April 19, 2024
tamil katturai APJ arul

நடந்ததை மறப்போம். இனி உண்மை அறிவோம்- ஏபிஜெ அருள்

நடந்ததை மறப்போம். இனி உண்மை அறிவோம். — ஏபிஜெ அருள்.

கால்பாதங்கள் தொட்டு வணங்கி வேண்டுவது “வள்ளலாரின் தனிநெறியை” மறுப்பதற்கோ, சாராமல் இருப்பதற்கோ எவருக்கும் உரிமையுண்டு. ஆனால் அத்தனிநெறியை திரித்துக் கூறுவது மிகப்பெரிய பாவம் மற்றும் சட்டப்படி குற்றமும் ஆகும்.

இறவாத வரம் பெற்ற சுத்த ஞானி “வள்ளலாரின்” முடிபான மார்க்கத்தின் நெறியில் அவரை வெளிப்படுத்தல் வேண்டும். உலகில் எல்லா அறிஞர்கள், விஞ்ஞானிகள், தத்துவ மேதைகள், அவரவர்களின் முடிவான , இறுதியாக சொல்லிய கருத்துக்களை, அறிவிப்புகளை, போதனைகளை மட்டுமே எடுத்துக் கொண்டிருக்கும் போது வள்ளலாரின் முடிவான நெறியை, இறுதியாகச் சொல்லிய உண்மையை உள்ளபடியே வெளிப்படுத்தாமலும் அல்லது மறைத்து அவரால் கைவிடப்பட்ட முந்தய சமய நெறியிலேயே காட்டுவதும், புதிய தனி நெறியை திரித்துக் கூறுவதும் அறியாமையிலா? அல்லது அறிந்தும் செய்யும் சூதுவினாலா? இதற்கு பதில் உங்களின் ஒழுக்கத்திற்கும் அறிவிற்கும் விட்டுவிடுகிறேன்.

இது வரை நடந்தது நடந்தவையாக இருக்கட்டும் இனி உண்மை தெரிந்துக் கொள்வதிலும் அதை உரைத்தலே நம் தகுதியாக்கி வள்ளலார் கண்ட சுத்த சன்மார்க்க உண்மையை கீழ்வருமாறு தெரிந்துக் கொண்டு நமக்கும் நம் சுற்றத்தாருக்கும் உலகத்துக்கும் உள்ளது உள்ளபடியாக வெளிப்படுத்துவோம்.

எவரேனும் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத்தை ஒரு வார்த்தையில் சொல்லுங்க என்றால் உடனே சொல்லுங்க; 
“சாகா கல்வி” என்று.

இரண்டு வார்தையில் சொல்லுங்க என்றால், சொல்லுங்க;
“சாகா கல்வி” & “உண்மை கடவுள்”

மூன்று வார்தையில் சொல்லுங்க என்றால் சொல்லுங்க;
1. “சாகா கல்வி” 
2. “உண்மை கடவுள்” &
3.”சுத்தசன்மார்க்க ஒழுக்கம்”

நான்கு வார்தையில் சொல்லுங்க என்றால், சொல்லுங்க;
1. “சாகா கல்வி” 
2. “உண்மை கடவுள்” &
3.”சுத்தசன்மார்க்க ஒழுக்கம்”
4. “நன்முயற்சி”

ஐந்து வார்தையில் சொல்லுங்க என்றால் சொல்லுங்க;
1. “சாகா கல்வி” 
2. “உண்மை கடவுள்” &
3.”சுத்தசன்மார்க்க ஒழுக்கம்”
4. “நன்முயற்சி”
5. “ஆசை”
(மேற்படி உண்மை குறித்த விளக்கம் காண வள்ளலாரின் உரைநடையிலும், web:: atruegod.org லும்,‌
திருச்சியில் அக்டோபர் 5 ல் திரு சண்முகம் cell +919443422906 அய்யா நடத்தும் நம்மவர் கூட்டத்தில் திருமிகு ஏபிஜெ அருள் அறிமுகப்படுத்தும் “சுத்த மெய்ஞான யோகப்பயிற்சி” நிகழ்ச்சி யில் தெரிந்து கொள்ளலாம்)
மொத்தத்தில் 
1. “சாகா கல்வி” 
2. “உண்மை கடவுள்” &
3.”சுத்தசன்மார்க்க ஒழுக்கம்”
4. “நன்முயற்சி”
5. “ஆசை”
மேற்படி ஐந்தின் மூலம் வள்ளலார் பெற்ற வலம்பெறும் இறவாத வாழ்வை பெறலாம். இதுவரை காலத்தை வீணாக்கி விட்டோம். 
இதோ அக்டோபர் ஐந்து வள்ளலாரின் பிறந்த நாளை கூட்டம்,மாநாடு,என பல விழாவை பல ஊர்களில் நாம் கொண்டாட உள்ளோம். இந்நிலையில் ஓர் உறுதிமொழி எடுப்போம். அஃது;
வள்ளலார் அய்யாவே,
நீங்கள் சொல்லிய உண்மையை இன்று தெரிந்துக் கொண்டாம். இனி சாதி சமயமதங்களில் லட்சியம் வையாது சுத்த சன்மார்க்க நெறியிலேயே பயின்று உண்மை கடவுள் நிலை கண்டு அக்கடவுளின் அருளால் சாகாகல்வி கற்று பேரின்ப பெருவாழ்வில் வாழ நன்முயற்சி செய்வோம்.
இது சத்தியம்.
இது சத்தியம்.
இது சத்தியம்.
அன்பர்களே!
ஏபிஜெ அருளாகிய நான் இன்று எனது சத்தியத்தை இங்கு பதிவு செய்கிறேன்.
நீங்களும் சிந்தித்து உங்கள் அறிவில் வள்ளலார் சொல்லிய சாகா கல்வியில் ஆசை உண்டெனில் இங்கு உங்கள் சத்தியத்தை பெயர், ஊர், செல் நம்பரை,கொடுத்து “சாகா கல்வி நல்ல விசாரணை மையத்தில்” பதிவு செய்யுங்கள். இனி வள்ளலாரின் கட்டளைபடி ஒத்த அறிவு, ஒழுக்கமுடைய நம்மவர்களுடன் நல்ல விசாரம் தொடரும்.
“எல்லாம் செயல் கூடும்
என் ஆணை அம்பலத்தே.”
—- ஏபிஜெ அருள் 8778874134
[email protected]

unmai

Channai,Tamilnadu,India