Vadalur Vallalar Monthly Poosam Calendar 2022
Vadalur Vallalar Sathya Gnana Sabai Monthly Poosam Calendar 2022
Jothy Dharsan timings at Gnana Sabai: Evening 7:45pm to 8:45pm [With half screen hiding Jothi]
Gnana sabai daily Open Timings: Daily Morning 8am to 8pm
Gnana Sabai-Door opens for daily to “Deebarathanai to screen” [Below timings]:
கருணை மாத இதழ் Jan-2022 [தை பூச வெளியீடு]
வள்ளலாரின் சத்திய வார்த்தை ” தனி நெறி “
வள்ளலாரின் சத்திய வார்த்தை ” தனி நெறி ”
தனி நெறி???
ஏன்?
எங்ஙனம்?
எதற்காக?
– – ஏபிஜெ. அருள்.
” தனி நெறி” என அறிவிக்க வேண்டும். எங்ஙனம்? எதற்கு?
எதற்கு நம் வள்ளலார் மார்க்கம் புதிய மார்க்கம் எனவும் தனி நெறி எனவும் விளம்புகை செய்ய வேண்டும்?
நம் வள்ளலார்க்கு முன்பு இருந்த சன்மார்க்கங்கள் இரண்டு
1.சமய சன்மார்க்கம்
2.மத சன்மார்க்கம்.
3வது புதிய மார்க்கத்தை நம் வள்ளலார் 19ம் நூற்றாண்டில் தோற்றுவிக்கிறார். மேற்படியாக சன்மார்க்கங்கள் மூன்று என்கிறார் வள்ளலார்.
இப்படி ஒரு புதிய மார்க்கம் தோன்றியுள்ளதை உலகிற்கு விரைந்து வெளிப்பட செய்ய வேண்டும் என ஆன்ம நேயம் கொள்ளுதலும் நம் தகுதியில் ஒன்றே. இதை விரைந்து வெளிப்படுத்தும் திறனை கொண்டது அரசுகளே. அரசு நம் மார்க்கத்தை ஒரு புதிய மார்க்கம் எனவும் தனி நெறி எனவும் விளம்புகை செய்தால் நமக்கு பல சட்டப் பலன்களும் உதாரணமாக சான்றிதழில் நாம் “சுத்த சன்மார்க்கம்” சார்ந்தவர் என்று போட அனுமதியும், இதன் மூலம் உலகில் அனைத்து நாட்டவர்க்கும் நமக்கு தெரிந்த உண்மை பொது நெறி விரைந்து வெளிப்பட்டும், நம் வடலூர் நிலையங்கள் அரசின் கீழ் ஒரு சிறப்பு பார்வையிலும், நியமிக்கப்படும் அறங்காவலர்கள் நம்மவர்களாகவும் நியமிக்கப்படுவர். நம் நிலைய வருமானத்தை நம் தனி கொள்கை, நிலைய வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தமுடியும். நிலையத்தில் முரணான வகையில் சமயமத சடங்குகள் நடக்காது. நிற்க, நிலையம் வள்ளலாரின் சுத்தசன்மார்க்க நெறிப்படி நடக்க வேண்டும் என 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் கடந்த 12 வருடங்களில் போடப்பட்டுள்ளது. இன்னும் சத்திய ஞானசபை வழக்கு நிலுவையில் தான் உள்ளது. அந்த வழக்கில் வள்ளலார் சமயத்தை கைவிடவில்லை எனவும், அவர் பூசாரிகளிடம் லிங்க விக்கிரகத்தை கொடுத்து ஞானசபையில் வைத்து வழிபடச் சொன்னார் என்பதே எதிர்தரப்பு வாதம். இப்படிப்பட்ட முரண்பட்ட விசயங்கள் மீண்டும் வராமல் தடுக்க வேண்டுமாயின், வள்ளலாரின் சுத்தசன்மார்க்கம் ஒரு புதிய மார்க்கம் எனவும் அவர்தம் நெறி தனி நெறி எனவும் சட்டப்படி அரசு முடிவு செய்ய வேண்டும். மாநில அரசவைக்கு அதிகாரம் உள்ளது என்று நாம் ஒரு உதாரணத்திற்காக கர்நாடகா அரசு லிங்காயத்தை தனி மதம் என அறிவித்ததை எடுத்துச் சொல்லப்பட்டது. அரசு செய்யாத பட்சத்தில், மேதகு நீதிமன்றம் நாடுவோம். ஆக, சுத்தசன்மார்க்கம் சார்ந்தவர்களுக்கும் பல பயன்களும், மகிழ்ச்சியும், இம்மார்க்கத்தை விரைந்து அறிந்திடஉலகத்தார்க்கும் பயன் கிடைக்கும்.
நேரத்தை வீணடிக்காமல் விசாரம் செய்வோம்.
நெறி என்றால் கொள்கை, கோட்பாடு எனப்படும். வள்ளலாரின் சுத்தசன்மார்க்கம் எந்த சமய மதக் கோட்பாட்டை சொல்கிறது என்றால், இம்மார்க்கம் தனி நெறி, கொள்கையை சொல்கிறது. எல்லாவற்றையும் உள்ளடக்கி கடந்து தனி நெறியாக உள்ளது.
வள்ளலார் மிக அதிகளவில் பயன்படுத்திய வார்த்தையில் ஒன்றுதான் “தனி” என்ற சொல்.
இம்மார்க்கத்தில் செல்லப்பட்டுள்ள சத்திய வார்த்தைகள் அனைத்தும் தனித் தன்மை, தனிப்பொருள் கொண்டது. உ. ம்:
தனி அறிவு, தனி இயற்கை, தனி அனுபவம், தனி அருட்பெருஞ்ஜோதி, தனிக்கருத்து, தனி வெளி, தனிச்சுடர்,
தனி நடராஜர், தனிப்பெருங்கருணை,
தனி அருள், தனி ஞானசபை, தனிவடிவம், தனிச்சோதி, தனிநடம், இதை போல் நூற்றுக் கணக்கான “தனி” யுடன் கூடிய வார்த்தைகளை காணலாம். ஆக, வள்ளலார் சொல்லிய கொள்கை, நெறி தனித்தன்மை கொண்டதும் அதே நேரத்தில் என் நெறி எல்லா சமயமத மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறியாக உள்ளது என்கிறார் வள்ளலார் . இங்ஙனம் ஒரு தனிப்பெயரை தன் மார்க்கத்திற்கு கொடுப்பது மூலம் வள்ளலாரின் மார்க்கம் ஒரு புதிய மார்க்கம் ஆகும்.
தன் நெறி “தனி நெறி” எனத் தெளிவாக கீழ்வருமாறு பாடல்கள் மூலம் அறிவிக்கிறார் வள்ளலார்.
#6ஆறாம் திருமுறை / திருவருள் விழைதல்
தருணம்இஞ் ஞான்றே சுத்தசன் மார்க்கத் தனிநெறி உலகெலாம் தழைப்பக்கருணையும் சிவமே பொருள்எனக் கருதும்
கருத்தும்உற் றெம்மனோர் களிப்பப்
பொருள்நிறை ஓங்கத் தெருள்நிலை விளங்கப்புண்ணியம் பொற்புற வயங்க அருள்நயந் தருள்வாய் திருச்சிற்றம் பலத்தே
அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
##ஆறாம் திருமுறை / பொதுநடம் புரிகின்ற பொருள்
சிதத்தொளிர் பரமே பரத்தொளிர் பதியேசிவபத அனுபவச் சிவமே
மதத்தடை தவிர்த்த மதிமதி மதியே
மதிநிறை அமுதநல் வாய்ப்பே
சதத்திரு நெறியே தனிநெறித் துணையே சாமியே தந்தையே தாயே
புதப்பெரு வரமே புகற்கருந் தரமே
பொதுநடம் புரிகின்ற பொருளே.
தன் மார்க்கம் “தனி” என்பதற்கு பாடல்:
ஆறாம் திருமுறை / ஜோதியுள் ஜோதி
தருநெறி எல்லாம்உள் வாங்கும் – சுத்தசன்மார்க்கம் என்றோர் தனிப்பேர்கொண் டோங்கும்
திருநெறிக் கேசென்று பாரீர் – திருச்சிற்றம் பலத்தே திருநட ஜோதி.
இந்த தனி நெறியில், தனிப் பதி,
புதிய மற்றும் பொது வழி, தனிப்பெரும்பயன் உள்ளது.
#நாம் இத்தனி நெறியில் கருணை நன்முயற்சியில் இடைவிடாது பயில்வோம்.
# மற்றவர்களுக்கு இவ்வுண்மையை எடுத்துரைப்போம்.
# புதிய மார்க்கம் மற்றும் தனி நெறி என மத்திய அரசு விளம்புகை செய்ய மாநில அரசை பரிந்துரைக்க வேண்டுவோம் .
# இதன் மூலம் இனி நாம் சுத்தசன்மார்க்கம் சார்ந்தவரென்று அரசிடம் பதிவு செய்வோம்.
#வள்ளலார் கட்டளைப்படி சாகாகல்வி கற்க தீவிர விருப்பம் கொள்வோம்.
நன்றியுடன் : ஏபிஜெ அருள்.
தமிழராய் எல்லோரும் ஆவோம் அதுவே உண்மை.
தமிழராய் எல்லோரும் ஆவோம் அதுவே உண்மை.— APJ ARUL

வடலூர் தை பூசம் – தமிழக அரசு விடுமுறை 2021
Suddha-Sanmarga-Thani-Uraiyadal-video
The real Compassion revealed in the Judgement of the Honourable Thiru Justice GRSJ
High Court Judgement
Lalitha-Elephant-High-court-judgement
The real Compassion revealed in the Judgement of the Honourable Thiru Justice GRSJ
Court takes into account 20-year bond between ‘Lalitha’ and Sheik Mohammed
In a significant order, Justice G.R. Swaminathan of the Madras High Court permitted the caretaker of an elephant to retain her custody, after taking into consideration the 20-year bond between them.
Justice Swaminathan observed, “Elephants are known to be sensitive and possessed of self-awareness. They have passed what is known as a “mirror test”. The German naturalist Peter Wohlleben, after years of direct, personal observation, says that animals also feel the very same emotions which the humans are capable of. Feelings of love, grief and compassion are equally found in the animals.
