April 19, 2024
tamil katturai APJ arul

ச.கா – சு.கா – APJ. அருள்

சன்மார்க்கம்ச.கா

சுத்தசன்மார்க்கம்சு.கா

ஆசிரியர்:APJ. அருள்,நிறுவநர் – கருணை சபை-சாலை,உத்தங்குடி, மதுரை

முன்னுரை:

அன்பர்களே வணக்கம் தங்களின் மேலானப் பார்வைக்கு வள்ளலாரின் தனிநெறி பாகம் 1, பாகம் 2, சமர்ப்பிக்கப்பட்டது. அவை தொடர்ந்து இந்நூலின் வாயிலாக தங்கள் முன்பு பணிவுடன் வள்ளலாரின் சத்தியத்தை (தனிநெறி பாகம் 3) சமர்ப்பிக்கின்றேன்.

பாகம் 1-ல்

  1. சுத்த சன்மார்க்க காலம் வெளிப்பட்ட ஆண்டு ஏப்ரல் 1871 ஆகும் என்பதை முதன்முதலில் வெளிப்படுத்தியது.
  2. சுத்த சன்மார்க்கத்தில் முதன்மையான மற்றும் முக்கிய பகுதிகள், மற்றும் முக்கியத் தடைகள்
  3. வள்ளலாரின் முடிபான தனி நெறிப்பாடல்களின் தொகுப்பை ஆறாவது திருமுறை என்று அழையாது, “சமரச சுத்த சன்மார்க்க திருஅருட்பா பாடல்கள்“ என்று அழைத்தல் கூடும்

பாகம் 2-ல்

வள்ளலாரின் சமரச சுத்தசன்மார்க்கத்தில் “திருவருள்” நிலையறிவது எப்படியெனில் என்று வள்ளற்பெருமான் எங்ஙனம் நேரிடையாக கூறியுள்ளளைர், சுத்தசன்மார்க்கத்தில் ஒழுக்கங்கள் எவை? கருணை, ஒருமை பற்றிய விளக்கம், ஆதாரங்களுடன் கோடிட்டு காண்பிக்கப்பட்டது.

இந்த பாகம் 3ல் விசாரம் செய்வது எதுவெனில்;

(ஆதாரம் : திருஅருட்பா உரைநடைப்பகுதி – தெய்வநிலைய வெளியீடு-2008)

வள்ளலார் தன் மார்க்கத்திற்கு எவையை? எக்காலத்தும் முக்கியத் தடைகளளைக அறிவித்தார் என்பதை பற்றிய விசாரம். சுத்தசன்மார்க்கத்தை மட்டுமே அனுஷ்டிக்கிறவர்கள் வள்ளலார் அமைத்த கட்டளைப் படியே செயல்படக்கூடும். அந்நிலையிலேயே “கடவுள் உண்மை” பதிந்து அறிவு விளங்குவதாக உள்ளது. அன்பர்களே, இந்நுளைலில் அக அனுபவ விளக்கமோ அல்லது பொருள் விளக்கமோ தரப்படவில்லை. உள்ளதை உள்ளபடியே கோடிட்டு மட்டும் காட்டப்படுகிறது.

ஓர் ஆசிரியர் தனது மாணவனிடம் கீழ்வரும் கேள்வியை கேட்கிறார்

கேள்வி : 5 + 4 = ?

மாணவன் பதில் : 7 (ஏழு)

இங்கு, மாணவனின் பதில் “தவறு” என்று தான் ஆசிரியர் கூறுவார். மாணவர் “ஐந்து” உடன் “நான்கை” கூட்டும் போது ஐந்தைவிட கூடுதலாக வரும் என்று மாணவன் அறிந்திருக்கிறான் என்று ஆசிரியர் மகிழ்ந்தாலும், மாணவரின் “ஏழு” என்ற தவறான பதிலுக்கு மதிப்பெண் தரமாட்டார். அதுபோல் தான் உலகில் காணும் சமய, மத, மார்க்கங்களில் “இறைவனைப் பற்றியும், அக்கடவுளின் அருளை பெறுவது பற்றியும் வியம்பி இருந்தாலும் அத்திருவருள் பற்றிய முழு உண்மையை அவை வியம்பவில்லை.” அதனால் அவற்றை பொய் என்கிறார் வள்ளலார்.

அதே நேரத்தில் சமய, மத, மார்க்கங்களில் இருந்த, இருக்கின்ற பெரியோர்களே நல்லறிவு கொண்டோர், மெய்யறிவு படைத்தோர் என்றும் கூறுகிறார் வள்ளலார். அந்த நல்லறிவு, மெய்யறிவு கொண்டோர்களும் அறிந்திடாத “உண்மையை” தனக்கு கடவுள் காட்டியதாக கூறுவதே வள்ளலாரின் சிறப்பு.

மேலும், தான் கண்ட “உண்மை”யானது உலகில் காணும் சமய, மத, மார்க்கங்களுக்கும் பொதுநெறியாகி விளங்கும் என்கிறார் வள்ளலார்.(பக்கம் 550).

“எது” எல்லோருக்கும் பொதுவாகவும், எல்லோரும் ஒத்துக் கொள்ளக் கூடியதாகவும் உள்ளதோ அதுவே “உண்மை”. “அந்த உண்மையை” கண்டவர் வள்ளலார்.

வள்ளலார் சொல்ல வந்த உண்மை என்ன?

தனது பேருபதேசத்தில் (22.10.1873) குறிப்பிட்டது …..

“உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை

சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை.’’

அந்த உண்மை என்ன?

வள்ளற் பெருமான் பெற்ற அறிவினால் தெரிந்த அனுபவத்தில் கண்ட ’’கடவுளின் உண்மை’’ இதுநாள் வரை எந்ததொரு சமய, மத, மார்க்கங்களிலும் காணாத சத்தியம் ஆகும். சமய, மத, மார்க்கம் சார்ந்த நல்லறிவு கொண்டோர்களுக்கும், மற்றும் ஆன்மநேய ஒருமைபாட்டுரிமையில் அந்த சத்தியத்தை “சத்திய ஞான சபை“ அமைத்து ஒருவாறு புறத்திலே நமக்கும் விளக்கினார்கள்.

அங்ஙனம் “உண்மை“ விளக்கினாலும் அன்றைய மக்களின் நிலைப்பற்றி வள்ளலார் குறிப்பிடுகையில்; (ஆதாரம் : பேருஉபதேசம்)

“தெய்வத்தை தெரிந்து கொள்ளளைது இவ்வுலகத்தார் என்னைத் தெய்வமெனச் சுற்றுகின்றார்கள். ஐயோ! நம் சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து கெள்ளளைததினாலேயல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள் என்று நான் உள்ளும் புறமும் பரிதாபப்பட்டுக் கொண்டே இருந்தேன். தெய்வத்தை ஏன் தெரிந்துகொள்ளவில்லையென்றால் ஒரு பதார்த்தத்தை அனுபவித்தாலல்லது அந்தப் பதார்த்ததினுடைய ருசிதெரியாது. ருசி தெரியாத பதார்த்தத்தன் மேல் இச்சை போகாது அதுபோல், தெய்வத்தை உள்ளபடி அனுபவித்தால்லது, தெய்வத்தினிடத்தில் பிரியம் வராது, ஆதலால், தெய்வத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் மென்கிற முக்கிய லட்சுயத்திலிருந்து கொண்டு விசாரஞ் செய்துகொண்டிருங்கள்“ என்கிறார்கள். வள்ளலார் ஒரு வருடத்திற்கு மேலாக, இறுதி வரையில் சத்திய ஞான சபையை பூட்டியே வைத்திருந்தார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்….. ’’

பக்கம் 560: (திருஅருட்பா உரைநடைப்பகுதி) சுத்த சன்மார்க்க சத்திய சிறு விண்ணப்பம்: “எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே, இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடையாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள், என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும்….. ”

