March 19, 2024
tamil katturai APJ arul

வள்ளலார் சைவ சமய ஞானியா? அல்லது நாத்திகவாதியா?

வள்ளலார் சைவ சமய ஞானியா? அல்லது நாத்திகவாதியா?—-APJ. ARUL.

Saturday, July 17, 2010 at 07:14 am 1214 hits Karunai Sabai-Salai Trust.

 

ஆரம்ப காலங்களில் வள்ளலார் சமய கடவுளர்களை துதித்து பாடிய சமயசோத்திர

பாடல்கள் அடிப்படையில் அவரை

அக்குறிப்பிட்ட “சமயம் சார்ந்த ஆன்மீக வாதியாக” வைத்துபார்க்கின்றனர் பலர்.

வள்ளலார் தனது முடிபான நெறியால் உலகில் காணும் சமயம்மதமார்ககங்களில்

லட்சியம் வையாதீர்கள் என்று கூறி சாதிசமயம் பொய் என்றுசொன்னதினால் அவரை நாத்திக வாதியாக காட்டுகின்றனர் சிலர்.

ஆனால் உண்மையை எவரும் வெளிப்படுத்த வில்லை.

இதற்கு காரணம் அவர்களின் அறியாமைஅஞ்ஞானம் ஆகும்.அறியாமையால் அவரவர் 

அறிவின்கண் அறிந்தவரை அவரை வெளிப்படுத்துகின்றனர்அல்லதுஅஞ்ஞானத்தினால் திரித்து கூறி சூது செய்கின்றனர்.

உண்மை எதுவெனில்,

வள்ளலாரின் ஆரம்பக் காலத்திய சமயப்பாடல்களளைல் அவரை அச்சமயஞானியாக 

காட்டுவதும் தவறுசமயமதம் பொய் என்றதினால் நாத்திக் கொள்கையுடைவர் என்றுகாட்டுவதும் தவறு.

அச்சமய சோத்திர பாடல்களை பாடியதால் அச்சமய ஞானியும் இல்லை,

சமயத்தை தள்ளியதால் நாத்திகரும் இல்லை.

ஒரு உண்மைப் பொது நெறி கண்டு அதன் பயனாகிய

மரணமில்லா பெருவாழ்வு” பெற்ற சுத்த ஞானி ஆவார்.

வள்ளலாரை ஒரு சைவ சமய ஞானி என்பவர்களே!

வள்ளலார் அச்சமயப்பற்றை கைவிட்டுவிட்டார்.

மேலும் அவர் சொல்லியது :

நீங்கள் என்னைப்போல் கைவிட்டுவிட்டால் ஏறாநிலைமிசை ஏறலாம் என்கிறார்கள்.

-என் மார்க்கத்திற்கு எக்காலத்தும் முக்கிய தடை இந்த சமயமத மார்க்கங்கள்.

 சமய கடவுளர் அனைவரும் தத்துவசித்தி கற்பனைகளளைகும்.

 அச்சமயப்பற்றுதான் என்ன இந்த நிலையில் துளைக்கி விட்டது என்றாலோ அது தூக்கி விடவில்லை என்று தன் திரு அகவல்சத்திய விண்ணப்பங்கள்அறிவிப்புகள்பாடல்கள் மூலம்வள்ளலார் குறிப்பிட்டு உள்ளதற்கு உங்கள் பதில் என்ன?

சமயம்மதம் சாடியதால் வள்ளலாரை சீர்த்திருத்தம் செய்த ஒரு நாத்திகர் என்றுகூறும் நாத்திகர்களே!

-சத்திய அறிவால் அறியப்படுகின்ற ஓர் உண்மைக் கடவுள் உண்டு என்கிறார் வள்ளலார்.

 இறையருளலால் மரணம்பிணிமூப்புபயம்துன்பம் முதலிய அவத்தைகள்எல்லாம் 

தவிர்க்கலாம்.

 நாத்திகம் சொல்கின்றவர் தம் நாக்கு முடை நாக்கு” என்கிறார் வள்ளலார்.

இவைக்கு உங்கள் பதில் என்ன?

அன்பர்களே,

  1. வள்ளலார்மார்க்கம் கடவுள் நம்பிக்கை கொண்டுஉண்மை கடவுளை கண்டமார்க்கம்.
  2. வள்ளலார்தன் மார்க்கத்தில் கண்ட கடவுள் சமயமத மார்க்கங்களில் காட்டியகடவுள்  இல்லை.
  3. தயவுஎன்னும் கருணை மூலமே இறையருள் பெறும் மார்க்கம்.
  4. தயவைவிருத்தி பண்ண தடையாகயிருக்கும் உலகில் காணும் சமயசாதிகட்டுப்பாட்டு ஆசாரங்களை ஒழித்து சத்திய ஞான ஆசாரமாகியபொதுநோக்கம் கொண்ட     மார்க்கம்.
  5. கடவுள்நிலையறிய “ஒழுக்கம்” நிரப்புதல் வேண்டும் எனச் சொல்லும் மார்க்கம்.
  6. தத்துவங்களை உபாசித்தும் அர்சித்தும்தியானித்தும் அத்தத்துவ அற்ப  சித்திப்பயனை பெற முயற்சிக்காமல் எல்லாம் வல்ல சர்வ சித்தியுடைய கடவுளின் அருள்பெற்று பூரண சித்தியால் மரணமில்லா பெருவாழ்வு பெறுவதே சுத்தசன்மார்க்கம்.

இங்ஙனமாக விளங்கும் வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறி எல்லாசமயங்களுக்கும்எல்லா மதங்களுக்கும்எல்லா மார்க்கங்களுக்கும் உண்மை பொதுநெறியாக விளங்கும் என்பதை தெரிந்திடல் வேண்டும்.

unmai

Channai,Tamilnadu,India