The court was hearing the petition filed by caretaker Sheik Mohammed of Virudhunagar district. He had purchased the elephant, Lalitha, in 2000 and applied for the transfer of ownership in 2002. The request was rejected in 2020. He sought the rejection order be set aside and grant him the certificate of ownership.
Considering the plight of the elephant and her caretaker, the judge made a surprise inspection to ascertain the status of Lalitha in Chokkanathanputhur in Virudhunagar district. “When I reached the spot, I found her being sumptuously fed. What pleased me was that she was not at all chained…I checked if there are any injury marks on her. There were none. The elephant looked happy and healthy. Lalitha exhibited great friendliness,” the judge said.
“Article 51A (g) of the Constitution of India calls upon us to have compassion for living creatures. Lalitha is entitled to express her normal patterns of behavior. She has been with her caretaker for more than 20 years…The department was issuing directives from time to time and they were complied with by the petitioner. Microchip has been implanted in her body so that her movements can be tracked. She has developed a great bonding with her caretakers. Forcible relocation in alien surroundings is sure to traumatise her. I, therefore, felt that the approach that we adopt in child custody cases must be followed in the case of Lalitha also,” the judge observed.
Further, the judge said that when he questioned the caretakers regarding Lalitha’s maintenance he was told that she was taken to some of the well known temples and dargahs of south Tamil Nadu and the organizers of the religious functions pay for her majestic participation. “Lalitha does not beg on the roads. Her dignity is intact,” the judge said. He took cognizance of the fact that veterinarians appointed by the department had certified that she was being maintained properly by the petitioner.
The State had argued that no person, without previous permission in writing of the authority concerned, can keep in possession, custody, control or transfer any wild animal. The court held that therefore the request for the certificate was rightly rejected. The court, however, directed the authorities to permit the caretaker to keep the custody of the elephant and granted the authorities the liberty to inspect the elephant at any time.
**அக்டோபர் 5 வள்ளலார் பிறந்த நாள் ** வள்ளலாரைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்


ஸ்ரீ சங்கராச்சாரியாரும் — திருவருட்பிரகாச வள்ளலாரும்
இதே நாள் அன்று #வள்ளலார் அவர்கள் ஒரு மகாபேருபதேசம் ஆற்றினார்கள்







முருகா முருகா …














வள்ளலார் என்ன ஆனார்?
வள்ளலார் என்ன ஆனார்? – ஏபிஜெ அருள்
எதிரிகள் வள்ளலாரை இல்லாமல் செய்து விட்டார்கள் என்பது மிகவும் கீழ்தரமான, ஆதாரமற்ற பேச்சு ஆகும். வள்ளலாரின் கொள்கையே ” சாகாமல் இருப்பதே”. நான் மரணமில்லா பெருவாழ்வை பெற்றேன் என்ற வள்ளலாரின் சத்திய வார்த்தையை உலகத்தார் விசாரிக்கும் நாள்வரும் தருணம் இதுவே. — ஏபிஜெ அருள். 🙏
# ஆதாரம் # வள்ளலார் ” சாகா கல்வி ” குறித்து பாடியப் பாடல்களின் தொகுப்பு — ஏபிஜெ அருள்
#6-009 ஆறாம் திருமுறை / முறையீடு
சாகாத தலைஅறியேன் வேகாத காலின்
தரம்அறியேன் போகாத தண்ரை அறியேன்
ஆகாய நிலைஅறியேன் மாகாய நிலையும்
அறியேன்மெய்ந் நெறிதனைஓர் அணுஅளவும் அறியேன்
மாகாத லுடையபெருந் திருவாளர் வழுத்தும்
மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ
ஏகாய200 உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
#6-034 ஆறாம் திருமுறை / இறை எளிமையை வியத்தல்
சாகாத கல்வியிலே தலைகாட்டிக் கொடுத்தீர்
தடையறியாக் கால்காட்டித் தரம்பெறவும் அளித்தீர்
மாகாதல் உடையவனா மனங்கனிவித் தழியா
வான்அமுதும் மெய்ஞ்ஞான மருந்தும்உணப் புரிந்தீர்
போகாத புனலாலே சுத்தஉடம் பினராம்
புண்ணியரும் நண்ணரிய பொதுநிலையுந் தந்தீர்
நாகாதி பதிகளும்நின் றேத்தவளர்க் கின்றீர்
நடராஜ ரேநுமக்கு நான்எதுசெய் வேனே.
#6-037 ஆறாம் திருமுறை / அருள்விளக்க மாலை
கையாத தீங்கனியே கயக்காத அமுதே
கரையாத கற்கண்டே புரையாத கரும்பே
பொய்யாத பெருவாழ்வே புகையாத கனலே
போகாத புனலேஉள் வேகாத காலே
கொய்யாத நறுமலரே கோவாத மணியே
குளியாத பெருமுத்தே ஒளியாத வெளியே
செய்யாத பேருதவி செய்தபெருந் தகையே
தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
#6-041 ஆறாம் திருமுறை / காட்சிக் களிப்பு
பாலானைத் தேனானைப் பழத்தி னானைப்
பலனுறுசெங் கரும்பானைப் பாய்ந்து வேகாக்
காலானைக் கலைசாகாத் தலையி னானைக்
கால்என்றும் தலையென்றும் கருதற் கெய்தா
மேலானை மேல்நிலைமேல் அமுதா னானை
மேன்மேலும் எனதுளத்தே விளங்கல் அன்றி
ஏலானை என்பாடல் ஏற்றுக் கொண்ட
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
#6-087 ஆறாம் திருமுறை / அருட்கொடைப் புகழ்ச்சி
தோலைக் கருதித் தினந்தோறும் சுழன்று சுழன்று மயங்கும்அந்த
வேலைக் கிசைந்த மனத்தைமுற்றும் அடக்கி ஞான மெய்ந்நெறியில்
கோலைத் தொலைத்துக் கண்விளக்கம் கொடுத்து மேலும் வேகாத
காலைக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
#6-097 ஆறாம் திருமுறை / நடராஜபதி மாலை
சாகாத கல்வியே கல்விஒன் றேசிவம்
தான்என அறிந்தஅறிவே
தகும்அறிவு மலம்ஐந்தும் வென்றவல் லபமே
தனித்தபூ ரணவல்லபம்
வேகாத காலாதி கண்டுகொண் டெப்பொருளும்
விளையவிளை வித்ததொழிலே
மெய்த்தொழில தாகும்இந் நான்கையும் ஒருங்கே
வியந்தடைந் துலகம்எல்லாம்
மாகாத லுறஎலாம் வல்லசித் தாகிநிறை
வானவர மேஇன்பமாம்
மன்னும்இது நீபெற்ற சுத்தசன் மார்க்கத்தின்
மரபென் றுரைத்தகுருவே
தேகாதி மூன்றும்நான் தருமுன்அருள் செய்தெனைத்
தேற்றிஅருள் செய்தசிவமே
சிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளே
தெய்வநட ராஜபதியே.
#6-098 ஆறாம் திருமுறை / சற்குருமணி மாலை
சாகாத தலைஇது வேகாத காலாம்
தரம்இது காண்எனத் தயவுசெய் துரைத்தே
போகாத புனலையும் தெரிவித்தென் உளத்தே
பொற்புற அமர்ந்ததோர் அற்புதச் சுடரே
ஆகாத பேர்களுக் காகாத நினைவே
ஆகிய எனக்கென்றும் ஆகிய சுகமே
தாகாதல் எனத்தரும் தருமசத் திரமே
தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
#6-106 ஆறாம் திருமுறை / சுத்த சிவநிலை
சாகாத கல்வித் தரம்அறிதல் வேண்டுமென்றும்
வேகாத கால்உணர்தல் வேண்டுமுடன் – சாகாத்
தலைஅறிதல் வேண்டும் தனிஅருளால் உண்மை
நிலைஅடைதல் வேண்டும் நிலத்து.
#6-113 ஆறாம் திருமுறை / அம்பலவாணர் வருகை
ஏகாத கல்விதான் சாகாத கல்வியென்
றேகாத லாற்சொன்னீர் வாரீர்
வேகாத காலினீர் வாரீர். வாரீர்
#6-131 ஆறாம் திருமுறை / சின்னம் பிடி
வேகாதகால்உணர்ந்து சின்னம் பிடி
வேகாத நடுத்தெரிந்து சின்னம் பிடி
சாகாததலைஅறிந்து சின்னம் பிடி
சாகாத கல்விகற்றுச் சின்னம் பிடி.
மரணம்
#5-005 ஐந்தாம் திருமுறை / பிரார்த்தனை மாலை
தலனே அடியர் தனிமன மாம்புகழ் சார்தணிகா
சலனே அயன்அரி ஆதியர் வாழ்ந்திடத் தாங்கயில்வேல்
வலனேநின் பொன்அருள் வாரியின் மூழ்க மனோலயம்வாய்ந்
திலனேல் சனன மரணம்என் னும்கடற் கென்செய்வனே.
#6-014 ஆறாம் திருமுறை / சிற்சபை விளக்கம்
கரண வாதனை யால்மிக மயங்கிக்
கலங்கி னேன்ஒரு களைகணும் அறியேன்
மரணம் நீக்கிட வந்துநிற் கின்றேன்
வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
இரணன் என்றெனை எண்ணிடேல் பிறிதோர்
இச்சை ஒன்றிலேன் எந்தைநின் உபய
சரணம் ஈந்தருள் வாய்வடல் அரசே
சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
#6-087 ஆறாம் திருமுறை / அருட்கொடைப் புகழ்ச்சி
மதியைக் கெடுத்து மரணம்எனும் வழக்கைப் பெருக்கி இடர்ப்படும்ஓர்
விதியைக் குறித்த சமயநெறி மேவா தென்னைத் தடுத்தருளாம்
பதியைக் கருதிச் சன்மார்க்கப் பயன்பெற் றிடஎன் உட்கலந்தோர்
கதியைக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
#6-087 ஆறாம் திருமுறை / அருட்கொடைப் புகழ்ச்சி
அருணா டறியா மனக்குரங்கை அடக்கத் தெரியா ததனொடுசேர்ந்
திருணா டனைத்தும் சுழன்றுசுழன் றிளைத்துக் களைத்தேன் எனக்கந்தோ
தெருணா டுலகில் மரணம்உறாத் திறந்தந் தழியாத் திருஅளித்த
கருணா நிதியே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
#6-099 ஆறாம் திருமுறை / தத்துவ வெற்றி
மரணம்எனும் பெருந்திருட்டு மாபாவிப் பயலே
வையகமும் வானகமும் மற்றகமும் கடந்தே
பரணமுறு பேரிருட்டுப் பெருநிலமும் தாண்டிப்
பசைஅறநீ ஒழிந்திடுக இங்கிருந்தாய் எனிலோ
இரணமுற உனைமுழுதும் மடித்திடுவேன் இதுதான்
என்னுடையான் அருள்ஆணை என்குருமேல் ஆணை
அரணுறும்என் தனைவிடுத்தே ஓடுகநீ நான்தான்
அருட்பெருஞ்ஜோ திப்பதியை அடைந்தபிள்ளை காணே.