நிற்க

சமயங்கள், மதங்கள், மார்க்கங்களை தான் கண்ட மார்க்கத்திற்கு தடைகள் என்று கூறினார்கள். அதுவும் முக்கியத்தடைகள் எனவும் மேலும் எக்காலத்திற்கும் என்றும் அழுத்தமாக குறிப்பிட்டுள்ளளைர்கள். மேலும், பக்கம் 570:- சத்திய பெருவிண்ணப்பத்தில்:- “வாலிபப் பருவந் தோன்றியபோதே, சைவம், வைணவம், சமணம், பவுத்த முதலாகப் பல பெயர் கொண்டு பலபட விரிந்த அளவிறந்த சமயங்களும், அச்சமயங்களிற் குறித்த சாதனங்களும், தெய்வங்களும், கதிகளும், தத்துவசித்தி விகற்பங்கùளன்றும், அவ்வச் சமயங்களிற் பலபட விரிந்த வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், சாத்திரங்கள் முதலிய கலைகùளல்லாம் தத்துவ சித்திக் கற்பனைக் கலைகùளன்றும், உள்ளபடியே எனக்கறிவித்து அச்சமயாசாரங்களைச் சிறிதும் அனுட்டியாமற்றடை செய்வித்தருளினீர்.“ மேலும் வள்ளலார் தனது சுத்த சன்மார்க்கப் பாடல்களில் (6வது திருமுறை) சமயம், மதம் மார்க்கங்களை பற்றி குறிப்பிடுகையில் …….

பாடல் சுத்தசன்மார்க்கப் பாடல்கள்

எண்

64 மான மேலிடச் சாதியே மதமே

வாழ்க்கை யேஎன வாரிக்கொண் டலைந்தேன் …..

…. அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே.

72 சாதிமதம் சமயம்எனும் சங்கடம்விட் டறியேன்

சாத்திரச்சே றாடுகின்ற சஞ்சலம்விட் டறியேன்.

185 கூறுகின்ற சமயம்எலாம் மதங்கள்எலாம் பிடித்துக்

கூவுகின்றார் பலன்ஒன்றும் கொண்டறியார் வீணே

நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார் அவர்போல்

நீடுலகில் அழிந்துவிட நினைத்தேனோ……

186 வேதநெறி ஆகமத்தின் நெறிபவுரா ணங்கள்

விளம்புநெறிஇதிகாசம் விதித்தநெறி முழுதும்

ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி

உள்ளதனை உள்ளபடி உணரஉரைத் தனையே

ஏதமற உணர்ந்தனன் வீண் போதுகழிப் பதற்கோர்

எள்ளளவும் எண்ணம்இலேன் என்னோடுநீ புணர்ந்தே

தீதறவே அனைத்தும்வல்ல சித்தாடல் புரிவாய்

சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.

187 கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்கொண் டாடும்

கண்மூடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக

மலைவறுசன் மார்க்கம்ஒன்றே நிலைபெறமெய் உலகம்

வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினைஎன் தனக்கே …..

202 சரியைஓர் நான்கும் கிரியைஓர் நான்கும் சாற்றிடும் யோகமோர் நான்கும்

புரியவும் பதங்கள் பொருந்தவும் எனது புந்தியில் ஆசைசற் றறியேன்

பெரியதோர் ஞானம் நான்கினும் ஆசை பெற்றிலேன் முத்திபெற் றிடவும்

உரியதோர் இச்சை எனக்கிலை என்றன் உள்ளம்நீ அறிந்ததே எந்தாய்.

220 மலத்திலே கிடந்தேன் தனையெடுத் தருளி

மன்னிய வடிவளித் தறிஞர் …..

306 கருணையும் சிவமே பொருள்எனக் காணும் காட்சியும் பெறுகமற் றெல்லாம்

மருள்நெறி எனநீ எனக்கறி வித்த வண்ணமே பெற்றிருக் கின்றேன்

இருள்நெறி மாயை வினைகளளைல் கலக்கம் எய்திய தென்செய்வேன் எந்தாய்

தெருள்நிலை இன்றிக் கலங்கினேன் எனினும் சிறுநெறி பிடித்ததொன் றிலையே.

336 இமையவர் பிரமர் நாரணர் முதலோர் எய்துதற் கரியபே ரின்பம்

தமைஅறிந் தவருட் சார்ந்தபே ரொளிநம் தயாநிதி தனிப்பெருந் தந்தை

அமையும்நம் உயிர்க்குத் துணைதிருப்பொதுவில் ஐயர்தாம்வருகின்ற சமயம்

சமயம்இப் போதென்றெண்ணிநான் இருக்கும் தன்மையும் திருவுளம்அறியும்.

353 இச்சாதி சமயவிகற் பங்கùளலாம் தவிர்ந்தே

எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்…..

363 சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன் சாத்திரக் குப்பையும் தணந்தேன்

நீதியும் நிலையும் சத்தியப் பொருளும் நித்திய வாழ்க்கையும் சுகமும்

ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் ஜோதிஎன் றறிந்தேன்

ஓதிய அனைத்தும் நீஅறிந் ததுநான் உரைப்பதென் அடிக்கடி உனக்கே.

411 கருங்களிறு போல்மதத்தால் கண்செருக்கி வீணே

காலம்எலாம் கழிக்கின்ற கடையர்கடைத் தலைவாய்

ஒருங்குசிறி யேன்தனைமுன் வலிந்தருள் வடிவாய்

உள்அமர்ந்தே உள்ளதனை உள்ளபடி உணர்த்திப்

பெருங்கருணை யால்அளித்த பேறதனை இன்னும்

பிறர்அறியா வகைபெரிதும் பெறுதும்என உள்ளே

மருங்கிருந்த எனைவெளியில் இழுத்துவிட்ட தென்னோ

மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.

415 அரிபிரமர் உருத்திரரும் அறிந்துகொள மாட்டா

தலமரவும் ஈதென்ன அதிசயமோ மலத்தில்

புரிபுழுவில் இழிந்தேனைப் பொருளளைக்கி அருளளைம்

பொருள்அளிக்கப் பெற்றனன்

417 அடிபிடித்துத் திரிகின்ற மறைகள் எலாம் காணா

அருள்வடிவைக் காட்டிநம்மை ஆண்டுகொண்ட கருணைக் ….

430 புல்லவா மனத்தேன் என்னினும் சமயம் புகுதவா பொய்ந்நெறி ஒழுக்கம்

சொல்லவா பிறரைத் துதிக்கவா சிறிதோர் செப்பனத் தாயினும் நினையேன்

கல்லவா மனத்தோர் உறவையுங் கருதேன் கனகமா மன்றிலே நடிக்கும்

நல்லவா எல்லாம் வல்லவா உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

452 கொலைபல புரிந்தே புலைநுகர்ந் திருந்தேன் கோடுறு குரங்கினிற் குதித்தே

அலைதரு மனத்தேன் அறிவிலேன் எல்லாம் அறிந்தவன் போல்பிறர்க் குரைத்தேன்

மலைவுறு சமய வலைஅகப் பட்டே மயங்கிய மதியினேன் நல்லோர்

நலையல எனவே திரிந்தேனன் எனினும் நம்பினேன் கைவிடேல் எனையே.

474 தெருவிடத்தே விளையாடித் திரிந்தஎனை வலிந்தே

சிவமாலை அணிந்தனை அச் சிறுவயதில் இந்த

உருவிடத்தே நினக்கிருந்த ஆசைஎலாம் இந்நாள்

ஒடியதோ புதியஒரு உருவுவிழைந் ததுவோ

495 இருளளைன மலம்அறுத் திகபரங் கண்டே

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ

மருளளைன பற்பல மார்க்கங்கள் எல்லாம்

வழிதுறை தெரியாமல் மண்மூடிப் போகத்

தெருளளைன சுத்தசன் மார்க்கம தொன்றே

சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்

அருளளைனவீதியில் ஆடச்செய் தீரே

அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.

