March 29, 2024
Uncategorized

நாம் (சுத்த சன்மார்க்க நெறியை பின் பற்றி நல்ல விசாரணை செய்துக் கொண்டியிருப்பவர்கள் மற்றும் தழுபவர்கள்) உடனே செய்ய வேண்டிய பணி – ஏபிஜெ அருள்

நாம் (சுத்த சன்மார்க்க நெறியை பின் பற்றி நல்ல விசாரணை செய்துக் கொண்டியிருப்பவர்கள் மற்றும் தழுபவர்கள்) உடனே செய்ய வேண்டிய பணி ஏபிஜெ அருள்

 இவ்விசாரணை இம்மார்க்கத்திற்கு உரியவர்களுக்கான பகுதி: -மன்னிக்கவும்-

        திருவருட்பிரகாச வள்ளலார் தான் கண்ட மார்க்கத்திற்கு ஒரு சங்கத்தையும் நிறுவியுள்ளார்கள்

 அச்சங்கத்திற்குசமரச சுத்த சன்மார்க்கச் சத்தியச் சங்கம்என்று திருபெயர் வழங்கி உள்ளார்கள்இதை ஒரு அறிவிப்பு நாள் 18-07-1872 மூலம் அறிவித்து உள்ளார்கள்

வள்ளலாரின் நிலையங்கள் அனைத்தும் இன்று மேதகு அரசு இந்து சமய அற நிலைய ஆட்சித்துறை கீழ் உள்ளது

அந்நிலையில் மேற்படி சங்கமும் உயர்திரு நிலைய நிர்வாக அலுவலர் கீழ் செயல் பட்டு வருகிறதுஅச்சங்கத்தில் ஆண்டு, ஆயுள் உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் சந்தா வசூலிக்கப்பட்டு வருகிறது

வள்ளலார் தன் மார்க்கத்துக்கு உரியவர்கள் யார்? என வியம்பு போது கீழ் வருமாறு சொல்லுகிறார்கள்:

   ”சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடைகளாகிய சமயம், மதம், முதலிய் மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களும், காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக் கொள்பவரும், கொலை புலை தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள்-” என்கிறார் வள்ளலார் –

ஆனால் மேற்படி சங்கத்தில் யார் பணம் கொடுத்தாலும் உறுப்பினர்களாக நிலையத்தார்கள் சேர்த்து விடுகிறார்கள்- இதணால் மேதகு நீதிமன்றத்தில் வழக்கிட்டு முறையிடப்பட்டதுவள்ளலாரின் சங்கத்தில் சேர்பவர்கள் சமயம், மதம், முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களாக, காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக் கொள்பவர்களாக, கொலை புலை தவிர்த்தவர்களாக கருதப்படுவார்கள் என ரசீதில் பின் பக்கம் அச்சடித்தல் வேண்டும் என்பதே வழக்கின் கோரிக்கையாகும்

 இது குறித்து விசாரிக்கும் படி, அரசுக்கு ஓர் உத்திரவினை மேதகு நீதிமன்றம் உத்திரவிட்டதுஅதன் அடிப்படையில் Asst Commissioner முன்பு நடைப்பெற்றது- பின்பு Join Commissioner க்கு மாற்றப்பட்டது – எந்த பதிலும் இந்நாள் வரை இல்லைஇன்னும் நிலுவையில் தான் உள்ளது

 நல்ல பதில் வரும் என காத்துள்ளோம்வர வேண்டும்

  நிற்க!