#6-107 ஆறாம் திருமுறை / மரணமிலாப் பெருவாழ்வு
சுகமறியீர் துன்பம்ஒன்றே துணிந்தறிந்தீர் உலகீர்
சூதறிந்தீர் வாதறிந்தீர் தூய்மையறிந் திலிரே
இகம்அறியீர் பரம்அறியீர் என்னேநுங் கருத்தீ
தென்புரிவீர் மரணம்வரில் எங்குறுவீர் அந்தோ
அகமறிந்தீர்359 அனகமறிந் தழியாத ஞான
அமுதவடி வம்பெறலாம் அடைந்திடுமின் ஈண்டே
முகமறியார் போலிருந்தீர் என்னைஅறி யீரோ
முத்தரெலாம் போற்றும்அருட் சித்தர்மகன் நானே.
#6-107 ஆறாம் திருமுறை / மரணமிலாப் பெருவாழ்வு
சேர்ந்திடவே ஒருப்படுமின் சமரசசன் மார்க்கத்
திருநெறியே பெருநெறியாம் சித்திஎலாம் பெறலாம்
ஓர்ந்திடுமின் உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர்
உலகமெலாம் கண்டிடும்ஓர் உளவைஅறிந் திலிரே
வார்ந்தகடல் உலகறிய மரணம்உண்டே அந்தோ
மரணம்என்றால் சடம்எனும்ஓர் திரணமும்சம் மதியா
சார்ந்திடும்அம் மரணமதைத் தடுத்திடலாம் கண்டீர்
தனித்திடுசிற் சபைநடத்தைத் தரிசனஞ்செய் வீரே.
#6-107 ஆறாம் திருமுறை / மரணமிலாப் பெருவாழ்வு
இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர்
இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர்
மறந்திருந்தீர் பிணிமூப்பில் சம்மதமோ நுமக்கு
மறந்தும்இதை நினைக்கில்நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர்
சிறந்திடுசன் மார்க்கம்ஒன்றே பிணிமூப்பு மரணம்
சேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே
பிறந்தபிறப் பிதிற்றானே நித்தியமெய் வாழ்வு
பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே.
#6-107 ஆறாம் திருமுறை / மரணமிலாப் பெருவாழ்வு
நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு
நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.
#6-107 ஆறாம் திருமுறை / மரணமிலாப் பெருவாழ்வு
பொருட்டலநும் போகம்எலாம் பொய்யாம்இங் கிதுநான்
புகலுவதென் நாடொறும் புந்தியிற்கண் டதுவே
மருட்டுலகீர் இருட்டுலகில் மடிவதழ கலவே
மரணமிலாப் பெருவாழ்வில் வாழவம்மின் இங்கே
பொருட்டிறஞ்சேர் சுத்தசிவ சன்மார்க்க நிலையில்
பொருந்துமின்சிற் சபைஅமுதம் அருந்துமின்அன் புடனே
அருட்டிறஞ்சேர்ந் தெண்ணியவா றாடுமினோ நும்மை
அடுப்பவரே அன்றிநின்று தடுப்பவர்மற் றிலையே.
#6-116 ஆறாம் திருமுறை / பந்தாடல்
வாழிஎன் தோழிஎன் வார்த்தைகேள் என்றும்
மரணமில் லாவரம் நான்பெற்றுக் கொண்டேன்
சூழியற் செஞ்சுடர் தோற்றுறு கீழ்பால்
தூய்த்திசை நோக்கினேன் சீர்த்திகழ் சித்தி
ஊழிதோ றூழிநின் றாடுவன் நீயும்
உன்னுதி யேல்இங்கே மன்னரு ளாணை
ஆழி கரத்தணிந் தாடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்
சாகான் கிழவன் தளர்கின்றான் என்றிவண்நீ
ஓகாளம் செய்வதனை ஓர்ந்திலையோ – ஆகாத
#4-001 நான்காம் திருமுறை / அன்பு மாலை
திருநெறிசேர் மெய்அடியர் திறன்ஒன்றும் அறியேன்
செறிவறியேன் அறிவறியேன் செய்வகையை அறியேன்
கருநெறிசேர்ந் துழல்கின்ற கடையரினுங் கடையேன்
கற்கின்றேன் சாகாத கல்விநிலை காணேன்
பெருநெறிசேர் மெய்ஞ்ஞான சித்திநிலை பெறுவான்
பிதற்றுகின்றேன் அதற்குரிய பெற்றியிலேன் அந்தோ
வருநெறியில் என்னைவலிந் தாட்கொண்ட மணியே
மன்றுடைய பெருவாழ்வே வழங்குகநின் அருளே.
#4-001 நான்காம் திருமுறை / அன்பு மாலை
அந்தோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
அறிவறியாச் சிறியேனை அறிவறியச் செய்தே
இந்தோங்கு சடைமணிநின் அடிமுடியுங் காட்டி
இதுகாட்டி அதுகாட்டி என்நிலையுங் காட்டிச்
சந்தோட சித்தர்கள்தந் தனிச்சூதுங் காட்டி
சாகாத நிலைகாட்டிச் சகசநிலை காட்டி
வந்தோடு184 நிகர்மனம்போய்க் கரைந்த இடங் காட்டி
மகிழ்வித்தாய் நின்அருளின் வண்மைஎவர்க் குளதே.
#5-019 ஐந்தாம் திருமுறை / நெஞ்சொடு புலத்தல்
வாழும் படிநல் அருள்புரியும் மருவுந் தணிகை மலைத்தேனைச்
சூழும் கலப மயில்அரசைத் துதியாப் பவமும் போதாமல்
வீழும் கொடியர் தமக்கன்றி மேவா நினைவும் மேவிஇன்று
தாழும் படிஎன் தனைஅலைத்தாய் சவலை மனம்நீ சாகாயோ.
#5-082 ஐந்தாம் திருமுறை / பேரன்புக் கண்ணி
கற்றதென்றுஞ் சாகாத கல்வியென்று கண்டுகொண்டுன்
அற்புதச்சிற் றம்பலத்தி லன்புவைத்தேன் ஐயாவே.
#5-082 ஐந்தாம் திருமுறை / பேரன்புக் கண்ணி
வாடலறச் சாகா வரங்கொடுக்கு மென்றுமன்றில்
ஆடலடிப் பொன்மலர்க்கே அன்புவைத்தேன் ஐயாவே.
#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்
சாகாக் கலைநிலை தழைத்திடு வெளியெனும்
ஆகா யத்தொளி ரருட்பெருஞ் ஜோதி
#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்
கல்வியுஞ் சாகாக் கல்வியு மழியாச்
செல்வமு மளித்த சிவமே சிவமே
#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்
சாகாக் கல்வியின் றரமெலாங் கற்பித்
தேகாக் கரப்பொரு ளீந்தசற் குருவே
#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்
சாகா வரமுந் தனித்தபே ரறிவும்
மாகா தலிற்சிவ வல்லப சத்தியும்
#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்
சாகாக் கல்வியின் றரமெலா முணர்த்திச்
சாகா வரத்தையுந் தந்துமேன் மேலும்
#6-009 ஆறாம் திருமுறை / முறையீடு
சாகாத தலைஅறியேன் வேகாத காலின்
தரம்அறியேன் போகாத தண்ரை அறியேன்
ஆகாய நிலைஅறியேன் மாகாய நிலையும்
அறியேன்மெய்ந் நெறிதனைஓர் அணுஅளவும் அறியேன்
மாகாத லுடையபெருந் திருவாளர் வழுத்தும்
மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ
ஏகாய200 உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
#6-009 ஆறாம் திருமுறை / முறையீடு
தத்துவம்என் வசமாகத் தான்செலுத்த அறியேன்
சாகாத கல்விகற்கும் தரஞ்சிறிதும் அறியேன்
அத்தநிலை சத்தநிலை அறியேன்மெய் அறிவை
அறியேன்மெய் அறிந்தடங்கும் அறிஞரையும் அறியேன்
சுத்தசிவ சன்மார்க்கத் திருப்பொதுவி னிடத்தே
தூயநடம் புரிகின்ற ஞாயமறி வேனோ
எத்துணையும் குணமறியேன் எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
#6-014 ஆறாம் திருமுறை / சிற்சபை விளக்கம்
சிரத்தை ஆதிய சுபகுணம் சிறிதும்
சேர்ந்தி லேன்அருட் செயலிலேன் சாகா
வரத்தை வேண்டினேன் வந்துநிற் கின்றேன்
வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
கரத்தை நேர்உளக் கடையன்என் றெனைநீ
கைவி டேல்ஒரு கணம்இனி ஆற்றேன்
தரத்தை ஈந்தருள் வாய்வடல் அரசே
சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
#6-015 ஆறாம் திருமுறை / பெற்ற பேற்றினை வியத்தல்
களித்தென துடம்பில் புகுந்தனை எனது
கருத்திலே அமர்ந்தனை கனிந்தே
தெளித்தஎன் அறிவில் விளங்கினை உயிரில்
சிறப்பினால் கலந்தனை உள்ளம்
தளிர்த்திடச் சாகா வரங்கொடுத் தென்றும்
தடைபடாச் சித்திகள் எல்லாம்
அளித்தனை எனக்கே நின்பெருங் கருணை
அடியன்மேல் வைத்தவா றென்னே.