496 இருட்சாதி தத்துவச் சாத்திரக் குப்பை

இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு

மருட்சாதி சமயங்கள் மதங்களளைச் சிரம

வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்

தெருட்சாறும் சுத்தசன் மார்க்கநன் னீதி

சிறந்து விளங்கஒர் சிற்சபை காட்டும்

அருட்ஜோதி வீதியில் ஆடச்செய் தீரே

அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே

514 பொதுநடஞ்செய் மலரடிஎன் தலைமேலே அமைத்தீர்

புத்தமுதம் அளித்தீர்என் புன்மைஎலாம் பொறுத்தீர்

சதுமறைஆ கமங்கள்எலாம் சாற்றரிய பெரிய

தனித்தலைமைத் தந்தையரே

518 என்னே செய்வேன் செய்வகை ஒன்றிங் கிதுஎன் றருள்வாய் இதுவே தருணம்

மன்னே அயனும் திருமா லவனும் மதித்தற் கரிய பெரிய பொருளே

544 மதிக்குமதிக் கப்புறம்போய் வயங்குதனி நிலையே

மறைமுடிஆ கமமுடிமேல் வயங்கும்இன்ப நிறைவே

துதிக்கும் அன்பர் தொழப்பொதுவில் நடம்புரியும் அரசே

சொன்மாலை சூட்டுகின்றேன் தோளில்அணிந் தருளே.

559 சாதிகுலம் சமயமெலாம் தவிர்த்தெனைமேல் ஏற்றி

தனித்ததிரு அமுதளித்த தனித்தலைமைப் பொருளே

ஆதிநடுக் கடைகாட்டா தண்டபகி ரண்டம்

ஆருயிர்கள் அகம்புறம்மற் றனைத்தும்நிறை ஒளியே

ஓதிஉணர்ந் தவர்எல்லாம் எனைக்கேட்க எனைத்தான்

ஓதாமல் உணர்ந்துணர்வாம் உருவுறச்செய் உறவே

சோதிமய மாய்விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும்

தூயநடத் தரசேஎன் சொல்லும் அணிந் தருளே.

579 …… பற்றியஎன் பற்றனைத்தும் தன்அடிப்பற் றாகப்

பரிந்தருளி எனைஈன்ற பண்புடைஎந் தாயே

பெற்றியுளளைர் சுற்றிநின்று போற்றமணிப் பொதுவில்

பெருநடஞ்செய் அரசேஎன் பிதற்றும்உவந் தருளே.

585 வான்பதிக்கும் நெடுமாற்கும் நான்முகற்கும் அரிதாம்

வாழ்வெனக்கே ஆகியுற வரம்அளித்த பதியே

தேன்பரித்த மலர்மணமே திருப்பொதுவில் ஞானத்

திருநடஞ்செய் அரசேஎன் சிறுமொழி ஏற் றருளே.

588 மூர்த்திகளும் நெடுங்காலம் முயன்றாலும் அறிய

முடியாத முடிவெல்லாம் முன்னியஒர் தினத்தே

ஆர்த்தியுடன் அறியஎனக் களித்தருளி அடியேன்

அகத்தினைத்தன் இடமாக்கி அமர்ந்தஅருட் குருவே

601 மதம்என்றும் சமயம்என்றும் சாத்திரங்கள் என்றும்

மன்னுகின்ற தேவர்என்றும் மற்றவர்கள் வாழும்

பதம்என்றும் பதம்அடைந்த பத்தர்அனு பவிக்கப்

பட்டஅனு பவங்கள்என்றும் பற்பலவா விரிந்த

விதம்ஒன்றும் தெரியாதே மயங்கிய என் தனக்கே

வெட்டவெளி யாஅறிவித் திட்ட அருள் இறையே

சதம்ஒன்றும் சுத்தசிவ சன்மார்க்கப் பொதுவில்

தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும் அணிந் தருளே.

620 கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக்

கூட்டமும் அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்

கள்ளமுறும் அக்கலைகள் காட்டியபல் கதியும்

காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்

பிள்ளைவிளை யாட்டெனநன் கறிவித்திங் கெனையே

பிள்ளைஎனக் கொண்டுபிள்ளைப் பெயரிட்ட பதியே

தள்ளரிய மெய்யடியார் போற்றமணி மன்றில்

தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.

621 நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா

நவின்றகலைச் சரிதம் எலாம் பிள்ளைவிளை யாட்டே

மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ

விழித்திதுபார் என்றெனக்கு விளம்பியசற் குருவே

கால்வருணங் கலையாதே வீணில் அலை யாதே

காண்பனஎல் லாம்எனக்குக் காட்டியமெய்ப் பொருளே

மால்வருணங் கடந்தவரை மேல்வருணத் தேற்ற

வயங்குநடந் தரசேஎன் மாலைஅணிந் தருளே.

623 இயல்வேதா கமங்கள்புரா ணங்கள்இதி காசம்

இவைமுதலா இந்திரசா லங்கடையா உரைப்பார்

மயல்ஒருநூல் மாத்திரந்தான் சாலம்என அறிந்தார்

மகனேநீ நூல் அனைத்தும் சாலம்என அறிக

செயல் அனைத்தும் அருள்ஒளியால் காண்கஎன எனக்கே

திருவுளம்பற் றியஞான தேசிகமா மணியே

அயல் அறியா அறிவுடையார் எல்லாரும் போற்ற

ஆடுகின்ற அரசே என் அலங்கல் அளிந்திருளே.

624 தோன்றியவே தாகமத்தைச் சாலம்என உரைத்தேம்

சொற்பொருளும் இலக்கியமும் பொய்எனக்கண் டறியேல்

ஊன்றியவே தாகமத்தின் உண்மைநினக் காகும்

உலகறிவே தாகமத்தைப் பொய்எனக் கண் டுணர்வாய்

ஆன்றதிரு அருட்செங்கோல் நினக்களித்தோம் நீயே

ஆள்கஅருள் ஒளியால்என் றளித்ததனிச் சிவமே

ஏன்றதிரு வழுதெனக்கும் ஈந்தபெரும் பொருளே

இலங்குநடத் தரசேஎன் இசையும் அணிந் தருளே.

625 நான்முகர்நல் உருத்திரர்கள் நாரணர்இந் திரர்கள்

நவில் அருகர் புத்தர் முதல் மதத்தலைவர் எல்லாம்

வான்முகத்தில் தோன்றிஅருள் ஒளிசிறிதே அடைந்து

வானகத்தும் வையகத்தும் மனம்போன படியே

தேன்முகந்துண் டவர் எனவே விளையாடா நின்ற

சிறுபிள்ளைளக் கூடடம்என அருட்பெருஞ்ஜோ தியினால்

தான்மிகக்கண் டறிகஎனச் சாற்றியசற் குருவே

சபையில்நடத் தரசேஎன் சாற்றும் அணிந் தருளே.

633 எத்துணையும் சிறியேனை நான்முகன்மால் முதலோர்

ஏறரிதாம் பெருநிலைமேல் ஏற்றிஉடன் இருந்தே

மெய்த்துணையாம் திருவருட்பே ரமுதம்மிக அளித்து

வேண்டியவா றடிநாயேன் விளையாடப் புரிந்து

சுத்தசிவ சன்மார்க்க நெறிஒன்றே எங்கும்

துலங்கு அருள் செய்தபெருஞ் சோதியனே பொதுவில்

சித்துருவாய் நடம்புரியும் உத்தமசற் குருவே

சிற்சபைஎன் அரசேஎன் சிறுமொழிஏற் றருளே.

638 மன்பதை வகுக்கும் பிரமர்நா ரணர்கள் மன்னுருத் திரர்கள் முதலா

ஒன்பது கோடித் தலைவர்கள் ஆங்காங் குறுபெருந் தொழில்பல இயற்றி

இன்புறச் சிறிதே கடைக்கணித் தருளி இலங்கும்ஓர் இறைவன்இன் றடியேன்.

அன்பெனும் குடிசை நுழைந்தனன் அந்தோ அவன்தனை மறுப்பவர் யாரே.

639 தன்னிக ரில்லாத் தலைவஎன் றரற்றித் தனித்தனி மறைகள் ஆ கமங்கள்

உன்னிநின் றோடி உணர்ந்துணர்ந் துணரா ஒருதனிப் பெரும்பதி உவந்தே

புன்னிக ரில்லாப் புலையனேன் பிழைகள் பொறுத்தருட் பூரண வடிவாய்

என்னுளம் புகுந்தே நிறைந்தனன் அந்தோ எந்தையைத் தடுப்பவர் யாரே.

