March 29, 2024
Uncategorized

வள்ளலார் உடைத்த பூட்டு – ஏபிஜெ அருள்

No automatic alt text available.

இனி எத்தனைக் காலம் தான் கடவுளை நாம் ஏமாற்றப் போகிறோம்?-

ஆம்- பணம் தேடுதல், வேலைப் பழு, பந்த பாசம், தீராத இச்சை, சுகப்போகம், சடங்கு ஆச்சாரங்கள் மூலம் கடவுள் வழிபாடு, முதலிய இவையில் தான் நாம் விழுந்து கிடைக்கிறோம்-

கடவுள் பக்தி அதிகம்  உள்ளவர்களாக தோற்றத்தில் காட்டுகிறோம்-

உண்டியலில் ஒரு பெரிய தொகையை போட்டுவிட்டு திருப்தியடைகிறோம்-
ஏதேனும் ஒன்றை வேண்டிக்கொண்டு காணிக்கை செய்து முடித்து விடுகிறோம்-

இங்ஙனமாகவே நம் வழிபாடும்- நாம் கொண்டியிருக்கும் நெறியும் உள்ளது-

இதுவா நமக்கும் கடவுளுக்கும் உள்ள உறவு-
இதுவா உண்மை அறிவு?

இதோ வள்ளலார் சொல்கிறார்கள் ;
இது போல் இனி இராதீர்கள்- காலத்தை வீணில் கழிக்காமல் – நம் நம்முடைய நிலை என்ன? நமக்கு மேல் நம்மை அனுட்டிக்கும் கடவுளின் நிலை என்ன? என விசாரம் செய்யுங்கள்- என்கிறார் வள்ளலார்-

ஆம் அன்பர்களே!
இன்றைய வேகமான சூழ்நிலையில் ஏனோ தானமாக இனி கடவுளை வழிபாடு செய்யாமலும்,கடமை முடிந்தது என எந்தொரு சடங்கு சம்பிராதயம் செய்யாமல், உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிபாடு செய்வோம்-

பெண்ணை நேரில் பார்த்து கல்யாணம் செய்த நாம்;
நிலத்தை நேரில் சென்று பார்த்து பத்திரம் பண்ணிய நாம்;
கொடுத்த பணத்தை எண்ணி பார்த்து வாங்கும் நாம்;
சுவையை தேடிப்பார்த்து உணவு சாப்பிடும் நாம்;

கடவுளை மட்டும் நேரில் காண ஆசை இல்லாமல் போனது ஏன்????
இங்ஙனம் ஆசையில்லாமல் இருக்கும் நம்மிடம் உள்ள பக்தி எப்படி பட்டது? கடவுளை காண வழி வகுக்காத மார்க்கம் என்ன மார்க்கம்?

இதோ வள்ளலார் அழைக்கிறார்-

“கடவுள் நிலைக் காண ஆசை உண்டேல் வம்மீன்” – என்கிறார்-

சுத்த சன்மார்க்கம் சார்ந்து உண்மை கடவுள் நிலை காண்போம்-
இது சத்தியம் இது சத்தியம் இது சத்தியம் என்கிறார்-

வள்ளலார் மார்க்கத்தில் ஒவ்வொருவரும் கடவுள் நிலை காணுதல் வேண்டும் என உள்ளது- அக அனுபவமே உண்மை என்கிறது –

கடவுள் நித்திய வஸ்து என்றால் கடவுளிடத்தில் கடவுளால் தோன்றிய நாம் ஏன் அழிய வேண்டும்? எனச் சிந்தனை வள்ளலாரிடத்தில் மட்டுமே தோன்றிற்று-
அதன் அடிப்படையிலேயே தொடர்ந்து விசாரித்தார்கள்-
ஆனால்—-
உண்மை கடவுள் குறித்த அவரின் விசாரணைக்கு தான் வைத்திருந்த சமய நெறிப்பற்றும் ஆச்சார கட்டுப்பாடுகளும் தடையாக உள்ளன எனக் கண்டார்கள்-
ஆம் அன்பர்களே! எந்தொரு மார்க்கத்திலும் அதன் கடவுளை தாண்டியோ, சடங்குகளை விட்டோ செல்ல/ சிந்திக்க உரிமையுள்ளதா?

இந்நிலையிலேயே நம் வள்ளலார் சமயப் பற்றை கைவிட்டார்கள்-
சடங்கு, ஆச்சாரங்களை விட்டொழித்தார்கள்- இவை கை விட்ட உடன் எந்தொரு கட்டுப்பாடும் வள்ளலாருக்கு இல்லை- உள் அழுந்துவதற்கும், சிந்திப்பதற்கும், சிந்தித்ததை விசாரிப்பதற்கும் தடை ஏதும் ஏற்படவில்லை-

சமயத்தில் இருந்தால் இவரே கடவுள் என கருத்தில் ஏற்றியே சிந்திப்போம்-
நமக்குள் ஏற்படும் ஒளியில் சிந்தித்ததே தோன்றும்- ஆனால் அந்த சிற்றொளியை கண்டு பல் இளித்து இறுமாந்து இருந்து விடாதீர்கள் என்கிறார் வள்ளலார்
– நமக்கு தோன்றிய சிற்றொளி உண்மை கடவுளின் திருவுருவம் அல்ல-

உண்மை கடவுள் திருவுருவம் காண வள்ளலார் கீழ்வருமாறு வழிபாடு செய்ய சொல்கிறார்கள்;

“ ஓர் உண்மைக் கடவுள் உண்டென்றும், அக்கடவுளை உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிபாடு செய்யின் —” என்கிறார்கள்-

“கடவுளே! நீங்கள் இருக்கிறீர்கள் என்று எனது மனித அறிவும், பிறவி தோறும் பெற்ற அனுபவமும் உணர்த்துகிறது- நம்பிக்கை என்னிடம் ஏற்பட்டுள்ளது – ஆனால் உங்களை என் அறிவில் அனுபவத்தில் பார்க்க வேண்டும் என்ற வேண்டுதலே உண்மை அறிவு ஆகும்- அப்படித்தானே?
அன்பர்களே! என்றாவது நாம் சென்று வணங்கும் கோயிலுக்கு சென்று, இன்று நான் என் தெய்வத்தை கண்டு பேசாமல் வரப்போவதில்லை என்று இருந்தோமா? அல்லது ஆசை நமக்கு ஏற்பட்டதா? அந்தளவில் தான் நமக்கு கடவுளையும், சிந்திக்க விடாமல் சடங்குகளையும் செய்ய வைத்து விட்டார்கள்-

இதோ வள்ளலார் சொல்லுகிறார்கள்;
“கடவுளின் உண்மையை மறைத்தவன் ஓர் வல்லவன் – அவன் மறைத்தை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை- அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்க வில்லை- இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை-”
மேலும் கூறுகையில்;
சமயங்களிலும், புராணங்களிலும் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங்கவியச் சொல்லாமல், மண்ணைப்போட்டு மறைத்து விட்டார்கள்” என்கிறார்-

வல்லவன் பூட்டிய பூட்டை உடைத்தார்-
கடவுளின் உண்மை கண்டு உலகிற்கு வெளிப்படுத்தினார் வள்ளலார்-
இங்கு சாதியில்லை – சமய,மத, வேறுபாடில்லை – சடங்குகள் இல்லை –

அன்பர்களே! உண்மை அன்புடன் அழைக்கின்றேன்!
வாருங்கள் சுத்த சன்மார்க்கம் சாருங்கள்!

நல்ல விசாரணையை தொடர்ந்து செய்வோம்- ஏபிஜெ அருள்

unmai

Channai,Tamilnadu,India