#6-032 ஆறாம் திருமுறை / சிவானந்தத் தழுந்தல்
தானந்தம் இல்லாத தன்மையைக் காட்டும்
சாகாத கல்வியைத் தந்தெனக் குள்ளே
தேனந்தத் தெள்ளமு தூற்றிப் பெருக்கித்
தித்தித்துச் சித்தம் சிவமய மாக்கி
வானந்தம் ஆதியும் கண்டுகொண் டழியா
வாழ்க்கையில் இன்புற்றுச் சுத்தவே தாந்த
ஆனந்த வீதியில் ஆடச்செய் தீரே
அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
#6-032 ஆறாம் திருமுறை / சிவானந்தத் தழுந்தல்
தத்துவம் எல்லாம்என் தன்வசம் ஆக்கிச்
சாகாவ ரத்தையும் தந்தெனைத் தேற்றி
ஒத்துவந் துள்ளே கலந்துகொண் டெல்லா
உலகமும் போற்ற உயர்நிலை ஏற்றிச்
சித்திஎ லாம்செயச் செய்வித்துச் சத்தும்
சித்தும் வெளிப்படச் சுத்தநா தாந்த
அத்திரு வீதியில் ஆடச்செய் தீரே
அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
#6-034 ஆறாம் திருமுறை / இறை எளிமையை வியத்தல்
சாகாத கல்வியிலே தலைகாட்டிக் கொடுத்தீர்
தடையறியாக் கால்காட்டித் தரம்பெறவும் அளித்தீர்
மாகாதல் உடையவனா மனங்கனிவித் தழியா
வான்அமுதும் மெய்ஞ்ஞான மருந்தும்உணப் புரிந்தீர்
போகாத புனலாலே சுத்தஉடம் பினராம்
புண்ணியரும் நண்ணரிய பொதுநிலையுந் தந்தீர்
நாகாதி பதிகளும்நின் றேத்தவளர்க் கின்றீர்
நடராஜ ரேநுமக்கு நான்எதுசெய் வேனே.
#6-034 ஆறாம் திருமுறை / இறை எளிமையை வியத்தல்
பொதுநடஞ்செய் மலரடிஎன் தலைமேலே அமைத்தீர்
புத்தமுதம் அளித்தீர்என் புன்மைஎலாம் பொறுத்தீர்
சதுமறைஆ கமங்கள்எலாம் சாற்றரிய பெரிய
தனித்தலைமைத் தந்தையரே சாகாத வரமும்
எதுநினைத்தேன் நினைத்தாங்கே அதுபுரியும் திறமும்
இன்பஅனு பவநிலையும் எனக்கருளு வதற்கே
இதுதருணம் என்றேன்நான் என்பதன்முன் கொடுத்தீர்
என்புகல்வேன் என்புடைநும் அன்பிருந்த வாறே.
#6-037 ஆறாம் திருமுறை / அருள்விளக்க மாலை
சாகாத கல்வியிலே தலையான நிலையே
சலியாத காற்றிடைநின் றொலியாத கனலே
ஏகாத புனலிடத்தே இடியாத புவியே
ஏசாத மந்திரத்தே பேசாத பொருளே
கூகாஎன் றெனைக்கூடி எடுக்காதே என்றும்
குலையாத வடிவெனக்கே கொடுத்ததனி அமுதே
மாகாதல் உடையார்கள் வழுத்தமணிப் பொதுவில்
மாநடஞ்செய் அரசேஎன் மாலையும்ஏற் றருளே.
#6-041 ஆறாம் திருமுறை / காட்சிக் களிப்பு
பாலானைத் தேனானைப் பழத்தி னானைப்
பலனுறுசெங் கரும்பானைப் பாய்ந்து வேகாக்
காலானைக் கலைசாகாத் தலையி னானைக்
கால்என்றும் தலையென்றும் கருதற் கெய்தா
மேலானை மேல்நிலைமேல் அமுதா னானை
மேன்மேலும் எனதுளத்தே விளங்கல் அன்றி
ஏலானை என்பாடல் ஏற்றுக் கொண்ட
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
#6-046 ஆறாம் திருமுறை / பரசிவ நிலை
சாகாத வரம்எனக்கே தந்ததனித் தெய்வம்
சன்மார்க்க சபையில்எனைத் தனிக்கவைத்த தெய்வம்
மாகாத லால்எனக்கு வாய்த்தஒரு தெய்வம்
மாதவரா தியர்எல்லாம் வாழ்த்துகின்ற தெய்வம்
ஏகாத நிலைஅதன்மேல் எனைஏற்றும் தெய்வம்
எண்ணுதொறும் என்னுளத்தே இனிக்கின்ற தெய்வம்
தேகாதி உலகமெலாஞ் செயப்பணித்த தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
#6-056 ஆறாம் திருமுறை / இறை இன்பக் குழைவு
தானே தயவால் சிறியேற்குத் தனித்த ஞான அமுதளித்த
தாயே எல்லாச் சுதந்தரமும் தந்த கருணை எந்தாயே
ஊனே விளங்க ஊனமிலா ஒளிபெற் றெல்லா உலகமும்என்
உடைமை யாக்கொண் டருள்நிலைமேல் உற்றேன் உன்றன் அருளாலே
வானே மதிக்கச் சாகாத வரனாய்319 எல்லாம் வல்லசித்தே
வயங்க உனையுட் கலந்துகொண்டேன் வகுக்குந் தொழிலே முதலைந்தும்
நானே புரிகின் றேன்புரிதல் நானோ நீயோ நான்அறியேன்
நான்நீ என்னும் பேதம்இலா நடஞ்செய் கருணை நாயகனே.
#6-056 ஆறாம் திருமுறை / இறை இன்பக் குழைவு
கலைசார் முடிபு கடந்துணர்வு கடந்து நிறைவாய்க் கரிசிலதாய்க்
கருணை மயமாய் விளங்குசிதா காய நடுவில் இயற்கையுண்மைத்
தலைசார் வடிவில் இன்பநடம் புரியும் பெருமைத் தனிமுதலே
சாகாக் கல்வி பயிற்றிஎன்னுட் சார்ந்து விளங்கும் சற்குருவே
புலைசார் மனத்துச் சிறியேன்றன் குற்றம் அனைத்தும் பொறுத்தருளிப்
பொன்றா வடிவு கொடுத்தெல்லாம் புரிவல் லபந்தந் தருட்சோதி
நிலைசார் இறைமை அளித்தனைநான் பொதுவில் ஞான நீதிஎனும்
நிருத்தம் புரிகின் றேன்புரிதல் நீயோ நானோ நிகழ்த்தாயே.
#6-056 ஆறாம் திருமுறை / இறை இன்பக் குழைவு
புரைசேர் வினையும் கொடுமாயைப் புணர்ப்பும் இருளும் மறைப்பினொடு
புகலும் பிறவாம் தடைகளெலாம் போக்கி ஞானப் பொருள்விளங்கும்
வரைசேர்த் தருளிச் சித்தியெலாம் வழங்கிச் சாகா வரங்கொடுத்து
வலிந்தென் உளத்தில் அமர்ந்துயிரில் கலந்து மகிழ்ந்து வாழ்கின்றாய்
பரைசேர் வெளியில் பதியாய்அப் பால்மேல் வெளியில் விளங்குசித்த
பதியே சிறியேன் பாடலுக்குப் பரிசு விரைந்தே பாலித்த
அரைசே அமுதம் எனக்களித்த அம்மே உண்மை அறிவளித்த
அப்பா பெரிய அருட்சோதி அப்பா வாழி நின்அருளே.
#6-060 ஆறாம் திருமுறை / உலப்பில் இன்பம்
கூகாஎனக் கூடி எடாதிக் கொடியனேற்கே
சாகாவரம் தந்த தயாநிதித் தந்தையேநின்
மாகாதலன் ஆகினன் நான்இங்கு வாழ்கின்றேன்என்
யோகாதி சயங்கள் உரைக்க உலப்புறாதே.
#6-064 ஆறாம் திருமுறை / திரு உந்தியார்
தந்தையைக் கண்டேன்நான் சாகா வரம்பெற்றேன்
சிந்தை களித்தேன்என்று உந்தீபற
சித்தெலாம் வல்லேன்என்று உந்தீபற.
#6-069 ஆறாம் திருமுறை / ஆனந்தானுபவம்
காலையிலே நின்றன்னைக் கண்டுகொண்டேன் சன்மார்க்கச்
சாலையிலே இன்பம் தழைக்கின்றேன் – ஞாலமிசைச்
சாகா வரம்பெற்றேன் தத்துவத்தின் மேல்நடிக்கும்
ஏகா நினக்கடிமை ஏற்று.
#6-070 ஆறாம் திருமுறை / சிவபுண்ணியப் பேறு
உயத்திடம் அறியா திறந்தவர் தமைஇவ்
வுலகிலே உயிர்பெற்று மீட்டும்
நயத்தொடு வருவித் திடும்ஒரு ஞான
நாட்டமும் கற்பகோ டியினும்
வயத்தொடு சாகா வரமும்என் தனக்கே
வழங்கிடப் பெற்றனன் மரண
பயத்தைவிட் டொழித்தேன் எனக்கிது போதும்
பண்ணிய தவம்பலித் ததுவே.
#6-073 ஆறாம் திருமுறை / சிவானந்தப் பற்று
தேகாதி மூன்றும்உன் பாற்கொடுத் தேன்நின் திருவடிக்கே
மோகா திபன்என் றுலகவர் தூற்ற முயலுகின்றேன்
நாகா திபரும் வியந்திட என்எதிர் நண்ணிஎன்றும்
சாகா வரந்தந்து சன்மார்க்க நீதியும் சாற்றுகவே.
#6-073 ஆறாம் திருமுறை / சிவானந்தப் பற்று
கற்றேன்சிற் றம்பலக் கல்வியைக் கற்றுக் கருணைநெறி
உற்றேன்எக் காலமும் சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம்
பெற்றேன் உயர்நிலை பெற்றேன் உலகில் பிறநிலையைப்
பற்றேன் சிவானந்தப் பற்றேஎன் பற்றெனப் பற்றினனே.
#6-082 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்சோதி அடைவு
வாழிஎன் றேஎனை மால்அயன் ஆதியர் வந்தருட்பேர்
ஆழிஎன் றேதுதித் தேத்தப் புரிந்தனை அற்புதம்நீ
டூழிஅன் றேஎன்றும் சாகா வரமும் உவந்தளித்தாய்
வாழிமன் றோங்கும் அருட்பெருஞ் சோதிநின் மன்னருளே.