657 குற்றமெலாம் குணமாக் கொள்ளும்

குணத்தானைச் சமயமதக் குழிநின் றென்னை

எடுத்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தே

ஈந்தானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

689 மதத்திலே மயங்கா மதியிலே விளைந்த

மருந்தைமா மந்திரந் தன்னை

இதத்திலே என்னை இருத்திஆட் கொண்ட

இறைவனைக் கண்டுகொண் டேனே.

705 சமயமும் மதமும் கடந்ததோர் ஞான

சபைநடம் புரிகின்ற தனியைத் …………

717 உலகுபல் கோடி கோடிகள் இடங்கொள் உலப்பிலா அண்டத்தின் பகுதி

அலகுகாண் பரிய பெரியகூட் டத்த அவைஎலாம் புறத்திறைச் சார்பில்

விலகுறா அணுவில் கோடியுள் ஒருகூற் றிருந்தென விருந்தன மிடைந்தே

இலகுபொற் பொதுவில் நடம்புரி தருணத் தென்பர்வான் திருவடி நிலையே.

718 தடையுறாப் பிரமன் விண்டுருத் திரன்மா யேச்சுரன் சதாசிவன் விந்து

நடையுறாப் பிரமம் உயர்பரா சத்தி நவில்பர சிவம் எனும் இவர்கள்

இடையுறாத் திருச்சிற் றம்பலத் தாடும் இடதுகாற் கடைவிரல் நகத்தின்

கடையுறு துகள் என் றறிந்தனன் அதன்மேற் கண்டனன் திருவடி நிலையே.

719 அடர்மலத் தடையால் தடையுறும் அயன்மால் அரன்மயேச் சுரன்சதா சிவன்வான் படர்தரு விந்து பிரணவப்பிரமம் பரைபரம் பரன்எனும்இவர்கள்

சுடர்மணிப் பொதுவில் திருநடம் புரியும் துணையடிப் பாதுகைப் புறத்தே

இடர்கெட வயங்கு துகள் என அறிந்தே ஏத்துவன் திருவடி நிலையே

720 இகத்துழல் பகுதித் தேவர்இந் திரன்மால் பிரமன்ஈ சானனே முதலாம்

மகத்துழல் சமய வானவர் மன்றின் மலரடிப் பாதுகைப் புறத்தும்

புகத்தரம் பொருந்தா மலத்துறு சிறிய புழுக்கள்என் றறிந்தனன் அதன்மேல்

செகத் தொடர் பிகந்தார் உளத்தமர் ஒளியில் தெரிந்தனன் திருவடிநிலையே.

736 சாதியைநீள் சமயத்தை மதத்தைஎலாம்

விடுவித்தென் தன்னை ஞான

நீதியிலே சுத்தசிவ சன்மார்க்க

நிலைதனிலே நிறுத்தி னானைப்

பாதியைஒன் றானவனைப் பரம்பரனைப்

பராபரனைப் பதிஅ னாதி

ஆதியைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்ஜோ

தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.

774 தத்துவம் அனைத்தும் தவிர்த்துநான் தனித்த தருணத்தில் கிடைத்ததொன் றென்கோ

சத்துவ நிரம்பும் சுத்தசன் மார்க்கந் தனில்உறும் அனுபவம் என்கோ

796 அனந்தமறை ஆகமங்கள் அளப்பரிய சிவமே

அம்மேஎன் அபபாஎன் ஐயாஎன் அரசே

மனந்தருவா தனைதவிர்த்தோர்

927 மதம்பிடித் தவர்எல்லாம் வாய்ப்பிடிப் புண்டு

வந்துநிற் கின்றனர் வாய்திறப் பிப்பான்

கதம்பிடித் தவர்எல்லாம் கடும்பிணி யாலே

கலங்கினர் சூழ்ந்தனர் உலம்புறு கின்றார்

பதம்பிடித் தவர் எல்லாம் அம்பலப் பாட்டே

பாடினார் ஆடினர் பரவிநிற் கின்றார்

இதம்பிடித் தெனையாண்ட அருட்பெருஞ்ஜோதி

என்னைய னேபள்ளி யெழுந்தருள் வாயே.

945 நீண்ட மறைகள் ஆகமங்கள் நெடுநாள் நெடுநாள் முயன்று வருந்திநின்று

வேண்ட அவைகட் கொருசிறிதும் விளங்கக் காட்டா தென்மொழியைப்

பூண்ட அடியை என்தலைமேல் பொருந்தப் பொருத்தி என்தன்னை

ஆண்ட கருணைப் பெருங்கடலே அடியேன் உன்றன் அடைக்கலமே.

961 தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும்

சேர்கதி பலபல செப்புகின் றாரும்

பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும்

பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும்

மெய்வந்த திருவருள் விளக்கம்ஒன் றில்லார்

மேல்விளை வறிகிலர் வீண்கழிக் கின்றார்

எய்வந்த துன்பொழித் தவர்க்கறி வருள்வீர்

எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.

978 ஊடல்செய் மதமும் சமயமும் இவற்றில் உற்றகள் பனைகளும் தவிர்ந்தேன்

பாடல்செய்மனத்தால் கலங்கினேன் எனினும் மன்றினை மறந்ததிங்குண்டோ.

995 மதத்திலே சமய வழக்கிலே மாயை மருட்டிலே இருட்டிலே மறவாக்

கதத்திலே மனத்தை வைத்துவீண் பொழுது கழிக்கின்றார் கழிக்கநான் உன்பூம்

பதத்திலே மனத்தை வைத்தனன் நீயும் பரிந்தெனை அழிவிலா நல்ல

பதத்திலே வைத்தாய் எனக்கிது போதும் பண்ணிய தவம்பலித் ததுவே.

996 குலத்திலே சமயக் குழியிலே நரகக் குழியிலே குமைந்துவீண் பொழுது

நிலத்திலே போக்கி மயங்கிஏ மாந்து நிற்கின்றார்

978 ஊடல்செய் மதமும் சமயமும் இவற்றில் உற்றஎன் பனைகளும் தவிர்ந்தேன்

வாடல்செய்மனத்தால் கலங்கினேன் எனிலும் மன்றினை மறந்ததிங்குண்டோ.

1005 சாதிமதம் சமயமுதற் சங்கற்ப விகற்பம்எலாம் தவிர்ந்து போக

ஆதிநடம் புரிகின்றான் அருட்சோதி எனக்களித்தான் அந்தோ அந்தோ.

1006 துரியபதம் அடைந்தபெருஞ் சுத்தர்களும் முத்தர்களும் துணிந்து சொல்லற்

கரியபதம் எனக்களித்தான் அம்பலத்தில் ஆடுகின்றான் அந்தோ அந்தோ.

1014 எக்கரையும் காணாதே இருட்கடலில் கிடந்தேனை எடுத்தாட் கொண்டு

அக்கரைசேர்த் தருùளனுமோர் சர்க்கரையும் எனக்களித்தான் அந்தோ அந்தோ

1112 மருளளைத ஆகமங்கள் மாமறைகள் எல்லாம்

மருண்டனவே என்னடி என் மனவாக்கின் அளவோ….

1154 அம்பலத்தே ஆடுகின்ற அடிஇணையின் பெருமை

வேதியனும் திருமாலும் உருத்திரரும் அறியார்

விளைவறியேன் அறிவேனோ விளம்பாய்என் தோழி

1161 மதத்தலைமை பதத்தலைமை வாய்த்தனர் அங் கவர்பால்

இறங்கலிலேன் பேசுதலால் என்பயனோ நடஞ்செய்

இறைவர்அடிப் புகழ்பேசி இருக்கின்றேன் யானே.

