்மை கடவுளின் சொரூபத்தை உள்ளத்தில் உணர விசாரமும் மட்டுமே சுத்த சன்மார்க்கம் ஆகும். இதோ வள்ளலாரின் சத்திய வாக்கியம் அப்படியே.
* என் மார்க்கம் அறிவு மார்க்கம்.
* என் மார்க்கத்தில் உண்மை அறிதலே.
* சாகா கல்வியை தவிர 
வேறு ஒன்றுமில்லை.
இங்ஙனமாக விளங்கும் இந்த நெறியை, அதன் அடிப்படை தகுதி ஒழுக்கம், அன்பு, ஜீவகாரூண்யத்தில் மட்டுமே வெளிப்படுத்துதலின் விளைவால், அதன் உயர்வான சிறப்பான உண்மையான பொதுவாக விளங்கும் நெறி விரைந்து வெளிப்படுவது தடைப்படுகிறது.
இந்த சுத்த சன்மார்க்கம் எல்லாருக்கும் பொதுவாக உள்ளது. 
ஆனால் அதே நேரத்தில் மேற்படியான ஆசை (சாகாமல் இருக்க), அறிவு (கடவுளின் உண்மை காண விசாரம்) உள்ளவர்கள் மட்டுமே சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்கள்.

பணிவுடன்

ஏபிஜெ அருள்.

 

unmai

Channai,Tamilnadu,India