March 29, 2024
Uncategorized

சுத்த சன்மார்க்கத்தில் வெளிப்படும் கடவுள் யார்?

திருஅருட்பிரகாச வள்ளலார் சித்திரை 1ல் எழுதியுள்ள மடல் மூலம் ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள். உலகத்தார்களுக்கு/நமக்கு சுத்த சன்மார்க்கத்தில் வெளிப்படும் கடவுள் யார்? என்று தெளிவான முறையில் சொல்லியுள்ளார்கள். நல்ல விசாரணை செய்வோர்க்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த இனிய நாளில் மீண்டும் ஒரு முறை வாசிப்போம்.
”சுத்தசிவ சன்மார்க்கம் ஒன்றே இனி எல்லாம் உலகத்தும் வழங்கும் இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை. தடையற்ற பெருநெறி வழக்கம் இக்காலந்தொட்டு அளவிறந்த நெடுங்கால வரையில் வழங்கும். அதன்மேலும் அதன்மேலும் வழங்கும். பலவகைப்பட்ட சமய பேதங்களும், சாத்திர பேதங்களும், ஜாதிபேதங்களும், ஆசாரபேதங்களும் போய், சுத்த சன்மார்க்க பெருநெறி யொழுக்கம் விளங்கும். அது கடவுள் சம்மதம். இது 29 மாதத்திற்கு மேல்.
இப்போது வருகிற நமது கடவுள் இங்கு முன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள், மூர்த்திகள், கடவுளர், தேவர், அடியார், யோகி, ஞானி முதலானவர்களில் ஒருவரல்ல.
இப்படிச் சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும், எல்லாத்தேவர்களும், எல்லாக்கடவுளரும், எல்லாத் தலைவர்களும், எல்லா யோகிகளும், எல்லா ஞானிகளும் தங்கள் தங்கள் அனுபவங்களைக் குறித்து எதிர்பார்க்கின்றபடி எழுந்தருளுகின்ற தனிப்தலைமைப் பெரும்பதி. இது உண்மையாயின் அந்தப் பதியின் அருளை நான் பெறுவேன், பெறுகின்றேன், பெற்றேன். என்னை யடுத்த தாங்களும் பெறுவதற்கு யாதொரு தடையுமில்லை. பெறுவீர்கள், பெறுகின்றீர்கள், பெற்றீர்கள், அஞ்சவேண்டாம்”.
பிரஜோற்பத்தி சித்திரை-1

அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை
சுத்த சன்மார்க்கப் பெருவாழ்வு வாழ்த்துக்கள்.
இந்த இனிய நாளில் மீண்டும் ஒருமுறை சத்திய வாக்கியத்தில் உறுதிக்கொள்வோம்.

1. சுத்த சன்மார்க்கத்தில் வெளிப்படும் கடவுள் உலகில் காணும் சமய,மதம் மார்க்கங்களில் வெளிப்படுத்தியுள்ள கர்த்தர்கள், மூர்த்திகள், கடவுளர், தேவர், அடியார், யோகி, ஞானி முதலானவர்களில் ஒருவரல்ல.
2. சுத்த சன்மார்க்கத்திற்கு எக்காலத்தும் முக்கிய தடைகளாக இருப்பது சமயங்கள், மதங்கள். அச்சமய, மத, மார்க்கங்களின் ஆச்சார சங்கற்ப விகற்பங்கள் நம் மனதில் பற்றா வண்ணம் அருள் செய்தல் வேண்டும் என விண்ணப்பிக்க வேண்டும்.
3. சுத்த சன்மார்க்கம் என்பது சன்மார்க்கம், சிவசன்மார்க்கம் இரண்டையும் மறுத்தது.
4. சுத்த சிவம் என்பது சிவம், பரசிவம் இரண்டையும் மறுத்தது.
5. சுத்த சன்மார்க்கத்திற்கு பூர்வத்தில் சொன்ன சன்மார்க்கங்கள் யாவும் அ ந ந் நியம். அ ந் நியமல்ல. எல்லா சமய, மத மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறியாக விளங்குகிறது
APJ ARUL. 9487417834 [email protected]

unmai

Channai,Tamilnadu,India