1272 குலத்தே சமயக் குழியிடத்தே விழுந்திவ் வுலகம் குமையாதே

நலத்தே சுத்த சன்மார்க்கம் நாட்டா நின்றேன் நாட்டகத்தே

1364 வாதமிடு சமயமத வாதிகள் பெறற்கரிய

மாமதியின் அழுதநிறைவே

1387 பன்னெறிச் சமயங்கள் மதங்கள்என் றிடும்ஓர்

பவநெறி இதுவரை பரவிய திதனால்

சென்னெறி அறிந்திலர் இறந்திறந் துலகோர்

செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனிநீ

புன்னெறி தவிர்த்தொரு பொதுநெறி எனும்வான்

புத்தமு தருள்கின்ற சுத்தசன் மார்க்கத்

தன்னெறி செலுத்துக என்றஎன் அரசே

தனிநட ராஜஎன் சற்குரு மணியே

1395 சாதியும் சமயமும் தவிர்த்தவர் உறவே

தனிநட ராஜஎன் சற்குரு மணியே.

1473 சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே

சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே

ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்

அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழ கலவே

நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே ஞான

நிருத்தமிடும் தனித்தலைவர்ஒருத்தர் அவர் தாமே

வீதியிலே அருட்ஜோதி விளையாடல் புரிய

மேவுகின்ற தருணம் இது கூவுகின்றேன் உமையே.

1477 எய்வகைசார் மதங்களிலே பொய்வகைச்சாத் திரங்கள்

எடுத்துரைத்தே எமதுதெய்வம் எமதுதெய்வம் என்று

கைவகையே கதறுகின்றீர் தெய்வம்ஒன்றென் றறியீர்

கரிபிடித்துக் கலகமிட்ட பெரியரினும் பெரியீர்

ஐவகைய பூதவுடம் பழிந்திடில்என் புரிவீர்

அழியும்பை அழியாமை ஆக்கும்வகை அறியீர்

உய்வகை என் தனித்தந்தை வருகின்ற தருணம்

உற்றதிவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே.

1501 ஆரணமும் ஆகமழும் ஆங்காங் குரைக்கின்ற

காரணமும் காரியமும் காட்டுவித்தான் – தாரணியில்

கண்டேன் களிக்கின்றேன் கங்குல்பகல் அற்றவிடத்

துண்டேன் அமுதம் உவந்து

1502 துன்மார்க்கம் எல்லாம் தொலைத்துவிட்டேன் சுத்தசிவ

சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன் – என்மார்க்கம்

நன்மார்க்கம் என்றேவான் நாட்டார் புகழ்கின்றார்

மன்மார்க்கத் தாலே மகிழ்ந்து.

1503 பன்மார்க்கம் எல்லாம் பசையற் றொழிந்தனவே

சன்மார்க்கம் ஒன்றே தழைத்ததுவே – சொன்மார்க்கத்

தெல்லா உலகும் இசைந்தனவே எம்பெருமான்

கொல்லா நெறி அருளைக் கொண்டு.

1504 சாதிகுலம் என்றும் சமயமதம் என்றுமுப

நீதிஇயல் ஆச்சிரம நீட்டென்றும் ஓதுகின்ற

பேயாட்ட மெல்லாம் பிதிரிந்தொழிந்த வேபிறர்தம்

வாயாட்டம் தீர்ந்தனவே மற்று.

1511 சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி

நேத்திரங்கள் போல்காட்ட நேராவே – நேத்திரங்கள்

சிற்றம் பலவன் திருவருள்சீர் வண்ணமென்றே

உற்றிங் கறிந்தேன் உவந்து.

1512 வேதாக மங்கùளன்று வீண்வாதம் ஆடுகின்றீர்

வேதாக மத்தின்விளைவறியீர் – சூதாகச்

சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை

என்ன பயனோ இவை.

1541 திருநெறிஒன் றேஅதுதான் சமரசசன் மார்க்கச்

சிவநெறிஎன் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு

வருநெறியில் எனையாட்கொண்ட டருளமுதம் அளித்து

வல்லபசத் திகùளல்லாம் வழங்கியஓர் வள்ளல்

பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப்

பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே

கருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்

கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே.

1544 சத்தியவே தாந்தமெலாம் சித்தாந்தம் எல்லாம்

தனித்தனிமேல் உணர்ந்துணர்ந்தும் தனையுணர்தற் கரிதாய்

நித்தியசிற் சபைநடுவே நிறைந்துநடம் புரியும்

நித்தபரி பூரணனைச் சித்தசிகா மணியை

அத்தகையோர் பெரும்பதியை அருமருந்தை அடியேன்

ஆவியைஎன் ஆவியிலே அமர்ந்ததயா நிதியைச்

சித்தியெலாம் எனக்களித்த சிவகதியை உலகீர்

சிந்தைசெய்து வாழ்த்துமினோ நிந்தைஎலாம் தவிர்ந்தே.

1546 முயன்றுலகில் பயன்அடையா மூடமதம் அனைத்தும்

முடுகி அழிந் திடவும்ஒரு மோசமும்இல் லாதே

இயன்றஒரு சன்மார்க்கம் எங்குநிலை பெறவும்

எம்மிறைவன் எழுந்தருளல் இதுதருணம் கண்டீர்

துயின்றுணர்ந்தே எழுந்தவர்போல் இறந்தவர்கள் எல்லாம்

தோன்றஎழு கின்றதிது தொடங்கிநிகழ்ந் திடும்நீர்

பயின்றறிய விரைந்துவம்மின் படியாத படிப்பைப்

படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே.

1549 குறித்துரைக்கின் றேன் இதனைக் கேண்மின் இங்கே வம்மின்

கோணும்மணக் குரங்காலே நாணுகின்ற உலகீர்

வெறித்தஉம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது

மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர்

பொறித்தமதம் சமயம்எலாம் பொய்பொய்யே அவற்றில்

புகுதாதீர் சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின்

செறித்திடுசிற் சபைநடத்தைத் தெரிந்துதுதித் திடுமின்

சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே.

1571 முன்னுள மார்க்கங்கள் யாவும் முடிந்தன

மன்னுள சுத்தசன் மார்க்கம் சிறந்தது

பன்னுளந் தெளிந்தன பதிநடம் ஓங்கின

என்னுளத் தருட்பெருஞ் ஜோதியார் எய்தவே.

1582 இயங்காளிபுலிகரடி எனப் பெயர்கேட் டுளம்நடுங்கி இருந்தேன் ஊரில்

சயங்காளிக் கோயிலைக்கண் டஞ்சிமனம் தழுதழுத்துத்தளர்ந்தேன் இந்தப்

பயங்காளிப் பயல்போலப் பயந்தவர்கள் எங்குளர்காண் பதியே என்னை

வயங்காளில் ஒருவன்என நினையேல்கைப்பிள்ளை என மதித்தி டாயே.

1591 கிழக்குவெளுத் ததுகருணை அருட்ஜோதி உதயம்

கிடைத்ததென துளக்கமலம் கிளர்ந்ததென தகத்தே

சழக்குவெளுத் ததுசாதி ஆச்சிரமா சாரம்

சமயமதா சாரம்எனச் சண்டையிட்ட கலக

வழக்கு வெளுத் ததுபலவாம்பொய்ந்நூல்கற் றவர்தம்

மனம்வெளுத் ததுசிவமே பொருள் எனும் சன் மார்க்க

முழுநெறியில் பரநாத முரசு முழங் கியதே.

1626 சேய்போல் உலகத் துயிரைஎல் லாம்எண்ணிச் சேர்ந்துபெற்ற

தாய்போல் உரைப்பர்சன் மார்க்கசங் கத்தவர் சாற்றும்எட்டிக்

காய்போல் பிறர்தமைக் கண்டால் கசந்துள் கடுகடுத்தே

நாய்போல் குரைப்பர்துன் மார்க்கசங் கத்தவர் நானிலத்தே.

1705 கண்கொண்ட பூதலம் எல்லாம்சன் மார்க்கம் கலந்துகொண்டே

பண்கொண்ட பாடலில் பாடிப் படித்துப் பரவுகின்றார்

விண்கொண்ட சிற்சபை ஒன்றே நிறைந்து விளங்குகின்ற

தெண்கொண்ட மற்றை மதமார்க்கம் யாவும் இறந்தனவே.