வள்ளலாரால் ஆரம்பிக்கப்பட்ட சமரச சுத்த சன்மார்க்கச் சத்தியச் சங்கம் இன்றும் அரசால் நடத்தப்பட்டு வரப்படுகிறதுஆனால் இதில் என்ன முக்கிய விசயம் என்றால் அதில் மிக குறைவான உறுப்பினரகளே உள்ளனர்இந்நிலையில் சன்மார்க்க அன்பர்களிடம் வேண்டுவது யாதெனில்;

1 – வள்ளற்பெருமான் ஆரம்பித்த இன்று மேதகு அரசு கீழ உள்ளசமரச சுத்த சன்மார்க்கச் சத்தியச் சங்கம்”(வடலூர்) ஒன்றே நம் சங்கம்

2 – அச்சங்கத்தில் நம்மை உறுப்பினராக்கி கொள்ள வேண்டும்

3 – வள்ளற்பெருமான் ஆரம்பித்த சங்கத்தின் பெயர் போன்று நாம் சங்கங்களை ஆரம்பித்தல் கூடாது

4 –நாம் விரும்பும் வண்ணம் மற்ற பெயரில் ஆரம்பித்துக் கொண்டு நெறிப் பணிகளையும் ஜீவகாருண்ய பணிகளையும் செய்யலாம்

 இது எங்களது தாழ்மையான வேண்டுகோள்

 அரசு என்பது தூய்மையானது உண்மையானது பொதுவானது 

அதன் கீழ் வள்ளலாரின் நிலையங்கள் செயல் படுகின்றன 

அதில் எந்தொரு குறை இருந்தாலோ, அல்லது இன்னும் சிறப்புடன் செயல்பட வேண்டும் என்றாலோ  உரிய அதிகாரிகளிடம் முறையிட்டு தீர்வு ஏற்படுத்திக் கொள்ளலாம்- அதற்கு அரசு சட்ட விதிகள் நமக்குள்ளது –

 இன்று நிலையம் இந்து சமய அற நிலைய ஆட்சித் துறையின் கீழ் உள்ளது அதன் சட்ட உறுப்புகள் எல்லா நிலையங்களுக்கும், அவரவர் மார்க்க தனி கொள்கைக்கும் பாதுகாப்பாக உள்ளது என அறிதல் வேண்டும் மேலும் நமது இந்திய அரசு அமைப்பு சட்டம் எல்லாருடையச்ல் தனிப்பட்ட பழக்க வழக்கங்களுக்கு மிகுந்த பாதுகாப்பு அளிக்கிறது என்பதையும் அறிதல் வேண்டும் 

மேலும் எந்தொரு நிலையமும் அதன் ஸ்தாபகர் எழுதிய அடிப்படையிலேயே பராமரிககப்படும் வள்ளலார் எந்தொரு குறிப்பையும்/ scheme யையும் ஏற்படுத்தவில்லை

      வள்ளலார் அவர்கள் சாகா நிலைப் பெற்றவர் சுத்த தேகி அவரே என்றும் சபையையும் சாலையையும் நடத்துகிறார், நடத்துவார் என்பதில் நமக்கு ஏன் சந்தேகம்? மேதகு அரசின் சட்ட உறுப்புகள் மீது ஏன் நம்பிக்கையில்லை? 

    நிலைய நிர்வாகத்தை மேதகு 5 அறங்காவலர்களை அரசு நியமித்து சட்டப்படி நிர்வகித்து வருகிறது மேற்படி 5 அறங்காவலர்கள் சட்டப்படியே சுற்று வட்டாரத்திலிருந்தே நியமிக்கிறார்கள் இதில் சில கோரிக்கை வைத்து சட்டப்படி ஒரு வழக்கிட்டு அதன் அடிப்படையில் ஒரு நீண்ட விசாரணை திரு ஆணையர் அவர்களால் போன வருடம் நடைப்பெற்றதுஅதில் நமது கோரிக்கையானது;

சட்டப்படி நியமிக்கப்படும் 5 பரம்பரை அல்லாத அறங்காவலர்களில் அனைவரும் கொலை புலை தவிர்த்தவர்களாகவும், மேலும் அதில் குறைந்தது மூன்று பேராவது எங்கள் மார்க்கத்தை சார்ந்தவர்களாகவும் இருத்தல் வேண்டும் என்பதே !