#6-084 ஆறாம் திருமுறை / உத்திரஞானசிதம்பர மாலை
பவமே தவிர்ப்பது சாகா வரமும் பயப்பதுநல்
தவமே புரிந்தவர்க் கின்பந் தருவது தான்தனக்கே
உவமே யமான தொளிஓங்கு கின்ற தொளிருஞ்சுத்த
சிவமே நிறைகின்ற துத்தர ஞான சிதம்பரமே.
#6-087 ஆறாம் திருமுறை / அருட்கொடைப் புகழ்ச்சி
கடுத்த மனத்தை அடக்கிஒரு கணமும் இருக்க மாட்டாதே
படுத்த சிறியேன் குற்றமெலாம் பொறுத்தென் அறிவைப் பலநாளும்
தடுத்த தடையைத் தவிர்த்தென்றும் சாகா நலஞ்செய் தனிஅமுதம்
கொடுத்த குருவே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
#6-087 ஆறாம் திருமுறை / அருட்கொடைப் புகழ்ச்சி
புலையைத் தவிர்த்தென் குற்றமெலாம் பொறுத்து ஞான பூரணமா
நிலையைத் தெரித்துச் சன்மார்க்க நீதிப் பொதுவில் நிருத்தமிடும்
மலையைக் காட்டி அதனடியில் வயங்க இருத்திச் சாகாத
கலையைக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
#6-087 ஆறாம் திருமுறை / அருட்கொடைப் புகழ்ச்சி
பெண்ணே பொருளே எனச்சுழன்ற பேதை மனத்தால் பெரிதுழன்ற
புண்ணே என
இறைவனுக்கு இறைச்சி உணவு சம்மதமா? புலால் உணவு உண்பது சரியா?
இறைவனுக்கு இறைச்சி உணவு சம்மதமா? புலால் உணவு உண்பது சரியா? — ஏபிஜெ அருள்
மனிதராகிய நம் எல்லோரிடத்திலும் இரக்கம், கருணை இயற்கையாகவே உள்ளது. அக் கருணையை நம்மிடையே விருத்தி செய்யாமல் இருக்கிறோம் அவ்வளவே. மற்ற உயிர்களை கொன்றே ஆக வேண்டும், அதுவே அறிவு செயல், என்று எந்த அறிஞரும் உங்கள் தலைவர் எவரும் அறிவிக்கவில்லை. எந்தளவிற்கு கொல்கிறீர்களோ அந்தளவு புண்ணியம் என்று எந்த மார்க்கமும் சொல்லவில்லை. வாங்க இரக்கம் குறித்து விசாரணை செய்வோம் என பணிவுடன் வேண்டி அழைக்கிறேன். அன்புடன் சகோதரி ஏபிஜெ அருள் 🙏
ஜீவகாருண்யம் மட்டும் போதுமா?
ஜீவகாருண்யம் மட்டும் போதுமா? ஜீவகாருண்யம் இறை வீட்டின் திறவுகோல். அடிப்படை தகுதியாகும்.
சுத்த சன்மார்க்கத்தில் மரபு நான்கு. இடைவிடாது விசாரம்,, கண்ணீர், இரக்கம், இவை வழிபாடு ஆகும்.
நன்றி ஏபிஜெஅருள்.🙏
எதற்கு நாம் வள்ளலார் வழியில் செல்ல வேண்டும்?
என் மார்க்கம் இறப்பை ஒழிக்கும் மார்க்கம். என் மார்க்கத்தில் சாகா கல்வியை தவிர வேறு ஒன்றுமில்லை. சாகாதவனே சுத்த சன்மார்க்கி.
— வள்ளலார், சுத்த சன்மார்க்கம்.
டிரஸ்டிகள் நியமனம் – திரு ஆணையர் ஆணை – வடலூர் திருவருட் பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம்
டிரஸ்டிகள் நியமனம் – திரு ஆணையர் ஆணை – வடலூர் திருவருட் பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம். – ஏபிஜெ அருள்.
அன்பர்களே,
வடலூர் திருவருட் பிரகாச வள்ளலார் நிறுவிய சங்கமே நம் சங்கம். அதில் வள்ளலார் வழி ” சுத்த சன்மார்க்கம்” சார்ந்தவர்கள் அனைவரும் ஆயுள்/ ஆண்டு சந்தா செலுத்தி உறுப்பினராக நம்மை ஆக்கிக் கொள்வது நமது முதல் கடமை. சங்கம் சார்ந்து, நெறியில் ஒழுகி, வள்ளலாரின் துணையுடன், ” பெருங்கருணை “கடவுள் அருள் பெறுவதே நம் லட்சியம்.
ஒழுக்கம் நிரம்பி,
சங்கம் சார்வீர்.
சந்தா செலுத்துவீர்.
நம்மவர்கள் சேருவோம்.
இனி நம் மார்க்கக் காலமே.
உயர்திரு ஆணையரின் ஆணையை ஊன்றி வாசியுங்கள். உரிமை முழுவதும் தரப்படவில்லை.ஆயினும், இது தொடக்கம், சரியான வழியில்..
நன்றி: ஏபிஜெ அருள்
உயர்திரு ஆணையரின் ஆணை[PDF]:
[pdf-embedder url=”http://www.atruegod.org/wp-content/uploads/2020/05/CamScanner-05-21-2020-20.09.05-2.pdf” title=”உயர்திரு ஆணையரின் ஆணை-PDF-download link”]
அருட்பாவில் நல்ல விசாரம்-2
“இணைஎன்று தான்தனக் கேற்றது போற்றும் எனக்குநல்ல
துணைஎன்று வந்தது சுத்தசன் மார்க்கத்தில் தோய்ந்ததென்னை
அணைஎன் றணைத்துக்கொண் டைந்தொழில் ஈந்த தருளுலகில்
திணைஐந்து மாகிய துத்தர ஞான சிதம்பரமே”.
அருட்பாவில் நல்ல விசாரம்-1
*பான்மறுத்து* விளையாடும் சிறுபருவத் திடையே
பகரும்உல கிச்சைஒன்றும் பதியாதென் உளத்தே
*மான்மறுத்து* விளங்குதிரு ஐந்தெழுத்தே பதிய
வைத்தபெரு வாழ்வேஎன் வாழ்வில்உறும் சுகமே
*மீன்மறுத்துச்* சுடர்மயமாய் விளங்கியதோர் விண்ணே
விண்அனந்தம் உள்ளடங்க விரிந்தபெரு வெளியே
*ஊன்மறுத்த* பெருந்தவருக் கொளிவடிவம் கொடுத்தே
ஓங்குநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
வள்ளலார் செய்த யோகம் – சாதனம் – வள்ளலார் – சுத்த சன்மார்க்கம் – மெய்ஞ்ஞான யோகம் – ஒருமை – விசாரம்
வள்ளலார் செய்த யோகம் – சாதனம் – வள்ளலார் – சுத்த சன்மார்க்கம் – மெய்ஞ்ஞான யோகம் – ஒருமை – விசாரம்
சுத்த சன்மார்க்கத்தில் எந்தொரு பயிற்சியும் சாதனமும் கிடையாது, கூடாது என்கிறார் வள்ளலார். சுத்த சன்மார்க்கம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் கருணை, ஒருமை, சுத்த சன்மார்க்க ஒழுக்கம் இவைக்கு வள்ளலார் கொடுத்த விளக்கம் அறிந்திருக்க வேண்டும். ஆண்டவரே உரைத்த மரபு நான்கும் தெரிந்து அதில் விருப்பமும், நன்முயற்சியும் வேண்டும். உலகில் இரு மார்க்கங்கள் சமய சன்மார்க்கம் மத சன்மார்க்கம் இருந்தது. 19 ம் நூற்றாண்டில் வள்ளலார் கண்ட மூன்றாவது மார்க்கமே ” சுத்த சன்மார்க்கம் “. சுத்த சன்மார்க்கம் சார்வீர், பேரின்ப பெருவாழ்வை பெறுவோம்.
— கருணை சபை சாலை
நாம் செய்த குற்றம் என்ன?
சிறையில் இருக்கும் கைதிக்கு கூட தெரியும் தான் செய்த குற்றமும், அதற்கு கிடைத்த தண்டனையும்.
ஆனால் இன்று வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாம் செய்த குற்றம் என்ன? அதற்கு பெற்றுள்ள இந்த தண்டனைக் காலம் எவ்வளவு? எனத் தெரிந்திருக்கவில்லை.
இந்தளவு கொடூர தண்டனை எதற்காக நாம் பெற்று உள்ளோம் என சிறிது அளவிலாவது சிந்தித்து பார்க்கிறோமா?
இல்லையே.
ஏதோ ஜாமீனில் வரும் நாளுக்கு காத்திருப்பது போல்
” மருந்து ” க்குகாக காத்திருக்கிறோம்.
என்ன நிலைமையிது?
என்ன அறிவு இது?
மனித இனம் பெற்றுள்ள இந்த பெருந் தண்டனைக்கு செய்த குற்றம் என்ன? என்பதை உணரும் வரை இத்தண்டனை காலமும் நீடிக்கும்.. என ஒருவேளை இருந்தால்?
ஆம்,
உண்மை அப்படி தான் இருக்கும். மனித இனத்திற்கு
தண்டனை வழங்கியது
” இயற்கையே”. நாம் செய்த குற்றங்கள், அவையாவன;
# வளங்களை அழித்தது .
# கொள்ளை அடித்தது.
# மற்ற உயிரினங்களின் உரிமையை பறித்தது
# மற்ற உயிர்களை கொன்றது
# சாதி சமயமதம் தேசம் சாத்திரம் முதலிய ஆசாரங்களினால் பொதுநோக்கம் இல்லாமல் இருந்தது
# கலை அறிவை மட்டும் மதித்து, இயற்கை குணமாகிய கருணையை மதியாது இருந்தது….
ஆம்,
மனிதன் செய்த இந்த முதன்மை குற்றங்களுக்கே இப்போது நாம் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம்.
இப்போதே உண்மை உணருவோம். எல்லாம் வல்ல இயற்கையை போற்றி வணங்குவோம் –
நம் ” இறைவனாக”.
இயற்கை வளங்களை பாதுகாப்போம் “நம் செல்வமாக”.
நம் உயிர் போல் மற்ற உயிர்களையும் பாவிப்போம்
” கருணை அறிவாக”.