1734 சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது

தாள்வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர்

என்மார்க்கத் தெனைநுமக்குள் ஒருவனெனக் கொள்வீர்

எல்லாம்செய் வல்லநம திறைவனையே தொழுவீர்

புன்மார்க்கத் தவர்போலே வேறுசில புகன்றே

புந்திமயக் கடையாதீர் பூரணமெய்ச் சுகமாய்த்

தன்மார்க்க மாய்விளங்கும் சுத்தசிவம் ஒன்றே

தன்ஆணை என்ஆணை சார்ந்தறிமின் ஈண்டே

1735 ஆதியும்நடுவும் அந்தமும் இல்லா

அருட்பெருஞ் ஜோதிஎன் உளத்தே

நீதியில் கலந்து நிறைந்தது நானும்

நித்தியன் ஆயினேன் உலகீர்

சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே

சத்தியச் சுத்தசன் மார்க்க

வீதியில் உமைத்தான் நிறுவுவல் உண்மை

விளம்பினேன் வம்மினோ விரைந்தே.

1802 சமயத் தெய்வம் பலவும் சிறிய துரும்ப தென்ன வே

சாற்றப் புகினும் சாலா அருளின் பெருமை உன்ன வே

அமையும் அண்டப் பகுதி பலவும் அணுவின் பொடியி லே

அனந்தத்தொன்றென் றுரைத்துஞ்சாலாநின்பொன் னடியிலே.

எனக்கும் உனக்கும்

1824 வேதா கமத்தின் அடியும் நடுவும் முடியு மற்று மே

வெட்ட வெளிய தாகி விளங்கக் கண்டேன் முற்று மே

நாதா சிறிய நாய்க்கும் கடையேன் முற்றும் கண்ட தே

நானோ கண்டேன் எந்தாய் கருணை நாட்டம் கண்ட தே.

எனக்கும் உனக்கும்

1919 எச்சம யங்களும் பொய்ச்சம யமென்றீர்

இச்சம யம்இங்கு வாரீர்

மெய்ச்சம யந்தந்தீர் வாரீர்.

1984 சதுமறை ஆகம சாத்திரம் எல்லாம்

சந்தைப் படிப்புநம் சொந்தப் படிப்போ

விதுநெறி சுத்தசன் மார்க்கத்தில் சாகா

வித்தையைக் கற்றனன் உத்தரம் எனுமோர்

பொதுவளர் திசைநோக்கி வந்தனன் என்றும்

பொன்றாமை வேண்டிடில் என்தோழி நீதான்

அதுஇது என்னாமல் ஆடேடி பந்து

அருட்பெருஞ் ஜோதிகண் டாடேடி பந்து.

2076 தருநெறி எல்லாம்உள் வாங்கும் – சுத்த

சன்மார்க்கம் என்றோர் தனிப்பேர்கொண் டோங்கும்

திருநெறிக் கேசென்று பாரீர் – திருச்

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

2077 எம்பொருள் எம்பொருள் என்றே – சொல்லும்

எல்லாச் சமயத்துள் எல்லார்க்கும் ஒன்றே

செம்பொருள் என்பது பாரீர் – திருச்

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

2078 சைவ முதலாக நாட்டும் – பல

சமயங்கள் எல்லாம் தனித்தனிக் காட்டும்

தெய்வம் இதுவந்து பாரீர் – திருச்

சிற்றம் பலத்தே திருநட ஜோதி

2113 மதித்த சமயமத வழக்கெல்லா மாய்ந்தது

வருணாச் சிரமம்எனு மயக்கமும் சாய்ந்தது

கொதித்த லோகாசாரக் கொதிப்பெல்லாம் ஒழிந்தது

கொலையும் களவுமற்றைப் புலையும் அழிந்தது.

2114 குறித்த வேதாகமக் கூச்சலும் அடங்கிற்று

குதித்த மனமுருட்டுக் குரங்கு முடங்கிற்று

வெறித்தவெவ் வினைகளும் வெந்து குலைந்தது

விந்தைசெய் கொடுமாயைச் சந்தையும் கலைந்ததுஇதுநல்ல

2141 எச்சம யத்தும் இலங்கிய பாதம்

எள்ளுக்குள் எண்ணெய்போல் எங்குமாம் பாதம்

அச்சம் தவிர்த்தென்னை ஆட்கொண்ட பாதம்

ஆனந்த நாட்டுக் கதிபதி பாதம்.

2177 சாதி சமயச் சழக்கெலாம் அற்றது

சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது

2213 சாதி சமயச் சழங்கைவிட் டேன்அருட்

ஜோதியைக் கண்டேன டி – அக்கச்சி

ஜோதியைக் கண்டேனடி.

2294 சன்மார்க்கம் நன்மார்க்கம் நன்மார்க்கம்

சகமார்க்கம் துன்மார்க்கம் துன்மார்க்கம்

அருட்பெருஞ்ஜோதி அகவல்

வரிகள் அகவல்

1-2 அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி

அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி

5-6 ஆகம முடிமேல் ஆரண முடிமேல்

ஆகநின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி

21-22 ஒன்றென விரண்டென வொன்றிரண் டெனவிவை

யன்றென விளங்கிய வருட்பெருஞ் ஜோதி

29-30 சுத்தசன் மார்க்க சுகத்தனி வெளியெனும்

அத்தகைச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி

51-52 சாகாக் கலைநிலை தழைத்திடு வெளியெனும்

ஆகா யத்தொளி ரருட்பெருஞ் ஜோதி

61-62 சமயங் கடந்த தனிப்பொருள் வெளியாய்

அமையுந் திருச்சபை யருட்பெருஞ் ஜோதி

115-116 சாதியு மதமுஞ் சமயமுங் காணா

ஆதிய நாதியா மருட்பெருஞ் ஜோதி

211-212 சாதியு மதமுஞ் சமயமும் பொய்யென

ஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி

293-294 சமயங் குலமுதற் சார்பெலாம் விடுத்த

அமயந் தோன்றிய வருட்பெருஞ் ஜோதி

1317-1318 தாழ்வெலாந் தவிர்த்துச் சகமிசை யழியா

வாழ்வெனக் களித்த வளரொளி மணியே

1327-1328 மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு

கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே

1543-1544 வேதமு மாகம விரிவும் பரம்பர

நாதமுங் கடந்த ஞானமெய்க் கனலே

1553-1556 சமரச சத்தியச் சபையி னடம்புரி

சமரச சத்தியத் தற்சுயஞ் சுடரே

சபையென துளமெனத் தானமர்ந் தெனக்கே

அபய மளித்ததோ ரருட்பெருஞ் ஜோதி

1567-1568 சாகாக் கல்வியின் றரமெலா முணர்த்திச்

சாகா வரத்தையுந் தந்துமேன் மேலும்

இங்ஙனமாக வள்ளற் பெருமான் தெரிவித்தப்பிற்கு, கட்டளையிட்டப்பிறகு அவர்தம் நெறியை அனுஷ்டிக்கிறவர்கள் சமய, மத, மார்க்கங்கள் மீது பற்று உடையவர்களளைக இருத்தல் கூடாது.

அன்பர்கள், வள்ளற்பொருமான் ஏன் சமய, மத, மார்க்கங்கள் எக்காலத்தும் முக்கியதடைகளளைக அறிவித்தார்கள்? வள்ளலார் “கடவுளின் உண்மை” எவ்வறாக கண்டார்கள்? திருஅருட்பா உரைநடைப் பகுதி பக்கம் 556-ல்:- “சுத்த சன்மார்க்க சத்தியச் சிறு விண்ணப்பம்:- “இயற்கை உண்மையரென்றும், இயற்கை அறிவினரென்றும், இயற்கை இன்பினரென்றும், நிர்க்குணரென்றும், சிற்குணரென்றும் நித்தியரென்றும், சத்தியரென்றும், ஏகரென்றும், அநேகரென்றும், ஆதியரென்றும், அனாதியரென்றும், அமலரென்றும் அருட்பெருஞ்ஜோதிரென்றும் அற்புத ரென்றும், நிரதிசயரென்றும், “எல்லாமானவரென்றும் எல்லாமுடையவரென்றும் எல்லாம் வல்லவரென்றும்” குறிக்கப்படுதல் முதலிய அளவு கடந்த திருக்குறிப்புத் திருவார்த்தைகளளைற் சுத்த சன்மார்க்க ஞானிகள் துதித்தும், நினைத்தும், உணர்ந்தும், புணர்ந்தும் அனுபவிக்க விளங்குகின்ற தனித்தலைமைப் பெரும் பதியாகிய “பெருங்கருணைக் கடவுள்.”

