March 19, 2024
tamil katturai APJ arul

வாய்ப்பினை தவறவிடாதீர்கள் தயவுசெய்து தெரிந்து கொள்ளுங்கள் !

வாய்ப்பினை தவறவிடாதீர்கள்
தயவுசெய்து தெரிந்து கொள்ளுங்கள் !

–ஏபிஜெ அருள்

ஒரு புதிய மற்றும் பொது மார்க்கம்
தெரிவிக்கப்பட்ட நாள் சித்திரை-1

 

சித்திரை நாளில் தான் அதாவது சித்திரை 1 – 12 ம் நாள் 1871 ல் தான் நம் வள்ளலார் சுத்த சன்மார்க்கத்தை உலகிற்கு தெரிவித்த நாள் – இனிய இந்த சித்திரை முதல் நாளை கொண்டாடுவோம். வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க வழியில் உண்மை கடவுள் குறித்து நல்ல விசாரணையை தொடர்ந்து செய்வோம் என உறுதி ஏற்போம்
வள்ளலாரால் கண்டு வெளிப்படுத்த 
ஓர் உண்மை பொது மார்க்கமே ”சுத்த சன்மார்க்கம்” –
இம்மார்க்கத்தில் கடவுளின் உண்மை வெளிப்படுத்தப்பட்டுள்ளது – இக்கடவுள் இதுவரை வெளிப்படுத்தப்பட்ட கடவுளர், தேவர், கர்த்தர், இவர்களில் ஒருவர் அல்ல

– புதிய மற்றும் தனி மெய்ப்பொருளாகிய ஒன்றெனும் ஒன்றாகிய ”உண்மை கடவுள்” ஆவார்

– இம்மார்க்கத்தில் ஆச்சாரங்களுக்கு தடை – கருணை ஒன்றே சாதனம்

– பொது நோக்கத்தை வருவித்துக் கொள்ளவேண்டும்

– கடவுளின் உண்மை குறித்து நல்ல விசாரணை செய்தல் வேண்டும்

– கடவுளின் அருளால் மரணம் தவிர்த்து பேரின்ப பெருவாழ்வில் வாழ்வதாக உள்ளது

– எல்லா உயிர்களும் தம் உயிர் போல் பாவிப்பதும் மற்றும் சாகா கல்வியே கல்வி என்பதும் இம்மார்க்கத்தின் முக்கிய கொள்கையாகும்

–திருவருட்பிரகாச வள்ளலார் இவ்வழியில் உண்மை கடவுளை அறிந்து அக்கடவுளின் அருளால் மரணத்தை தவிர்த்து தன் தேகத்தை தனி வடிவமாகிய ஒளி தேகமாக மாற்றிக்கொண்டார்கள்

– இப்பெருவாழ்வை சுத்த சன்மார்க்க வழியில் எல்லோரும் பெற முடியும் என்று ஆன்ம நேய ஒருமைப் பாட்டுரிமையில் தமிழ் மொழியில் சத்தியமிட்டு தெரிவித்த நாளே இந்த சித்திரை முதல் நாள் -ஆனால் 22-10-1873 ல் திருவருட்பிரகாச வள்ளலார் அறிவித்தது;
உண்மை சொல்ல வந்தனனே என்று
உண்மை சொல்லப் புகுந்தாலும்
தெரிந்துக் கொள்வாரில்லை என்றார்கள்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லாம் செயல் கூடும் என் ஆணை அம்பலத்தே! 
— அன்புடன் ஏபிஜெ அருள் – கருணை சபை – மதுரை
kindly visit::: www.atruegod.org

 

unmai

Channai,Tamilnadu,India