உண்மை தெரிந்துக் கொள்ள பொது நோக்கம் வருவித்து கொள்வோம் – ” நெறியாக”.
ஆம்,
இங்ஙனம் நாம் முடிவு எடுத்தால் ” கொரனா ” விலிருந்து விடுபடக்கூடும் என உண்மை அப்படி இருந்தால்..? இப்படி சிந்திப்பதில் நியாயமும் ” மருந்தும்”
இதுவே என நினைப்பதில் தவறு இல்லை எனக் கருதுகிறேன்.
இங்ஙனமாக,
இயற்கையின் உண்மை விளக்கம் இன்பத்தையே இறைவனாகக் கொண்டு, கருணை ஒன்றையே சாதனமாக கொண்டு, ஆசாரங்கள் விடுத்து, சாதி பொய் என உரைத்து, எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் பாவித்து, அவத்தைகளை நீக்கிக் கொள்ள இயற்கை இறைவனிடம் அருள் பெற நன்முயற்சி செய்யச் சொல்லும் ஓர் உண்மை பொது நெறியை (சுத்த சன்மார்க்கத்தை) கண்டவர் வள்ளலார்.
உண்மையை தெரிந்துக் கொண்டால், அவத்தைகள் விரைந்து நீங்கும். இது சத்தியம் என்கிறார் வள்ளலார்.
அன்புடன் ஏபிஜெ அருள்.
” சிவம் ” என்பது எல்லாருக்குமான ஒரு பொது தமிழ் சொல்
” சிவம் ”
என்பது எல்லாருக்குமான ஒரு பொது தமிழ் சொல்.
எந்தொரு குறிப்பிட்ட சமய மத மார்க்கத்திற்கு மட்டும் பாத்தியப்பட்டச் சொல் கிடையாது. முடியாது.
” சிவம் “
என்பதற்கு தமிழ் அகராதி தரும் பொருள் காண்க:-
பொதுவில்:
“நன்மை”
Goodness,
Prosperity and
Auspiciousness.
ஆன்மீகத்தில்:
முத்தி – final deliverance
அறிவுரு
சுயம்பிரகாசம்
Pure Intelligence, Highest state – “GOD”.
மற்றவை;
1.யோகம் 27 ல் ஒன்று
2. குறுணி
3.தத்துவங்களில் ஒன்று.
ஆக,
“சிவம்”
என்பது மிகவும் சிறப்பாக, பொதுச் சொல்லாக, பயன்படுத்தக் கூடியச் சொல் ஆகும்.
காரணம்;
சாதி சமய மதம் பொய் பொய்யே என்ற வள்ளலார் தன் சுத்த சன்மார்க்கத்தில் இயற்கையின் உண்மை விளக்கம் இன்பம் இவையே இறைவனாக காட்டுகிறார்கள். அறிவின் வடிவம் ஆதிஅந்தமில்லா ஜோதியாகிய அருளே “ஆண்டவர்” என்கிறார்கள்.
ஆக,
அறிவு ஒளி,
இயற்கை,
அருள்,
– இவையே
ஆண்டவரின்;
– நிலை
– உண்மை
– அனுபவம்
என்கிறார் வள்ளலார்.
இந்த உண்மை பொது கடவுளை
” மெய்ச் சிவம் ”
” சுத்த சிவம் ”
” சிவபதி”
என பலவாறு அழைக்கிறார் வள்ளலார்.
ஆக,
நன்மை எதுவோ அதை சிவம் எனலாம்.
ஆன்மீக நம்பிக்கையில்,
உயர்ந்த அறிவு ஒளியாகிய சுயப்பிரகாச மேன்மை வஸ்துவை
” சிவம் ” என்கிறது தமிழ்.
மற்றொரு உண்மை
இங்கு உள்ளது.
தமிழ் மொழி,
யாரை கடவுள் என்று காட்டுகிறது என்றால்
“உயர்ந்தது”
” உயர்ந்த அறிவு ”
” முடிபானது ”
” சுயப்பிரகாச ஒளி சொரூபம் ”
என்ற பொருளையே கடவுளுக்கு தந்துள்ளது தமிழ்.
இந்த மொத்தத்தையும் இயற்கையில் கண்டார் வள்ளலார்.
அதனால் தான்,
வள்ளலார் தெளிவாக சொன்னார்கள்;
சிவானுபவத்தை எளிதில் நல்கும்
” தமிழ் ”
ஆக,
நாத்திகத்தார், ஆத்திகத்தார்,
மற்ற எல்லோருக்குமானது
” சிவம் “.
பொதுவில்,
நன்மை செய்பவர், அவருக்கு பெயர் ” சிவம்”
நம்பிக்கையில்,
சுயப்பிரகாசமாகிய அறிவுருவாகிய ஜோதி சொரூபம் அது கடவுள்.
இக்கடவுளின் பெயர் சிவம்.
நன்றி:
– ஏபிஜெ அருள்.
வாழ்க சிவம்!
வாழ்க தமிழ்!
” கொரானா ” விற்கான – இரு மருந்து. Corona Medicine
” கோரானா ” விற்கான
‘இரு மருந்து’
– கருணை சபை சாலை.
” சும்மா ” தானே இருக்கிறாய் ? சிந்தித்தால் என்ன?
” சும்மா ” தானே இருக்கிறாய் ?
சிந்தித்தால் என்ன?
— இ.
ஆம், ” கோரானா நோய் ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள்ளேயே இருப்பவன் நான்.
தூக்கம் கலைந்து எழுந்து, கடவுளை வணங்கி, டிபனை வயிற்றில் நிரப்பி, சந்தோசமா டிவியில் சினிமா, சீரியல், நண்பர்களிடம் செல்லில் பேசி, இடையில் கொடுக்க ப்பட்ட நொறுக்கு தீனிகள், மீதி படம், சூப்பர் சாப்பாடு, ஒரு குட்டி தூக்கம், அதை கலைக்க டீ, வடை, மீண்டும் டிவி, செல், புத்தகம் படித்து, சுவையான இரவு டிபன், டிவி, உறக்கம் வந்ததால் உறங்கச் சென்று, இங்ஙனம், இங்ஙனம் மட்டுமே நாள்கள் கடந்து செல்கிறது.
நேற்று இரவு வசூலில் சாதனை படைத்த படத்தை மீண்டும் பார்த்து தூங்கச் சென்றேன்.
ஒரு குரல்…
” சும்மா தானே இருக்கிறாய்.
கொஞ்சம் சிந்தித்தால்தான் என்ன? ”
யாரு என்றேன்?….
” யாராய் இருந்தால் என்ன, பதில் சொல்லு…”
— என்றது குரல்.
சும்மா நான்.. இருக்கலியே…என்றேன்.
“அடச்.. சீ…
சிந்தித்தாயா… சிறிதாவது”
— என்றது குரல்.
குரலுக்குரியவரை பார்க்க திரும்பினேன்… கட்டிலிருந்து கீழே விழுந்ததில், தெரிந்துக் கொண்டேன் ” கனவு ” என்று.
ஆனால் அந்த வார்த்தைகள்.
தினம் நான் செய்த வேலைகள்..??
காலை எழுந்தேன். கடவுளை வணங்கினேன்.
— இதில் என்ன சிந்திக்க வேண்டும்?
அடுத்து,
சாப்பாடு, டிவி யில் செய்தி, படங்கள் சீரியல்கள்.
— இதில் என்ன சிந்திக்க வேண்டும்?
அன்றைய இரவு வந்தது…..
படம் பார்த்ததால், மனம் பாதித்து, தூக்கம் வராமல் புரண்டு, புரண்டு..,
அதிகாலையே எழுப்பப் பட்டேன்.
எழுந்து,
நான் தினம் வணங்கும் தெய்வப் படத்தை கண்டேன்.
உற்று நோக்கினேன். இந்த உலகில் எத்தனையோ சமயமதங்கள்,மார்க்கங்கள் உளது. அதில் பல்வேறு கடவுளர்…..
ஆம்,
தனிமையும், பொழுதும் என்னை உள்ளழுந்தி சிந்திக்க வைத்தது. என் அறிவை இன்று தான் உணர்ந்தேன். என்னுள் ஒரு விசாரம் தானாகத் தொடங்கியது.
……….
எனக்கு காட்டப்பட்ட கடவுளரிடத்தில் நம்பிக்கை கொண்டு தினம் வணங்கி வந்தேன்.
ஆனால்,
கடவுளை பற்றி நான் சிந்திக்கவே இல்லையே ?
உலகில் எண்ணிலடங்கா சமயமத மார்க்கங்கள். அவற்றில் பல கடவுளர்.
இந்த கடவுளர் மத்தியில்
உண்மை கடவுள் யார்? அக்கடவுளின் உண்மை என்ன?
சாதி சமயங்களில் நான் வைத்த பற்று, கொடுக்கும் காணிக்கை, பலி,
செய்யும் வழிபாடு, சடங்கு சம்பிரதாயம்,
இவை சரியா? நான் வணங்கிவரும் கடவுளின் உண்மை தன்மை என்ன?
இதற்கு ஏன் ஆசைப் படவில்லை இது நாள் வரை?
எது என்னை தடுத்தது?
அமைதியாக ஆழ்ந்தேன்.
………
“எனது அன்றாட நிகழ்வுகள்”
# டிவி #
(சில (டிவி-) நிகழ்ச்சிகளை தவிர)
திரையில் காட்டப்பட்டதில் அனைத்துமே காதல், ஆடல் பாடல், குரோதம், காமம், சாதி, சமயமதம், அதிகார வர்க்கம், அரசியல்,வறுமை, இவையில் ( காட்டப்பட்ட காட்சியால்) ஏக்கம், பக்தி,கோபம், வெறி, தவிப்பு, வருத்தம் இவையாவும் என்னுள் பதிந்து நினைவில் நீடிக்கிறது. திரைகாட்சி தானே இது.
ஆனால், கதாநாயகன் வந்து சரி செய்தது போக,
என்னுள் காமம்,பக்தி, சாதி சமயம், அரசியல் வெறி, குரோதம் இவை பதிந்து தங்கியது எப்படி?
……..
நான் தெய்வப் பற்று கொண்டிருந்தாலும்,
இன்று என்னுள்…,
உண்மை கடவுள்,
கடவுளின் உண்மை நிலை, என் நிலை,
என்னை சுற்றியிருக்கும் இயற்கையின் திறங்கள்,
– இவை குறித்து நான் தெரிந்து கொள்ள, காண இப்ப ஆசை வந்தது.