மேலே “அருட்பெருஞ்ஜோதி“ உட்பட 18 திருக்குறிப்புத் திருவார்த்தைகளளைல் குறிப்பிட்டு சுத்த சன்மார்க்கத்தில் காணும் கடவுள் “பெருங்கருணை”. இந்த சத்தியக் கடவுள் பற்றி தனது அறிவிப்பு 12.4.1871ல் (பக்கம் 547) குறிப்பிடுகையில்:- “இப்போது வருகிற நமது கடவுள் இதற்கு முன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள், மூர்த்திகள், கடவுளர், தேவர், அடியார், யோகி, ஞானி முதலானவர்களில் ஒருவரல்ல. இப்படி சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும், எல்லாத்தேவர்களும், எல்லாக்கடவுளரும், எல்லாத் தலைவர்களும், எல்லா யோகிகளும், எல்லா ஞானிகளும் தங்கள் தங்கள் அனுபவங்களைக் குறித்து எதிர்பாக்கின்றபடி எழுந்தருளுகின்ற தனித்தலைமைப் பெரும்பதி.” என்கிறார்கள். வள்ளற்பெருமான் சத்திய அறிவால் அறியப்படட உண்மைக் கடவுள் “ஒருவரே”. ஆதாரம்:- சபை விளம்பரம் நாள் 25.11.1872:- “ஆண்டவர் ஒருவர் உள்ளளைர் என்றும், அவர் பொதுப்பட உலகத்திலுள்ளளைர் யாவரும் சுத்த சன்மார்க்கப் பெரும்பயன் பெற்று நித்திய வாழ்வு வாழ்தற்பொருட்டு வெளிப்படக் காரியப்படுகின்றார்”.

அந்த, “ஒருவராகிய” உண்மைக் கடவுள்.

எல்லா அண்டங்களையும்,

எல்லா உலகங்களையும்,

எல்லா உயிர்களையும்,

எல்லா பொருள்களையும்,

மற்றை எல்லாவற்றையும்

தோற்றுவித்து, விளக்கம் செய்வித்து, துரிசு நீக்குவித்து பக்குவம் வருவித்து, பலன் தருவித்து விளங்குகிறார். ஆக, மேற்படி எல்லா அண்டங்கள், உலகங்கள், உயிர்கள், பொருள்கள் மற்றை அனைத்தும் இல்லா நிலையில், தோற்றுவிப்பதற்கு முன் இருந்த, இருக்கின்ற, இருக்கக் கூடிய, மெய்ப் பொருளே “கடவுள்” ஆகும். சத்திய அறிவால் அறியப்படுகின்ற இக்கடவுள் (ஒருவரே) அகம்புற முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்து, சுத்த மெய்யறிவென்னும் பூரணப்பொது வெளியில் அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார்.”

வள்ளலார் பேருபதேசத்தில் மேலும் குறிப்பிடுகையில்; தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங்கவியச் சொல்லாமல், மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள். அணுமாத்திரமேனுந் தெரிவிக்காமல், பிண்ட லட்சணத்தை அண்டத்தில் காட்டினார்கள். யாதெனில் கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதியென்றும் பெயரிட்டு, இடம், வாகனம், ஆயுதம், வடிவம், ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பதுபோல் அமைத்து, உண்மையாக இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள். தெய்வத்துக்குக் கை, கால் முதலியன இருக்குமா? என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள். உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்கùளன்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது, அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள். ஆனால் ஆதியிலே கடவுளின் உண்மையை மறைத்தவன் ஒர் வல்லவன். அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை. அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை அவைகளில் ஏகதேச கர்மசித்திகளைக் கற்பனைகளாகச் சொல்லியிருக்கின்றார்கள். அதற்காக ஒவ்வொரு சித்திக்கும் பத்து வருஷம் எட்டு வருஷம் பிரயாசை எடுத்துக் கொண்டால் அற்ப சித்திகள் அடையலாம். அதற்காக அவற்றில் லட்சியம் வைத்தால், ஆண்டவரிடத்தில் வைத்துக் கொண்டிருக்கின்ற லட்சியம் போய்விடும். ஆண்டவரிடத்தில் வைத்த லட்சியம் போய் விட்டால் நீங்கள் அடையப்போகின்ற பெரிய பிரயோஜனம்போய்விடும். அல்லது, அதில் முயற்சி செய்து அவ்வளவு காலம் உழைத்து அற்பப்பிரயோஜனத்தைத் தெரிந்து கொண்டு, அதனால் ஒரு லாபத்தை ஏகதேசம் அடைந்தால், முக்கிய லாபம் போய்விடும் ஆகையால், அவைகளில் லட்சியம் வைக்காமல், ஆண்டவரிடத்திலேயே லட்சியம் வைக்க வேண்டியது.

இதுபோல், சைவம், வைணவம், முதலிய சமயங்களிலும், வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குமூஉக் குறியாகக் குறித்திருக்கின்றதே அன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்கு காலமில்லை. ஆதலால் அவற்றில் லட்சியம் வைக்கவேண்டாம். ஏனெனில், அவைகளிலும் அவ்வச்சமய மதங்களிலும் அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக்கூடுமேயல்லது. ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானு பவத்தைப் பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது. ஏனெனில் நமக்குக் காலமில்லை. மேலும், இவைகளுக்கு எல்லாம் சாஷி நானேயிருக்கின்றேன். நான் முதலில் சைவ சமயத்தில் லட்சியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவு வென்று அளவு சொல்லமுடியாது. அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும், வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலருக்கும் தெரியும். அந்த லட்சியம் இப்போது எப்படிப் போய்விட்டது. பார்த்தீர்களளை அப்படி லட்சியம் வைத்ததற்குச் சாஷிவேறே வேண்டியதில்லை. நான் சொல்லியிருக்கிற திருவருட்பாலில் அடங்கியிருக்கிற ஸ்தோததிரங்களே போதும்.அந்த ஸ்தோத்திரங்களையும் மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்களையும் சபைக்குக் கொண்டு வந்தால், அவைகளே சாஷி சொல்லிவிடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்த தென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.

இப்போது ஆண்டவர் என்னை ஏறாதநிலைமேல் ஏற்றயிருக்கின்றார். எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப் போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களளை? பெற்றுக் கொள்ளவில்லை. நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லட்சியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலே, அந்த லட்சியம் தூக்கி விடவில்லை.

என்னை யேறாநிலைமிசை யேற்றி விட்டது யாதெனில் தயவு தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது.

அந்தத் தயவுக்கு ஒருமை வரவேண்டும். அந்த ஒருமை இருந்தால் தான் தயவு வரும். தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம். இப்போது என்னுடைய அறிவு அண்டாண்டங்களுக்கு அப்பாலும் கடந்திருக்கிறது. அது அந்த ஒருமையினாலேதான் வந்தது. நீங்களும் என்னைப் போல் ஒருமையுடனிருங்கள்” என்கிறார் வள்ளற்பெருமான்.

ஆக, கடவுளின் உண்மையை குழித்தோண்டி புதைத்துவிட்டு- சூதுவினால் தோன்றியதே வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கற்பனைகள். அவை உண்மை உரைக்காது தெய்வத்தை புறங்கவிய கூறவில்லை. அவை தத்துவ சித்திவிகற்பங்களளைகிய சமயங்களின் தோற்றங்கள் என்கிறார் வள்ளலார்..

வேதம், ஆகமம் புராணம் இதிகாசம் இவையில் இருப்பவைகள்

சமய, மதங்களில் (சைவம், வைணவம், வேதாந்தம் சிந்தாந்தம்) இருப்பவைகள்

சுத்த சன்மார்க்கத்தில் இருப்பது.

