March 29, 2024
tamil katturai APJ arul

இஃது ரகசியம். எதனால் இங்கு சிலை,உருவங்கள், தலங்கள்,ஆச்சாரங்கள் இல்லை? –ஏபி ஜெ அருள்

நம் வள்ளலார் நம்மை நேரடியாகவே ஆன்ம அறிவை கொண்டே விசாரிக்கச் சொல்கிறார்கள். என் மார்க்கம் அறிவுமார்க்கம். என் மார்க்கம் உண்மையறியும் மார்க்கம் என்கிறார் வள்ளலார்.
எப்படி என்று ந‌ம் வள்ளலாரின் சத்திய வாக்கியத்தைக் கொண்டே பார்ப்போம்.

இந்திரிய அறிவு:
ஒரு பொருளினது நாம ரூப குண குற்றங்களை விசாரியாமல் அந்தப் பொருளைக் காணுதல் இந்திரியக்காட்சி, இந்திரிய அறிவு.
மனஅறிவு:
அதன் நாம ரூபத்தையும் குண குற்றங்களையும் விசாரித்தறிதல் மனஅறிவு.
ஜீவ அறிவு:
அதன் பிரயோஜனத்தை யறிதல் ஜீவ அறிவு.
ஆன்மஅறிவு:
அந்தப் பொருளினது உண்மையை அறிதல் ஆன்மஅறிவு.
ஞானசபை:
ஞானசபை யென்பது ஆன்மப் பிரகாசம்.
அந்தப் பிரகாசத்திற்குள் ளிருக்கும் பிரகாசம் கடவுள்.
அந்த உள்ளொளியின் அசைவே நடனம்.
இவற்றைத்தான் சித்சபை அல்லது ஞானசபை என்றும்,
நடராஜர் என்றும், நடனம் என்றும் சொல்லுகிறது.
ஆன்மாவும் ஜீவனும்
ஆன்மா தனித்தே யிருக்கும்.
ஜீவன் மன முதலாகிய அந்தக் கரணக் கூட்டத்தின் மத்தியிலிருக்கும்.
காட்சி
பூர்வம் – புறப்புறம், இந்திரியக் காட்சி.
பூர்வ பூர்வம் – புறம், கரணக் காட்சி.
உத்தரம் – அகப்புறம், ஜீவக் காட்சி.
உத்தரோத்தரம் – அகம், ஆன்மக் காட்சி.ஞான வகை:
உபாய ஞானம் – ஜீவஅறிவு, நக்ஷத்திரப் பிரகாசம்.
உண்மை ஞானம் – ஆன்மஅறிவு, சந்திரப் பிரகாசம்.
அனுபவ ஞானம் – கடவுளறிவு, சூரியப் பிரகாசம்.
உபாய ஞான மென்பது நக்ஷத்திரப் பிரகாசம்போல் தோன்றிய ஜீவஅறிவு. உண்மை ஞான மென்பது சந்திரப் பிரகாசம் போல் தோன்றிய ஆன்மஅறிவு. அனுபவ ஞான மென்பது எல்லா வஸ்துக்களையும் தெரிந்து அனுபவிக்கச் செய்கின்ற சூரியப் பிரகாசம் போன்ற கடவுள்அறிவு. ஆகையால் கடவுளை ஆன்மஅறிவைக் கொண்டு அறியவேண்டும்.
சுத்த சன்மார்க்க சாதனம்
சுத்த சன்மார்க்க சாதனம் 2 வகைப்படும்:
பரோபகாரம், சத்விசாரம், பரோபகாரம் என்பது தேகத்தாலும், வாக்காலும், திரவியத்தாலும் உபகாரஞ் செய்வது.
சத்விசாரம் என்பது நேரிடாத பக்ஷத்தில் ஆன்மநேய சம்பந்தமான தயாவிசாரத்தோடு இருப்பது.
கடவுளது புகழை விசாரித்தல், ஆன்மாவின் உண்மையை விசாரித்தல்,
தன் சிறுமையைக் கடவுளிடத்தில் விண்ணப்பித்தல்.
இந்த மார்க்கத்தால்தான் சுத்தமாதி மூன்று தேகங்களைப் பெற வேண்டும்.

சத்திய ஞானாசாரம்
ஜாதியாசாரம், குலாசாரம், ஆசிரமாசாரம், லோகாசாரம், தேசாசாரம், கிரியாசாரம், சமயாசாரம், மதாசாரம், மரபாசாரம், கலாசாரம், சாதனாசாரம், அந்தாசாரம், சாத்திராசாரம் முதலிய ஆசாரங்களொழிந்து, சுத்த சன்மார்க்க சத்திய ஞானாசாரம் ஒன்றே இது தொட்டு வழங்க வேண்டும். அதாவது, பெருந்தயவே வடிவமாக இருக்க வேண்டும்.
அந்நியரின் தோஷம் விசாரியாமல் இருக்க வேண்டும்.
உபாய வகையை நம்புதல் கூடாது;
உண்மையை நம்புதல் வேண்டும்.
இஃது ரகசியம். (இரகசியம் என்றால் உண்மை. இது சத்தியம் ஆகும்.)
மேலும் அறிய பார்க்க:www.vallalar.org

 

vallalar sky.jpg

unmai

Channai,Tamilnadu,India