இது நாள் வரை “சும்மா” இருந்து விட்டேனே!
இப்ப என் நினைவுக்கு வருகிறது, வள்ளுவரின் குறள்:
” எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு ”
அப்படியெனில்,
கண்ணால் கண்டது?
காதால் கேட்டது?
இதற்கு குறள் பதில்..?
” எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு ”
ஆமாம்..
எங்க தாத்தா எனக்கு சொன்ன பழமொழி ஞாபகம் இப்ப வருது…
“கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதுவும் பொய்; தீர விசாரிப்பதே மெய்”
வள்ளலாரும் இதை தான்
சுட்டி காட்டினாரா?
பாடல் நினைவுக்கு வருகிறது. அந்த பாடல்:
” கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே
கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே
உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே
உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே
விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க
மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே
எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்
இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.”
சரி…
சிந்திக்க யார் துணை நாட?
இன்று இந்த சிந்தனையை செய்தது நான் தானே!
பதில் கிடைத்ததும் என்னிடம் தானே!.
ஆம்,
” நோய்க்கும் மனித செயலே காரணம். அந்நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பவனும் மனிதனே.”
எல்லாம் என்னிடமே.
இது எல்லோரிடத்திலும். எல்லோரிடத்திலும் அகம் ஒரே மாதிரி.
அப்படி என்றால் கொடுத்தவர் ஒருவரே!
ஆனால்,
மனிதன் வெளிப்படுத்தும் தன்மையில் பல்வேறாக உள்ளதே?
அது அவரவர் பெற்ற அறிவு அடிப்படையில்! இது புறம்.
ஆனால், அகம் ஒன்றே..?
நாம் பெற்ற அறிவில் சிந்தித்து, விசாரம் செய்தால் அக அறிவு தோன்றும். ஆக, “அறிவை விருத்தி செய்தல், விருத்திக்கு விசாரம் செய்தல்”
இதுவே,
மனிதன் மட்டும் பெற்றிருக்கும் ஆறாம் அறிவு ஆகும்.
ஆகா, நான் சிந்திக்க ஆரம்பித்து விட்டேனே!
இதுவரை இந்த சிந்தனையை என்னிடம் தடுத்தது எது?
கற்பனை திரை காட்சிகள், காம, குரோதம், பொய்யான சாதி, கருணையின்மை, தீர்மானமாக கொண்ட கட்டுப்பாட்டு சமய ஆசாரம், இவையே.
“விட்டு விட்டேன்” அவற்றை இந்த நிமிடம் முதல்.
ஆகா..,
அருமை…அருமை..
மீண்டும் ஆழ்வோம் சிந்தனையில்….
உண்மை உணரும் வரை.
…….
அது.. என்ன சத்தம்….??
” ஏங்க.. உங்களத்தானே, என்ன செய்றீங்க…,
” சும்மா ” தானே இருந்தீங்க, பால் வாங்கி வைத்திருக்கலாமே..எதுவும் செய்ய மாட்டாராம்,
ஆனா..
உடனே காப்பி கேட்பீங்க, அப்பறம் டிவி, செல்லு, டிபன்,அப்பறம் தூக்கம்..
அடச்.. சீ.. ”
அதற்கு நான்:
” இல்லம்மா.. சிந்திஞ்சிட்டு இருந்தேன்….”
” என்னது?.. நான் தான் பார்த்தேனே..”சும்மா” இருந்துட்டு சிந்திஞ்சிட்டு இருந்தாராம் … சரி.. இன்னிக்கு நீங்க வேலையை பாருங்க.. நானும் உங்கள மாதிரி கொஞ்ச சிந்திக்கிறேன்…”
….!!! ???
நன்றி:
நா.இ., மதுரை.
ஆமாம் நாம் சிந்தித்ததை “சும்மா ” என்றாலே?
” சும்மா ” ன்னா என்ன? சாரி..சாரி.. “சும்மா”
முடிந்தது.
( ஆனால் விசாரம் தொடங்கியது) — N.E.
# கோரானா
பணியில் அயராது உழைத்து வரும் கருணையாளர்கள் அனைவருக்கும், எங்கள் அன்பரின் இக்கட்டுரையை சமர்ப்பித்து, நன்றியுடன் வணங்குகிறோம்.
? ஏபிஜெ அருள்,
கருணை சபை சாலை, மதுரை.
“புருவமத்தி” என்பது எந்த இடத்தை குறிக்கிறது?
” புருவமத்தி என்பது எது?
எங்குள்ளது?
தெரிந்தவர்கள் பதிவு செய்யலாமே.
காரணம்,
” புருவமத்தி கண்ணே ” நம்முடைய கரணத்தை செலுத்த வேண்டும்.”
” … புருவமத்தியில் நிற்க செய்தல் ”
என வள்ளலாரின் உபதேசக்குறிப்பில் உள்ளது. (இரண்டரை அங்குல இடைவெளியில்)
கோசம், தொப்புள், மார்பு,கண்டம்,அண்ணாக்கு,
புருவமத்தி… எனச் சொல்லப்பட்டதில் புருவமத்தி தவிர மற்றவையின் இடம் சரியாக புரிந்துக் கொள்ள முடிகிறது.
ஆனால், உண்ணாக்கு மேல் இரண்டரை அங்குலத்தில் புருவமத்தி உள்ளதாக இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் ” புருவமத்தி” என்பது எதைக் குறிக்கிறது?
மற்றும்,
சுத்த சன்மார்க்க நெறியில்
புருவமத்தி பயிற்சி உண்டா?
இல்லை என்றால் வள்ளலார் செய்ய சொல்லும் நன்முயற்சி எது?
சான்றோர்கள் விளக்கம் அளித்து விசாரம் செய்யுமாறு பணிவுடன் அழைக்கிறேன்.
? நன்றி. ஏபிஜெ அருள்.
விசாரத்திற்கு உதவும் வகையில் தொடர்புடைய
” சுத்த சன்மார்க்கப்பாடல்கள் “ கீழே தரப்பட்டுள்ளது.
சித்திரை-1 ” சுத்த சன்மார்க்க தினம் ” “150 வருட” துவக்கம்.
சித்திரை-1
” சுத்த சன்மார்க்க தினம் ”
“150 வருட” துவக்கம்.
— ஏபிஜெ அருள்.
12-04-1871 சித்திரை- 1 ல் ,
சுத்த சன்மார்க்கத்தில் வருகிற கடவுள் யார்? இனி பேதங்கள் போய் உண்மை வழி விளங்கும் என ஒரு திருமுகம் வாயிலாக உலகத்தார் அனைவருக்கும் அறிவித்தார் வள்ளலார்.
இனிய தமிழ் நாளில் உண்மை பொது நெறி வெளிப்பட்டு 14-04-2020 இன்று “150 வது” வருட துவக்கம். ஆனால் இதுவே நல்ல தருணம். சமய சாத்திர சாதி ஆசார பேதங்கள் போய் சுத்த சன்மார்க்க நெறி விளங்கும். இது உண்மை கடவுள் சம்மதம் என்கிறார் வள்ளலார்.
இனிய தமிழ் திரு நாள்
வாழ்க தமிழ் !
பரவட்டும் உண்மை பொது நெறி !
அன்புடன்,
?ஏபிஜெ அருள்
உண்மை உணர உற்ற தருணம் இதுவே. பொருளாதார கொள்கையை மற்றும் கடவுள் கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டிய தருணம் இதுவே
உண்மை உணர உற்ற தருணம் இதுவே. பொருளாதார கொள்கையை மற்றும் கடவுள் கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டிய தருணம் இதுவே.
— ஏபிஜெ அருள்.
இன்று வந்து உள்ள சூழலுக்கு யார்,எது காரணம்?
வள்ளலாரின்
திருஅகவல்:
” எங்கெங் கிருந்துயிர் ஏதேது வேண்டினும்
அங்கங் கிருந்தருள் அருட்பெருஞ்ஜோதி”
— எங்கு எங்கு எல்லாம் உயிர்கள் உள்ளனவோ, அவ்வுயிர்கள் எல்லாம் எது தனக்கு வேண்டும் என்று எதை எதை எண்ணியதோ, அவை அனைத்தையும் அங்கு அங்கே கிடைக்குமாறு அருள் செய்து உள்ளது அருட்பெருஞ்ஜோதி.—
ஆம்,
உயிர் வாழ தேவையானதை அவ்உயிர்கள் வாழும் இடத்திலேயே இருக்கின்ற இயற்கை திறத்தை இன்று நாம் சத்தியமாக உணர்ந்தே ஆக வேண்டும். இந்த இயற்கை இயலை நம் குழந்தைகளுக்கு இன்றே தெரியப் படுத்த வேண்டும். இன்று இங்கு ஒன்று தயாரிக்கிறோம் என்றால் அதன் மூலப்பொருள் மற்ற நாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறோம். இதில் அம்மூலப்பொருள் இங்கும் இருக்கும். நாம் தெரிந்திருக்கவில்லை. தேடவில்லை. மற்ற இச்சையிலேயே இருக்கிறோம். மூலப்பொருள் இருந்தும் அந்த நாடு தயாரிக்க முன்வரவில்லை. இது போல எல்லாம் அறிக! நாம் உயிர் வாழ அதுவும் அன்பாக, ஆரோக்கியமாக, இனிமையாக, ஈனமின்றி உயிர் வாழ, நமக்கு தேவையான அனைத்தும் நம் பகுதியிலேயே கிடைக்கிறது என்ற உண்மையை தான்
இன்று ஏற்பட்டுள்ள சூழ்நிலை நமக்கு கற்று தந்துள்ளது. ஆனால் , ஆடம்பர வாழ்க்கை, புலன்களின் இச்சை, ஆணவ மேலாண்மை இவைக்கே நாடுகளிடையே வணிகம் மற்றும் போர். இயற்கை சார்ந்து வாழும் மனிதர்க்கு ( உ.ம். கிராமவாசிகள், ஏழைகள்) அறிவும் அருளும். ஆம், இவர்களுக்கு தேவையில்லை நாம் செய்யும் நாடுகளிடையே வாணிகமும், நடத்தும் போரும். அதிகாரவர்க்கம் பணக்காரர்களுக்குதான் இவை. ஆனால் மேற்படி வணிகம், போர் இவற்றால் ஏற்பட்ட பாதிப்பு எல்லோருக்குமே.