வேதம் ஆகமம் புராணம் இதிகாசம் இவையில் இருப்பவைகள்

சமய, மதங்களில் (சைவம், வைணவம், வேதாந்தம் சிந்தாந்தம்) இருப்பவைகள்

சுத்த சன்மார்க்கத்தில்

இருப்பது.

தெய்வம் இன்னபடி என்றும் தெய்வத்தின் உண்மை இன்னதென்றும் கூறவில்லை

இவைகளில் புறங்கவிய தெய்வத்தைப்பற்றிகூறாது குழு உக்குறியாக குறிப்பித்தல்

பெருங்கருணை கடவுளளைக கண்டது

அவைக்கு கைலாசபதி, வைகுண்டபதி சத்தியலோகாதிபதி என்று பெயர்கள் இட்டனர்.

அற்பபிரயோஜனம் பெறக்கூடுமேயன்றி

தயவு என்னும் “கருணையே”

தெய்வத்திற்கு இடம், வாகனம், ஆயுதம், வடிவம், ரூபம் அமைத்திருத்தல்

ஒப்பற்ற வாழ்வு கிட்டாது

இறையருள் பெறுவதற்கு சாதனம் “கருணையே”

கை, கால், முதலியன இருக்கும் தெய்வங்களுக்குரிய அமைத்து காட்டப்படுதல்.

அற்பசித்திகளை பெறக்கூடியதாக மட்டுமே உள்ளது.

கருணை வருவதற்கு ஒருமை வேண்டும் ஒருமைக்கு ஒழுக்கம்.

அருட்பெருவெளியில் எங்கும் பூரணராகி அகத்தும் புறத்தும் நீக்கமற நிறைந்திருக்கும் பெருஞ்ஜோதியாகிய கடவுள் “பெருங்கருணை”. அருள் அனுவில் அருளால் தோன்றுவித்த தோன்றிய உயிர்களிடத்தில் தெய்வஅம்சமாகிய கருணையும் இருக்கும். ஒழுக்கம், அறிவினால் இடைவிடாது நன்முயற்ச்சியில் கருணை சுத்தமாதி மூன்று தேகங்கள் பெறலாம் (ஆதாரம் பக் 394).

இந்நிலையில், ஒருவராகிய பெருங்கருணைக் கடவுள் ஒன்றாகவும் இரண்டாகவும் காண்பது எந்நிலையில் சரியாகும்.? எங்கும் நீக்கமற நிறைத்திருக்கும் இத்திருவருள் ஒரு குறிப்பிட்ட பெயரிட்டு இடம், வாகனம், ஆயுதம், வடிவம், ரூபம் முதலியவையும் அமைக்கின்ற சமய, மத, மார்க்கங்கள் பொய் என்றுதானே கூறவேண்டும்.

மேலும், தன் சமய, மத, மார்க்கங்கள் அனுஷ்ட்டிக்காதவர்கள் /எதிரானவர்கள் கொல்லச் சொல்வதும், பிறர் உயிர்களை தன்னுயிராக பாவிக்கச் சொல்லாத மார்க்கங்களையும் பொய் என்றுதானே கூறமுடியும். மேலும் வள்ளற் பெருமான் கூறுகையில் அவைகளில் ஏகதேச கர்மசித்திகளைக் கற்பனைகளைச் சொல்லியிருக்கின்றார்கள். அதற்காக ஒவ்வொரு சித்திக்கும் பத்து வருஷம், எட்டு வருஷம் பிரயாசை எடுத்துக் கொண்டால் அற்ப சித்தகளை அடையலாம் அதற்காக அவற்றில் லட்சியம் வைத்தால் ஆண்டவரிடத்தில் லட்சியம் போய்விடும் என்கிறார்…. ஆகையால், அவைகளில் லட்சியம் வைக்காமல், ஆண்டவரிடத்திலேயே லட்சியம் வைக்க வேண்டியது என்கிறார் வள்ளலார்.

முடிவுரை:

அன்பர்களே,

சுத்தசன்மார்க்கத்திற்கு எக்காலத்தும் முக்கியத் தடைகளளைவன உலகில் காணும் சமய, மத மார்க்கங்கள் என்று வள்ள பெருமான் குறிப்பிட்டாலும், சத்திய ஞான சபை விளம்பரம் 25.11.1872-ல்

“எல்லா சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும் எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப்பொது நெறியாகி விளங்குவது சுத்த சன்மார்க்கம் ஆகும்” என்கிறார் பெருமான்.

ஆம்,

வள்ளற்பெருமான் கடவுளின் அருளை பெறுவதற்கான சத்தியவழியை (சுத்தசன்மார்க்கத்தை) கண்டார்கள் அந்த சுத்த சன்மார்க்கத்தில் திருவருள் நிலையறிவது எப்படி எனில் என வள்ளலர் கூறுகையில் (பக்கம் 438ல்)

“ஒழுக்கம் நிரம்பி, கருணையே வடிவாக நிற்கும் ‘விசார சங்கல்பம்’ உண்டானால், நாம் தாழுங்குணம் வரும். அத்தருணத்தில் திருவருட் சக்தி பதிந்து அறிவு விளங்கும். ஆதலால், இடைவிடாது கருணை நன்முயற்சியில் பழகல் வேண்டும்.”

“ஒழுக்கம் நிரம்பி சங்கல்பம் உண்டானால் தான் கடவுளின் உண்மை வெளிப்படும்” என்கிறார்கள். கடவுளின் அருளை பெறுவதற்கு கருணையே சாதனம் என்கிறார். அக்கருணைக்கு ஒருமை வேண்டும். ஒருமை என்பது “தனது அறிவு ஒழுக்கம் ஒத்த இடத்தில், தானே கூடும்; மற்ற இடத்தில், தன்னால் இதரர்களுக்கு இம்சை இல்லாது அவர்கள் செய்யினும் தான் சகித்து அடங்கி நிற்பது.”

ஒழுக்கம் நிரப்பிக் கொள்ளுதலே பெருநெறியாக, சத்திய வழியாக வள்ளலாரால் கண்டறியப்பட்டது. இது “உண்மை பொதுநெறி” என்று அனைவராலும் ஒப்புக் கொள்ளக் கூடியதே.

சமரச சுத்தசன்மார்க்க சத்திய சங்கத்தில் “ஒழுக்கம் பயிலுதலே” உள்ளது. சுத்த சன்மார்க்கி என்பவர் ஒழுக்கம் நிரம்பியவர் மற்றும் சத்திய அறிவு பெற்றவர் ஆவார். அதற்கு இடைவிடாது கருணை நன்முயற்சி பழகல் வேண்டும் என்கிறார் வள்ளலார். அதன் விபரம் கடவுள் நிலையும், ஒழுக்கமும் என்ற பாகம்-2ல் காணுங்கள்.

அன்பர்களே!

கால்பாதங்கள் தொட்டு வணங்கி வேண்டுவது “வள்ளலாரின் தனிநெறியை” மறுப்பதற்கோ, சாராமல் இருப்பதற்கோ உரிமையுண்டு. ஆனால் அத்தனிநெறியை திரித்து கூறுவது மிகப்பெரிய பாவம் மற்றும் சட்டப்படி குற்றமும் ஆகும். சுத்தமாதி மூன்று தேகங்களைப் பெற்ற ஞானி “வள்ளலார்”. உலகில் எல்லா அறிஞர்கள், விஞ்ஞானிகள், தத்துவ மேதைகள், அவரவர்களின் முடிவான இறுதியாக சொல்லிய கருத்துக்கள், அறிவிப்புகள், போதனைகள் மட்டுமே எடுத்துக் கொண்டிருக்கும் போது வள்ளலாரின் முடிவான நெறியை, இறுதியாகச் சொல்லிய உண்மையை உள்ளபடியே வெளிப்படுத்தாமலும் அல்லது மறைத்து திரித்துக் கூறுவது அறியாமையிலா? அல்லது அறிந்தும் செய்யும் சூதுவினாலா? இதற்கு பதில் உங்களின் ஒழுக்கத்திற்கும் அறிவிற்கும் விட்டுவிடுகிறேன்

 

unmai

Channai,Tamilnadu,India