திரு ஆணையர் அவர்கள் தனது ஆணையின் முடிவில் அறங்காவலர்கள் நியமிக்கும் போது உங்கள் கோரிக்கை கருத்தில் கொண்டு பரிசீலிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்கள்-

திருவருட்பிரகாசர் வள்ளலார் மார்க்கம் உலகின் சமய மத மார்க்கங்களிலிருந்து மாறுப்பட்டு எல்லோருக்கும் ஓர் உண்மை பொது நெறியாக உள்ளதால், இந்நிலையம் எங்ஙனம் HR & CE கீழ் வரும் எனக்கருதக்கூடும்

இந்து என்றால் எவர் ஒருவருவர் முஸ்ஸிலீம், கிறிஸ்து, பாரசீகர்,, யூதர், இல்லையோ மற்றவர்கள் அனைவருமே இந்து என அழைக்கப்படுவர்- இது தான் சட்டத்தின் பால் இந்துக்கு உள்ள அர்த்தம்  

      ஒரு வேளை இச்சட்டத்தின் (HR & CE) தலைப்பில் மாற்றம் வேண்டும் என்றாலும் மனு செய்வோம்- இந்து சமய அற நிலைய மற்றும் மார்க்கங்கள் ஆட்சித் துறை சட்டம்என கோரிக்கை வைத்து வேண்டலாம் வேண்டப்படும்  

     வள்ளலாரின் உயரிய தனி பொது சிந்தனைக்கு சிறப்பு அங்கீகாரம் அளித்து நிலையத்தை தனிப் பார்வையில் பராமரிக்க வேணுமாயும் மேதகு அரசிடம் கோரிக்கை வைத்தும் வேண்டலாம் வேண்டுவோம் – 

எப்பெயரில் இருந்தாலும் அரசும், அரசு சட்டங்களும் நம் நிலையங்களுக்கு உயரிய சட்ட பாதுகாப்பு ஆகும் என்று அறிக!

நிலையம் தொடர்ந்து சிறப்புடன் செயல்பட நிலையத்தார்களும், பார்வதிபுர மக்களுக்கும் தொண்டினையும், நன்றியையும் செய்வோமாக! 

 நிற்க! ஆனால் திருவருட்பிரகாச வள்ளலார் ஆரம்பித்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் உறுப்பினராகாமல் நாம் சுத்த சன்மார்க்கத்தை சார்ந்திருப்பவர் என்று சொல்லுவது எந்த விதத்தில் நியாயம்? அடுத்த முறை வடலூர் செல்லும் போது திரு நிலைய நிர்வாகியை சந்தித்து மேற்படி அச்சங்கத்தில் நம்மை சேர்த்து கொள்வது நமது பணியும் புண்ணியமும் என்று அறிக!

மேற்படி சங்கத்தில், சுத்த சன்மார்க்கத்தை விரும்புவர்களையும், சாதி சமயம், மதம் சாராதவர்களையும் மட்டுமே சேர்க்க வேண்டும் என்ற உங்கள் பதிவை பதிவு செய்தும்,

 தாங்களும், “ நான் ——– (பெயர், ஊர்,விலாசம்) , திருவருட் பிரகாச வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர் என்றும், கொலை புலை தவிர்த்தவர் என்றும், சமய மத மார்க்கங்களில் முற்றும் பற்றற கைவிட்டவர் என்றும், காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக் கொள்பவனும் ஆவேன் என்று  இதன் மூலம் உறுதியளிக்கிறேன்என்று எழுதி கொடுத்திட வேண்டுகிறேன் 

 நல்ல விசாரணையை தொடர்ந்து செய்வோம் 

அருட்பெருஞ்ஜோதி           அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை     அருட்பெருஞ்ஜோதி

ஏபிஜெ அருள்

 

unmai

Channai,Tamilnadu,India