இது எப்படி நியாயமாகும்?
ஆம், நாட்டின்
பொருளாதார கொள்கையை மாற்றியே ஆக வேண்டும். தவறு செய்பவர்கள் திருத்திக் கொள்ளவேண்டும். முடியாது என்றால் பொருளாதார நிபுணர்கள் முன் வரவேண்டும் கிராமம், ஏழைகள் இவர்களுக்கான பொருளாதார கொள்கை திட்டத்திற்கு. புதிய பொருளாதார புரட்சிக்கு.
அடுத்து,
சமய,மத,இனப் போராட்டம், போர். மேற்படி போரால், சண்டையால் இவை விரும்பாதவர்கள், அன்பு உள்ளங்களையும் பாதிக்கிறதே, மரணமும் ஏற்படுகிறதே.போரும் கொலையும் சாதியும் கலையும் உள்ளது தானே நாம் இன்று பற்று வைத்திருக்கும் சமய மதங்கள்.
எவராலும் இதை மறுக்க முடியாது.
திரு அகவல்:
“எம்மதம் எம்இறை என்ப உயிர்திரள்
அம்மதம் என்றருள் அருட்பெருஞ்ஜோதி”.
” எங்களது மதம் எங்களது இறைவன் என்று அவர்கள் வேறு பிரித்துக் கூறி கொண்டிருப்பது அவர்களுக்குள் உள்ள அகங்காரம் ஒன்றாலேயே என்று தெரிவித்து அருளிய அருட்பெருஞ்ஜோதி.”
எனவே, நமக்கு ஏற்படும் அவத்தைகள் விலக, எந்த சாதி சமய மதப் பெயரால் கொலையும், போரும், நடைப்பெறுகிறதோ, மேலும், நமக்கு மயக்கமும் கட்டுப்பாடும் ஏற்படுத்தும் அந்த சாதி சமய மதத்தில் நாம் பற்று வைக்காமல் விட்டு விட வேண்டும். அவர்கள் கொலையும், போரும், சடங்குசம்பிரதாயங்களும், நமக்காகவே மக்களுக்காக செய்கிறோம் என்பது பொய்யாகிவிடும். சாதி சமயப்பற்றை விட்ட நாம் உண்மை சாருவோம். கொல்லா நெறி, கருணை கொள்கை, இயற்கையே இறைவன் எனும் போது, நாம் “நஷ்டம் அடையோம்” என்ற வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் தெரிந்து சாருவோம்.
ஆம்,
கிராமம், ஏழைகள் இவர்களுக்கான புதிய பொருளாதார கொள்கை தோன்றட்டும்.
பொதுநோக்கம் ஆன்ம நேயம் இயற்கை இறை கொள்கையாக கொண்ட வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் இனி விளங்கட்டும்.
#அன்புடன் ஏபிஜெ அருள். #
— Apjarul, Karunai sabai Salai.?
வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்
” வள்ளலார் – சுத்த சன்மார்க்கம் “
வள்ளலாரையும், அவர்தம் மார்க்கம் “சுத்த சன்மார்க்கம்” ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்?
1)இம்மார்க்கம் புதியது.
2) தனி நெறி கொண்டது.
3) மற்ற சமயமத கடவுள் இல்லை. ஒருவராகிய தனி கடவுள்.
4) வள்ளலார் உண்மை கடவுள் அருளால் ” மரணத்தை ” தவிர்த்துவிட்டு ஒளி தேகம் பெற்றார்.
5) எல்லாருக்கான உண்மை பொது வழி. அன்பர்களே! இன்றைய சூழல்; இயற்கை சீற்றமோ, இயற்கையை நாம் புரியாததினாலோ, இயற்கை நமக்கு புரிய வைக்கிறதோ, தெரியவில்லை,
இந்த “கோரானா ” பரவி இன்று மனித இனத்தையே அழிக்க உள்ளதோ? என அஞ்சி உள்ளோம். மூடத்தை போதித்து வந்த சமயமத பிரச்சார போலிகளை, சாதி வெறிகளை இந்த கோரானா கைகட்டி வாய் பொத்தி நிற்க வைத்து விட்டது. இந்நிலையில் நம் குழப்பமான சூழ்நிலைக்கு பதில்? ….? நம் அறிவு ஒன்றே துணை. அதையும் தாண்டி உள்ள இயற்கை திறம் என்ன?, உண்மை கடவுள் யார்? என சிந்திக்க வைத்துள்ளது? ஆனால், எவர் ஒருவர் உண்மை (கடவுள்) நிலை அறிய, இயற்கை திறம் இவை, தன் அறிவு கொண்டு அறிய ஆசைப் படுபவர்களுக்கு மட்டுமே இந்த ” சுத்த சன்மார்க்கம் ” உள்ளது. வாருங்கள் (விருப்பம் உள்ளவர்கள் மட்டும்) நல்ல விசாரணையை வள்ளலார் வழியில் இன்றே செய்திடுவோம்.
நன்றி: ஏபிஜெ அருள்.
கொரானாவின் உண்மை # கடவுளின் உண்மை
கொரானாவின் உண்மை # கடவுளின் உண்மை
உண்மை கடவுளை தேட வைத்த கோரானா. நம் சுயநலத்திற்காக அனைத்தையும் அழித்து வந்தோம். மலைகள்,கணிமம்,மணல்,தாதுப் பொருள், எரிபொருள் முதலிய பொருள்களை கொள்ளைக் கொண்டோம். மேலும், காடுகள் அழித்து கோடி உயிரினங்களை கொன்றோம். சாதி சமய மதப் பெயரால் போர்கள் தீவிரவாதம் மற்றும் பதவிக்கான கொலைகள் தொண்டுக்கு லஞ்சம் காமப்படங்களால் கற்பழிப்பு செய்கைகள், காலதாமத முடிவுகள், இவையான பொதுநோக்கமற்ற செயல் செய்தது நாமாகிய மனித இனமே. ஆனால், இன்று நம் நிலை? நாம் செய்த கொடுமையால் தப்பிக்க வழியில்லை. நடந்தது நடந்தவையாக போகட்டும். அறிவால் மீளுவோம். அன்பால் வெற்றி பெறுவோம். எல்லாம் வல்ல இயற்கையை வணங்குவோம்.
— கருணை சபை சாலையில் நல்ல விசாரணை 25-03-2020.
மகாமந்திரம் – உண்மை பொது மந்திரம்
மகாமந்திரம் – உண்மை பொது மந்திரம்
கடவுள் என் செய்யும்?
கடவுள் என் செய்யும்?
— ஏபிஜெ அருள்.
நாடுகளிடையே;
போர்கள் கூடாது.
செருக்கு கூடாது.
அதிகாரம் கூடாது.
மனிதர்களிடையே;
மயக்கம், சுயநலம், திகைப்பு கூடாது.
இவை செய்யும்
” தேவர்கள் அறிவு” நம்மிடையே ஒழிய வேண்டும்.
அடுத்து,
சிறை செல்லும் செய்கை கூடாது.
பயம் கூடாது.
திருட்டு,கொலை செய்யும் “நரகர் குணம்” நமக்கு கூடாது.
உயர்ந்த அறிவாகிய
“கருணை ” நம்மிடம் விருத்தியாக நன்முயற்சி செய்தல் வேண்டும்.
நாம் யார்? நமக்கு மேல் அனுஷ்டிக்கும் இயற்கையின் திறம் (உண்மை இறைவனின் நிலை) என்ன என நல்ல விசாரணை அறிவு வழியில் செய்யச் சொல்லும் “ஆறாவது அறிவை” பெருக்க வேண்டும்.
இந்த “ஆறாவது அறிவாகிய” உள்ளத் தெளிவு நம்மிடையே வராமல் தடுப்பவை, சாதி சமயமும் அதன் கட்டுப்பாட்டு ஆசாரங்கள் என்கிறார் வள்ளலார். பொது நோக்கம் ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை லட்சியமாக கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளலார். இந்த அறிவு மனித தேகம் உடையோர் பெறுகிறார்கள் என்கிறார்.
இதுவே அவர் கண்ட “சுத்த சன்மார்க்கம்”.
சமயம்,சாதி இவை தேவர் நரகர் குணம் குறித்தே உள்ளது.
சுயநலம், செருக்கு மயக்கம் இவையால் போர்கள், கொலைகள், இவை சரி என்றால் நம்மை கொல்லும் கொடிய நோய்கள், இயற்கை சீற்றங்கள் இருக்க தானே செய்யும்.
இங்கு
கடவுள் என் செய்யும்?
மனிதனாக இருப்போம்.
கருணை கொள்வோம். அன்பால் எல்லா உயிர்களிடமும் தயவும், அண்ட திறங்கள் (இறை உண்மை நிலை) காண ஆசைக் கொள்ளும் நன்முயற்சி கொள்வோம். உண்மை அறிவால் உண்மை அன்பால்
உண்மை கடவுளின் அருளால் பேரின்ப வாழ்வை நான் பெற்றேன். என்னைப் போல் நீங்கள் பெறுவதற்கு யாதொரு தடையுமில்லை. இது சத்தியம் என்கிறார் வள்ளலார்.
வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத்தில் சாதி,கற்பனை, கலைகள்,ஆசாரம்,சாத்திரம்,போர், பலி, இவையில்லை. பொது நோக்கம், அறிவு, கருணை, இன்பம் இவையே உள்ளது.
19 ம் நூற்றாண்ட்டில், சமயப் பற்றை கைவிட்டு விட்டு, மிகப் பெரிய நன்முயற்சி செய்து, இரக்கத்தால் தவம் கொண்டு, உண்மை கடவுளை கண்டு, அருளால் கண்ட உண்மை பொது வழியே ” சுத்த சன்மார்க்கம்”. இம்மார்க்கத்திற்கு எக்காலத்தும் முக்கிய தடையாக சமய,மத மார்க்கங்களை அறிவிக்கிறார்.
இம்மார்க்க வழியில் மட்டுமே “அவத்தைகளை” நீக்கிக் கொள்ள முடியும் மேலும் உண்மை கடவுளின் சொரூபம் கண்டு அருள் பெற முடியும் என்ற வள்ளலாரின் சத்திய வாக்கியத்தில் நம்பிக்கை கொண்டோர்
பார்க்க: